- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
நான் கடனாளியாயிருக்கிறேன்
Tue Jan 10, 2017 8:40 am
“கிரேக்கருக்கும் மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும், நான் கடனாளியாயிருக்கிறேன்.” - ரோமர்.1:14
திருச்சபை ஒன்றின் விசேஷ ஜெபக்கூட்டத்திற்கு தேவஊழியர் D.L.மூடி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
இக்கூட்டத்தில் சபையில் உள்ள பெரும் பணக்காரர்கள் அநேகர் பங்குபெற்றிருந்தனர். கூடுகையின் நோக்கம் என்னவென்றால், திருச்சபையின் கடனை எப்படி அடைக்க வேண்டும் என்பதே!
கூட்டத்தில் இருந்தவர்கள் ஆண்டவர் தங்கள் திருச்சபையின் கடனை விரைவில் அடைக்கும்படியாக ஊக்கமாக ஜெபித்தார்கள்.
மூடி அவர்கள் ஜெபிக்க வேண்டிய நேரம் வந்தபோது அவர் சபையாரிடம் இப்படியாக பேசினார்.
“நண்பர்களே, நான் உங்களுடைய சூழ்நிலையில் இருந்தால் இந்த விஷயத்திற்காக ஆண்டவரை தொந்தரவு செய்யமாட்டேன். ஏனென்றால் உங்கள் திருச்சபையின் கடனை அடைக்கக்கூடிய வசதியை ஏற்கெனவே ஆண்டவர் உங்களுக்கு தந்திருக்கிறார். எனவே அதை நீங்கள் பயன்படுத்துங்கள்” என அருமையாக ஆலோசனை கூறினார்.
நாம் மேலே வாசித்த சம்பவத்தில் பணத்தினால் ஏற்பட்ட கடனை அடைப்பதற்கு திருச்சபையானது பிரயாசப்படுகிறது. இதைவிட இன்னும் ஒரு பெரிய கடன் எல்லா சபைகளுக்கும் உள்ளது. அது இரட்சிக்கப்படாதோர்க்கு சுவிசேஷத்தை அறிவித்து தேவனுடைய மந்தைக்குள் அவர்களை சேர்ப்பதாகும்.
இன்றைய வேதபகுதியில் வாசிக்கும்போது பவுல் யார் யாருக்கெல்லாம் கடன்பட்டிருக்கிறார் என்பதை பார்க்கிறோம்.
சுவிசேஷத்தை அறிவிப்பது நம் மேல் விழுந்த கடமையெனவும், அதை செய்யாதிருந்தால் நமக்கு ஐயோ எனவும் கூறுகிறார்
(1கொரி.9:16).
நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என சொல்லிக்கொள்ளும் எந்த ஒரு கிறிஸ்தவரும் தன்னை சுற்றியுள்ள இரட்சிக்கப்படாத மக்களுக்காக கடனாளியாயிருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும்.
மேலும் இதைக்குறித்து ஹட்சன் டெய்லர் கூறுவதை கவனிப்போம்.
“சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்” என்பதை வேண்டுமென்றால் செய்யலாம், விருப்பமில்லையென்றால் விட்டுவிடலாம் என்பதல்ல. எல்லோருக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டும்.
ஏனென்றால் இது நம்மேல் விழுந்த இயேசுவின் கட்டளை. ஆகவே பிறருக்கு கடனாளியாயிருக்கும் ஒவ்வொருவரும் இயேசுவின் அன்பினைக் கூறி தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவோம். பூமி சுவிசேஷமயமாக்கப்பட நமது கடமையை தவறாமல் செய்து முடிப்போம். ஆண்டவர் நமக்கு உதவி செய்வாராக!
- P.ஜேக்கப் சங்கர்
திருச்சபை ஒன்றின் விசேஷ ஜெபக்கூட்டத்திற்கு தேவஊழியர் D.L.மூடி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
இக்கூட்டத்தில் சபையில் உள்ள பெரும் பணக்காரர்கள் அநேகர் பங்குபெற்றிருந்தனர். கூடுகையின் நோக்கம் என்னவென்றால், திருச்சபையின் கடனை எப்படி அடைக்க வேண்டும் என்பதே!
கூட்டத்தில் இருந்தவர்கள் ஆண்டவர் தங்கள் திருச்சபையின் கடனை விரைவில் அடைக்கும்படியாக ஊக்கமாக ஜெபித்தார்கள்.
மூடி அவர்கள் ஜெபிக்க வேண்டிய நேரம் வந்தபோது அவர் சபையாரிடம் இப்படியாக பேசினார்.
“நண்பர்களே, நான் உங்களுடைய சூழ்நிலையில் இருந்தால் இந்த விஷயத்திற்காக ஆண்டவரை தொந்தரவு செய்யமாட்டேன். ஏனென்றால் உங்கள் திருச்சபையின் கடனை அடைக்கக்கூடிய வசதியை ஏற்கெனவே ஆண்டவர் உங்களுக்கு தந்திருக்கிறார். எனவே அதை நீங்கள் பயன்படுத்துங்கள்” என அருமையாக ஆலோசனை கூறினார்.
நாம் மேலே வாசித்த சம்பவத்தில் பணத்தினால் ஏற்பட்ட கடனை அடைப்பதற்கு திருச்சபையானது பிரயாசப்படுகிறது. இதைவிட இன்னும் ஒரு பெரிய கடன் எல்லா சபைகளுக்கும் உள்ளது. அது இரட்சிக்கப்படாதோர்க்கு சுவிசேஷத்தை அறிவித்து தேவனுடைய மந்தைக்குள் அவர்களை சேர்ப்பதாகும்.
இன்றைய வேதபகுதியில் வாசிக்கும்போது பவுல் யார் யாருக்கெல்லாம் கடன்பட்டிருக்கிறார் என்பதை பார்க்கிறோம்.
சுவிசேஷத்தை அறிவிப்பது நம் மேல் விழுந்த கடமையெனவும், அதை செய்யாதிருந்தால் நமக்கு ஐயோ எனவும் கூறுகிறார்
(1கொரி.9:16).
நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என சொல்லிக்கொள்ளும் எந்த ஒரு கிறிஸ்தவரும் தன்னை சுற்றியுள்ள இரட்சிக்கப்படாத மக்களுக்காக கடனாளியாயிருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும்.
மேலும் இதைக்குறித்து ஹட்சன் டெய்லர் கூறுவதை கவனிப்போம்.
“சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்” என்பதை வேண்டுமென்றால் செய்யலாம், விருப்பமில்லையென்றால் விட்டுவிடலாம் என்பதல்ல. எல்லோருக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டும்.
ஏனென்றால் இது நம்மேல் விழுந்த இயேசுவின் கட்டளை. ஆகவே பிறருக்கு கடனாளியாயிருக்கும் ஒவ்வொருவரும் இயேசுவின் அன்பினைக் கூறி தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவோம். பூமி சுவிசேஷமயமாக்கப்பட நமது கடமையை தவறாமல் செய்து முடிப்போம். ஆண்டவர் நமக்கு உதவி செய்வாராக!
- P.ஜேக்கப் சங்கர்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|