எது தாய் மதம்? கிறிஸ்தவர்களாகிய நாங்கள் ஏன் அதற்கு திரும்ப வேண்டும்.??
Sat Aug 08, 2015 10:46 pm
இந்து மதம் என்பது ஆரிய அடிமைத்தனம் ஆகும். ஆரியர்களுக்கு அடிமைகளாயிருந்து விடுதலை பெற்றவர்கள் மீண்டும் அதே அடிமைத்தனத்திற்கு திரும்புவதற்கு நாங்கள் என்ன முட்டாள்களா?
யார் இந்த ஆரியர்கள்? ஆரியர்கள் என்று ஒரு குறிப்பிட்ட கூட்டம் அல்ல. மேற்கு ஐரோப்பாவிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவில் நுழைந்த ஆடுமேய்க்கிற கூட்டம் தான் இந்த ஆரியர்கள். இவர்கள் வரலாற்றில் பல்வேறு கால கட்டங்களில் வந்தவர்கள்.
பாரசீகர்- (கி.மு. 6 ஆம் நூற்றாண்டு)
கிரேக்கர் (கிமு 4 ஆம் நூற்றாண்டு)
சகர் (கிமு 2 ஆம் நூற்றாண்டு)
குஷாணர் (கிபி 1 நூற்றாண்டு)
ஹீனர் (கிபி 4 நூற்றாண்டு)
ரோமர் (கிபி 4 ஆம் நூற்றாண்டு) - இவர்கள் எல்லாருமே பொதுவாக ஆரியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
திராவிடர்கள் சிந்து நதி கரையோரம்வாழ்ந்தவர்கள் நாகரீகத்திலும், கலாச்சாரத்திலும் சிறந்து விளங்கியவர்கள். ஆனால் ஆடு மேய்க்கிற இந்த ஆரிய கூட்டம் திராவிட கலாச்சார பண்பாடுகளை ஒழிப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். திராவிடர்கள் இயற்கையை (மழை, காற்று, சூரியன், சந்திரன்) போன்றவற்றை தெய்வங்களாக வணங்கி வந்தனர். தற்காலத்தில் இந்து மதம் என சொல்லப்படுகின்ற எல்லா தெய்வங்களும், புராணங்களும், இதிகாசங்களும், சாதி ஏற்றத்தாழ்வை வலியுறுத்துகிற மனுதர்மம் உட்பட அனைத்தும் ஆரியர்களினால் புகுத்தபட்டவை. இதற்கு ஒரே நோக்கம். திராவிடர்களை அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்பதே.
இன்றைய பெரும்பான்மையான திராவிடர்கள் ஆரிய அடிமைகளாக இருக்கிறார்கள். அதிலும் ஆரியனுக்கு அடிமையாயிருப்பதையே பெருமையாக எண்ணுகிற சாதிகளும் உண்டு. தற்போதைய சூழ்நிலையில் இந்து தீவிரவாதிகள் உயர்சாதி இந்துக்களை கிறிஸ்தவ இஸ்லாமிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒன்று திரட்ட முயற்சி செய்கிறார்கள்.
இந்து உயர்சாதியாக கருதுகிற முதலியார், செட்டியார், ரெட்டியார், கவுண்டர், வன்னியர், தேவர், நாடார் போன்ற சாதி மக்கள் தாழ்த்தப்பட்டவர்களை எப்படி கருதுகிறார்களோ அப்படியே ஆரிய பார்ப்பனர்கள் இந்த உயர் சாதி இத்துக்களை கருதுகிறார்கள். இதை மறுப்பார்கள் என்றால் இந்த சாதி இந்துக்களை சங்கர மடத்திற்கு மடாதிபதிகாளாக நியமனம் செய்வார்களா? இந்த சாதி இந்துக்களின் கால்களை பார்ப்பனன் கழுவி பாத பூஜை செய்வானா? அல்லது இந்த உயர் சாதி இந்துக்கள் கோவில் கருவறையில் புகுந்து அங்குள்ள சாமி சிலகளை தொட முடியுமா?
தொட்டால் என்ன நடக்கும் கோவில் சிலை தீட்டு ஆனதினால் அதை கழுவி பரிகார பூஜை செய்வார்கள். காரணம் பார்ப்பனர்கள் தவிர மற்ற அனைவரும் தீட்டு ஆனவர்களே. இதுதான் இந்து மதம். இந்திய அரசியல் சாசன ஆசான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள், இந்து மதம் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சமூக நீதியை மறுதலிக்கிறது என்றார்.
கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்த ஆரிய அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்து விட்டவர்கள். ஆகவே இவர்களை எந்த வகையிலும் ஆரிய வர்க்கம் அடிமைபடுத்த முடியவில்லை என்ற ஆத்திரமே தற்காலத்தில் தாய் மதத்திற்கு திரும்ப சொல்லி கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களை கட்டாய மதம் மாற்றம் செய்து வருகிறார்கள்.
தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும் என்றால் பார்ப்பனர்களை தவிர எல்லா இந்துக்களுமே பார்ப்பன அடிமை மதமாகிய இந்து மதத்திலிருந்து திராவிட மதத்திற்கு திரும்ப வேண்டும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த சமயத்தில் டில்லியில் நடைபெற்ற திரைபட விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமலஹாசன் அவர்கள் பாபரி மசூதியை இடித்ததற்கு காரணம் என்னவென்றால் அங்கே இந்து கோவில் இருந்ததாக சொல்லுகிறார்கள்,
நான் கேட்கிறேன் எல்லாமே அது இருந்த இடத்திற்கு போக வேண்டும் என்றால் இங்கிருந்து ஒரு கூட்டம் கைபர், போலன் கணவாய் வழியாக மேற்கு ஐரோப்பாவிற்கு திரும்பி செல்ல வேண்டும், அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்களா? என்று கேட்டார்,
நாமும் இதையே தான் கேட்கிறோம்.
THANKS TO :- Bro. David Dhanraj
www.facebook.com/david.dhanraj.3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|