தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம் Empty இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்

Sun Mar 08, 2015 10:08 pm
இந்த அம்மாக்கள் 
தோசைக்கல்லில் 
நிலவு வார்ப்பவர்கள் !
===================
அப்பா கட்டிய 
வீடாயிருந்தாலும் 
அது எமக்கு 
அம்மா வீடுதான் !
===================
அடுப்படியே 
அம்மாவின் 
அலுவலகம் ! 
அன்பு மட்டுமே 
எதிர்பார்க்கும் சம்பளம் !
===================
பிள்ளைகள் 
வெளியூரில் 
பணியிலிருக்கும் 
ஒரு வீட்டில், 
பக்கத்துவீட்டுக் குழந்தைகள் 
சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் !
===================
அப்பா வாசம் 
வெயில் வாசம் ! 
அம்மா வாசம் 
நிலா வாசம் ! 
எமது 
சமையலறையெங்கும் 
நிலா வாசம் !
===================
எமக்குக் 
காய்ச்சல் வந்தால் 
மருந்து தேவையில்லை ! 
அடிக்கடி வந்து 
தொட்டுப்பார்க்கும் 
அம்மாவின் கையே 
போதுமானது !
===================
இவ்வளவு 
வயதாகியும் 
புதுச்சட்டைக்கு 
மஞ்சள்வைத்து 
வருபவனைக் 
கேலி செய்யும் 
நண்பர்களே .......... 
அது, 
அவன் வைத்த 
மஞ்சள் அல்ல ! 
அவன், 
அம்மா வைத்த 
மஞ்சள் !
===================
பிள்ளைகள் 
ஊரிலிருந்து 
கொண்டு வரும் 
பயணப்பையில் 
இந்த அம்மாக்கள் 
எதிர்பார்ப்பது 
இன்னுங்கொஞ்சம் 
அழுக்குத்துணிகளை !
===================
மகனுக்கான 
அப்பாவின் 
கோபத்திற்கெல்லாம் 
அம்மாவின் 
முதுகுதான் 
கிழக்கு !
===================
டைப்பாய்டு வந்து 
படுத்த அம்மாவுக்கு 
சமைக்க முடியவில்லையே 
என்கிற கவலை !
===================
இங்கே பலரது 
அகராதியில் 
வீடு என்கிற 
சொல்லுக்கு நேரே 
அம்மா என்று 
உள்ளது !
===================
புகைவண்டியில் 
பிதுங்கி வழியும் 
பெருங்கூட்டத்தில் 
ஊர் போய்ச்சேர 
ஒற்றைக்காலில் 
நின்றுகொண்டு 
எட்டு மணிநேரம் 
ஒருவன் 
பயணிக்க முடிவதன் 
மூன்றெழுத்துக் காரணம், 
அம்மா !
===================
அம்மா தாயே 
என்று 
முதன் முதலில் 
பிச்சை கேட்டவன் 
உளவியல் மேதைகளுக்கெல்லாம் 
ஆசான் !
===================
எந்தப் பொய் 
சொல்லியும் 
அம்மாக்களை 
ஏமாற்றிவிடமுடியும் 
சாப்பிட்டு விட்டேன் 
என்கிற 
அந்த ஒரு பொய்யைத்தவிர !
===================
அத்தி பூத்தாற்போல 
அப்பனும் 
மகனும் 
பேசிச்சிரித்தால் 
விழாத தூசிக்கு 
கண்கள் தேய்த்துக்கொண்டே 
அப்பால் நகர்கிறார்கள் 
அம்மாக்கள் !
===================
வெளியூர் செல்லும் 
பிள்ளைகளின் 
பயணப்பைக்குள் 
பிரியங்களைத் 
திணித்து வைப்பவர்கள் 
இந்த அம்மாக்கள் !
===================
பீஸ் கட்ட 
பணமென்றால் 
பிள்ளைகள் 
அம்மாவைத்தான் 
நாடுகின்றன ........ 
காரணம், 
எப்படியும் 
வாங்கிக் கொடுத்துவிடுவாள் ! 
அல்லது 
எடுத்துக் கொடுத்துவிட்டு 
திட்டு வாங்கிக்கொள்வாள் !
===================
வீட்டுக்குள் 
அப்பாவும் 
இருந்தாலும் 
அம்மா என்றுதான் 
கதவு தட்டுகிறோம் !
===================
அம்மாக்களைப் 
பற்றி 
எழுதப்பட்ட 
எல்லா 
கவிதைகளிலும் 
குறைந்தபட்சம் 
இரண்டு சொட்டுக்கண்ணீர் 
ஈரம் உலராமல் !
===================
அகில உலக 
அம்மாக்களின் 
தேசிய முழக்கம் 
இதுதான் .......... 
" எம்புள்ள 
பசி தாங்காது! "
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum