பரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா?
Fri Jan 26, 2018 3:00 pm
கேள்வி:கிறிஸ்தவர்கள் வாசிக்கும் பரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டுவிட்டஒன்றா? சிலர் நம்மிடம் இருப்பது ஒரிஜினல் வேதம் இல்லை என்கிறார்களே?
இந்தக் குற்றச்சாட்டு இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாக வைக்கப்படும் ஒன்று. புதிதல்ல. கி.பி 600வாக்கில் எழுதப்படும்போதுகூட வேதாகமம் மாற்றப்பட்டுவிட்டது, எனவே குரானே புனிதமாக எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள். இன்றுவரை முகமதியர்கள் பலரும் அதைதே நம்புகிறார்கள்.
வேதாகமம் மாற்றப்படவில்லை என்பதற்கான சான்றுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஏராளமான தகவல்களைத் தந்து வேதம் மாற்றப்படவில்லை என்று நிறுவிக்கொண்டே இருக்கலாம். ஆனால், அவையெல்லாம் கூடுதல் சான்றுகளாக இருந்தாலும் அதன் அடிப்படையில் வேதத்தை யாரும் புதிதாக நம்பி வாசிக்கத்துவங்கப் போவதில்லை. எவ்வளவு ஆதாரம் அளித்தாலும், போப்பாண்டவர் மாற்றிவிட்டார், இடையில் மொழிபெயர்ப்பாளர்கள் மாற்றிவிட்டார்கள், படி எடுப்பவர்கள் திருத்திவிட்டார்கள், ஒரிஜினல் தகவல்கள் மறைக்கப்பட்டன, பலர் இடைச் செருகலை உள்ளே வைத்துவிட்டார்கள், மூலபாஷையில் எழுதப்பட்டவை நாம் வாசிக்கும் இவை இல்லை என்று தொடர்ச்சியாக பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்களும் குறைகளும் முன்வைக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.
இவற்றை எல்லாம் கேட்டு ஆராயும் முன்பு நாம் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். இதைச் சொல்பவர்கள். இவர்களில் சிலர் மட்டும் வேதத்தை ஒரு புத்தகமாக வாசித்தவர்கள். நிச்சயமாக தியானித்தவர்கள் அல்ல. மற்ற பெரும்பாலானோர், ஒருசிலபகுதிகளை மட்டும் வாசித்தவர்கள். அல்லது அரைகுறையாக அறிந்தவர்கள். இந்தக் கேள்விக்கான பதிலின் நோக்கம் குறைகூறுபவர்களைக் குறைகூறுவதல்ல. ஆனால், வேதாகமம் வெறும்கதைப் புத்தகமோ, இல்லை தத்துவ, வாழ்வியல் புத்தகமோ இல்லை என்பதை உணராதவர்கள் வேதத்தை வாசிக்கும்போது அதன் தன்மை மற்றும் அதில் உள்ள சத்தியம் அவர்களுக்குப் புலப்படுவதில்லை என்பதை வருத்தத்துடன் சொல்லவேண்டியிருக்கிறது;. அப்படியானால், வேதம் மாற்றபடவில்லை என்பதை எப்படி நாம் அறிந்துகொள்வது. மாற்றப்பட்ட ஒருபுத்தகத்தை உண்மை என்று நம்பி வரிவிடாமல் தியானித்து வாழ நினைக்கும் நாம் உண்மையிலேயே மாற்றப்பட்டிருந்தால் ஏமாளிகளாகிவிடமாட்டோமா? ஒரு பொய்கள் நிறைந்த புத்தகத்திற்காக ஒரு வாழ்நாளை வீணாகப் போக்கிவிடால்லவா செய்திருப்போம்? ஆனால் அப்படி இல்லை உண்மை நிலை.
எந்த ஒருபுத்தகமும் வாசிக்கும் ஒரு மனிதனுக்குள் தாக்கத்தை வெளிப்படுத்தும். தொடர்ந்து மர்மக்கதைகளை வாசித்தால், நமக்கும் ஒரு துப்பறிவாளன் தகுதி கொஞ்சம் வரலாம். பிசினஸ் புத்தகங்கள் படித்தால், தொழிலில் ஆர்வம் ஏற்படலாம். வெறும் நேரம்போக்கும் பத்திரிக்கைகள் படித்தால் நேரம் நன்றாகவே வீணாக்கப்படலாம். தத்துவார்த்தமான புத்தகங்கள் படித்தால், தத்துவமாம, தர்க்கமாக வாழ்வை மாற்றிக் கொள்ளலாம். எனவே புத்தகங்கள் ஒரு மனிதனை மாற்றியிருக்கவேண்டும். அதன் எழுத்தாளர் எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும், எழுத்து ஒரு மனிதனைப் பாதிக்கும்.
வேதம் ஒரு புத்தகம் என்றால் அதை வாசிப்பவர் மத்தியில் என்ன மாற்றத்தை அதால் கொண்டுவரமுடியும் என்ற சாத்தியங்களைப் பார்க்கவேண்டும். ஒரு மனிதன் வாழ்வின் அடிநாதமான பிரச்சனை பாவம் என்று கண்டுகொள்வது வேதத்தில். அதைவிட்டு விலகவேண்டும் என்பதை அறிவது வேதத்தில் மட்டுமே. பாவச்சேற்றில் உளைந்து திழைக்கும் மனிதனுக்குத் தேவை விடுதலை, அதைத் தரவல்ல இரத்தம் சிந்தியவர் இயேசு. அந்த இரத்தத்தால் கழுவப்பட்ட மனிதன் பெறுவது விடுதலை, விடுதலை அடைந்தவன் இனி பாவம் செய்யான். அவன் ஆவி அவனுக்குள் மாறுகிறது. பரித்தவாழ்க்கை வாழத்தலைப்படுகிறாந். அவனால் இனி இந்த உலகத்திற்க்கு - சக மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்க இயலாது. மாறாக அவன் வெளிகாட்டுவது அன்பு. வேதம் காட்டச்சொன்ன அந்த அன்பு. அவன் மன்னிக்கிறவனாக மாறுகிறான். உலகம் தரும் இச்சைகள்மேல் அவனுக்கு வெறுப்பு. அவனால், இரண்டாம் திருமணம் செய்வதை நினைக்க இயலாது. இறைவன் பெயரால்கூடக் கொலை செய்ய இயலாது. தன் பிள்ளைகளை இந்த உலகிற்கு உதாரணமாக மாற்றுகிறான். அவன் இலஞ்சம் கொடுப்பதில்லை. அவனால் உழலைச் சிந்திக்க இயலாது. அவனது போராட்டம் உலகை எதிர்த்தல்ல. அவன் உண்மையான எதிரியான பிசாசு என்னும் வஞ்சகனை அறிந்திருக்கிறான். அவன் எதிர்ப்பது பக்கத்துவீட்டுக்காரனை அல்ல, அதன் பின்னால் இருந்து தாக்க முயலும் தீய ஆவியை. அவன், இந்த உலகை கனிவுடன் நோக்குகிறான். அவன் குற்றப்படுத்துவதில்லை, மாறாக முழங்காலில் கரிசனையுடன் பரிந்துபேசுகிறான். அவன் தன் உதாரணமாக வேதத்தில் காணும் இயேசு அவனுக்குள் வளர்கிறார். உருப்பெறுகிறார். அவரால் அவன் நற்கந்தமாக, உகந்தவாசனையாக மாறுகிறாந். அவந் இயேசுவையே பார்க்கிறான். அவரைத்தினமும் வேதத்தில் தியானிக்கிறான். வேதாம இயேசு அவன் இருதயத்தை உடைக்கிறார், திரும்பக் கட்டுகிறார். அவன் உலகத்துக்காக அவனைக் கவலைகொள்ளச் செய்வதில்லை. தன் பிள்ளைகளின் இலாபத்திற்காக உலகில் விலைபேசுவதில்லை. மாறாக சொந்த மகனைத் தந்த கடவுள் அவன் முன் நிற்கிறார். அவனுள் வசிக்கும் பரிசுத்தாஆவியானவர் அவனுள் அவன் வாசிக்கும் வேதம் வழியே பரிசுத்தத்தை விதைத்து வளர்த்துக்கொண்டே செல்கிறார். வேதத்தை வாசிக்கும் கிறிஸ்தவன் கிறிஸ்துவாகவே மாறிக்கொண்டிருக்கிறான்.. அவன் மாற்றப்பட்டுவிட்டான். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
சுருங்கச்சொன்னால், அவன் வாசிக்கும் வேதாகமம் அவனை மாற்றி இருக்கிறது. முற்றிலும் மாற்றிவிடுகிறது. மொழிமாற்றங்கள் அவனைப் பாதிப்பதில்லை. வேதம் மாற்றப்பட்டிருக்கிறது என்றால் அது அவனை மாற்றியது எங்கனம்? ஒரு போர்ஜரிப் புத்தகத்தால் புனிதனை உண்டாக்க முடியுமா? ஒரு போர்ஜரியாளனைத்தானே உண்டாக்கியிருக்க முடியும்.
வேதத்தால் மாற்றப்படாத எவருக்கும் வேதம் மாற்றப்பட்டிருக்கிறது என்ற கூற்று மிகவும் பிடித்திருக்கிறது. மற்றவர்களுக்கு அதைத் தங்களை மாற்றிவிடுமோ என்ற அச்சம் பீடிக்கிறது. சிலருக்கு மாற்றப்பட்டவர்களைப் பிடிப்பதில்லை ஆதலால், மாற்றிய வேதத்தின்மேல் அபாண்டம் சொல்வது எளிதாக இருக்கிறது. மாற்றத்தைக் காட்டவேண்டிய கிறிஸ்தவர்கள் பலர், வேதத்தைச் சந்தேக்கிறார்கள். அவர்களுக்கும் வேதாகமம் அச்சத்தை உண்டுபண்ணுகிறது. எரிச்சல் அடையச் செய்கிறது. பாவத்தை அவர்கள் ஆர்வமாக விரும்புகிறார்கள். வாழ்வில் அவர்கள் என்ஜாய் செய்யும் இருள் வெளிச்சமாகத் தெரிகிறது, அவன் தப்பித் தவறி வேதம் வாசித்தால் பரிசுத்தம் என்கிற வார்த்தை அவனுக்கு ஏளனமாகத் தெரிகிறது. அதைச் சொல்பவர்கள் அவனுக்கு இளப்பமாகவும் நாகரிகம் அற்றவர்களாகவும் தெரிகிறார்கள். பொய்யான வாழ்வு அவனுக்கு மெய்யாய்த் தோன்றி இனிக்கிறது.
விளைவு அவன் வேதாகமத்தில் உண்மை இல்லை என்று சொல்லத்துவங்குகிறான். அதுவே அவனுக்கு உண்மையாக, சுகமாக இருக்கிறது.
Thanks: Benny Alexander - Facebook
இந்தக் குற்றச்சாட்டு இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாக வைக்கப்படும் ஒன்று. புதிதல்ல. கி.பி 600வாக்கில் எழுதப்படும்போதுகூட வேதாகமம் மாற்றப்பட்டுவிட்டது, எனவே குரானே புனிதமாக எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள். இன்றுவரை முகமதியர்கள் பலரும் அதைதே நம்புகிறார்கள்.
வேதாகமம் மாற்றப்படவில்லை என்பதற்கான சான்றுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஏராளமான தகவல்களைத் தந்து வேதம் மாற்றப்படவில்லை என்று நிறுவிக்கொண்டே இருக்கலாம். ஆனால், அவையெல்லாம் கூடுதல் சான்றுகளாக இருந்தாலும் அதன் அடிப்படையில் வேதத்தை யாரும் புதிதாக நம்பி வாசிக்கத்துவங்கப் போவதில்லை. எவ்வளவு ஆதாரம் அளித்தாலும், போப்பாண்டவர் மாற்றிவிட்டார், இடையில் மொழிபெயர்ப்பாளர்கள் மாற்றிவிட்டார்கள், படி எடுப்பவர்கள் திருத்திவிட்டார்கள், ஒரிஜினல் தகவல்கள் மறைக்கப்பட்டன, பலர் இடைச் செருகலை உள்ளே வைத்துவிட்டார்கள், மூலபாஷையில் எழுதப்பட்டவை நாம் வாசிக்கும் இவை இல்லை என்று தொடர்ச்சியாக பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்களும் குறைகளும் முன்வைக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.
இவற்றை எல்லாம் கேட்டு ஆராயும் முன்பு நாம் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். இதைச் சொல்பவர்கள். இவர்களில் சிலர் மட்டும் வேதத்தை ஒரு புத்தகமாக வாசித்தவர்கள். நிச்சயமாக தியானித்தவர்கள் அல்ல. மற்ற பெரும்பாலானோர், ஒருசிலபகுதிகளை மட்டும் வாசித்தவர்கள். அல்லது அரைகுறையாக அறிந்தவர்கள். இந்தக் கேள்விக்கான பதிலின் நோக்கம் குறைகூறுபவர்களைக் குறைகூறுவதல்ல. ஆனால், வேதாகமம் வெறும்கதைப் புத்தகமோ, இல்லை தத்துவ, வாழ்வியல் புத்தகமோ இல்லை என்பதை உணராதவர்கள் வேதத்தை வாசிக்கும்போது அதன் தன்மை மற்றும் அதில் உள்ள சத்தியம் அவர்களுக்குப் புலப்படுவதில்லை என்பதை வருத்தத்துடன் சொல்லவேண்டியிருக்கிறது;. அப்படியானால், வேதம் மாற்றபடவில்லை என்பதை எப்படி நாம் அறிந்துகொள்வது. மாற்றப்பட்ட ஒருபுத்தகத்தை உண்மை என்று நம்பி வரிவிடாமல் தியானித்து வாழ நினைக்கும் நாம் உண்மையிலேயே மாற்றப்பட்டிருந்தால் ஏமாளிகளாகிவிடமாட்டோமா? ஒரு பொய்கள் நிறைந்த புத்தகத்திற்காக ஒரு வாழ்நாளை வீணாகப் போக்கிவிடால்லவா செய்திருப்போம்? ஆனால் அப்படி இல்லை உண்மை நிலை.
எந்த ஒருபுத்தகமும் வாசிக்கும் ஒரு மனிதனுக்குள் தாக்கத்தை வெளிப்படுத்தும். தொடர்ந்து மர்மக்கதைகளை வாசித்தால், நமக்கும் ஒரு துப்பறிவாளன் தகுதி கொஞ்சம் வரலாம். பிசினஸ் புத்தகங்கள் படித்தால், தொழிலில் ஆர்வம் ஏற்படலாம். வெறும் நேரம்போக்கும் பத்திரிக்கைகள் படித்தால் நேரம் நன்றாகவே வீணாக்கப்படலாம். தத்துவார்த்தமான புத்தகங்கள் படித்தால், தத்துவமாம, தர்க்கமாக வாழ்வை மாற்றிக் கொள்ளலாம். எனவே புத்தகங்கள் ஒரு மனிதனை மாற்றியிருக்கவேண்டும். அதன் எழுத்தாளர் எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும், எழுத்து ஒரு மனிதனைப் பாதிக்கும்.
வேதம் ஒரு புத்தகம் என்றால் அதை வாசிப்பவர் மத்தியில் என்ன மாற்றத்தை அதால் கொண்டுவரமுடியும் என்ற சாத்தியங்களைப் பார்க்கவேண்டும். ஒரு மனிதன் வாழ்வின் அடிநாதமான பிரச்சனை பாவம் என்று கண்டுகொள்வது வேதத்தில். அதைவிட்டு விலகவேண்டும் என்பதை அறிவது வேதத்தில் மட்டுமே. பாவச்சேற்றில் உளைந்து திழைக்கும் மனிதனுக்குத் தேவை விடுதலை, அதைத் தரவல்ல இரத்தம் சிந்தியவர் இயேசு. அந்த இரத்தத்தால் கழுவப்பட்ட மனிதன் பெறுவது விடுதலை, விடுதலை அடைந்தவன் இனி பாவம் செய்யான். அவன் ஆவி அவனுக்குள் மாறுகிறது. பரித்தவாழ்க்கை வாழத்தலைப்படுகிறாந். அவனால் இனி இந்த உலகத்திற்க்கு - சக மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்க இயலாது. மாறாக அவன் வெளிகாட்டுவது அன்பு. வேதம் காட்டச்சொன்ன அந்த அன்பு. அவன் மன்னிக்கிறவனாக மாறுகிறான். உலகம் தரும் இச்சைகள்மேல் அவனுக்கு வெறுப்பு. அவனால், இரண்டாம் திருமணம் செய்வதை நினைக்க இயலாது. இறைவன் பெயரால்கூடக் கொலை செய்ய இயலாது. தன் பிள்ளைகளை இந்த உலகிற்கு உதாரணமாக மாற்றுகிறான். அவன் இலஞ்சம் கொடுப்பதில்லை. அவனால் உழலைச் சிந்திக்க இயலாது. அவனது போராட்டம் உலகை எதிர்த்தல்ல. அவன் உண்மையான எதிரியான பிசாசு என்னும் வஞ்சகனை அறிந்திருக்கிறான். அவன் எதிர்ப்பது பக்கத்துவீட்டுக்காரனை அல்ல, அதன் பின்னால் இருந்து தாக்க முயலும் தீய ஆவியை. அவன், இந்த உலகை கனிவுடன் நோக்குகிறான். அவன் குற்றப்படுத்துவதில்லை, மாறாக முழங்காலில் கரிசனையுடன் பரிந்துபேசுகிறான். அவன் தன் உதாரணமாக வேதத்தில் காணும் இயேசு அவனுக்குள் வளர்கிறார். உருப்பெறுகிறார். அவரால் அவன் நற்கந்தமாக, உகந்தவாசனையாக மாறுகிறாந். அவந் இயேசுவையே பார்க்கிறான். அவரைத்தினமும் வேதத்தில் தியானிக்கிறான். வேதாம இயேசு அவன் இருதயத்தை உடைக்கிறார், திரும்பக் கட்டுகிறார். அவன் உலகத்துக்காக அவனைக் கவலைகொள்ளச் செய்வதில்லை. தன் பிள்ளைகளின் இலாபத்திற்காக உலகில் விலைபேசுவதில்லை. மாறாக சொந்த மகனைத் தந்த கடவுள் அவன் முன் நிற்கிறார். அவனுள் வசிக்கும் பரிசுத்தாஆவியானவர் அவனுள் அவன் வாசிக்கும் வேதம் வழியே பரிசுத்தத்தை விதைத்து வளர்த்துக்கொண்டே செல்கிறார். வேதத்தை வாசிக்கும் கிறிஸ்தவன் கிறிஸ்துவாகவே மாறிக்கொண்டிருக்கிறான்.. அவன் மாற்றப்பட்டுவிட்டான். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
சுருங்கச்சொன்னால், அவன் வாசிக்கும் வேதாகமம் அவனை மாற்றி இருக்கிறது. முற்றிலும் மாற்றிவிடுகிறது. மொழிமாற்றங்கள் அவனைப் பாதிப்பதில்லை. வேதம் மாற்றப்பட்டிருக்கிறது என்றால் அது அவனை மாற்றியது எங்கனம்? ஒரு போர்ஜரிப் புத்தகத்தால் புனிதனை உண்டாக்க முடியுமா? ஒரு போர்ஜரியாளனைத்தானே உண்டாக்கியிருக்க முடியும்.
வேதத்தால் மாற்றப்படாத எவருக்கும் வேதம் மாற்றப்பட்டிருக்கிறது என்ற கூற்று மிகவும் பிடித்திருக்கிறது. மற்றவர்களுக்கு அதைத் தங்களை மாற்றிவிடுமோ என்ற அச்சம் பீடிக்கிறது. சிலருக்கு மாற்றப்பட்டவர்களைப் பிடிப்பதில்லை ஆதலால், மாற்றிய வேதத்தின்மேல் அபாண்டம் சொல்வது எளிதாக இருக்கிறது. மாற்றத்தைக் காட்டவேண்டிய கிறிஸ்தவர்கள் பலர், வேதத்தைச் சந்தேக்கிறார்கள். அவர்களுக்கும் வேதாகமம் அச்சத்தை உண்டுபண்ணுகிறது. எரிச்சல் அடையச் செய்கிறது. பாவத்தை அவர்கள் ஆர்வமாக விரும்புகிறார்கள். வாழ்வில் அவர்கள் என்ஜாய் செய்யும் இருள் வெளிச்சமாகத் தெரிகிறது, அவன் தப்பித் தவறி வேதம் வாசித்தால் பரிசுத்தம் என்கிற வார்த்தை அவனுக்கு ஏளனமாகத் தெரிகிறது. அதைச் சொல்பவர்கள் அவனுக்கு இளப்பமாகவும் நாகரிகம் அற்றவர்களாகவும் தெரிகிறார்கள். பொய்யான வாழ்வு அவனுக்கு மெய்யாய்த் தோன்றி இனிக்கிறது.
விளைவு அவன் வேதாகமத்தில் உண்மை இல்லை என்று சொல்லத்துவங்குகிறான். அதுவே அவனுக்கு உண்மையாக, சுகமாக இருக்கிறது.
Thanks: Benny Alexander - Facebook
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|