தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஏழைகளை நேசிக்க 50 வழிகள் - டாக்டர். திருமதி. லில்லியன் ஸ்டான்லி Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஏழைகளை நேசிக்க 50 வழிகள் - டாக்டர். திருமதி. லில்லியன் ஸ்டான்லி Empty ஏழைகளை நேசிக்க 50 வழிகள் - டாக்டர். திருமதி. லில்லியன் ஸ்டான்லி

Mon Mar 11, 2013 12:06 pm
1. ஏழைகளைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கக்
கற்றுக்கொள்ளுங்கள். அன்போடும் மரியாதை
யோடும் அவர்களிடம் பேசுங்கள்.



2. அவர்களது பெயரைக் கேட்டு அவர்கள் குடும்பம்
மற்றும் இல்லத்தைப் பற்றி விசாரியுங்கள்.
அவர்கள் தங்குமிடத்திற்கு விஜயம் செய்யுங்கள்.

3. பயணத்தின்போது கொடுக்க ஏழைகளுக்காகக்
கூடுதல் ஒன்றிரண்டு சாப்பாட்டுப் பொட்டலங்
களை எடுத்துக்கொள்ளுங்கள்.

4. சொந்தக் காரில் பயணம் செய்யும்போது சில
பழைய, புதிய ஆடைகளைக் கொண்டு
செல்லுங்கள். அனேகமாக வழியில் சில
ஏழைகளைச் சந்திப்பீர்கள்.

5. உதவியற்றோருக்கு முகமலர்ச்சியுடன் கடன்
கொடுங்கள்.

6. விதவைகள், பெண்கள், முதியவர், பெண்
குழந்தைகள் போன்றோருக்கான அரசாங்கச்
சலுகைகள் மற்றும் வங்கிக் கடன்களை விசாரித்
தறிந்து ஏழைகளுக்கு அவை கிடைக்கச்
செய்யுங்கள்.


7. தொழுநோயாளர், முதியோர், அநாதைகள்,
மனவளர்ச்சி குறைந்தோர், ஊனமுற்றோர்,
ஊமை, செவிடர் மற்றும் குருடர் இல்லங்களைக்
குறித்து விவரங்கள் சேகரித்து ஏழைகளை அங்கு
சேர்த்துவிடுங்கள். இப்படிப்பட்ட சில
இல்லங்களுக்குக் கிரமமாகச் சென்று உதவி
செய்யுங்கள்.

8. ஏழை மாணவர் படிப்பிற்குக் கல்விக் கட்டணம்
கொடுத்துதவுங்கள்.

9. ஏழை மாணவருக்கு இலவச ட்யூஷன் எடுங்கள்.
கல்வியறிவற்றோருக்கு எழுதப்படிக்கக் கற்பி
யுங்கள். இளைஞர் முதியோருக்குங்கூட
சேரிகளில் கிரமமான வகுப்புகள் துவங்கலாம்.

10. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஏழைப் பிள்ளை
களைத் தத்தெடுத்து கடவுளுக்காக வளர்க்
கலாம். பிள்ளைகள் உடையவரும் தத்தெடுக்கத்
தடையில்லை!

11. திக்கற்றோருக்கு ஒரு கருணை இல்லம்
நடத்துங்கள்.

12. கல்கத்தாவிலுள்ள அன்னை தெரசாவின்
கருணை இல்லத்தைப் பார்த்து வாருங்கள்.
அவர்களது மிஷனரிகளின் இல்லம் அண்மையில்எங்குள்ளதோ அங்கே சென்று கூடிய உதவி
வாக்களியுங்கள்.

13. அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று நோயா
ளிகளைச் சந்தியுங்கள். அவர்கள் சரியான
சிகிச்சை பெறுகிறார்களா என்று பாருங்கள்.
இல்லையேல் மருத்துவர்களைச் சந்தித்து ஆவன
செய்யுங்கள். குழந்தைகள் பிரிவிலுள்ள மிகச்
சுகவீனமான குழந்தைகளுக்கு விளையாட்டுச்
சாமான்கள் கொடுங்கள்.

14. ஏழைகளைச் சிகிச்சைக்கு மருத்துவர்களிடம்
கூட்டிச் செல்லுங்கள்.

15. விதவைகள் மற்றும் ஏழைப் பெண்களுக்கு
விவாகம் செய்து வையுங்கள்.

16. உங்கள் அண்மையிலுள்ள வறிய குடும்ப
மொன்றைத் தெரிந்துகொண்டு அவர்கள்
வாழ்வை முன்னேற்றுங்கள்.

17. எளியவரின் உரிமைகள் மற்றும் வழக்கு
களுக்காடீநு வாதாடுங்கள். எடுத்துக்காட்டாக,
அவர்கள் நிலம் அபகரிக்கப்படும்போது தலை
யிடுங்கள்.

18. பிச்சைக்காரருக்காக ஆண்டொருமுறையாவது
ஒரு நற்செய்திக் கூட்டம் நடத்தி நல்லதொரு
உணவளியுங்கள்.

19. உங்கள் பிறந்தநாள், திருமண நாளன்று
ஏழைகளை அழைத்து உணவளியுங்கள்.

20. நிறைய பலகாரங்கள் செய்து அல்லது வாங்கி
பண்டிகைக் காலங்களில் வீட்டிற்கு வரும்
ஏழைகளுக்குக் கொடுங்கள்.

21. ஆலயத்திற்கு வெளியே தருமம் வாங்கக் காத்து
உட்கார்ந்திருப்போருக்கு ஒரு சுருக்கமான
ஞாயிறு ஆராதனை நடத்துங்கள்.

22. எளிய குடும்பம் ஒன்றை எங்காவது விடு
முறைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

23. தோட்டத்தில் விளையும் சிலவற்றை ஏழை
எளியவருக்காகப் பிரித்து வையுங்கள்.

24. பரண்கள், பெட்டிகள், அலமாரிகள், அடுக்குத்
தட்டுகளைச் சுத்தம் செய்து ஓராண்டிற்கு
மேலாகப் பயன்படுத்தாத பொருட்களைக்
கொடுத்து விடுங்கள்.

25. சேரிகளில் கிறிஸ்து ஜெயந்தி பாடல்களைப்
பாடிக்கொண்டு சென்று தள்ளப்பட்டோருக்குவாழ்த்துதல் அட்டைகளும் இனிப்பும் கொடுத்து
வாழ்த்துங்கள்.

26. குட்டிக் குட்டி விளையாட்டுச் சாமான்கள்,
பலூன்கள் போன்றவற்றை மொத்த விற்பனைக்
கடையில் வாங்கி வைத்துக்கொண்டால் ஏழைச்
சிறுவர் சிறுமியர் கண்ணில்படும்போது
கொடுத்து மகிழ்விக்கலாம்.

27. பணக்காரருக்கு வெகுமதிகளைக் கொடுத்து
அவர்களிடமிருந்து வெகுமதிகளை வாங்கிக்
கொள்ளும் பழக்கத்தை நிறுத்தி அப்பணத்தை
ஏழைகளுக்குத் திருப்புங்கள்.

28. சேரிவாழ் மக்களுக்குக் கழிவறைகள் கட்டிக்
கொடுங்கள்.

29. உங்கள் வருமானம் மற்றும் சொத்தில் பத்தில்
ஒன்றை ஏழைகளுக்காக ஒதுக்கி வையுங்கள்.

30. ஏழைகளுக்குத் தொண்டு செய்யும் ஒரு
நிறுவனத்திற்கு உங்கள் பணத்திலும் சொத்திலும்
ஒரு பகுதி உயில் எழுதி வையுங்கள்.

31. கைக்கு வரும் சில்லரைக்காசு யாவற்றையும்
வறியவருக்கென்று ஒதுக்கி வையுங்கள்.

32. அதிகபட்சம் 10 நல்ல ஆடைகளும் 10 சாதா
உடைகளும் வைத்துக் கொண்டு மற்றவற்றைத்
தேவைப்பட்டோருக்குக் கொடுத்துவிடுங்கள்.

33. ஏழை வியாபாரிகளிடம் பேரம் பேசாதீர்கள்.

34. திருமண அன்பளிப்புகளில் ஒரே பொருள்
ஒன்றிற்கும் அதிகமாக வந்தால் அவற்றைக்
கடைகளில் மாற்றாமல் பாவப்பட்டவருக்குக்
கொடுங்கள். பிள்ளைகளுக்கு, பேரப்பிள்ளை
களுக்கென்று சேமித்து வைக்காதீர்கள்.

35. பிள்ளையின் உடைகளை அடுத்த பிள்ளைக்
கெனப் பத்திரப்படுத்தும் பழக்கத்தை விட்டொழி
யுங்கள். அடுத்தப் பிள்ளை புதுத்துணிதான்
போடட்டுமே!

36. பழைய புத்தகங்களை ஏழைகளுக்கு விநியோ
கியுங்கள்.

37. இரப்போர் தங்கும் இடங்களில் பாடல்
நிகழ்ச்சிகள் நடத்துங்கள்.

38. உணவுப் பொட்டலங்கள் தயாரித்து பிச்சைக்காரர்
தங்குமிடங்களில் விநியோகியுங்கள். விருந்து
நாட்களில் பிரியாணி போன்றவை மீதமானால்
உறவினருக்குக் கொடுத்தனுப்பாமல் ஏழை
களுக்குக் கொடுத்துவிடுங்கள்.

39. தங்க இடமில்லாதோருக்குக் குடிசைகள் கட்டித் தாருங்கள்

40. எளியோரின் இடிந்த வீடுகளைச் சரிசெய்து
உதவுங்கள்.

41. திக்கற்றோரைச் சந்தித்து அவர்கள் வீட்டைச்
சுத்தம் செய்து நல்லதொரு உணவு சமைத்துக்
கொடுத்து வாருங்கள்.

42. தினந்தோறும் பிச்சைக்காரரைச் சந்திப்பது
உங்கள் வேலைக்கு இடையூறானால் ஒவ்வொரு
மாதத்தின் முதல் தேதி அல்லது முதல் ஞாயிறு
அவர்களை வரப் பழக்குங்கள். அப்பொழுது
அவர்களுக்குப் போதித்து, தருமம் கொடுத்து,
ஜெபித்து அனுப்பலாம்.

43. எளிமையான வாழ்க்கை முறையைப் பின்
பற்றினால் வறியவருக்குக் கூடுதல் செலவழிக்கலாம்.

44. சேரிப் பிள்ளைகளுக்கு விளையாட்டுகள் மற்றும்
போட்டிகள் நடத்துங்கள். ஷட்டில் காக், கால்
பந்து, கேரம் போர்ட், செஸ் போர்ட் போன்றவை
வாங்கிக் கொடுங்கள். ஊஞ்சல் போன்ற
சிலவற்றைப் பொருத்திக் கொடுங்கள்.

45. நீங்கள் மருத்துவர் அல்லது தாதியரானால்
ஆதிவாசிக் கிராமங்கள் மற்றும் அவைபோன்ற
இடங்களில் தங்கி, உங்கள் அறிவையும்
பயிற்சியையும் பயன்படுத்தி மக்களை
உங்களுக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம்
முன்னேற்றுங்கள்.

46. எளியவரின் வீடுகளுக்கு விஜயம் செய்து
அவர்களது நண்பராயிருங்கள். அவர்களது
திருமணங்கள், மரணங்கள் மற்றும் பிற வைபவங்
களில் கலந்துகொள்ளுங்கள்.

47. பொறுமையாய் எளியவரது அவல நிலையின்
சோகக் கதைகளைக் காதுகொடுத்துக் கேட்க
நேரமெடுங்கள்.

48. தேய்ந்த செருப்பு மற்றும் கிழிந்த உடைகளைச்
செப்பனிட்டுப் பயன்படுத்தாமல் ஏழைகளுக்குக்
கொடுத்துவிட்டால் அவர்கள் சில மாதங்கள்
அவற்றை அனுபவிக்கலாமே.

49. சாலையோரத்தில் யாரேனும் விழுந்து கிடப்பதைக்
கண்டால் நில்லுங்கள். உயிரோடிருக்கிறாரா
என்று பாருங்கள். செத்திருந்தால் நல்லடக்கம்
செய்ய நகராட்சிக்கு அறிவியுங்கள். உயிருட
னிருந்தால் ஆவன செய்து உதவுங்கள்.

50. விருந்தினர் மற்றும் அயலகத்தார் உங்கள்
வீட்டிற்குக் கொண்டுவரும் பலகாரங்களை
அவசியமாய்த் தின்றுத் தீர்க்கவேண்டுமென்பது
கட்டாயமல்ல. பகிர்ந்து தின்றால் பசியாறும் !

(இக்கட்டுரையை நகல் எடுத்து விநியோகிக்கலாம்)

நன்றி: டாக்டர் திருமதி லில்லியன் ஸ்டான்லி
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum