- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
உங்கள் பாதுகாப்பின் காரணம்
Tue Jan 10, 2017 8:34 am
நான் ஒரு தொழிற்சாலையில் பணி புரிகிறேன் .
ஆண்டு இறுதியில் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு ,
அது சம்பந்தமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. முடிவில் கொடுக்கப்பட்ட கருத்து வினாத்தாளில் , ஓவ்வொன்றாய் எழுதிக் கொண்டு வந்த போது ,
உங்கள் பாதுகாப்பின் காரணம் என்ற கேள்விக்கு ,
மற்ற பாதுகாப்பு உபகரணங்களை கோடிட்டு அதற்கு இசைவாய் எழுதிட தோன்றவில்லை.
தேவனாகிய கர்த்தர் என்று அழுத்தம் திருத்தமாய் எழுதி விட்டேன் . சிறிது நேரம் கழித்து , புற மதத்தவரான என்னுடைய மேலதிகாரி என்னிடம் வந்து நூற்றுக்கணக்கான பேப்பரில் , உங்கள் பேப்பரை மட்டும் மறக்க முடியாத படி எழுதி விட்டீர்கள் சங்கர் என்று அர்த்தத்துடன் சிரித்து , கை குலுக்கி வீட்டு சென்றார்.
இது ஒரு சாதாரண விஷயமே !. இருந்தாலும் நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறது போல , அனுதினமும் நாம் சோதிக்கப்படுகிற மற்ற காரியங்களில் , அவருக்காக வெகு பக்தி வைராக்கியமாக இருக்கவேண்டும், தேவனுக்கு கொடுக்க வேண்டிய இடத்தை , முக்கியத்துவத்தை எந்த மனுஷனுக்காகவும் தளர்த்த கூடாது , எந்த சூழ்நிலையிலும் ஒரு நாழிகை கூட சத்தியத்தில் சமரசம் என்ற நிலைக்கு இடம் கொடுக்க கூடாது என்ற தீர்மானத்தை உறுதி செய்தேன்.
நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா? யாக்கோபு 4.5
சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.
கலாத்தியர் 2.5
ஆண்டு இறுதியில் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு ,
அது சம்பந்தமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. முடிவில் கொடுக்கப்பட்ட கருத்து வினாத்தாளில் , ஓவ்வொன்றாய் எழுதிக் கொண்டு வந்த போது ,
உங்கள் பாதுகாப்பின் காரணம் என்ற கேள்விக்கு ,
மற்ற பாதுகாப்பு உபகரணங்களை கோடிட்டு அதற்கு இசைவாய் எழுதிட தோன்றவில்லை.
தேவனாகிய கர்த்தர் என்று அழுத்தம் திருத்தமாய் எழுதி விட்டேன் . சிறிது நேரம் கழித்து , புற மதத்தவரான என்னுடைய மேலதிகாரி என்னிடம் வந்து நூற்றுக்கணக்கான பேப்பரில் , உங்கள் பேப்பரை மட்டும் மறக்க முடியாத படி எழுதி விட்டீர்கள் சங்கர் என்று அர்த்தத்துடன் சிரித்து , கை குலுக்கி வீட்டு சென்றார்.
இது ஒரு சாதாரண விஷயமே !. இருந்தாலும் நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறது போல , அனுதினமும் நாம் சோதிக்கப்படுகிற மற்ற காரியங்களில் , அவருக்காக வெகு பக்தி வைராக்கியமாக இருக்கவேண்டும், தேவனுக்கு கொடுக்க வேண்டிய இடத்தை , முக்கியத்துவத்தை எந்த மனுஷனுக்காகவும் தளர்த்த கூடாது , எந்த சூழ்நிலையிலும் ஒரு நாழிகை கூட சத்தியத்தில் சமரசம் என்ற நிலைக்கு இடம் கொடுக்க கூடாது என்ற தீர்மானத்தை உறுதி செய்தேன்.
நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா? யாக்கோபு 4.5
சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.
கலாத்தியர் 2.5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|