Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு
Fri Feb 19, 2016 9:22 pm
Freedom 251... மத்திய அரசின் முழு ஒத்துழைப்புடன் மத்திய பாதுகாப்பு மந்திரி மற்றும் எம்.பிக்களின் முன்னிலையில் அற ிமுகம் செய்யப்பட்டு அதை இன்று முதல் ஆன்லைனில் அவர்கள் இணைய தளத்தில் சென்று முழு பணமும் செலுத்தி முன் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிற்க... ஆனால் 251 ரூபாய்க்கு இத்தனை வசதிகளுடன் (என்னென்ன வசதிகள் என்பதை அவர்கள் freedom251.com என்னும் இணையத்தில் படியுங்கள்) ஒரு கைப்பேசி சாத்தியமா என்றால் நிச்சயமாக இல்லை. சரி மத்திய அரசு ஏதேனும் நேரடி அறிவிப்பு இந்த கைப்பேசிக்கான மானியம் தொடர்பாக வெளியிட்டுள்ளதா என்றால் அதுவும் இல்லை. பிறகு இது நிச்சயமாக சாத்தியம் இல்லாத ஒன்றாகவே படுகிறது.
அதோடு நேற்று ஆப்பிள் நிறுவனம் இந்த freedom251 கைப்பேசி தங்கள் நிறுவன கைப்பேசியின் வடிவத்தை ஒத்து இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளது. நடவடிக்கைகள் எடுக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு விட்டது. உடனே இந்த நிறுவனம் இந்த படங்களில் வெளியிட்டு உள்ள கைப்பேசியின் அமைப்பின் படி அதன் உண்மை வடிவம் இருக்காது எனவும் மாற்றங்கள் நிறைய உள்ளது என்றும் அறிவித்து விட்டது.
அப்படி எனில் என்ன விதமான மாற்றஙகள் வரும் அதைப்பற்றி எந்த தகவலும் இல்லை. அப்படி பார்த்தால் இவர்கள் கூறும் எந்த வசதியும் இல்லாத ஒரு கைப்பேசி தான் இறுதியில் கிடைக்கும் எனப்படுகிறது. அவர்கள் கைப்பேசியை நமக்கு வழங்க நான்கு மாத காலம் அவகாசம் கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் முகவரியோ தொலைப்பேசி எண்ணோ எதுவும் அந்த இணைய தளத்தில் இல்லை. அவர்கள் தொழிற்ச்சாலை முகவரியும் இல்லை. இது பெரும் அபத்தமாக படுகிறது. மூன்று நாட்கள் வரை வரும் முன்பதிவு பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடவும் வாய்ப்பு உண்டு. நீங்கள் எங்கு சென்று யாரிடம் கொடுத்த பணத்தை கேட்க முடியும்? இது முழுக்க முழுக்க போலியான ஒன்றாகவே படுகிறது. எனவே யாரும் முன் பதிவு செய்ய வேண்டாம்.
நான்கு மாதங்கள் காத்திருங்கள். சந்தைக்கு வந்தால் கண்ணால் பாரத்து சோதித்து பிறகு வாங்கிக் கொள்ளலாம்.
இவை எல்லாவற்றிற்கும் மேல் அதன் தரம் என்னவென்று தெரியாது. மிகவும் மலிவான ஆபத்தான மூலப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்க போகிறார்கள் என்றும் ஒரு செய்தி வருகிறது. எனவே முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ...பிறருக்கும் சொல்லுங்கள்.
கை நழுவி விட்டதே என்று எண்ணி எதிர்காலத்தில் வருந்தும் அளவுக்கு இது ஒன்றும் அத்தனை அரிய வாய்ப்பு அல்ல
நன்றி: முகநூல்: Murugesh Maa
Freedom 251 india first most affordable smartphone by ringing bells.
FREEDOM251.COM
நிற்க... ஆனால் 251 ரூபாய்க்கு இத்தனை வசதிகளுடன் (என்னென்ன வசதிகள் என்பதை அவர்கள் freedom251.com என்னும் இணையத்தில் படியுங்கள்) ஒரு கைப்பேசி சாத்தியமா என்றால் நிச்சயமாக இல்லை. சரி மத்திய அரசு ஏதேனும் நேரடி அறிவிப்பு இந்த கைப்பேசிக்கான மானியம் தொடர்பாக வெளியிட்டுள்ளதா என்றால் அதுவும் இல்லை. பிறகு இது நிச்சயமாக சாத்தியம் இல்லாத ஒன்றாகவே படுகிறது.
அதோடு நேற்று ஆப்பிள் நிறுவனம் இந்த freedom251 கைப்பேசி தங்கள் நிறுவன கைப்பேசியின் வடிவத்தை ஒத்து இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளது. நடவடிக்கைகள் எடுக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு விட்டது. உடனே இந்த நிறுவனம் இந்த படங்களில் வெளியிட்டு உள்ள கைப்பேசியின் அமைப்பின் படி அதன் உண்மை வடிவம் இருக்காது எனவும் மாற்றங்கள் நிறைய உள்ளது என்றும் அறிவித்து விட்டது.
அப்படி எனில் என்ன விதமான மாற்றஙகள் வரும் அதைப்பற்றி எந்த தகவலும் இல்லை. அப்படி பார்த்தால் இவர்கள் கூறும் எந்த வசதியும் இல்லாத ஒரு கைப்பேசி தான் இறுதியில் கிடைக்கும் எனப்படுகிறது. அவர்கள் கைப்பேசியை நமக்கு வழங்க நான்கு மாத காலம் அவகாசம் கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் முகவரியோ தொலைப்பேசி எண்ணோ எதுவும் அந்த இணைய தளத்தில் இல்லை. அவர்கள் தொழிற்ச்சாலை முகவரியும் இல்லை. இது பெரும் அபத்தமாக படுகிறது. மூன்று நாட்கள் வரை வரும் முன்பதிவு பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடவும் வாய்ப்பு உண்டு. நீங்கள் எங்கு சென்று யாரிடம் கொடுத்த பணத்தை கேட்க முடியும்? இது முழுக்க முழுக்க போலியான ஒன்றாகவே படுகிறது. எனவே யாரும் முன் பதிவு செய்ய வேண்டாம்.
நான்கு மாதங்கள் காத்திருங்கள். சந்தைக்கு வந்தால் கண்ணால் பாரத்து சோதித்து பிறகு வாங்கிக் கொள்ளலாம்.
இவை எல்லாவற்றிற்கும் மேல் அதன் தரம் என்னவென்று தெரியாது. மிகவும் மலிவான ஆபத்தான மூலப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்க போகிறார்கள் என்றும் ஒரு செய்தி வருகிறது. எனவே முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ...பிறருக்கும் சொல்லுங்கள்.
கை நழுவி விட்டதே என்று எண்ணி எதிர்காலத்தில் வருந்தும் அளவுக்கு இது ஒன்றும் அத்தனை அரிய வாய்ப்பு அல்ல
நன்றி: முகநூல்: Murugesh Maa
Freedom 251 india first most affordable smartphone by ringing bells.
FREEDOM251.COM
Re: Freedom 251 - மொபைல் ஒரு எச்சரிக்கை பதிவு
Fri Feb 19, 2016 9:25 pm
பிரீடம் 251 மொபைலின் சிறப்பம்சங்கள்,
இந்த போன் சமீபத்திய நவீன லாலிபாப் ஆன்ட்ராய்டில் இயங்கவுள்ளது.
அடுத்ததாக 3 ஜியிலும் மிக வேகமான இயங்க கூடியது.
5 ஆயிரம் ருபாய் மதிப்புள்ள போன்களுக்கு உள்ளது போல 4 இன்ச் ஸ்கிரீன் உள்ளது.
1 ஜிபி ரேம் வசதி கொண்டது. ஃபேஸ்புக், வாட்சஸ், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை மிக வேகமாக இயக்க முடியும்
இந்த போனில் 8 ஜிபி இன்டர்னல் கார்டு உள்ளது. அதுபோல் மைக்ரோ எஸ்.டி. கார்டும் உள்ளது. இந்த மைக்ரோ எஸ்.டி. கார்டு இந்த போனின் விலையை காட்டிலும் அதிகம்.
3.2 மெகாபிக்சல் கேமரா இந்த செல்போனில் பொருத்தப்பட்டுள்ளது. செல்பி 0.3 மொகாபிக்சல் ஆகும்.
இவ்வளவு குறைந்த விலையில் இந்த போன் கொடுக்கப்பட்டாலும் பேட்டரி ஒரு நாள் முழுமைக்கும் தாங்கும். 1450 எத்.ஏ. ஹெச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
ஃப்ரீடம் 251 செல் போன் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் முரளி மனோகர் ஜோசி எம்.பி. முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
நாடு முழுவதும் 650 சர்வீஸ் சென்டர்கள் உள்ளன. அத்துடன் ஒரு வருட வாரண்டியும் உள்ளது.
'மேக் இன் இந்தியா 'திட்டத்தின் கீழ் பி இந்த ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இவை முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவும் இது பார்க்கப்படுகிறது.
சந்தையில் ஸ்மார்ட் போன்களின் குறைந்தபட்ச விலை 1,500 ரூபாய் ஆகும். இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று 500 ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள், ‘ப்ரீடம் 251’ என்ற பெயரில் சந்தைக்கு வர உள்ளன.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|