எல்லைக்காவல் படையில் 561 பணியிடங்கள் 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Tue May 24, 2016 9:42 am
எல்லைக் காவல் படையில் 561 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
எல்லைக் காவல் படை சுருக்கமாக பி.எஸ்.எப். என்று அழைக்கப்படுகிறது. துணை ராணுவ படைப்பிரிவான இதன் தலைமை இயக்குனரகத்தில் இருந்து, 2016-17-ம் ஆண்டுக்கான கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். மொத்தம் 561 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக துப்புரவாளர் பணிக்கு 147 இடங்களும், சமையலர் பணிக்கு 140 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தவிர டெய்லர், பெயிண்டர், சலவைப் பணியாளர், காப்லர், பார்பர் உள்ளிட்ட பணியிடங்களுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-8-2016 தேதியில் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் உள்ளிட்டவர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருப்பதுடன், 2 ஆண்டுகள் பணி சார்ந்த அனுபவம் பெற்றவவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓராண்டு ஐ.டி.ஐ. படித்து, ஓராண்டு பணி அனுபவம் இருந்தால் விண்ணப்பிக்கலாம் அல்லது ஐ.டி.ஐ. படிப்பில் 2 ஆண்டு படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.
உடல்தகுதி:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 167.5 செ.மீ. உயரமும், மார்பளவு 78-83 செ.மீ. அளவிற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
உடல் அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், திறமைத் தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளத்தில் மாதிரி விண்ணப்பம் கிடைக்கும். அதை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். புகைப்படங்கள் ஒட்டி, கட்டண சான்று மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான அறிவிப்பு எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமானதில் இருந்து 30 நாட்களுக்குள் சென்றடையும்படி விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பு மே 21-27 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. முழுமையான விவரங்களை அந்த இதழிலோ அல்லது www.bsf.nic.in என்ற இணையதளத்திலோ பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|