10 செகண்ட் கதைகள்
Tue Apr 26, 2016 7:57 pm
ஓவியங்கள்: செந்தில்
'மலடி’ என்ற அடைமொழியோடு ரம்யாவை விவாகரத்துசெய்த விக்னேஷ், இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் அவளைப் பார்த்தபோது, ரம்யா நிறைமாதக் கர்ப்பிணி!
- அஜித்
சென்னை கடற்கரை சாலை... பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் நேர்காணல். ''வங்காள விரிகுடா எங்கு உள்ளது?'' என்பது கேள்வி. ''இந்தியாவின் கிழக்கே...'' என்றான் 'டிஸ்டிங்ஷன்’ குமார். ''நம் ஆபீஸுக்கு எதிரே...'' என்றான் 'அரியர்’ அரவிந்த். உடனே பணி ஆணை வழங்கப்பட்டது அரவிந்துக்கு.
- விசயன்
'என்னை வேலையில இருந்து தூக்கிடாதீங்கம்மா ப்ளீஸ்... இதை நம்பித்தான் என் குடும்பம் இருக்கு...' வேலைக்காரி கெஞ்ச, 'வேற வழி இல்லை' என தீர்க்கமாகச் சொன்னாள் ஐ.டி வேலையில் இருந்து தூக்கப்பட்ட மாலினி.
- பெ.பாண்டியன்
யானையையே மறையச்செய்த மேஜிக்மேனிடம் ஒரு சிறுவன், ''அங்கிள், இந்தக் கொசுக்களை மறையவைங்க'' என்றான். காணாமல்போனான் மேஜிக்மேன்.
- பாளை பசும்பொன்
'எட்டு டேக் ஆகியும் குழந்தைக்கு அழ வர மாட்டேங்குது’ என்கிற டென்ஷனில் இருந்தார், அந்த ரியாலிட்டி சிங்கர்ஷோ டைரக்டர்!
- 'அறந்தாங்கி’ ஷக்தி ஷரவணன்
'மழை வருவதற்குள் கிளம்பிவிட வேண்டும்’ என நினைக்கும்போதே, தூறல் போட்டது. நனையாமல் இருக்க தனது சட்டை பாக்கெட்டை கையால் மறைத்துக்கொண்டு ஓடினான் ராகுல்.
- தி.அர்விந்த்
'டோன்ட் யு ஹேவ் சென்ஸ்... வீட்ல சாப்பாடு இருக்கிறப்ப பக்கத்து வீட்ல போய் சாப்பிடுற?’ தன் மகனை அதட்டுகிறார் அமெரிக்கவாழ் இந்தியர்!
- சேகர்
பரீட்சைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த பையனை நிறுத்தி அவன் அம்மா சொன்னாள்... 'டேய் அப்படியே ஓடிப்போய் அந்தப் பெட்டிக்கடையில 'முட்டை’ வாங்கிட்டு வாடா!'
- ரஹீம் கஸாலி
வாழை மரம் கட்டப்பட்டு தயாரான அமரர் ஊர்தி சீறிப் பாய்ந்தது ஆடல் பாடலுடன், ஆயுத பூஜையன்று!
- ரிஷிவந்தியா
''அரிசி விலை இப்படிப் பயங்கரமா ஏறிப்போச்சே!' என்றவரிடம் 'இப்ப நிக்குற இடம், முன்னாடி நெல் வயல் தெரியுமா சார்?'' என்றார் கடைக்காரர்.
- ஆர்.முத்துக்குமார்
குறைபாடு
'மலடி’ என்ற அடைமொழியோடு ரம்யாவை விவாகரத்துசெய்த விக்னேஷ், இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் அவளைப் பார்த்தபோது, ரம்யா நிறைமாதக் கர்ப்பிணி!
- அஜித்
இடம் பொருள்...
சென்னை கடற்கரை சாலை... பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் நேர்காணல். ''வங்காள விரிகுடா எங்கு உள்ளது?'' என்பது கேள்வி. ''இந்தியாவின் கிழக்கே...'' என்றான் 'டிஸ்டிங்ஷன்’ குமார். ''நம் ஆபீஸுக்கு எதிரே...'' என்றான் 'அரியர்’ அரவிந்த். உடனே பணி ஆணை வழங்கப்பட்டது அரவிந்துக்கு.
- விசயன்
பணி நீக்கம்
'என்னை வேலையில இருந்து தூக்கிடாதீங்கம்மா ப்ளீஸ்... இதை நம்பித்தான் என் குடும்பம் இருக்கு...' வேலைக்காரி கெஞ்ச, 'வேற வழி இல்லை' என தீர்க்கமாகச் சொன்னாள் ஐ.டி வேலையில் இருந்து தூக்கப்பட்ட மாலினி.
- பெ.பாண்டியன்
மகிமை
யானையையே மறையச்செய்த மேஜிக்மேனிடம் ஒரு சிறுவன், ''அங்கிள், இந்தக் கொசுக்களை மறையவைங்க'' என்றான். காணாமல்போனான் மேஜிக்மேன்.
- பாளை பசும்பொன்
திரைக்குப் பின்னால்...
'எட்டு டேக் ஆகியும் குழந்தைக்கு அழ வர மாட்டேங்குது’ என்கிற டென்ஷனில் இருந்தார், அந்த ரியாலிட்டி சிங்கர்ஷோ டைரக்டர்!
- 'அறந்தாங்கி’ ஷக்தி ஷரவணன்
யதார்த்தம்
'மழை வருவதற்குள் கிளம்பிவிட வேண்டும்’ என நினைக்கும்போதே, தூறல் போட்டது. நனையாமல் இருக்க தனது சட்டை பாக்கெட்டை கையால் மறைத்துக்கொண்டு ஓடினான் ராகுல்.
- தி.அர்விந்த்
வெட்கக்கேடு
'டோன்ட் யு ஹேவ் சென்ஸ்... வீட்ல சாப்பாடு இருக்கிறப்ப பக்கத்து வீட்ல போய் சாப்பிடுற?’ தன் மகனை அதட்டுகிறார் அமெரிக்கவாழ் இந்தியர்!
- சேகர்
ஆருடம்
பரீட்சைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த பையனை நிறுத்தி அவன் அம்மா சொன்னாள்... 'டேய் அப்படியே ஓடிப்போய் அந்தப் பெட்டிக்கடையில 'முட்டை’ வாங்கிட்டு வாடா!'
- ரஹீம் கஸாலி
பூஜை
வாழை மரம் கட்டப்பட்டு தயாரான அமரர் ஊர்தி சீறிப் பாய்ந்தது ஆடல் பாடலுடன், ஆயுத பூஜையன்று!
- ரிஷிவந்தியா
கபளீகரம்
''அரிசி விலை இப்படிப் பயங்கரமா ஏறிப்போச்சே!' என்றவரிடம் 'இப்ப நிக்குற இடம், முன்னாடி நெல் வயல் தெரியுமா சார்?'' என்றார் கடைக்காரர்.
- ஆர்.முத்துக்குமார்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|