தைரியசாலி...!
Thu Mar 26, 2015 7:31 pm
ஒரு பெரிய பாறையின் மீது செம்மறி ஆடு அமர்ந்து
அசைபோட்டுக்கொண்டு இருந்தது ..!அந்த சமயம்
ஒரு சிங்கம் அதன் முன் தோன்றியது
செம்மறி ஆடு கொஞ்சமும் பயப்பிட வில்லை
அசைபோட்டுக்கொண்டு இருந்தது ..!
ஆய் நான் ராஜா வந்திருக்கிறேன் பயம் இல்லாமல்
அசைபோட்டுக்கொண்டு இருக்கிறாயே ..?
என்ன அசை போடுகிறாய் …?
நான் இந்த மலையை கொஞ்சம் கொஞ்சாமாக
அசைபோட்டுக்கொண்டு இருக்கிறேன் ..என்றது
பாறையை மென்று விழுங்கியதும் உன்னையும் விழுங்குவேன் என்று உரத்த தொனியில் கூற
சிங்கம் ஓட்டம் பிடித்தது
தைரியம் இருந்தால் எந்த கஷ்டத்திலும் ஒருவன் மீளுவான் கோழைதான் சாவான்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|