தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
விசுவாசத்தை அறிக்கையிடுங்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

விசுவாசத்தை அறிக்கையிடுங்கள் Empty விசுவாசத்தை அறிக்கையிடுங்கள்

Thu Feb 11, 2016 12:27 pm
அல்லாமலும் நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுவதில் அசைவில்லாமல் உறுதியாய் இருக்கக்கடவோம். வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. எபி-10:23

            கிறிஸ்தவம் ஒரு மாபெரும் அறிக்கையின் மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது. பேசக்கூடிய ஆற்றல் தேவன் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரிய வெகுமதி. மிருகங்கள், பறவைகள், மீன்கள் எல்லாவற்றையும் ஒப்பிட்டுபார்க்கும்போது மனிதன் தனித்தன்மை வாய்ந்தவன் என்பது நன்றாய் விளங்குகிறது. மிருகங்களையோ, பறவைகளையோ, மீன்களையோ பற்றி சொல்லப்படாத விசேஷமான காரியங்கள் மனிதனைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் மனிதனைப் படைப்பதற்கு முன்னதாக “நமது சாயலின் படியும் நமது ரூபத்தின் படியும் மனிதனை உண்டாக்குவோமாக என்றார்.” ஆகவே மனிதன் தேவனைப்போலவே உண்டாக்கப்பட்டவன். தேவன் பேசுகிறவர் என்பது அவரைப்பற்றிய விசேஷமாயிருக்கிறது. மனிதனும் அவரைப்போலவே பேசக்கூடியவனாய் உண்டாக்கப்பட்டிருக்கிறான். சிந்தித்து, வார்த்தைகளை தெரிந்தெடுத்து பேசக்கூடிய உரிமையையும், சிலாக்கியதையும் தேவன் மனிதனுக்கு கொடுத்திருக்கிறார். ஆதாமை படைத்த பின்பு எல்லா மிருகங்களையும், பறவைகளையும் அவனிடத்தில் கொண்டுவந்து, ஆதாம் அவைகளுக்கு பெயரிடும்படி சொன்னார். ஆதாம் என்ன பெயரிட்டானோ அதுவே அவைகளுக்கு பெயராயிற்று என்று வேதத்திலே வாசிக்கிறோம். தேவன் ஆதாமுக்குக் கொடுத்த முதல் வேலை பேசி, பெயர் வைக்கக் கூடிய வேலை. ஆகவே சரியான விதத்திலே பேசுவது என்பது மனிதன் கருத்தாய் செய்ய வேண்டிய வேலையாய் இருக்கிறது.

மனிதன் பாவத்திலே விழுந்த பிறகு அவனுடைய வாயின் வார்த்தைகள் பொல்லாததாக மாறிவிட்டது ஏனென்றால் பொல்லாங்கனாகிய பிசாசுக்கு மனிதன் அடிமையாகி விட்டான். மனிதன் பயத்தையும், சந்தேகத்தையும், அவ நம்பிக்கையையும், தூஷணத்தையும் பேசுகிறவனாக மாறிவிட்டான். மனிதனுடைய வாழ்க்கை கேடு நிறைந்த வாழ்க்கையாய் இருப்பதற்கு அவனுடைய வாயின் வார்த்தைகள் முக்கியமான காரணம் என்று வேதம் போதிக்கிறது.  ஆனால் தேவன் இயேசுவை அனுப்பி, அவரை நமக்காக சிலுவையில் மரிக்க செய்து விழுந்து போன நிலைமையிலிருந்து நம்மை தூக்கி எடுத்திருக்கிறார். இன்றைக்கு நாம் விசுவாசத்தையும், அன்பையும், தைரியத்தையும் பேசி நம்முடைய வாழ்க்கையை வளம் நிறைந்த வாழ்க்கையாக மாற்றிக்கொள்ள முடியும். தேவனுடைய வார்த்தைகளை உச்சரித்து, அவர் நமக்காக வைத்திருக்கிற நன்மைகளை எல்லாம் சுதந்தரிக்க முடியும் என்று தேவ ஆவியானவர் நமக்கு ஆலோசனை சொல்லுகிறார்.

      தேவன் ஒரு ஊமை அல்ல, அவர் பேசுகிற தேவன் என்பதை ஆதியாகமம் முதலாம் அதிகாரத்திலயே பார்க்கிறோம். அவர் எப்படி பேசினார் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒரு பாடமாய் இருக்கிறது. தேவன் உலகத்தை படைத்த பின்பு பூமியானது ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருந்தது. எல்லா வேத வல்லுணர்களும், தேவன் நேர்த்தியாய் படைத்த உலகத்தை, வானத்திலிருந்து தள்ளப்பட்ட பிசாசு ஒழுங்கின்மையும், வெறுமையும், இருளுமாய் மாற்றி விட்டான் என்று சொல்லுகிறார்கள். ஆனால் தேவன் என்ன பேசினார் என்பதை கவனிக்க வேண்டும். வேதம் சொல்லுகிறது, “தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது.” என்றார். அது அப்படியே ஆயிற்று. பிறகு “ஆகாயவிரிவு உண்டாகக்கடவது.” என்றார். அது அப்படியே ஆயிற்று. அதன் பிறகு “வெட்டாந்தரை கானப்படக்கடவது” என்றார். அது அப்படியே ஆயிற்று. தேவன் சொன்னார் அது அப்படியே ஆயிற்று என்று ஏழு இடங்களிலே எழுதப்பட்டிருகிறது. இதிலே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் பிற்போக்கான சூழ்நிலைகளை மாற்றும்படி தேவன் முற்போக்காய் பேசினார் என்பது தான்.தேவன் ஒரு விசுவாச தேவன்.  அவர் தம்முடைய வார்த்தைகளை விசுவாசிகிறார். அவர் சூழ்நிலைகளை பார்த்து கவலைப்படுகிறவர் அல்ல. ஏனென்றால் அவைகளை மாற்றக்கூடிய வல்லமையும், அதிகாரமும் தனுடைய வார்த்தைகளுக்கு உண்டு என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவரைப்பற்றி வேதம் சொல்லுகிறது “அவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளை போல அழைக்கிறவர். ரோ 4:17 . இல்லாத வெளிச்சத்தையும், இல்லாத ஒழுங்கையும், இல்லாத நிறைவையும் தன்னுடைய வார்த்தையின் வல்லமையினாலே அழைத்தார். அதினாலே அவைகள் உண்டாயிற்று என்று பார்க்கிறோம். இரட்சிக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருகிறோம். ஆகவே அவரைப்போலவே நாமும் நம்முடைய விசுவாசத்தைப் பேசி இல்லாத நன்மைகளை உருவாக்க வேண்டும், இருக்கிற தீமைகளை விரட்டியடிக்க வேண்டும். தேவன் தாம் கன்னட இருளையும், ஒழுங்கீனத்தையும், வெறுமையுமே பேசியிருப்பாரனால் அவைகள் மாறியிருக்க வாய்ப்பே இல்லை. அது போலவே நாமும் நம்முடைய பிரச்சனைகளையும், பெலவீனங்களையும், போராட்டங்களையுமே பேசுவோமானால் அவைகள் ஒரு போதும் முடிவுக்கு வாராது. அநேக தேவனுடைய மக்களுடைய பெலவீனமே இது தான். தாங்கள் பார்க்கிற பொல்லாத சூழ்நிலைகளையும், வியாதியையும், பணப்பிரச்சனைகளியும், பிசாசின் கிரியைகளையும் பற்றியே பேசுகிறார்கள். அவைகளைப்பற்றி தங்களுக்கு தெரிந்த மற்றவர்களிடத்திலும் போய் விவரித்து சொல்லுகிறார்கள். அப்படி சொல்லுகிறதினாலே நிலைமை இன்னும் மோசமாகுமே ஒழிய தீர்வு உண்டாகாது என்பதை அறியாதிருக்கிறார்கள். வேதம் சொல்லுகிறது மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலே இருக்கிறது. நீதி 18:21. நாம் நல்லவர்களாய் இருக்கலாம், ஆனால் நம்முடைய நாவு நம் பிரச்சனைகளையே பேசுவோமானால் நாம் ஜீவனை அல்ல மரணத்தை தான் பேசுகிறோம். மரணத்தை பேச பேச மரணம் தான் பெருகிக்கொண்டே போகும். ஜீவனை நாம் பெற்று அனுபவிக்க முடியாது. ஜெபத்திலே நாம் கர்த்தரிடத்தில் வரும் போது கூட நம்முடைய கஷ்டங்களை பேசக்கூடாது. அப்படி பேசுவோமானால் நம்முடைய ஜெபமே நமக்கு தீமையாய் அமைந்து விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. ஆகவே தான் இயசு இப்படி சொன்னார்..

     “ அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும் போது அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்… மத்-6:7. அதாவது ஜெபத்திலே என்ன பேசுகிறோம் என்பதைக்குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் பிரச்சனைக்கு பதிலாய் இருக்கிற தேவனுடைய வார்த்தைகளை ஜெபத்திலே சொல்லுவீர்களானால் தேவ சமூகத்திலே உங்கள் விசுவாசத்தை அறிக்கை செய்கிறீர்கள். தேவன் உங்கள் விசுவாச வார்த்தைகளுக்கு துரிதமான பதிலை கட்டளையிடுவார். தேவனுடைய வார்த்தைகளை தவிர வேறு வார்த்தைகள் எல்லாமே வீண் வார்த்தைகள். அப்படிப்பட்ட வார்த்தைகளுக்கு தேவன் செவிகொடுக்க மாட்டார் ஆகவே தான் பிரசங்கி இவிதமாக சொல்லுகிறான்:

  “தேவ சமூகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும் மனம் பதறி ஒரு வார்த்தையும் சொல்லாமலும் இரு.” பிரசங்கி 5:2. இரவும் பகலும் வேதத்திலே தியானமாயிருந்து உங்கள் பிரச்சனைகளுக்கு பதிலை கண்டுபிடியுங்கள். அவைகளால் உங்கள் மனதையும் உள்ளதையும் நிரப்புங்கள். பிறகு ஜெபத்திலேயும் அவைகளையே சொல்லுங்கள். தேவனுடைய வார்த்தைகள் ஜீவனாகவே இருக்கிறது. அவைகளை நாம் பேசும்போது ஜீவன் பெருக ஆரம்பிக்கிறது. ஜெபங்களுக்கு துரிதமான பதில் வரும். வாழ்க்கை வெற்றிகள் நிறைந்ததாய் மாறும்.

   ஜெபத்திலே மாத்திரம் அல்ல தனிமையில் இருக்கும் போதும் தேவனுடைய வார்த்தைகளை பேசிக்கொண்டே இருப்பது நமக்கு நல்ல பலனை கொண்டு வரும். வசனங்களை அறிக்கையிடுவதிலே உறுதியாய் இருக்க வேண்டுமென்று வேதம் போதிக்கிறது. அப்படி செய்யும் போது நம்முடைய நாவு வார்த்தையின் கட்டுப்பாட்டுக்குள்ளே வந்து விடுகிறது. இதைப்போல பாக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது. வார்த்தையின் கட்டுப்பாட்டுக்குள் வராத நாவு அழிவுக்கு ஏதுவானவைகளை பேசுகிறது. அநேகருடைய வாழ்க்கை பிரச்சனைகளுக்கு மூல காரணம் அவர்களுடைய அடங்காத நாக்கு. ஆனால் நாவை நாம் வார்த்தையின் அதிகாரத்துக்கு ஒப்புக்கொடுக்கும் போது பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது. நாவை அடக்க மனிதர்களால் கூடாது. ஆனால் தேவ ஆவியானவர் வசனத்தை கொண்டு நம்முடைய நாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். வசனத்தை பேசுகிற நாவு தேவ வல்லமையால் நிறைந்திருக்கிறது. பரிசுத்தமாய் வாழ விரும்புகிறீர்களா? பரிசுத்தத்துக்கடுத்த சத்தியங்களை சிந்தியுங்கள் அவைகளையே பேசுங்கள். அப்பொழுது பரிசுத்தமாய் வாழ்வது எளிதாக மாறுவதை காண்பீர்கள். ஆரோக்யமாய் வாழ விரும்புகிறீர்களா? வியாதியைப்பற்றி பேசுவதை நிறுத்துங்கள். டாக்டர் என்ன சொன்னார் என்பதையே மனதிலே நிறுத்தாதிருங்கள். உங்களுக்கு சிகிச்சையளிக்கிற டாக்டரைப் பார்க்கிலும் உங்களை சுகமாக்குகிற கர்த்தருடைய வார்த்தை பெரிதென்று எண்ணுங்கள். சுகத்தை வாக்கு பண்ணுகிற வசனங்களை வேதத்திலிருந்து கண்டுபிடியுங்கள், அவைகளையே பேசுங்கள். அது தான் விசுவாச அறிக்கை. நீங்கள் பேசுகிற விசுவாச வார்த்தைகள் தெய்வீக சுகத்தை உங்களுக்கு கொண்டு வரும். நீங்கள் என்ன பேசுகிறீர்களோ அது தான் உங்களுக்கு நடக்கும். செல்வ வாழ்வை விரும்புவீர்களானால் உங்கள் வாழ்க்கை கடன் பிரச்சனையிலிருந்து விடுபட்டு ஐஸ்வர்யமுள்ளதாய் மாற வேண்டுமா? ஐஸ்வர்யத்தை வாக்கு பண்ணுகிற வசனங்களை தொடர்ந்து அறிக்கையிடுங்கள். தரித்திரத்தின் வல்லமையிலிருந்து, ஐஸ்வர்யம் பெருக்கெடுப்பதை காண்பீர்கள். தேவன் அருளுகிற எல்லா நன்மைகளையும் விசுவாச அறிக்கையின் மூலம் நாம் பெற்று அனுபவிக்க முடியும்.

     என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலே விசுவாச அறிக்கையின் மூலம் பெரிய அற்புதங்களை நான் பெற்றிருக்கிறேன்.  நான் கல்லூரியிலே படித்துக்கொண்டிருக்கும் போது இரட்சிக்கப்பட்டேன். அதற்க்கு முன்பாக சினிமா, சீட்டாட்டம், சிற்றின்பங்கள் போன்ற காரியங்களிலயே என்னுடைய மனதை செலுத்தினேன். அதினாலே என்னுடைய மனது பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. படிப்பிலே கவனம் செலுத்த என்னால் முடியவில்லை. நிறைய பாடங்களிலே பெயில் ஆகி இருந்தேன்.  மூன்று பட்டப்படிப்பை முடிக்க முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டேன். ஆனால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் ஒரு சகோதரனை அனுப்பி என்னை ஆலயத்துக்கு கூட்டிக்கொண்டு வந்தார். அங்கே இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டேன். இரட்சிக்கப்பட்ட பிறகு தான் பட்டப்படிப்பை நல்ல விதத்திலே முடிக்க முடியும் என்கிற நம்பிக்கை பிறந்தது. ஆலயத்திலே கொடுக்கப்பட்ட செய்தியின் மூலமாக அறிவை ஊட்டக்கூடிய வசனங்களை தேவன் எனக்கு தந்தார். இயேசுவே தேவனால் நமக்கு ஞானமாயிருக்கிறார், நீதிமானுக்கு அறிவு லேசாய் வரும், தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு உலகத்தாரைப் பார்க்கிலும் பத்து மடங்கு அதிக ஞானத்தையும், அறிவையும் தேவன் கொடுத்தார். என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு, போன்ற வசனங்களை விசுவாசித்து வாயினாலே சொல்ல ஆரம்பிதேன். வசனங்களை அறிக்கையிட, அறிக்கையிட மனது ஒருமுகப்பட ஆரம்பித்தது. பாடங்கள் மனதிலே தங்கினது. அதின் விளைவாக நல்ல மதிப்பெண்களைப் பெற்றேன். மூன்று ஆண்டுகளிலயே படிப்பை முடித்து பட்டம் வாங்க தேவன் உதவிசெய்தார். ஒரு விதத்திலே சொல்லப்போனால் என்னுடைய விசுவாச அறிக்கை தேவனுடைய உதவிகளை எனக்கு பெற்றுத்தந்தது.

  நான் படித்து முடித்த பிறகு விரிவுரையாளர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்தது. அதில் கலந்து கொள்ள சென்ற போது, நமுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். என்கிற வசனத்தை சொல்லிக்கொண்டே சென்றேன். காலையிலிருந்து மாலை வரை நேர்முகத்தேர்வு நடந்தது. அதிலே பதின்மூன்று பேர் பங்குபெற்றனர். இறுதியாக தேர்வாளர்கள் என்னை அழைத்து, ‘உங்களை விட தகுதிபெற்றவர்கள் ஒருசிலர் இருந்தாலும் உங்களைத்தான் இந்த பணிக்கு நியமிக்க நாங்கள் விரும்புகிறோம்’ என்றார்கள். அந்த வேலை எனக்கு கிடைக்க கர்த்தர் உதவி செய்தார்.

    தேவன் கிருபையாய் கொடுக்கிற ஆசீர்வாதங்களை நாம் விசுவாசத்தினாலே பெற்றுக்கொள்கிறோம் என்று வேதம் போதிக்கிறது. நாம் விசுவாசிக்காவிட்டால் தேவன் நமக்கு ஏராளமாய் கொடுத்திருந்தாலும் நாம் ஒன்றையும் பெற்றுக்கொள்ள முடியாது. விசுவாசித்தாலும், விசுவாசிக்காவிட்டாலும் கர்த்தர் கொடுக்க விரும்புகிற நன்மைகளை கொடுப்பார் என்று நினைப்பது அறிவீனம். உதாரணத்துக்கு இரட்சிப்பை எடுத்துக்கொள்ளுங்கள். இரட்சிப்பு தேவன் கிருபையாய் கொடுக்கிற மாபெரும் ஈவு. அது எப்படி நமக்கு கிடைத்தது? நாம் இயேசுவை விசுவாசித்தோம், இரட்சிப்பை பெற்றுக்கொண்டோம். விசுவாசிக்காத எவரும் இதுவரை இரட்சிக்கப்படவில்லை என்பதுதான் சத்தியம். வேதம் சொல்லுகிறது “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானது அல்ல, இது தேவனுடைய ஈவு.” எபே-2:8

     இரட்சிப்பை மட்டுமல்ல மட்டற்ற எல்லா நன்மைகளையும் விசுவாசத்தின் மூலம் தான் பெறுகிறோம். உள்ளத்திலே உள்ள விசுவாசம் வாயின் அறிக்கையிலே வெளிப்படுகிறது. விசுவாசம் வார்த்தையின் மூலம் வெளிப்படும்போதுதான் அற்புதங்கள் நடக்கும். விசுவாசித்தால் போதாதா? அறிக்கையிடவேண்டுமா? என்று சிலர் கேட்கிறார்கள். விசுவாசத்தை அறிக்கையிடவேண்டியது மிக அவசியம் என்று வேதம் போதிக்கிறது. அனையிலே தண்ணீர் நிரம்பி இருக்கலாம்.  ஆனால் அது திறந்துவிடப் படவில்லையென்றால் விளை நிலங்கள் விளையாது, அறுவடை வராது. அனையிலே தண்ணீர் நிரம்பியிருந்தால் போதாதா? அது திறக்கப்பட வேண்டுமா? என்று கேட்பது அறிவீனம். பாக்கெட்டிலே நிறைய பணம் இருப்பது நல்லது, ஆனால் அதை எடுதுக் கொடுக்காவிட்டால் பொருட்களை வாங்கமுடியாது. அதேபோல உள்ளத்திலே இருக்கிற விசுவாசம் வாயின் வார்த்தைகளினால் வெளிப்படும் போது தான் அற்புதங்களை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

     தேவன் மோசேயினிடத்தில்என்ன சொன்னார் என்பதை பாருங்கள்.

“நீ அவர்களோடே சொல்ல வேண்டியது என்னவென்றால் நீங்கள் என் செவிகள் கேட்க சொன்னபிரகாரம் உங்களுக்கு செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” எண்-14:28

நாம் பேசுகிற வார்த்தைகள் நாம் என்ன விசுவாசிக்கிறோம் என்பதை பிரதிபலிக்கிறது. அதுமட்டுமல்ல நாம் பேசுகிற வார்த்தைகளை தேவன் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று இந்த வசனம் கூறுகிறது. இந்த சத்தியத்தை உறுதிப்படுத்தும்படி இயேசு இப்படி சொன்னார், “அவன் சொன்னபடியே ஆகும்.” கானான் தேசத்தை வேவுபார்த்துவந்த யோசுவாவும், காலேபும் தங்களுடைய விசுவாசத்தைப் பேசினார்கள். ஆனால் மற்ற பத்து பேரும் தங்களுடைய பயத்தையும், சந்தேகத்தையுமே பேசினார்கள். இரண்டு பிரிவினரும் என்ன பேசினார்களோ அதுதான் அவர்களுக்கு நடந்தது. சாவைப் பேசினவர்கள் வாழவில்லை. வாழ்வைப் பேசினவர்கள் சாகவில்லை. இது மாறாத ஆவிக்குரிய பிரமாணமாயிருக்கிறது. இது எப்போதும், எல்லா இடத்திலும், எல்லா விசுவாசிகளுக்கும் வேலை செய்யக்கூடிய பிரமாணம். இதைப் புரிந்துகொண்டு யோசுவாவும், காலேபும் செய்தது போல விசுவாசத்தை அறிக்கையிடுவீர்களானால் தேவனுடைய நன்மைகளும், அவருடைய மகிமையும் உங்கள் வாழ்வை நிரப்புவதைக் காண்பீர்கள்.

    பன்னிரண்டு வருடம் பெரும்பாடுள்ள ஸ்த்ரீயைப்பற்றி சிந்தித்துப்பாருங்கள். விசுவாச அறிக்கை எவ்வளவு பெரிய அற்புதத்தை நமக்கு பெற்றுத்தரமுடியும் என்பதற்கு அவளுடைய கதை ஒரு நல்ல உதாரணமாயிருக்கிறது. பன்னிரண்டு வருடம் உதிரப்போக்குமட்டுமல்ல, அவளுடைய சொத்துக்களையெல்லாம் விற்று வைத்தியம் பண்ணியும் சற்றாகிலும் சுகமடையாமல் அதிக வருத்தப்பட்டாள் என்று வேதம் கூறுகிறது. அப்படிப்பட்ட பரிதாபமான நிலமையிலே அவள் இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டாள். அதுதான் அவளுக்கு கிடைத்த பெரிய பாக்கியம் என்று சொல்லலாம். இயேசுவைக் குறித்த கேள்வி அவளுக்குள்ளே விசுவாசத்தை உண்டாக்கிற்று. இயசுவால் தன்னை குணமாக்க முடியும் என்கிற விசுவாசம் அவளுக்குள் வந்துவிட்டது. அவளுடைய உள்ளம் விசுவாசத்தினால் நிரம்பின மாத்திரத்தில் அவளுடைய வாய் விசுவாசத்தை பேச ஆரம்பித்தது. அவள் சொன்னாள் “அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன்; ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு சொல்லுகிறது ‘அவள் சொல்லிக்கொண்டே வந்தாள்’. எத்தனைமுறை சொன்னாளோ தெரியாது. ஆனால் அவள் பேசினது முழுவதும் அவளுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தினது. அது மிகப்பெரிய அற்புதத்தை பெற்றுக்கொள்ள அவளுக்கு உதவி செய்தது. அவளுடைய விசுவாச அறிக்கை இயேசுவிலிருந்து வல்லமை புறப்படச்செய்து அவளை குணமாக்கிற்று. இயேசு சொன்னார், ‘மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது.’ கவனித்தீர்களா? என் வல்லமை உன்னை இரட்சித்தது என்று சொல்லவில்லை. அவள் விசுவாசிக்கவில்லை என்றால் ஆண்டவரிடத்தில் வல்லமை இருந்தாலும் அது வெளிப்படாது. ஆகவேதான் அவளுடைய விசுவாசத்தை இயேசு முக்கியப்படுத்துகிறார். விசுவாசம் அவளுடைய வார்த்தைகளினாலே வெளிப்பட்டதைப் பார்க்கிறோம். அவள் தன்னுடைய பெலவீனத்தையும, வியாதியைப்பற்றியும், இயலாமையைப்பற்றியும் பேசாமல் கர்த்தர்மேல் தான் வைத்த விசுவாசத்தையே பேசினாள். அது அவளுடைய தீராத பிரச்சனையைத் தீர்த்து வைத்தது. நாமும் நம்முடைய விசுவாசத்தை மாத்திரம் பேசுவோம். நம்முடைய வாழ்க்கையிலும் பெரிய அற்புதங்கள் நடக்கும். நாமும் வாழ்ந்திருக்க, சுகித்திருக்க, வெற்றிபெற கர்த்தர் உதவிசெய்வார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum