இதுதான் 40 வருடங்களுக்கு முன் இருந்த கலாச்சாரமா?
Mon Jun 27, 2016 4:55 am
Anantha Narayanan[size]
June 22, 2014 ·
இது நேற்று இறந்துபோன பெண்ணிற்காக
எழுதப் பட்டது அல்ல.
இது போல பல பெண்கள்
இனியும் கொலை செய்யப்
படக்கூடாது என்றால், பெண்கள் சுய
ஒழுக்கத்துடன் இருக்கக் கற்று கொள்ள
வேண்டும்.
பல்லாயிரம் ஆண்டுகளாக பாதுகாப்பாக
இருந்த பெண்களுக்கு இப்போது மட்டும்
இந்த நிலை வருகிறது என்றால்
அதற்கு யார் காரணம் என்று எண்ணிப்
பார்க்கவேண்டும்.
பெண்களுக்கு கிடைக்கும் அதீத
ஐடி சம்பளம் குறித்து சந்தோசம்.
ஆனால் அதில் அளவுக்கதிகமாக
பொழுது போக்குகளில் அல்லது அலங்காரப்
பொருட்களில், தேவையற்ற ஷாப்பிங்
மால்களில் செலவிடப் படுகிறது.
இந்த இலட்சணத்தில் திருமணம்
என்று வரும்போது, பையனுக்கு சொந்த
வீடு இருக்க வேண்டும், அப்பன் ஆத்தாள்
கூடவே இருக்கக் கூடாது, தன்னை விட
அதிக சம்பளம் வாங்க வேண்டும் (தற்போதைய
டிமாண்ட் ரூ 1 லட்சம்), மற்றும்
வெளிநாட்டில் வேலை செய்யக் கூடாது....
இன்றைக்கு திருமணம் நடக்காமல் இருக்கும்
பல ஆண்களுக்கு அடிப்படையான காரணம்
ஐடி பெண்களின் இந்த கண்டிஷன்களே.
ஆக நிலைமை இப்படி இருக்க,
கூத்து வேறு ஒருபுறம்
வேறு மாதிரி நடக்கிறது.
பல பெண்களின் கொலைகளின் பின்
புலத்தை கடந்த 6 ஆண்டுகளாக
ஊன்றி கவனித்து வருகிறேன்.
காதலிப்பது ஒருத்தனை,
கைப்பிடிப்பது ஒருத்தனை.
சரி, கல்யாணம்
ஆகிவிட்டதே, கட்டிய புருஷனைத் தவிர
வேறு எவனையும் நினைக்கக்
கூடாது என்று இந்தப் பெண்களுக்குக்
தோன்றுகிறதா என்றால் .... இல்லை.
ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தில் கள்ளத்
தொடர்பு ஏற்படுகிறது.
பழைய மாவு புளிக்கும் என்பது போல,
கள்ளனுக்கு பணம் பறிக்கும் எண்ணம்
வரும்போது ப்ளாக்மெயில் முதலான
சமாச்சாரங்கள் நிறைவேறி, கடைசியில்
அவள் விழி பிதுங்கி நிற்கும்போது,
மிகவும் சவுகரியமாக
அவளை கற்பழித்துக் கொல்கிறான்.
இதுதான் 40 வருடங்களுக்கு முன் இருந்த
கலாச்சாரமா?
ஐடி என்று ஒன்று வந்து ஊரில் உள்ள
அத்தனை பெண் பிள்ளைகளும் வேலைக்குப்
போக ஆரம்பித்த பிறகுதான்
இதுமாதிரியான நிகழ்வுகள்
அதிகரித்துள்ளன.
அதற்கு முன்
இப்படித்தான் நடந்ததா?
பெங்களூரிலும் ஹைதராபாத்திலும்
இதைவிட மோசம்.
குடித்து கூத்தடித்து,அப்பன் ஆத்தாள் சம்பாதித்த கொஞ்ச நஞ்ச
நல்ல பேரை காற்றி பறக்க விடுவதற்குப்
பெயர் சுதந்திரமா?
எங்கே சொல்லுங்கள் எங்காவது ஒரு வீட்டில்
பையனைப் பற்றி இத்தனை கடுத்த
விமர்சனங்கள் எழுந்ததுண்டா?
இன்றைக்கெல்லாம் மிக அதிகமாக
விவாகரத்து வழக்குகள் வருவது இளம்
பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.
சீக்கிரம் கல்யாண வாழ்க்கை கசந்து விடுகிறது.
நான் வசிக்கும் தெருவில் 4 ஐடி பெண்கள்
ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டு,
விவாகரத்து வழக்கு போட்டு இருக்கிறார்கள்.
அவர்களிடம் எடுத்துச் சொன்னால்,
'எனக்கு வேலை இருக்கிறது,
நான் என் குழந்தையை கவனித்துக் கொள்வேன்'
என்று கூறி வயதான
பெற்றவர்களை ஆயாக்களாகவும்
பியூனாகவும் ஆக்கிவிட்டு சர்வ
சாதாரணமாக இரவு 11
மணிக்கு வந்து இறங்குகிறார்கள்.
கேட்டால் 14 மணி நேர
வேலை என்கிறார்கள்.
கலாச்சாரம் என்று ஒன்று இருக்கிறது.
மனிதனின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவே,
பல்லாயிரம் ஆண்டுகளாக மூதாதையர்களால்
வழி வழியாக நமக்குப் புகட்டப்
பட்டு வந்துள்ளது.
அதை நாம் கி பி 2000
வரை கட்டிக் காத்தோம்.
அதற்குப் பின்தான்
இந்த 14 வருடங்களில் நாம் பெண்களிடம்
மாற்றத்தைக் காண்கிறோம்.
எல்லாத் துறையிலும்
இதுதானே நடக்கிறது என்று யாராலும்
பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது.
ஆனால் 14 வருடமாக
நடக்கிறது என்று வரும்போது ஒரு ஒற்றை கணிப்பில்
எது வளர்ந்தது,
எதிலிருந்து சீரழிவு ஆரம்பித்தது என்பதை குழந்தை கூட
சொல்லி விடும்.
ஐடி துறையில்
மகள்களை வேலைக்கு அனுப்பும்
பெற்றோர்களே, கவனமாக இருங்கள்.
உங்கள் பிள்ளைகள் மீது ஒரு கண் வையுங்கள்.
ஆனாலும், உங்களுக்கு உள்ள உரிமைகள்
பறிபோய் விட்டன.
அவர்கள் எடுக்கும் முடிவிற்கு நீங்கள் கட்டுப் பட வேண்டிய
அவசியம் உங்களுக்கு வந்து விட்டது.
கடந்த 3 மாதங்களில் நான் எனது 3
உறவினர்கள் குடும்பத்தில் தாய்
தந்தை சொல் கேளாமல் கூட
வேலை செய்பவனைக் கல்யாணம்
செய்து கொண்டுள்ளார்கள்.
இரண்டு உறவினர்களின் பெண்கள் விவாகரத்து க்கு கோர்ட்டில் விண்ணப்பித்துள்ளார்கள்.
வரும் முன் காப்பான் தோழன் என்பதால்
சொல்லி விட்டேன்..... ஆனாலும் ( என்
நண்பர்களில் சிலர் ) பிடிவாதமாக, நீர்
பெண்ணிய எதிர்ப்பாளர், நீர் ஒரு biased
மனிதர், உமக்கு ஐடி பெண்களின் சம்பளம்
கண்ணை உறுத்துகிறது, ஏன் பெண்கள்
குடிக்கக் கூடாதா,
அல்லது புகை பிடிக்க கூடாதா என்று பின்னூட்டம் இடப்போகும்
நண்பர்களே......
உங்களுக்கே உங்களுக்காக
ஒரு கேள்வி மட்டும்...
"உங்கள் தங்கை அல்லது மகளுடன்
உட்கார்ந்து தம் அடிப்பீர்களா?
குடிப்பீர்களா?
அல்லது முந்தானை சரிந்து விழுவதை இரசிப்பீர்களா?"
இதில் எங்கே பெண் ஆதிக்க
வர்ணனை தெரிகிறது ...
இன்னமும் இந்த
உலகம் நம்மை ( தமிழர்களை ) கண்டு வியக்க
காரணம், கட்டிய தாலி,
ஒருவனுக்கு ஒருத்தி ( மாறிவிட்டது ஒருத்திக்கு ஒருவன்
- மன்னிக்கவும் )
போன்ற பல காரணம்...
கட்டி காப்பது நம் கடமை... வருங்காலம்
நம்மை ஆதி வாசிகளாக பார்க்காமல்,
முன்மாதிரியாக நினைத்து வாழ
வழி காட்டுவோம்....
நான் யார் மனதையும் புண்படுத்தவில்லை...
புரிய வைத்துள்ளேன்...[/size]
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|