- CHARLES MSKபுதியவர்
- Posts : 5
Join date : 09/01/2016
சிரசின்மேல் தேவபெலன்!
Sun Jan 10, 2016 12:54 am
“உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப்படுத்த உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்ல வேண்டும் என்றாள்” (நியா. 16:6).
உலகப்பிரகாரமான பெலனுண்டு. இன்னும் விசேஷமான உன்னதத்திலிருந்து வருகிற பரிசுத்த ஆவியின் பெலனுமுண்டு.
நீங்கள் பெலத்தின்மேல் பெலனடைந்து, சீயோனிலே வந்து நிற்க செய்யும்படியான பெலனுமுண்டு.
பழைய ஏற்பாட்டிலே, நியாயாதிபதியாகிய சிம்சோனுக்கு இருந்த பலம் “மகா பலம்” என்று அழைக்கப் பட்டிருக்கிறது.
அதற்காக ஆவியானவர், சிம்சோன்மேல் இறங்கினார்.
அந்த உன்னதத்து பெலத்தினாலே, சிம்சோன் காசா நகரத்துக் கதவுகளை அசைத்துப் பிடுங்கி, தூக்கிக் கொண்டு போனார்.
முந்நூறு நரிகளை உயிரோடு பிடித்து, பெலிஸ்தியரின் வேளாண்மைகளை அழித்தார்.
பலமுள்ள பால சிங்கங்களின் வாய்களை, ஆட்டுக்குட்டியை கிழித்துப் போடுவதுபோல, கிழித்துப் போட்டார்.
அத்தனை வல்லமை.
நான் நினைக்கிறேன், சிம்சோன் வெளித்தோற்றத்திற்கு, ஒரு சாதாரண மனுஷரைப்போலத் தான் காட்சியளித்திருக்கக் கூடும். இடைவிடாது உடற்பயிற்சி செய்து, நரம்புத் தசைகளை முறுக்கேற்றி, இன்றைக்கு இருக்கிற பலவான்களைப் போல இருந்திருக்கமாட்டார்.
ஆண் அழகனைப்போல நிச்சயமாய் காட்சியளித்திருக்க மாட்டார்.
காரணம், அது இயற்கையான பெலன் அல்ல. பரிசுத்த ஆவியானவர் இறங்கி வருகிறதினால் வந்த “மகா பெலன்.”
இஸ்ரவேலரின் பகைவர்களான பெலிஸ்தியர், இந்த மகா பெலத்தின் இரகசியம் என்ன? என்று அறியும்படி ஆசைப்பட்டார்கள்.
ஆகவே தெலீலாள் என்ற வேசியை அவர்கள் பயன்படுத்தி, அந்த இரகசியத்தை கண்டு அறிவித்தால், ஒவ்வொரு வரும் ஆயிரத்துநூறு வெள்ளிக் காசுகள் கொடுக்க முன்வந்தார்கள் (நியாயா. 16:5).
உண்மையாக, சிம்சோனின் மகா பெலத்தின் இரகசியம் என்ன?
அவை இரண்டு காரியங்களில் அடங்கியிருந்தன.
முதலாவது, கர்த்தரால் வருகிற பரிசுத்த ஆவியின் பெலன்.
இரண்டாவது, சிம்சோனின் பிரதிஷ்டையின் ஜீவியம்.
சிம்சோனுக்கு நசரேய விரதம் என்ற பிரதிஷ்டையிருந்தது. அதன்படி, பிறப்பிலிருந்து அவருடைய தலை சவரகன் கத்தி படாமலே, நீள ஜடமுடியாயிருந்தது.
தெலீலாள் என்ற வேசியின் மேல் வைத்த இச்சையினிமித்தம், சிம்சோன் அந்த பரம இரகசியத்தை வெளியிட முடிவு செய்தார். ஆனால், கர்த்தரை மகிமைப் படுத்தி, “என்னுடைய மகா பலம் பரிசுத்த ஆவியானவரால் வந்தது” என்று அவர் சொல்லியிருந்தா ரென்றால், சிம்சோனின் உயிர் தப்பியிருந்திருக்கும்.
அவர் பெலிஸ்தியரால் சிறுமைப்பட்டு, வேடிக்கைப் பொருளாய் மாறியிருந்திருக்க மாட்டார். ஆனால், கர்த்தருக்கு மகிமை செலுத்தாமல், தன் தலைமயிருக்கு விளம்பரம் கொடுத்தபடியால், பிரதிஷ்டை உடைபட்டது.
அபூர்வமான, தெய்வீக பெலன் நீங்கியது. சாதாரண மனுஷனைப் போலானார்.
மகா பெரிய உன்னத பெலன் நீங்கிப்போயிற்று. மற்ற மனுஷரைப்போல மாறிவிட்டார். ஐயோ, அதன்பின் அவர் அடைந்த சிறுமை வார்த்தையில் அடங்காதது.
அவர் தரிசனத்தை இழந்தார். அவருடைய கண்களைப் பிடுங்கினார்கள். ஆனால், அவர் மரிக்கிற நேரம் வந்தபோது, தலைமயிரும் வளர்ந்தது. அவருடைய ஜெபத் தினால், இழந்த பெலன் அவருடைய சிரசின்மேல் இறங்கி வந்தது.
எண்ணற்ற பெலிஸ்தியரைக் கொன்று, முடிவில் அவர்களோடு மடிந்தார்.
நினைவிற்கு:-
“அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடி யிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத் துக்கும், ஒப்பாயிருக்கிறது” (சங். 133:2,3).
————————————
————————————
உலகப்பிரகாரமான பெலனுண்டு. இன்னும் விசேஷமான உன்னதத்திலிருந்து வருகிற பரிசுத்த ஆவியின் பெலனுமுண்டு.
நீங்கள் பெலத்தின்மேல் பெலனடைந்து, சீயோனிலே வந்து நிற்க செய்யும்படியான பெலனுமுண்டு.
பழைய ஏற்பாட்டிலே, நியாயாதிபதியாகிய சிம்சோனுக்கு இருந்த பலம் “மகா பலம்” என்று அழைக்கப் பட்டிருக்கிறது.
அதற்காக ஆவியானவர், சிம்சோன்மேல் இறங்கினார்.
அந்த உன்னதத்து பெலத்தினாலே, சிம்சோன் காசா நகரத்துக் கதவுகளை அசைத்துப் பிடுங்கி, தூக்கிக் கொண்டு போனார்.
முந்நூறு நரிகளை உயிரோடு பிடித்து, பெலிஸ்தியரின் வேளாண்மைகளை அழித்தார்.
பலமுள்ள பால சிங்கங்களின் வாய்களை, ஆட்டுக்குட்டியை கிழித்துப் போடுவதுபோல, கிழித்துப் போட்டார்.
அத்தனை வல்லமை.
நான் நினைக்கிறேன், சிம்சோன் வெளித்தோற்றத்திற்கு, ஒரு சாதாரண மனுஷரைப்போலத் தான் காட்சியளித்திருக்கக் கூடும். இடைவிடாது உடற்பயிற்சி செய்து, நரம்புத் தசைகளை முறுக்கேற்றி, இன்றைக்கு இருக்கிற பலவான்களைப் போல இருந்திருக்கமாட்டார்.
ஆண் அழகனைப்போல நிச்சயமாய் காட்சியளித்திருக்க மாட்டார்.
காரணம், அது இயற்கையான பெலன் அல்ல. பரிசுத்த ஆவியானவர் இறங்கி வருகிறதினால் வந்த “மகா பெலன்.”
இஸ்ரவேலரின் பகைவர்களான பெலிஸ்தியர், இந்த மகா பெலத்தின் இரகசியம் என்ன? என்று அறியும்படி ஆசைப்பட்டார்கள்.
ஆகவே தெலீலாள் என்ற வேசியை அவர்கள் பயன்படுத்தி, அந்த இரகசியத்தை கண்டு அறிவித்தால், ஒவ்வொரு வரும் ஆயிரத்துநூறு வெள்ளிக் காசுகள் கொடுக்க முன்வந்தார்கள் (நியாயா. 16:5).
உண்மையாக, சிம்சோனின் மகா பெலத்தின் இரகசியம் என்ன?
அவை இரண்டு காரியங்களில் அடங்கியிருந்தன.
முதலாவது, கர்த்தரால் வருகிற பரிசுத்த ஆவியின் பெலன்.
இரண்டாவது, சிம்சோனின் பிரதிஷ்டையின் ஜீவியம்.
சிம்சோனுக்கு நசரேய விரதம் என்ற பிரதிஷ்டையிருந்தது. அதன்படி, பிறப்பிலிருந்து அவருடைய தலை சவரகன் கத்தி படாமலே, நீள ஜடமுடியாயிருந்தது.
தெலீலாள் என்ற வேசியின் மேல் வைத்த இச்சையினிமித்தம், சிம்சோன் அந்த பரம இரகசியத்தை வெளியிட முடிவு செய்தார். ஆனால், கர்த்தரை மகிமைப் படுத்தி, “என்னுடைய மகா பலம் பரிசுத்த ஆவியானவரால் வந்தது” என்று அவர் சொல்லியிருந்தா ரென்றால், சிம்சோனின் உயிர் தப்பியிருந்திருக்கும்.
அவர் பெலிஸ்தியரால் சிறுமைப்பட்டு, வேடிக்கைப் பொருளாய் மாறியிருந்திருக்க மாட்டார். ஆனால், கர்த்தருக்கு மகிமை செலுத்தாமல், தன் தலைமயிருக்கு விளம்பரம் கொடுத்தபடியால், பிரதிஷ்டை உடைபட்டது.
அபூர்வமான, தெய்வீக பெலன் நீங்கியது. சாதாரண மனுஷனைப் போலானார்.
மகா பெரிய உன்னத பெலன் நீங்கிப்போயிற்று. மற்ற மனுஷரைப்போல மாறிவிட்டார். ஐயோ, அதன்பின் அவர் அடைந்த சிறுமை வார்த்தையில் அடங்காதது.
அவர் தரிசனத்தை இழந்தார். அவருடைய கண்களைப் பிடுங்கினார்கள். ஆனால், அவர் மரிக்கிற நேரம் வந்தபோது, தலைமயிரும் வளர்ந்தது. அவருடைய ஜெபத் தினால், இழந்த பெலன் அவருடைய சிரசின்மேல் இறங்கி வந்தது.
எண்ணற்ற பெலிஸ்தியரைக் கொன்று, முடிவில் அவர்களோடு மடிந்தார்.
நினைவிற்கு:-
“அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடி யிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத் துக்கும், ஒப்பாயிருக்கிறது” (சங். 133:2,3).
————————————
————————————
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|