நாட்டின் பொருளாதார தேவைகளில் இனி மத்திய வங்கி தலையிடாது: உலக வங்கி அறிவிப்பு
Sat Jul 06, 2013 8:20 am
ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள பசேல் என்ற இடத்தை தலைமையிடமாகக் கொண்டு 1930ம் ஆண்டு சர்வதேசத் தீர்வுகளுக்கான வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து இந்த அமைப்பைத் தோற்றுவித்தன. தற்போது இதன்கீழ் உலக நாடுகளின் 58 மத்திய வங்கிகள் இயங்குகின்றன. சர்வதேச நிறுவனமான இந்த வங்கி எந்த ஒரு நாட்டின் அரசுக்கும் கட்டுப்படாது. மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளின் மூலமே இது தனது சேவையைச் செய்கின்றது.
மத்திய வங்கிகளின் மத்திய வங்கி என்று அழைக்கப்படும் இந்த உலக வங்கி, இப்போது அந்தந்த நாடுகளின் பொருளாதாரத் தேவைகளுக்கு மத்திய வங்கிகள் உதவி புரிவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆறு வருடங்களாக நிலவி வந்த பொருளாதாரத் தேக்கநிலை காரணமாக அரசாங்கங்களுக்கு பொருளுதவி தேவைப்பட்டது.
தற்போது இந்த நிலை மாறி வருகின்றது. வர்த்தக சந்தைகள் மத்திய அரசின் பொருளுதவி இன்றி செயல்பட ஆரம்பித்துள்ளன. சென்ற வாரம் அமெரிக்க நாட்டின் மத்திய வங்கி, வர்த்தக சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிட்டு தனது உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மத்திய வங்கிகளும் தொடர்ந்து பணத்தைப் புழக்கத்தில் வைப்பதற்காக, முதலில் வட்டி விகிதத்தைக் குறைத்தும், பின்னர் காலாண்டு வட்டி விகித முறையைப் பின்பற்றியும், வங்கி முதலீட்டில் சொத்துக்களை வாங்கியும், வங்கி நடைமுறைகளில் அதிகத் தொகையை அனுமதித்தும் கடன் நெருக்கடியைத் தவிர்த்து வந்தன.
உலக நாடுகள் இனி தங்களின் பொருளாதாரத் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றும், திறமையான பயனுள்ள திட்டங்கள் மூலம் நிலைத்து நிற்கும் வண்ணம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமைக்கப்பட வேண்டும் என்றும் உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து இந்த அமைப்பைத் தோற்றுவித்தன. தற்போது இதன்கீழ் உலக நாடுகளின் 58 மத்திய வங்கிகள் இயங்குகின்றன. சர்வதேச நிறுவனமான இந்த வங்கி எந்த ஒரு நாட்டின் அரசுக்கும் கட்டுப்படாது. மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளின் மூலமே இது தனது சேவையைச் செய்கின்றது.
மத்திய வங்கிகளின் மத்திய வங்கி என்று அழைக்கப்படும் இந்த உலக வங்கி, இப்போது அந்தந்த நாடுகளின் பொருளாதாரத் தேவைகளுக்கு மத்திய வங்கிகள் உதவி புரிவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆறு வருடங்களாக நிலவி வந்த பொருளாதாரத் தேக்கநிலை காரணமாக அரசாங்கங்களுக்கு பொருளுதவி தேவைப்பட்டது.
தற்போது இந்த நிலை மாறி வருகின்றது. வர்த்தக சந்தைகள் மத்திய அரசின் பொருளுதவி இன்றி செயல்பட ஆரம்பித்துள்ளன. சென்ற வாரம் அமெரிக்க நாட்டின் மத்திய வங்கி, வர்த்தக சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிட்டு தனது உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மத்திய வங்கிகளும் தொடர்ந்து பணத்தைப் புழக்கத்தில் வைப்பதற்காக, முதலில் வட்டி விகிதத்தைக் குறைத்தும், பின்னர் காலாண்டு வட்டி விகித முறையைப் பின்பற்றியும், வங்கி முதலீட்டில் சொத்துக்களை வாங்கியும், வங்கி நடைமுறைகளில் அதிகத் தொகையை அனுமதித்தும் கடன் நெருக்கடியைத் தவிர்த்து வந்தன.
உலக நாடுகள் இனி தங்களின் பொருளாதாரத் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றும், திறமையான பயனுள்ள திட்டங்கள் மூலம் நிலைத்து நிற்கும் வண்ணம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமைக்கப்பட வேண்டும் என்றும் உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|