தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான அடையாளங்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான அடையாளங்கள் Empty இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான அடையாளங்கள்

Thu Sep 05, 2013 11:18 pm

*** பல புதிய சபைகள் இந்த நூற்றாண்டில் எழுந்துள்ளன 
1. ஏகோவா சாட்சிகள் 
2. இயேசு கிறிஸ்து மட்டும் தான் தெய்வம் ஏகோவா அல்ல, பரிசுத்த ஆவியானவர் அல்ல என்று கிளம்பியிருக்கும் கூட்டம்
3. பரிசுத்த ஆவியானவர் தான் தெய்வம் இயேசு அல்ல / ஏகோவா அல்ல என்று கிளம்பியிருக்கும் மற்றொரு கூட்டம். 
4. பெண்களை குறிவைத்து உள்ளே புகும் மற்றொரு கூட்டம்
5. வாலிபர்களை அழைத்து தேவையில்லாத நடப்பை உருவாக்கும் கூட்டம்
இன்னும் பல புதிய சுய இச்சை சபைகள் வேகமாக இவ்வுலகில் பரவி வருகின்றன. இவை அனைத்தும் இந்த 20ம் நூற்றாண்டில் உருவானதுதான். இது கரத்தை பிறந்ததற்கு முன்னோ பின்போ இருந்ததில்லை. இதன் மூலம் நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதை அறியலாம்.**



இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான அடையாளங்கள் 1240570_510155252399606_1378277671_n

















   
[font]
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான அடையாளங்கள்.

நிறைவேறின / நிறைவேறி கொண்டிருகிற பரிசுத்த வேதாகம தீர்க்கதரிசனங்கள் உலக நடப்புகளின் ஆதாரத்தோடு. இதோ உங்களுக்காக முதல் பகுதி. பொறுமையுடன் படிக்கவும்.

மத்தேயு 24:3 இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?
2 பேதுரு 3:4. அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே?

என்று கேட்ட பொது கர்த்தர் பல காரியங்களை நினைவுரித்தினார். 

இதற்கு தேவன் கொடுத்த ஆதார தீர்க்கதரிசன வசனம்
மத்தேயு 24:21. ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
For then shall be great tribulation, such as was not since the beginning of the world to this time, no, nor ever shall be.

இந்த வசனத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இயேசு கிறிஸ்து இந்த பூமியில் இருந்த நாட்களுக்கு முன்னும் பின்னும் "நடந்திராத" பல "உபத்திரவம்" வரும் என்பதுதான்.

இந்த "நடந்திராத" மற்றும் "உபத்திரவம்" வைத்துதான் நாம் தேவனின் வருகைக்கான அடையாளத்தை பெற்று கொள்ளமுடியும். நாம் அனைவரும் அறிந்தது போல் மற்ற எந்த நூற்றந்துகளிலும் இல்லாத காரியம் இந்த 19 , 20ம் நூற்றாண்டுகளில் நடந்தேறி 21ம் நூற்றாண்டிலும் இது தொடர்கிறது.

அப்படியென்ன வித்தியாசம் இந்த நூற்றாண்டுகளில் எண்டு நீங்கள் கேட்கலாம். சில காரியங்களி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 19ம் நூற்றாண்டில் சில அதிசயத்தக்க விஷயங்கள் நடேந்தேரியுள்ளன. 70ம் ஆண்டில் (கிறிஸ்துவுக்கு பின்) யூதர்கள்/இஸ்ரவேலர்கள் இந்த 20ம் நூற்றாண்டில் தான் மீண்டும் தங்கள் தேசத்தை சொந்தமாகிகொள்ள முடிந்தது. 

1. சிதறடிக்கப்பட்ட யூதர்கள் மீண்டும் தங்கள் தேசத்தை அடைவர் (ஏசாயா 11:11,12)
2. இஸ்ரேல் தேசம் மீண்டும் உயிர்பெறும் (ஏசாயா 66:7,8 மற்றும் எசேக்கியல் 37: 21-22). இந்த வசனம் நிறைவேறிய நாள் மே 14, 1948
3. யூதர்கள் மீண்டும் எருசலேம் நகரத்தை தனதாக்கி கொள்வர் (சகரியா 8:4-Cool. இந்த வசனம் நிறைவேறிய நாள் ஜூன் 7, 1947
4. பாழாக்கப்பட்ட இஸ்ரேல் தேசத்தின் மண் மீண்டும் விளைச்சலை கொடுக்கும் (எசேக்கியேல் 36:34-35). இந்த வசனம் 2000ம் ஆண்டு நிறைவேறி இந்த நாட்களிலும் நிறைவேறி கொண்டிருகிறது. 
5. செத்துப்போன எபிரேய பாஷை மீண்டும் உயிர் பெரும் (செப்பனியா 3:9). நிறைவேறின வருடம் 19ம் நூற்றாண்டில் இருந்து இன்று வரை)
6. சுற்றி உள்ள எல்லா தேசங்களும் இஸ்ரேல் தேசத்திற்கு எதிராய் திரும்பும் (சகரியா 12:1,2,3). இந்த வசனம் நிறைவேறி கொண்டிருகிறது.

இந்த வசனங்கள் நிறைவேறி விட்டன. இன்னும் பல தீர்க்கதரிசன வசனங்கள் நிறைவேறி கொண்டுள்ளன.

சுமார் 1880 வருடங்களாக சிதறி கிடந்த இஸ்ரேல் மக்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மீண்டும் தங்களுக்கு தேசம் வேண்டும் என வரத்துவங்கினர். அதுவரை சிறு சிறு போர்களை நடத்தி வந்த சாத்தான் கர்த்தரின் இரண்டாம் வருகை சமீபத்தில் உள்ளது என்பதை இந்த இஸ்ரேல் மக்கள் மீண்டும் ஒன்றானத்தை வைத்து புரிந்து கொண்டான். இதன் நிமித்தமாக பல நபர்களை எழுப்பி யூதர்களை கொன்று குவித்தான். இதில் ஒருவர் தான் ஹிட்லர். பல லட்சக்கணக்கான யூத மக்களை ஒரு சில நாட்களில் கொன்று குவித்தான். இரண்டாம் உலகப்போர் மூண்டது. இதன் பின் அமெரிக்க தேசம் 5000 ஏக்கரை பிரித்து இஸ்ரேல் தேசத்தை உருவாகியது. தேவனின் தீர்க்கதரிசனமும் நிறைவேறியது. 

இதன் பிறகு தான் உலகம் விழித்து கொண்டது. வேதாகமத்தில் உள்ள வசனங்களை உலகமே திரும்பி பார்த்தது. உலப்போர் என்பதே 20ம் நூற்றாண்டில் தான் ஆரம்பித்தது. பல கொள்ளை நோய்கள் பரவியது. ஏன் என்று தெரியாமலே பல கோடிக்கணக்கான பேர் மாண்டனர். வரலாற்றில் எந்த நூற்றாண்டிலும் இல்லாத பூகம்பங்கள் / கடல் அதிர்வுகள் / சுனாமிகள்/ புரள/ தேச அழிவுகள்/ மனித சீரழிவுகள்/ என்று பல கொடூரம் நிறைவேறி உள்ளது. இந்த உபத்திரவம் கிறிஸ்துவுக்கு முன்னும் இருந்ததில்லை, பின்னும் இருந்ததில்லை. இப்போது தீர்க்கத்தரிச வசனம் நிறைவேறி கொண்டுள்ளது.

அது மட்டும் அல்ல.. பல தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட சுவிசேஷ வசனங்கள் நிறைவேரிகொண்டுள்ளன. இது முதல் பகுதி தான். பல பகுதிகள் வெளிவர காத்திருகின்றன. தேவனின் உதவியால் சீக்கிரத்தில் வெளியிடுகிறேன். ஆமென்.

இவ்வுலகில் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருப்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை எப்போது இருக்கும் என்பதுதான். பல ஆராய்ச்சி நிறுவனங்களும், வேத பண்டிதர்களும், தனிப்பட்ட உலக ஆராய்ச்சி நிபுணர்களும் இன்று பரிசுத்த வேதாகமத்தில் பொதிந்துள்ள காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். அனைவரும் கேட்ககூடிய ஓர் கேள்வி... இயேசு கிறிஸ்து வருவாரா? பல நூற்றாண்டுகளாக இதை தான் கிறிஸ்தவர்கள் சொல்லி கொண்டு இருகிறார்கள். இன்னும் வரவில்லையே? கிறிஸ்தவர்கள் சொல்வது பொய்யா என்று பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன,

சில பதிவுகளை கொடுக்கலாம் என்கிற நோக்கத்துடன், பலரை ஆயத்தப்படுத்தும் என்ற நல்லெண்ணத்துடன் இவைகளை பதிகிறேன்.

நமக்கு தெரிந்துள்ளபடி பரிசுத்த வேதாகமம் கிறிஸ்துவின் வருகையை அதிகமாக தாங்கியுள்ளது. புதிய ஏற்பாட்டின் நோக்கம் கிறிஸ்துவின் வருகையை முன்னரிவிக்கத்தான். 

ஓர் வேத ஆராய்ச்சி நிறுவனம் இப்படியாக கூறுகிறது..

ஒவ்வொரு 30 வேத வசனத்திற்கும் 1 வசனம் இறுதி நாட்களை குறித்து பேசுகிறது.
இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை விட இரண்டாம் வருகை பரிசுத்த வேதாகமத்தில் 8 முறை அதிகமாக கூறப்பட்டுள்ளது.

அதிகமாக 318 முறை புதிய ஏற்பாடு வசனங்கள் தேவனின் இரண்டாம் வருகையை பற்றி குறிப்பிடுகிறது...

பல நூற்றாண்டுகளாக இயங்கி வரும் இவ்வுலகத்தில் நடந்திராத பல மனிதனை அதிரவைக்கும் காரியங்கள் 20ம் நூற்றாண்டிலும், 21ம் நூற்றாண்டிலும் நிறைவேறி கொண்டிருக்கின்றன. உலகவரைபடத்தை மாற்றி அமைக்க காரணமாய் இருந்த இஸ்ரேல் தேச உதயம் இந்த நூற்றாண்டில் தான் நிறைவேரினது. இன்னும் பல ஆயிரக்கணக்கான காரியங்கள் தேவனின் வேதவசனங்களின் படி நிறைவேறி கொண்டிருகிறது.

இங்கே சில காரியங்களை வேத வசனத்தோடு பார்ப்போம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை இரண்டாம் வருகைக்கு முன் "பேரானந்தம் / எடுத்துக்கொள்ளப்படுதல்" (RAPTURE ) எப்போது இருக்கும் என்று தேவன் உங்களுக்கு அறிவுருத்துவாராக.

1. சுவிசேஷம் எங்கும் சொல்லப்படும்.. பின் முடிவு வரும்..

வேத வசன ஆதாரம்: மத்தேயு 24:14. ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
And this gospel of the kingdom shall be preached in all the world for a witness unto all nations; and then shall the end come.

நமக்கு தெரிந்திருக்கிறபடி பல விதங்களில் தேவனின் சுவிசேஷம் உலகமெங்கும் வேகமாக பரவி கொண்டிருகிறது. சபைகள் வளர்கின்றன. https://www.youtube.com/watch?v=apWFndsIqjo
சில துளிகள் உங்களுக்காக:
1. சீன தேசத்தில் 20ம் நூற்றைந்து வரை சுவிசேஷ வாசல்கள் மூடி கிடந்தன. ஆனால் இன்றோ மறைமுகமாக உள்ள சபைகளில் மட்டும் 100 மில்லியன் கிறிஸ்தவர்கள் இருகிறார்கள் என்று கணக்கிட்டு இருகிறார்கள். இதில் 70% பேர் கம்னியூச கட்டில் இருந்து விடுபட்டவர்கள்.
2. ஆப்ரிக்க தேசத்தில் 1902ம் ஆண்டு 1 மில்லியன் ஆக இருந்த கிறிஸ்தவம் இன்று 329,880,000 ஆக உயர்ந்து விட்டது.. இங்கு 1.5 மில்லியன் சபைகள் உள்ளதாக 2000ம் ஆண்டு கணக்கிட்டு உள்ளனர். 
100 வருடத்தில் இது ஓர் பெரிய மாற்றம் அல்லவா?
3. பாகிஸ்தானில் கிறிஸ்தவம் வேகமாக வளர்ந்து வருகின்றது. சுதந்திரம் அடையும் பொது 5% மாக இருந்த கிறிஸ்தவம் 1978 ல் 15% ஆக உயர்ந்தது. ஆனால் பாகிஸ்தான் அரசு இதை 1% என்று வெளியிட்டு இருக்கிறது. ஆனால் 2013 கணக்கின் படி சுமார் 13% கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். http://www.pakistanchristianpost.com/vieweditorial.php?editorialid=18
4. இராக் தேசத்தில் gulf war க்கு பிறகு கிறிஸ்தவம் வேகமாக வளர்ந்தது. சில ஆண்டுகளில் 70,000 பேர் கிறிஸ்தவத்தை ஏற்று கொண்டனர். https://www.youtube.com/watch?v=7-np4LnbEZI
5. இரான் தேசத்தில் கிறிஸ்தவர்களின் வளர்ச்சி இந்த நூற்றாண்டில் அதிகமாக உள்ளது. அதை போல் சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான், துருக்கி, மற்றும் பல நாடுகளில் சுவிசேஷம் வேகமாக பரவி வருகிறது. இவர்கள் மத்தியில் வேலை செய்யும் பல கிறிஸ்தவ ஸ்தாபனங்கள்ளிடம் வேதாகமம் கேட்டு வருவோர் பல மில்லியனை தாண்டி கொண்டுள்ளது. வ்வ்வ்.persecution.com

இன்னும் பல ஆதாரம்: http://muslimstatistics.wordpress.com/2012/12/14/al-jazeerah-6-million-muslims-convert-to-christianity-in-africa-each-year/
https://www.youtube.com/watch?v=RAT9KChzdtA
http://www.washingtontimes.com/news/2005/aug/2/20050802-115449-8165r/?page=all
http://www.kavkazcenter.com/eng/content/2011/04/17/14103.shtml

2. சபைகளில் விசுவாசிகளும் அவ்விசுவாசிகளும் பெருகி இருப்பார்கள்.
மத்தேயு 13:24. -30 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.
Another parable put he forth unto them, saying, The kingdom of heaven is likened unto a man which sowed good seed in his field:

இங்கே மனிதனின் மனதில் தேவனும் சாத்தானும் விதை விதைப்பதை உவமையாக சொல்கிறார் தேவன். தேவனிடம் இந்த சாத்தானின் விதையை எடுக்க சொல்லி கேட்ட பொது அவர் "அதை எடுக்க வேண்டாம் என்றும் இரண்டும் வளரட்டும் என்றும், தான் வரும்போது கேட்ட விதிகளை தனியாக பிரிப்பேன் என்று கூறுகிறார். இதன் அர்த்தம் என்ன?

இது உவமை மட்டும் அல்ல. பரலோகம் நரகம் பற்றி தேவன் உரைத்த தீர்க்கதரிசனம். 

சபைகளில் வேத வசனங்கள் விதைக்கப்படுகிறது. உலகம் மூலமாகவும், பாவத்தில் பிறந்ததாலேயும் நமக்குள் சாத்தானின் விதையும் அதாவது பாவமான சிந்தனையும் இருக்கிறது. பலர் நல்ல விதைகளை தங்கள் இருதயத்தில் விளைய செய்கின்றனர். ஆதாவது வேத வசனத்தின் படி வாழ முடிவெடுத்து கடைசி வரை தேவனை விடாமல் பிடித்து வாழ்கின்றனர். சிலர் வேத வசனங்களை கேட்டும் தங்கள் இருதயம் உலகத்திலும், உலக ஆசையிலும் இருப்பதால் பாறையாக மாறி பின் இயேசுவின் அன்பை அறியாமல் போகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் இருதயம் சாத்தான் விதைத்த விதையை ருசிபார்கிறது.

இதை இன்னும் புரிந்து கொள்ள..... ஓர் உதாரணம்.... நமக்கு ஓர் வேலை நடக்க வேண்டும் என்றால் லஞ்சம் கொடுத்து சுருக்கமான முறையில் வேலை வாங்குவது நன்றாகவே தெரியும். இது சாத்தான் விதைத்த விதை. அதே நேரத்தில் தேவனின் விதை அதாவது சிந்தனை லஞ்சம் கொடுப்பது அரசாங்கத்திற்கும், சமூதயதிர்க்கும், தேவனுக்கும் செய்கிற துரோகம் என்று சொல்லும். ஆனால் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?நீங்கள் சாத்தானின் விதையை வளர்த்தீர்கள் என்றால் நரகத்தின் பங்காளிகள். தேவனின் விதையை வரத்தால் பரலோகத்தில் இடம் உண்டு.

இன்றைய காலங்களில் பரீட்சையில் காப்பி அடித்து தேர்வடைவது / மற்றவர்களை கேவலமாக விமர்சிப்பது / கெட்டவார்த்தை பேசுவது / சளைக்காமல் பொய் சொல்வது / காம இச்சை பார்வையோடு ஆண்கள் பெண்களை பார்ப்பது / வலைத்தளங்களில் ஆபாச காட்சியை தேடுவது / திருமணத்திற்கு முன் பலரை காதலிப்பது பின் மறைப்பது / போலி வாழ்க்கை வாழ்வது / கணவன் மனைவிக்கு துரோகம் செய்வது / மனைவி கணவனுக்கு துரோகம் செய்வது / ஆண்களும் பெண்களும் புகை பிடிப்பது / மதுபானம் அருந்துவது என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 

இந்த சாத்தானின் விதைகள் இன்று வெளியரங்கமாய் இருக்கிறது. பல இடங்களில் சமூதாயம் சீர்கெட்டு திரிகிறது. இது இந்த 20ம் நூற்றாண்டில் தான் அதிகமாக நடைபெறுகிறது. 

மத்தேயு 13: 25. மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.
But while men slept, his enemy came and sowed tares among the wheat, and went his way. 
26. பயிரானது வளர்ந்து கதிர் விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
But when the blade was sprung up, and brought forth fruit, then appeared the tares also.

சாத்தான் கடைசி காலங்களில் சபைகளில் உள்ள பலரது நித்திரையை பயன்படுத்தி களைகளை (குழப்பங்களை, தவறான உபதேசங்களை) வைத்துவிட்டு போவான். இவை இன்று சபைகளில் உண்டல்லவா?
சபைகளில் அரசியல் நடத்துவது, சண்டை / மற்றவர்களிடம் பேசாமல் இருப்பது / சபைக்கு வந்தாலும் தூங்குவது / ஜெப வேளைகளில் வெளியில் சென்று விடுவது / வேதாகமம் கொண்டு வராமல் இருப்பது / முழங்காலில் நின்று ஜெபிக்க தயங்குவது / படிப்புக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை வேத அறிவுக்கு கொடுக்காமல் ஓடுவது / ஞாயிற்று கிழமைகளில் தேவனுக்காக நேரம் செலவழிப்பதை விட்டுவிட்டு சினிமா / களியாட்டம் / படிப்பு / வேலை என்று மூழ்கி விடுவது என்று பல சாத்தானால் வேர்கள் கிறிஸ்தவர்களை ஆட்டி படைத்துகொண்டிருகின்றன. 

இப்படிப்பட்ட நிகழ்வுகள் இன்றைய சமூதாயத்தில் அதிகமாக உலகமெங்கும் காணப்படுகிறது. பல சபைகள் இன்று ஆட்கள் இல்லாமல் விற்கப்பட்டு களியாட்டு விடுதிகளாகி விட்டன. இது எந்த நூற்றாண்டிலும் நடைபெறாத ஓர் வேதனையான காட்சி. 

3. சுய இச்சைக்காரர்கள் 

2 பேதுரு 3:3. முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,
Knowing this first, that there shall come in the last days scoffers, walking after their own lusts,
4. அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
And saying, Where is the promise of his coming? for since the fathers fell asleep, all things continue as they were from the beginning of the creation.

இன்று பல வேதம் அறியாத கிறிஸ்தவர்கள் இந்த கேள்வியை தான் எழுப்பி கொண்டிருக்கின்றனர்.. இந்த வசனம் என்ன இப்படி சொல்கிறது? அப்படி சொல்கிறது? இதன் அர்த்தம் சரியில்லையே என்று வேதாகமத்தை தியானிக்காத சிலர் கூறும் கதறல்கள். இந்த கதறல்களில் சிக்கி பலர் வாழ்க்கையை மனம் போன போக்கில் வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் பல புதிய சபைகள் இந்த நூற்றாண்டில் எழுந்துள்ளன 
1. ஏகோவா சாட்சிகள் 
2. இயேசு கிறிஸ்து மட்டும் தான் தெய்வம் ஏகோவா அல்ல, பரிசுத்த ஆவியானவர் அல்ல என்று கிளம்பியிருக்கும் கூட்டம்
3. பரிசுத்த ஆவியானவர் தான் தெய்வம் இயேசு அல்ல / ஏகோவா அல்ல என்று கிளம்பியிருக்கும் மற்றொரு கூட்டம். 
4. பெண்களை குறிவைத்து உள்ளே புகும் மற்றொரு கூட்டம்
5. வாலிபர்களை அழைத்து தேவையில்லாத நடப்பை உருவாக்கும் கூட்டம்
இன்னும் பல புதிய சுய இச்சை சபைகள் வேகமாக இவ்வுலகில் பரவி வருகின்றன. இவை அனைத்தும் இந்த 20ம் நூற்றாண்டில் உருவானதுதான். இது கரத்தை பிறந்ததற்கு முன்னோ பின்போ இருந்ததில்லை. இதன் மூலம் நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதை அறியலாம்.

இது மட்டும் அல்ல.

புதிய இரண்டு சபைகளை இங்கே பார்ப்போம்.
1. சாத்தானின் சபை - அமெரிக்க தேசத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் இந்த சபை - லூசிபர் (LUCIFER) 
http://www.churchofsatan.com/Pages/CShistory7LR.html
http://www.nairaland.com/840799/welcome-efernal-church-satan-லாது

இந்த சபையில் சாத்தான் தான் தெய்வம். மனித இரத்தத்தை பானம் பண்ணுவார். சிலுவையை தலைகீழாக தொங்கவிட்டு வணங்குவர். விபச்சாரம் தான் இங்கு வரும் மக்களும் தாரக மந்திரம். இந்த சபையில் சேருவோர் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகமாகி கொண்டுள்ளது.

2. அந்தி கிறிஸ்து (666) சபை
அமெரிக்க தேசத்தில் புதிதாக அந்தி கிறிஸ்து சபை என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் இயக்குனர் தான் ஓர் அந்தி கிறிஸ்து என்றும் வேதாகமத்தில் சொல்லப்பட்டது நான் என்றும் பல தொலைகாட்சி நிறுவனங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். 
http://edition.cnn.com/2007/US/02/16/miami.preacher/
http://www.foxnews.com/story/2007/02/24/miami-church-brands-members-with-666-tattoos/
https://www.youtube.com/watch?v=0YGEftEOzGE

அன்பான கிறிஸ்தவர்களே. இது கடைசி காலம். இது தான் உண்மை. இன்னும் பல உண்மைகளோடு உங்களை மீண்டும் சந்திக்கிறேன். ஆமென்.



நன்றி: முகநூல்[/font]
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum