தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
நன்றி தேவனுக்கு Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நன்றி தேவனுக்கு Empty நன்றி தேவனுக்கு

Fri Jan 11, 2013 9:07 am
பல
ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது வாலிபன் வறுமையின் காரணமாக தன் வீட்டை விட்டு
வேலை தேடி அமெரிக்கத் தலைநகர் நியூயார்க் நகரத்திற்கு வந்தான். சோப்பு
தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை துவங்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள்
இருந்தது. அவன் வீட்டை விட்டு வெளியேறும் முன்பு அவனது தாய் கூறின வார்த்தை
அவன் நினைவிற்கு அடிக்கடி வந்தன. ‘‘மகனே உன் வாழ்வை தேவனுக்கென்று
முற்றிலும் அர்ப்பணம் செய். நீ சம்பாதிக்கும் பணத்தில் பத்தில் ஒரு பங்கை
உன்னை படைத்தவருக்கு கொடுக்க மறவாதே’’ என்பதுதான் அந்த அறிவுரை. ஒரு சிறிய
வேலையில் சேர்ந்தான். அமெரிக்காவில் அவன் வேலைக்கு கிடைத்த சம்பளம் ஒரு
டாலர். உடனே தன் தாயார் கூறியது போல அதில் ஒரு பங்கை இயேசு
கிறிஸ்துவுக்கென்று கொடுத்தான். அதிக டாலர்கள் வருமானம் வர ஆரம்பித்தது.
அவனும் தாயார் அறிவுரைப்படி தேவனுக்குப் பங்கு கொடுக்கத் தவறவில்லை. பின்பு
சோப்பு கம்பெனி ஒன்றில் பங்காளராய் இணைந்தான். சில நாட்களில் கூட இருந்த
பங்காளர் இறந்து போகவே, அந்த கம்பெனியின் முழு உரிமையாளரானான். வியாபாரம்
பெருகியது. தன் வருமானத்தில் ஒரு பங்கை தேவனுக்கு கொடுத்தான். வியாபாரம்
தொடர்ந்து விருத்தியடைந்தது. பத்தில் நான்கு என்றும் கடைசியில் பத்தில்
ஐந்து பங்கும் தேவனுக்குக் கொடுத்தான். பல நிறுவன கிளைகளை ஆரம்பித்தான்.
இன்று அவன் கம்பெனி பெயரைச் சொல்லாத வீடுகளே இல்லை. ஏன் நாடுகளே இல்லை
எனலாம். அவர் யார் தெரியுமா? அவர்தான் மறைந்த வில்லியம் கோல்கேட் ஆவார்.

தேவனுக்குக் கொடுத்த எவரும் தரித்திரர் ஆவதில்லை. ‘என் ஆலயத்தில் ஆகாரம்
உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டகசாலையிலே கொண்டு
வாருங்கள். அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்
போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனோவென்று அதனால்
என்னைச் சோதித்துப் பாருங்கள்’ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
(மல் 3:10). இன்று அநேகர் தங்கள் வருமானத்தில் உண்மையாய் தேவனுக்கு கொடுக்க
வேண்டிய பங்கை கொடுப்பதில்லை. பல ஆலயங்களில் காணிக்கை பகுதி வந்தவுடன்
சிலர் சபையை விட்டு வெளியேறுகின்றனர். பலர் ஏதோ கொடுக்க வேண்டும்
என்பதற்காக சில்லரை காசுகளை தேடுகின்றனர். நாம் பாடல்களை பாடி தேவனை
ஆராதிக்கும்போது இயேசு கிறிஸ்து அதில் எப்படி பிரியப்படுவாரோ அதேப்போல
உற்சாகமாக கொடுக்கிறவனிடத்திலும் தேவன் பிரியமாய் இருக்கிறார். நாம்
அவருடைய கரத்தில் வாங்கி அவருக்கென்று கொடுக்கிறோம். இது நன்றியறிதல்தான்.
நமக்குக் கொடுத்த இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றி காணிக்கை இது. நம்மைப்
பெற்று, வளர்த்து நல்ல நிலைக்கு உயர்த்திய பெற்றோருக்கு உரிய உதவிகளைச்
செய்கிறோமே, அந்த மாதிரியான நன்றியறிதல்தான் இது. இவ்வாறு இறைவனுக்கு என்று
நாம் சமர்ப்பிக்கும் பொருளோ, பணமோ எல்லாம் அந்த இறைவனையா போய்ச்
சேருகின்றன? இல்லை, நாம் அவ்வாறு கொடுக்கும் அந்த கொடை, தேவையுள்ளோருக்கு,
தேவையான உதவிகளைச் செய்யத்தான் பயன்படுகிறது. வீட்டில் நம் பெற்றோர்,
நம்மைப் பாசத்துடன் நடத்தும் சகோதர சகோதரிகள், நம்முடன் மிகுந்த நேசத்துடன்
பழகும் நண்பன் இவர்களில் யாராவது பசித்திருக்க நம்மால் பார்த்துக்
கொண்டிருக்க முடிகிறதா? உடனே அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை நாம்
செய்வதில்லையா?
அதுபோலதான், நாம் பார்க்காத, நமக்கு முன்பின் தெரியாத நம் சொந்தங்களுக்கு,
நம் நண்பர்களுக்கு அந்த பொருள் போய்ச் சேர்ந்து அவர்களை முகமலரச்
செய்கிறது. இந்த தார்மீகக் கடமையிலிருந்து நாம் எந்நாளும் தவறாதிருப்போம்.
நாம் செலுத்தும் இந்த நன்றிக்கடன் என்பது, தேவனால் இதே உலகுக்கு
அனுப்பப்பட்ட மற்றொரு ஜீவனுக்கு உதவக்கூடியதே!
-பரமன்குறிச்சி
பெ.பெவிஸ்டன்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum