தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பிறந்தது முதல் ஐந்து வயது வரை என்னென்ன உணவுகளை எப்படி கொடுக்க வேண்டும் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பிறந்தது முதல் ஐந்து வயது வரை என்னென்ன உணவுகளை எப்படி கொடுக்க வேண்டும் Empty பிறந்தது முதல் ஐந்து வயது வரை என்னென்ன உணவுகளை எப்படி கொடுக்க வேண்டும்

Mon Aug 18, 2014 8:45 am

இது குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயது வரை என்னென்ன உணவுகளை எப்படி கொடுக்க வேண்டும் என்று உலக அளவில் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் அமைப்பு (UNICEF) தெளிவாக வெளியிட்டிருக்கும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஏழைத் தாய்மாரும் செயல்படுத்தக் கூடிய வழி முறைகள்தான் இது என்பது கூடுதல் சிறப்பு. என்றாலும் குடும்ப மருத்துவருடன் கலந்தாலோசித்து இதை நடைமுறைப்படுத்துவது சாலச் சிறந்தது.

முதல் ஆறு மாதங்கள் வரை:

குழந்தைக்கு தாய்ப்பால் எப்பொழுதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம், அதாவது, ஒரு நாளைக்கு குறைந்தது 8 முறை கொடுக்க வேண்டும். மற்ற உணவுகள் அல்லது திரவ உணவுகள் – ஏன் தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது. கோடைக்காலம் என்றாலும் தண்ணீர் அவசியமில்லை. குழந்தை நோய்வாய்ப்பட்டிருந்தாலும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது.

ஆறு மாதங்கள் முதல் ஒரு வயது வரை:

குழந்தை எப்பொழுதெல்லாம் விரும்புகிறதோ அப்பொழுது தாய்ப்பால் கொடுத்தால் போதும். மற்ற நேரங்களில் ஒரு கிண்ணம் உணவு, ஒரு முறை கொடுக்கலாம். நெய், எண்ணெய் கலந்த பருப்பு சாதம், கேழ்வரகு கஞ்சி, அரிசி கஞ்சி, பொட்டுக் கடலை கஞ்சி, உப்புமா, கிச்சடி, பொங்கல், மசித்த இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, வேக வைத்த மசித்த காய்கறிகள் (உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட்) ஆகியவற்றை கொடுக்கவும். வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி, சப்போட்டா ஆகிய பழங்களையும் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு ஒரு நாளைக்கு மூன்று முறையும், தாய்ப்பால் குடிக்காத குழந்தைக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறையும் உணவு கொடுக்க வேண்டும். இந்த உணவையும் குழந்தையை மடியில் வைத்து தாய் தன் கையால் ஊட்ட வேண்டும். ஸ்பூன் அவசியமில்லை அல்லது தேவையில்லை. ஒவ்வொரு முறை ஊட்டும்போது தாய் தன் கை மற்றும் குழந்தையின் கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

ஒரு வயது முதல் இரண்டு வயது வரை:

குழந்தை விரும்பும்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் உண்ணும் உணவையே குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். ஒரு வேளைக்கு ஒன்றரை கிண்ணம் உணவு என்ற அளவில் ஒரு நாளைக்கு ஐந்து வேளை கொடுக்க வேண்டும். குழந்தை சாப்பிடும் வரை பக்கத்தில் அமர்ந்திருப்பது நல்லது. அப்போதுதான் தேவைப்படும்போது உதவ முடியும். ஏனெனில் இந்த வயதில், தன் உணவை தானே எடுத்து சாப்பிட குழந்தையை பழக்கப்படுத்த வேண்டும். முடிந்தவரை ஊட்டக் கூடாது. சாப்பிடுவதற்கு முன்பு குழந்தையின் கையை சோப்பு போட்டு கழுவ பழக்கப்படுத்துங்கள்.

இரண்டு வயதுக்கு மேல்:

குழந்தை விரும்பினால் தாய்ப்பால் கொடுக்கலாம். என்றாலும் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கொடுக்க வேண்டும். அதே போல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பாட்டுக்கு முன் ஊட்டச்சத்து நிரம்பிய உணவான வாழைப்பழம், மாம்பழம், முட்டை மற்றும் தின்பண்டங்களை கொடுக்கலாம். இத்துடன் பணி முடிந்தது என்று நினைக்காமல் குழந்தை சாப்பிட்டு முடிக்கும் வரை உடனிருக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் கை கழுவ பழக்க வேண்டும்.

மூடநம்பிக்கை:

வாழ்வின் முக்கியமான வளர்ச்சி, குழந்தைப் பருவத்தில்தான் நிகழ்கிறது. குழந்தை பிறக்கும்போது தலையின் சுற்றளவு 35 செ.மீ. இருக்கும். இது குறிப்பிட்ட வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து குழந்தையின் ஒரு வயதில் 45 செ.மீ. ஆகிறது. ஐந்து வயதாகும் போது தலையின் சுற்றளவு 50 செ.மீ. இருக்கும். கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். காரணம், வளர்ந்த மனிதனின் தலை சுற்றளவு 50 செ.மீ.தான். ஐந்து வயதுக்கு மேல் தலைச்சுற்றளவும், மூளையின் புற வளர்ச்சியும் அதிகரிப்பதில்லை. அறிவு மற்றும் சுற்றுப்புற சூழல் தூண்டுதல்களால் மூளையின் செயல்திறன் மட்டுமே அதிகரிக்கிறது. எனவே, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குழந்தைப் பருவத்தில் சத்துணவு மிக மிக அவசியம். குழந்தை பிறந்தவுடன் தாயிடம் சுரக்கும் சீம்பால், குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களையும், அதிக அளவில் நோய் எதிர்ப்புச் சக்திகளையும் கொடுக்கக் கூடியது. இது குழந்தைக்கு செரிக்காது, வயிற்றுக்கு போதாது என்று சிலர் நினைக்கிறார்கள்.

அதனாலேயே சீம்பால் தருவதை தவிர்க்கிறார்கள். இது தவறு. அவசியம் சீம்பால் தர வேண்டும். தாய்ப்பால் தரும் தாய்க்கு வரும் பொதுவான நோய்களால் தாய்ப்பாலின் தரம் மாறாது. அவர்கள் உட்கொள்ளும் பொதுவான மருந்துகளாலும் குழந்தைக்கு பாதிப்பில்லை. காச நோய், புற்று நோய், எய்ட்ஸ் நோய் வந்த தாய்மார்களும் தங்கள் குழந்தைக்கு பாலூட்டலாம். மிக அரிதான சில நோய்களாலும், மருந்துகளாலும் மட்டுமே குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும். மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகுதான் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அதே போல் தாயின் உணவுப் பழக்கங்களால் தாய்ப்பாலின் தரம் மாறுவதில்லை. எளிதில் செரிக்கக் கூடிய, எளிய சத்தான எல்லா உணவு வகைகளையும் தாய் உட்கொள்ளலாம்.

பழங்கள் மற்றும் பழச்சாறு உட்கொண்டால் தாய்க்கு சளி பிடிக்கும்; பலாப்பழம், மாம்பழம் மற்றும் முட்டையை பாலூட்டும் தாய் உட்கொண்டால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்… என்பதெல்லாம் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எளிதில் செரிக்கக் கூடிய எல்லா உணவுகளையும் அவரவர் வழக்கத்துக்கு தகுந்தபடி தாய் சாப்பிடலாம். வேலைக்கு செல்லும் தாய், சிலமணி நேரத்துக்கு மேல் பாலூட்டவில்லையெனில் அது கெட்டு புளித்திருக்கும், குழந்தைக்கு செரிக்காது என்று சிலர் நினைக்கிறார்கள். இது தவறு. இப்படி எண்ணி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். குழந்தை மார்பகத்தை சப்பிக் குடிக்கும்போது பால் சுரக்கிறது. சாதாரணமாக மார்பகத்தில் பால் சேமித்து வைக்கப்படுவதில்லை. பால் நாளங்களில் 10 – 20 மி.லி. பால் இருக்கும். அவ்வளவுதான். எனவே, தாய்ப்பால் புளித்துப் போக வாய்ப்பில்லை. இரு மாதங்கள் வரை பால் கொடுக்காமல் இருந்து, பிறகு கூட தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தைக்கு தர வேண்டிய உணவுகள்:

முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று பார்த்தோம். அதன் பிறகு வீட்டில் தயாராகும் அவரவர் வழக்கத்துக்கு தகுந்த உணவை பழக்கலாம்.காலை 8 – 9 மணிக்குள் காலை உணவை கொடுக்க வேண்டும். சாப்பாட்டுக்கு இரண்டு மணி நேரங்களுக்கு பால் தரலாம். மொத்தத்தில் பசியுடன் இருந்தால்தான் உணவு உணபதில் குழந்தை ஆர்வம் காட்டும். மசித்த இட்லி, இடியாப்பம், மூடி வைக்கப்பட்ட ஆப்பம், மிருதுவான ஊத்தப்பம் போன்றவற்றை கைகளால் மசித்து சிறு சிறு கவளமாக தர வேண்டும். பருப்பு வேகவைத்த நீர், ரசம், புளிக்காத தயிர், பால் பயன்படுத்தி மசிக்கலாம். சர்க்கரை சேர்த்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும். காரணம், இனிப்பு சுவைதான் குழந்தைக்கு முதலில் புரியும்.

அதை ருசி பார்த்துவிட்டால் பிறகு காரம், உப்பு வகைகளை விரும்பாது. பேச்சு கொடுத்தபடியே ஊட்ட வேண்டும். காலை 11 – 12 மணியளவில் புதிதாக வீட்டில் ஆப்பிள், திராட்சை, மாதுளை ஆகியவற்றிலிருந்து தயாரான பழச்சாறை கொடுக்கலாம். திட உணவு பழகும்போது படிப்படியாக நிதானமாக செயல்பட வேண்டும். முதலில் 2 – 3 வாரங்களுக்கு காலை உணவு, பிறகு 2 – 3 வாரங்களுக்கு மதிய உணவு, பின்னர் 2 – 3 வாரங்களுக்கு மாலை உணவு… கடைசியாக இரவு உணவு. ஒவ்வொரு முறையும் புதிதாக சமைத்த உணவையே குழந்தைக்கு தர வேண்டும். ஆறிய உணவுகளை சுட வைத்து கொடுக்கக் கூடாது. ஊட்டும்போதும் உணவை வாங்கிக் கொள்ள, வாயைக் கூட்டி நாக்கை மடித்து விழுங்க… என்று படிப்படியாக பழக்கப்படுத்த வேண்டும்.

மதிய உணவில் சாதத்தை கையால் மசித்து சிறிது உப்பு, ஆறிய வெந்நீர் சேர்த்து ஊட்டலாம். பிறகு துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, சாம்பார், ரசம், கீரைச் சாறு என மாற்றி மாற்றி ஊட்டலாம். உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பரங்கி, பூசணி போன்றவற்றை நன்கு வேக வைத்து உப்பு சேர்த்து கொடுக்கலாம். புளிக்காத தயிரும், மோரும் குழந்தைக்கு நல்ல பயனளிக்கும். கடையில் விற்கும் இணை உணவுகளை வாங்கிக் கொடுக்காதீர்கள். அதே போல் பிஸ்கெட், ரொட்டி, கேக், சாக்லெட், நூடுல்ஸ், வறுவல்கள் (சிப்ஸ்) மாதிரியான ஜங்க் ஃபுட்டுக்கும் பழக்கப் படுத்தாதீர்கள். முடிந்தவரை இவற்றையெல்லாம் வாங்கிக் கொடுக்காமல் இருப்பதே நல்லது. காரணம், அதிலுள்ள காரம் மற்றும் வேதிப் பொருட்கள் நச்சுத்தன்மையை அதிகரிக்கும். உடல் எடை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி குறையும். முக்கியமாக துரித உணவுகள் (ஃபாஸ்ட் ஃபுட்ஸ்) பக்கம் செல்லவே செல்லாதீர்கள்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum