தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
“ஊதியம் வேறு, வருமானம் வேறா?’’ Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

“ஊதியம் வேறு, வருமானம் வேறா?’’ Empty “ஊதியம் வேறு, வருமானம் வேறா?’’

Wed Aug 10, 2016 9:06 am
“அய்யா, நீங்கள் வளருகிறீர்களா?’’

“வளருகிறீர்களா என்று பொதுவாக கேட்டால்? குறிப்பாக எதைப்பற்றிக் கேட்கிறீர்கள்?’’

“பொருளாதார ரீதியாக வளருகிறீர்களா? உங்கள் பண வசதி தொடர்ந்து பெருகுகிறதா?’’

“கடந்த ஆண்டு, மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதித்தேன். இந்த வருடம் எனக்கு ஊதிய உயர்வு கொடுத்திருக்கிறார்கள். மாதம் 100 ரூபாய் இன்க்ரிமெண்ட் கிடைக்கிறது. இனி என் மாத வருமானம், 100 ரூபாய் கூடுதல். ஐந்தாயிரம் அல்ல, இனி ரூ 5100. இது வளர்ச்சிதானே!’’

“மேலோட்டமாகப் பார்த்தால் இது வளர்ச்சிதான்.’’

“மேலோட்டமாக என்றால்?’’

“இதனை கொஞ்சம் ஆழமாகப் பார்க்க வேண்டும். சென்ற வருடம் 5000 ரூபாய்க்குக் கிடைத்த பொருட்கள் இந்த வருடம் அதே விலைக்கு கிடைக்கிறதா? இது கேள்வி ஒன்று. சென்ற வருடம் இருந்ததைவிட இந்த வருடம் உங்களுடைய தேவைகள் அதிகரித்திருக்கின்றனவா? அதிகரித்திருக்கிறதென்றால் எவ்வளவு அதிகரித்திருக்கிறது? இது அடுத்த கேள்வி.’’

“யோசிக்க வேண்டிய விஷயம்தான். விலைகள் உயர்ந்துகொண்டேதான் போகின்றன. மேலும் என் பிள்ளைகள் வளருகிறார்கள். அதனாலும் என் தேவைகள் அதிகரிக்கின்றன.’’

“இந்த இரண்டு விஷயங்களையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதல் விஷயம், விலைவாசி உயரும் அதே வேகத்தில் உங்கள் வருமானம் கூடினால் கூட போதும். நீங்கள் சிரமப்படமாட்டீர்கள். அதே அளவு பொருட்களையாவது வாங்கலாம், பயன்படுத்தலாம். பிரச்னையில்லை.

5000 ரூபாய் என்பது 5100 ரூபாய் ஆகிறதென்றால், கூடுகிறதென்றால், வருமானம் 2 சதவிகிதம் கூடுகிறது என்று பொருள். விலைவாசியோ (தற்சமயம்) வருடத்திற்கு 5 சதவிகிதம் அளவிற்கு அதிகரிக்கிறது. அப்படியென்றால், உங்கள் வருமானம் உண்மையில் தேய்ந்துவருகிறது. அதன் ரூபாய் மதிப்பு வேண்டுமானால் 5100 ஆக இருக்கலாம். ஆனால் அதன் உண்மையான மதிப்பு? குறைகிறது. காரணம், வருமான வளர்ச்சியைவிட அதிகமாக உயருகிற விலைவாசி.

ஆக , எவராக இருந்தாலும் அவருடைய வருமானம் தொடர்ந்து உயர்ந்தாக வேண்டும். வேறுவழியேயில்லை. இல்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கைத் தரம் குறைய ஆரம்பித்துவிடும். இது, தகவல் எண் ஒன்று. இரண்டாவது, உங்கள் தேவைகளும் அதிகரிக்கின்றன என்று சொல்லுகிறீர்கள். அப்படியென்றால், அதிகரிக்கும் தேவையளவுக்கு, வருமானம் கூடியாக வேண்டும். இல்லாவிட்டாலும் பிரச்னைதான். ஒன்று, முன்பு பெற்ற அளவு வாழ்க்கை வசதிகள் மற்றும் நுகர்வுப்பொருட்களை வாங்க முடியாது. அல்லது பற்றாக்குறையைச் சமாளிக்க கடன் வாங்க நேரிடும்.’’

“ஊதியம் உயர்வது என் கையிலா இருக்கிறது? விலைவாசியைக் கட்டுப்படுத்துவதைப் பற்றி கேள்வியே இல்லை. நம்மால் செய்யக்கூடியது அதிலும் ஒன்றும் இல்லை. வளருகிற நம் தேவைகளை குறைத்துக்கொள்ளவும் முடியாது. இதென்ன கொஞ்சம் சிக்கலான பிரச்னைத்தான் போலிருக்கிறதே!’’

“ஊதிய உயர்வுதான் நம் கையில் இல்லையே தவிர, வருமான உயர்வு என்பது அப்படி ஒன்றும் செய்யமுடியாதது அல்ல.’’

“ஊதியம் வேறு, வருமானம் வேறா?’’

“ஆமாம். இல்லையா பின்னே! பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மட்டுமே சம்பாதிப்பார். அந்த வீட்டின் வளர்ச்சிக்கு ஒருவருடைய சம்பாத்தியம் மட்டும் தான். அது வளர்ந்தால் தான் உண்டு. அவர் செய்யும் வேலை, அல்லது வியாபாரம் பொறுத்து, அது அதிகரிக்கலாம் அல்லது அதிகரிக்காமலும் போகலாம். அப்படி அதனை அதன் போக்கில் விடாமல் கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியுமா? அதில் ஒரு நிச்சயமான தன்மையை ஏற்படுத்த முடியாதா?

நாம் முன்பே பார்த்தோம். பணம் பணம் சம்பாதிக்கும். பெற்ற பிள்ளைகள் சம்பாதிக்கப் போவதைப் போல, நாம் சேர்க்கும் பணமும் பணம் சம்பாதிக்கும். அது மனிதர்களைப் போல அயர்வே அடையாது. பணத்திற்கு வயதாக வயதாக, சில ‘ஆண்டிக்‘ பொருட்களைப் போல, மதிப்பு கூடும். அதன் பணமீட்டும் வலிமை பல்கிப் பெருகும். காலம் ஓட ஓட , சரியான இடத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம், பம்பு செட்டில் இருந்து பாயும் தண்ணீர் போல கொட்டும்.

ஒருவருடைய மாத ஊதியம் 5000. ஆனால் அந்தக் குடும்பத்தின் மாத வருமானம் 10,000 ரூபாய். இது சாத்தியமா என்றால் சாத்தியம்தான். கூடுதலாக வரும் ரூபாய் 5000, அவர் செய்த முதலீடுகளில் இருந்து வட்டியாகவோ, லாபமாகவோ டிவிடெண்டுகளாகவோ அல்லது (இட) விலைஉயர்வுகள் காரணமாகவோ அல்லது வாடகையாலோ வருகிறது. அவ்வளவு வருமானம் வருகிற அளவிற்கு அவர் முதலீடுகள் செய்திருக்கிறார். தப்பித்தவறி அவர் வேலைக்கோ அல்லது அவருக்கேயோ கூட ( சில மாதங்களுக்கு) ஏது ஆகிவிட்டாலும், பிரச்னையில்லை. வரும் பிற வருமானங்கள் காப்பற்றிவிடும்.

இப்படி கூடுதலாக வருகிற வருமானம், விலைவாசி உயர்வுகள், தொடர்ந்து பெருகும் வாழ்க்கைத் தேவைகளுக்கு உதவுவது மட்டுமில்லை, மேலும் முதலீடுகள் செய்யவும் உதவும். கியர் மாற்றுவது என்பார்கள். எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படி போதியும் போதாமலும் வாழ்க்கையை ஓட்டுவது. கொஞ்ச காலம் கட்டுப்பாடாக செலவு செய்யாமல் சேர்த்து முதலீடு செய்து, வருமானத்தைப் பெருக்கிக்கொண்டு அதன் பிறகு, வளமாக வாழ வேண்டியதுதான். பொருளாதார தரத்தில் அடுத்த கியருக்கு மாறுவது.

மொத்தத்தில் ஒருவர் சம்பாத்தியம் மட்டுமே குடும்பத்திற்குப் போதாது. ஆயுளுக்கும் தொடர்ந்து நல்ல வருமானம் வருகிறாற்போல, முதலீடுகள் செய்துவிட வேண்டும். அந்த முதலீடுகளும் தொடர்ந்து நமக்காக சம்பாதிக்க வேண்டும்.’’

“எல்லாம் சரி. முதலீடு செய்ய சேமிக்க பணம் ஏது?’’

“ஏன் இல்லாமல்? ஒருகால் அப்படியே சிலரிடம் இப்போதைக்கு உபரிப் பணம் இல்லை என்றே வைத்துக்கொண்டாலும் கூட, வரும் ஆண்டில் நிலைமை மாறுமே! மிச்சமாகப் போகிற மற்றும் கூடுதலாக கிடைக்கக் கூடிய தொகைகள் இருகின்றனவே!’’

“அப்படியா?’’

“வருகிற ஏப்ரல் முதல் நிச்சயமாக எல்லோருக்குமே 1000 முதல் 44000 வரை வருமான வரி மிச்சமாகிறதே! அது வரவில்லை என்று வைத்துக்கொண்டால் என்ன செய்வோமோ, அதே அளவு செலவினை அடுத்த ஆண்டு முழுவதும் செய்தால் போதும். வரி குறைகிற அளவு தொகை சேமிப்பிற்கு. சேமித்து முதலீடு செய்வதற்கு. இது வழி ஒன்று.

வேலைக்குப் போகும் பலருக்கும் ஏப்ரல் மாதம் ஊதிய உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வு மொத்தமுமோ அல்லது அதில் கணிசமான பகுதியோ போக வேண்டிய இடமும் சேமிப்பிற்குத்தான். பின்பு இடமாற்றம் முதலீடிற்கு. சேமிப்பு ஒரு எஸ்.ஐ.பி யாகவோ அல்லது மாதா மாதம் கட்ட வேண்டிய யூலிப் சார்ந்த காப்பீடாகவோ இருக்கலாம்.

ஆனால் ஒவ்வொருவருடமும் சேமிக்கும் தொகையையும் அதிகரித்துக்கொண்டே போக வேண்டும். ஒரு காலகட்டதிற்கு மேல், அத்தியாயத்தின் தொடக்கத்தில் பார்த்தோமே, அந்த கேள்விக்கு சந்தோஷமான பதிலைத் தரமுடிய வேண்டும்.

“ஆம். நான் தொடர்ந்து பொருளாதா முன்னேற்றம் காணுகிறேன்.’’

என்று திருப்தியாக சொல்ல வேண்டும். மற்ற எவரையும் போலவே நமக்கும் அந்த உரிமை இருக்கிறது. அதைச் செயல்படுத்துவது நம் கையில் தான் இருக்கிறது.’’.

நன்றி: சோம.வள்ளியப்பன் - "பணமே ஓடி வா" - குமுதம்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

“ஊதியம் வேறு, வருமானம் வேறா?’’ Empty Re: “ஊதியம் வேறு, வருமானம் வேறா?’’

Wed Aug 10, 2016 9:08 am
இனி யார் யார் எவ்வளவு ரிஸ்க் எடுத்து, எப்படி முதலீடு செய்யலாம்?

சம்பாதிக்கும் பணத்தில் ஒருபகுதியை கட்டாயம் சேமித்து அதனை சரியான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதையும், அப்படி முதலீடு செய்யும் போது மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதையும், அந்த மூன்று விஷயங்கள், (1) முதலீட்டிற்கான பாதுகாப்பு (2) கணிசமான வருமானம் மற்றும் (3) செய்த முதலீட்டினை தேவைப்படும் சமயம் திரும்ப எடுக்கக் கூடிய வசதி என்றும் சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம்.

பாதுகாப்பு என்பது ரிஸ்க் சம்பந்தப்பட்டது. அதிக வருமானம் வேண்டுமென்றால் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும், அதிக ரிஸ்க் வேண்டாமென்றால் சாதாரண வருமானம் தான் கிடைக்கும் என்பனவற்றையும் கிரிக்கெட் உதாரணம் கொண்டு பார்த்தாகிவிட்டது.

சரி; ,இனி யார் யார் எவ்வளவு ரிஸ்க் எடுத்து, எப்படி முதலீடு செய்யலாம்?

வயதானவர்கள் அதிக ரிஸ்க் எடுக்கக் கூடாது. சின்ன வயதுக்காரர்கள் ரிஸ்க்கே எடுக்காமல் இருக்க வேண்டாம். இது பொதுவிதி. இதில் விதி விலக்குகளும் உண்டு. சிலருக்கு வயதாகாவிட்டாலும் கூட, அவர்கள் ரிஸ்க் எடுக்கக் கூடாது. வேறு சிலருக்கு வயதானாலும்கூட அவர்கள் விரும்பினால், கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம். இவை அவர்களுக்கு இருக்கும் பணத்தின் தேவைகளைப் பொறுத்தது.

அவர் பெயர் ஜானகிராமன் என்று வைத்துக்கொள்ளுவோம். அவர் வயது முப்பதிற்குள் தான். எல்லா இடங்களும் விலை ஏற, அவரும் வேலூருக்குப் பக்கத்தில் ஒரு இடம் பார்த்திருக்கிறார். நல்ல இடம். விலை பத்து லட்ச ரூபாய். மற்ற பல இடங்களில் முதலீடு செய்திருந்த சேமிப்புகளை எல்லாம் திரட்டினார். கிட்டத்தட்ட ஏழு லட்ச ரூபாய் தேறியது. இன்னும் மூன்று லட்சம் வேண்டும். இடத்தினை விற்பவர், “சரி போகிறது , எல்லாவற்றையும் முழுவதாக மூன்று மாதத்திற்குள் கொடுத்து பதிவு செய்துகொள்ளுங்கள்” என்று டைம் கொடுக்க, ஜானகிராமன் உற்சாகமானார்.

எப்படியும் தேவைப்படும் மீதப்பணத்தினை மூன்று மாதங்களில் புரட்டிவிடலாம் என்கிற நம்பிக்கை வந்தது. ‘சேமநல நிதியில் இருந்து ஒரு லட்சம் வரை எடுக்கலாம். மீதம் இரண்டு லட்ச ரூபாயை, கடன் வாங்கிச் சமாளித்துக் கொள்ளலாம். விடவேகூடாது. இப்படிப்பட்ட இடம் பின்னால் இந்த விலைக்குக் கிடைக்காது’. திட்டமிட்டார்.

திட்டமிட்டபடி, கையில் எட்டு லட்சம் வந்தாயிற்று. “அதை அப்படியே, முதல் தவணையாக ரியல் எஸ்டேட்காரரிடம் கொடுத்துவிடுங்கள். பிறகு கடனுக்கு ஏற்பாடு செய்யுங்கள். பதிவு நாளைக்கு முன்பாக கடனை வாங்கிக் கொடுத்து, இடத்தை பதிவு செய்துகொண்டுவிடலாம்“ என்றார் மனைவி.

கேட்டுக்கொண்டார் ஜானகிராமன். செயல்படுத்தவும் நினைத்தார். இதெல்லாம் நடந்தது சென்ற 2007 டிசம்பர் மாத ஆரம்பத்தில். நண்பரிடம் திட்டத்தினைப் பகிர்ந்துகொண்டு, எவரிடம் கடன் வாங்கலாம் என்று ஆலோசனை கேட்க, நண்பர் சொன்னது வேறு ஒரு புதிய யோசனை.

“எதற்காக நீ கடன் வாங்க வேண்டும். கடன் வாங்காமலேயே அந்த இடத்தை நீ வாங்குகிறாய்”

“என்ன விளையாடுகிறாயா? குறைவது ஆயிரம் இரண்டாயிரம் அல்ல. இரண்டு லட்ச ரூபாயப்பா!”

“இருக்கட்டுமே. இப்போது உன் கையில் எவ்வளவு இருக்கிறது?”

“கையில் இருக்கிறதா? 2 லட்சம் குறைகிறது என்கிறேன். நீ என்னடா என்றால்..!”

“அது தெரியும். இடத்திற்குக் கொடுப்பதற்காக எவ்வளவு இருக்கிறது?”

“அட்வான்ஸ் 5 லட்சம் கொடுத்தது போக, மீதம் 3 லட்சம்.”

“இருக்கிறதல்லவா?”

“ஆமாம்“

நண்பர் சொன்ன யோசனை இதுதான்.

“இப்போது பங்குச் சந்தை நன்றாக இருக்கிறது. தினம் தினம் ஏறுகிறது. உனக்கோ இன்னும் 3 மாதம் டைம் இருக்கிறது. கையில் இருக்கும் பணத்தினை மூன்று மாதத்துக்கு, பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். அதில் நிச்சயம் லாபம் கிடைக்கும். உடன் விற்றுவிட்டு, கிடைக்கும் லாபத்தினைக் கொண்டு , கடன் இல்லாமலேயே, இடத்தினை நீ வாங்குகிறாய்”

ஜானகிராமனுக்குக் கேட்பதற்கே சந்தோஷமாக இருந்தது. ‘இடம் எப்படியும் வாங்க வேண்டும். கடன் 2 லட்சம் வாங்கினால் அதற்கு வட்டி கட்ட வேண்டும் .தவிர, இரண்டு லட்சம் கடன் என்பது ஒரு சுமைதானே. பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைப்பதாக எல்லோரும் சொல்லிக்கொள்ளுகிறார்கள். நிரந்தரமாக வேண்டாம். சும்மா ஒரு மூன்று மாதம் தானே! ஒரு ரொடேஷன் செய்துவிட்டு, லாபம் கிடைத்ததும் வெளியில் வந்துவிடலாம். அட! கடன் வாங்காமல் இடம்!’

இதுதான் ஜானகிராமனின் எண்ணம். பங்கு வர்த்தகக் கணக்கு திறந்தார்கள். முதலில், ஒரு லட்சத்துக்குத் தான் வாங்கினார்கள். ஒருமாதம் போனது. வாங்கிய பங்குகள் விலை உயர்ந்தன. “அடடா! விட்டுவிட்டோமே! எல்லா பணத்தினையும் போட்டிருந்தால் எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும்!!’ என்று மீதமிருந்த இரண்டு லட்சத்திற்கும் ஆக்ரோஷமாக வாங்கினார்கள். இடத்தினைப் பதிவு செய்துகொள்ள இன்னும்தான் டைம் இருக்கிறதே என்று, விலை உயர்ந்தாலும், பங்குகளை விற்காமல் விட்டு வைத்தார்கள்.

செய்திகள் வந்தன. அமெரிக்கப் பொருளாதாரத்தில் பிரச்சனை என்று. அன்னிய முதலீட்டாளர்கள் விற்கிறார்கள் என்று. ஜானகிராமனுக்குப் புரியவில்லை. ஆனால், அதன் காரணமாக நம்மூர் பங்குச் சந்தைகள் வீழ்வதைப் பார்த்தார். ஜனவரி 21 மற்றும் 22_ம் தேதிகளில் மும்பை பங்குச் சந்தையும், தேசியப் பங்குச் சந்தையும் பெரிய வீழ்ச்சி அடைந்தன. அதன் பிறகு தொடந்து இறங்கு முகம் தான். ஜானகிராமன் பங்குகள் வாங்கியிருந்தது மொத்தம் மூன்று லட்சத்துக்கு. அவற்றின் மதிப்பு வெறும் 2 லட்ச ரூபாயாகச் சரிந்தது. சுளையாக ஒரு லட்சத்தினைக் காணோம்.

‘வாங்க வேண்டாம் என்று திட்டமிட்டிருந்த கடன் இரண்டு லட்சத்தினையும் வாங்கினாலும் இனி போதாதே! இன்னும் கூடுதலாக ஒரு லட்சம் கடன் வாங்க வேண்டும் போல இருக்கிறதே!! ஜானகிராமனால் மனைவியிடம் கூட சொல்லி அழ முடியவில்லை. ‘போச்சு போச்சு, சிரமப்பட்டு சேமித்து வைத்திருந்த பணம் லட்ச ரூபாய், காற்றில் போனது மாதிரி போய்விட்டதே!’ மனதுக்குள்ளாகவே அரற்றினான்.

‘பயப்பட வேண்டாம். வாங்கியிருப்பவை எல்லாம் நல்ல பங்குகள்தான், பொறுத்திருப்போம். மீண்டும் பங்குச் சந்தை நன்றாக வரும் ‘ என்றான், நண்பன். எங்கே பொறுப்பது? இடத்தினைப் பதிவு செய்தாக வேண்டுமே! “வந்த விலைக்கு விற்றுவிடுங்கள்” என்றான் ஜானகிராமன். காரணம், பங்குச் சந்தை இன்னும் கூட அதிகமாக வீழ்ச்சி அடையலாம் என்று இன்னொரு நண்பன் சொல்லியதுதான். விற்றார்கள். நட்டத்தினை கையில் பிடித்தார்கள்.

ஜானகிராமன் செய்ததில் எது சரி? எது தவறு? பங்குச் சந்தைக்கு வந்ததே தவறா?

இல்லை. அவருடைய முதலீட்டு அணுகுமுறை தவறு. முக்கியத் தேவைக்கு என்று வைத்திருக்கும் பணத்தினை பங்குச் சந்தைக்குக் கொண்டு வந்தது அவருடைய தவறு. இங்கே குறுகிய காலத்தில் லாபம் என்பது சாத்தியம்தான் .ஆனால் நிச்சயமில்லை. Possible but not Certain அதுதான் நடந்திருக்கிறது. நான்கு ஐந்து வருடங்களாக சந்தை நன்றாகத்தான் இருந்தது. இப்போதுதான் இப்படி. யாரும் எதிர்பாராது என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் இந்த முதலீட்டின் குணாதிசயமே இதுதான். அதனால்தான் இது அதிக ரிஸ்க் உடையது என்பது. இன்னும் ஐந்து வருடம் வரை தேவைப்படாத பணம் என்று இருக்குமானால், அவர் இந்த இறக்கத்துக்குக் கவலைப்பட வேண்டியதிருக்காது. அதற்குள் நிச்சயம் நல்ல பங்குகள் மீண்டும் எழுந்துவிடும். அதற்கும் முன்பாகவேயும் விலைகள் உயரலாம். ஆனால் உடனடியாக உயருமா என்றால், அதனால் சில சமயங்களில் முடியாது. இது அதுபோன்ற ரிஸ்க் இருக்கும் முதலீடு பங்குச் சந்தை.

ஜானகிராமன் எடுத்தது பெரிய ரிஸ்க். அவருக்கு வயது குறைவாக இருக்கலாம். ஆனாலும், இந்த ரிஸ்க் ஜானகிராமனைப் பொறுத்தவரை தவறுதான். காரணம், ரிஸ்க் தனக்கிருக்கும் தேவைகளைப் பொறுத்தும் தான் எடுக்கப்பட வேண்டும். விட்டு வைக்கக் கூடிய பணம், உடனடியாக தேவைப்படாத பணத்திற்குதான் ரிஸ்க் எடுக்கலாம்.

மகன், மகள் படிக்க வைக்க வேண்டிய பணம், வீடு கட்ட வைத்திருக்கும் பணம், மருத்துவச் செலவிற்கு வைத்திருக்கும் பணம் போன்றவற்றை ரிஸ்க் அதிகமில்லாத முதலீட்டில் மட்டுமல்ல, உடனடியாக எடுக்கக் கூடிய இடமாகவும் பார்த்துத்தான் முதலீடு செய்யவேண்டும்..

நன்றி: சோம.வள்ளியப்பன் - பணமே ஓடி வா - குமுதம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum