மரணித்தால் மரம்!
Sat Mar 28, 2015 9:12 am
மரணித்தால் மரம்!
‘‘உங்கள் மரணத்துக்குப் பின் உங்கள் உடலை ஒரு சில நாட்களில் புழுக்கள் தின்ன வேண்டுமா அல்லது காலாகாலத்துக்கும் அணில்களும் பறவைகளும் உண்ண வேண்டுமா?” என்று கேட்கின்றனர் அமெரிக்காவைச் சேர்ந்த மோலின் சகோதரர்கள். இவர்கள் ‘பயோஸ் அர்ன்’ என்ற மனிதனை மரமாக்கும் திட்டத்தின் இயக்குநர்கள். ஜெரார்டு என்பவர்தான் இதைத் தொடங்கிவைத்தவர்.
1997-ல் ‘மரணத்துக்குப் பின் என்ன ஆவோம்?’ என்று யோசித்த ஜெரார்டு, “மறுபிறவி என்ற ஒன்று இருந்தாலும், அது நம் விருப்பப்படி நிகழப்போவது இல்லையே. எனவே இறந்த பின் ஏன் மரம் ஆகக் கூடாது?’ என்று யோசித்தவரின் மூளையில் உதித்த திட்டம்தான் ‘பயோஸ் அர்ன்’.
விதைகள் மீது தண்ணீர் ஊற்றினால், சில நாட்களில் முளைக்கத் தொடங்கி சில வாரங்களில் அதன் வேர்கள் முட்டி, கீழிருக்கும் மனித அஸ்தியில் அடர்த்தியாக வேர் பரப்பிவிடுமாம். அதன் பின்னர் அதைப் பாதுகாப்பான பகுதியில் நட்டு பராமரித்து வந்தால், நீங்கள் மரமாக வளரத் தொடங்கிவிடுவீர்கள் என்கிறார்கள் இவர்கள்.
‘உங்கள் மரணத்துக்குப் பிறகு என்ன மரமாக வேண்டும் என்று இப்போதே முடிவு செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்லும் ஜெரார்ட், நாம் எந்த மரத்தை செலெக்ட் செய்கிறோமோ, அதை நம் பெயரில் பதிவு செய்துவைத்துவிடுகிறார். நாம் இறந்த பிறகு, நம் குடும்பத்தார் நம் அஸ்தியைக் கொடுத்தால் போதும். இந்தக் குடுவையின் விலை 150 டாலர்.
அதுசரி, ‘உன்னை வெட்டிப் புதைச்சு, அது மேல தென்னங் கன்று நட்டுப்புடுவேன்’னு சண்டையில சவால் விடுறது தானே நம்ம ஊர் ஸ்டைல்!
‘‘உங்கள் மரணத்துக்குப் பின் உங்கள் உடலை ஒரு சில நாட்களில் புழுக்கள் தின்ன வேண்டுமா அல்லது காலாகாலத்துக்கும் அணில்களும் பறவைகளும் உண்ண வேண்டுமா?” என்று கேட்கின்றனர் அமெரிக்காவைச் சேர்ந்த மோலின் சகோதரர்கள். இவர்கள் ‘பயோஸ் அர்ன்’ என்ற மனிதனை மரமாக்கும் திட்டத்தின் இயக்குநர்கள். ஜெரார்டு என்பவர்தான் இதைத் தொடங்கிவைத்தவர்.
1997-ல் ‘மரணத்துக்குப் பின் என்ன ஆவோம்?’ என்று யோசித்த ஜெரார்டு, “மறுபிறவி என்ற ஒன்று இருந்தாலும், அது நம் விருப்பப்படி நிகழப்போவது இல்லையே. எனவே இறந்த பின் ஏன் மரம் ஆகக் கூடாது?’ என்று யோசித்தவரின் மூளையில் உதித்த திட்டம்தான் ‘பயோஸ் அர்ன்’.
அர்ன் என்றால் மனிதர்களின் அஸ்தியை வைக்கும் குடுவை. இவர்களின் இந்த பயோஸ் அர்ன், உருளை வடிவில் சூழலுக்குக் கேடு விளைவிக்காத கடினமான பேப்பரினால் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று அடுக்குகள்கொண்ட இந்தக் குடுவையில் விதைகள் உடனடியாக முளைக்கும் வகையிலான காரை மண், அதற்குக் கீழே இயற்கை உரம் சிறிதளவு, அதற்குக் கீழே மனித அஸ்தி நிரப்பப்படுகிறது.
விதைகள் மீது தண்ணீர் ஊற்றினால், சில நாட்களில் முளைக்கத் தொடங்கி சில வாரங்களில் அதன் வேர்கள் முட்டி, கீழிருக்கும் மனித அஸ்தியில் அடர்த்தியாக வேர் பரப்பிவிடுமாம். அதன் பின்னர் அதைப் பாதுகாப்பான பகுதியில் நட்டு பராமரித்து வந்தால், நீங்கள் மரமாக வளரத் தொடங்கிவிடுவீர்கள் என்கிறார்கள் இவர்கள்.
‘உங்கள் மரணத்துக்குப் பிறகு என்ன மரமாக வேண்டும் என்று இப்போதே முடிவு செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்லும் ஜெரார்ட், நாம் எந்த மரத்தை செலெக்ட் செய்கிறோமோ, அதை நம் பெயரில் பதிவு செய்துவைத்துவிடுகிறார். நாம் இறந்த பிறகு, நம் குடும்பத்தார் நம் அஸ்தியைக் கொடுத்தால் போதும். இந்தக் குடுவையின் விலை 150 டாலர்.
அதுசரி, ‘உன்னை வெட்டிப் புதைச்சு, அது மேல தென்னங் கன்று நட்டுப்புடுவேன்’னு சண்டையில சவால் விடுறது தானே நம்ம ஊர் ஸ்டைல்!
- செந்தில்குமார்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|