எல்லைக் காவல் படையில் வேலை
Mon Aug 10, 2015 8:38 pm
இந்திய- திபெத்திய எல்லைக் காவல் படை சுருக்கமாக ஐ.டி.பீ.பி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த படைப்பிரிவில் அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோ) பணியிடங்களுக்கு 10 பேரும், தலைமைக் காவலர் பணிக்கு 148 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் துறை ரீதியிலான பதவி உயர்வு பணியிடங்களும் அடக்கம்.
நேரடி தேர்வின் மூலம் அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோ) பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். துறை ரீதியில் பதவி உயர்வுக்காக போட்டியிடுபவர்கள் 40 வயதுடையவராக இருக்கலாம்.
இவர்கள் பிளஸ்-2 அல்லது இன்டர்மீடியட் படித்தவர்களாக இருக்க வேண்டும். அத்துடன், நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் குறிப்பெடுக்கவும், அதை குறித்த நேரத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
தலைமைக் காவலர் பணிக்கு நேரடி தேர்வின் மூலம் சேர விரும்புபவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். துறை ரீதியாக தேர்வு எழுதுபவர்கள் 40 வயதுடையவராக இருக்கலாம். இவர்கள் பிளஸ்-2 அல்லது இன்டர்மீடியட் படிப்புடன், நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 165 செ.மீ. உயரமும், 77 செ.மீ. மார்பளவும் கொண்டிருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் 155 செ.மீ. உயரம் இருந்தால் போதும். வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையளவு பரிசோதிக்கப்படும். கண் பார்வைத்திறனும் குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வெள்ளைக் காகிதத்தில் தெளிவாக கைப்பட எழுதியோ, தட்டச்சு செய்தோ குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயாரிக்கலாம். அதில் விவரங்களை நிரப்பி, தேவையான சான்றுகள் இணைத்து தபால் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் 10-9-15-ந் தேதியாகும்.
இது பற்றிய விரிவான விவரங்களை http:/itbp.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
நேரடி தேர்வின் மூலம் அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோ) பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். துறை ரீதியில் பதவி உயர்வுக்காக போட்டியிடுபவர்கள் 40 வயதுடையவராக இருக்கலாம்.
இவர்கள் பிளஸ்-2 அல்லது இன்டர்மீடியட் படித்தவர்களாக இருக்க வேண்டும். அத்துடன், நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் குறிப்பெடுக்கவும், அதை குறித்த நேரத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
தலைமைக் காவலர் பணிக்கு நேரடி தேர்வின் மூலம் சேர விரும்புபவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். துறை ரீதியாக தேர்வு எழுதுபவர்கள் 40 வயதுடையவராக இருக்கலாம். இவர்கள் பிளஸ்-2 அல்லது இன்டர்மீடியட் படிப்புடன், நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 165 செ.மீ. உயரமும், 77 செ.மீ. மார்பளவும் கொண்டிருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் 155 செ.மீ. உயரம் இருந்தால் போதும். வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையளவு பரிசோதிக்கப்படும். கண் பார்வைத்திறனும் குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வெள்ளைக் காகிதத்தில் தெளிவாக கைப்பட எழுதியோ, தட்டச்சு செய்தோ குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயாரிக்கலாம். அதில் விவரங்களை நிரப்பி, தேவையான சான்றுகள் இணைத்து தபால் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் 10-9-15-ந் தேதியாகும்.
இது பற்றிய விரிவான விவரங்களை http:/itbp.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|