தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வருமான வரி சலுகை பெறுவோம்! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வருமான வரி சலுகை பெறுவோம்! Empty வருமான வரி சலுகை பெறுவோம்!

Tue Feb 10, 2015 8:15 am
வருமான வரி சலுகை பெறுவோம்! Tax_2305106f
மார்ச் மாதம் நெருங்கி வரும்போதுதான் நமக்கு வருமான வரி குறித்த சிந்தனை வந்து சேர்கிறது. அதுவரையில் அது குறித்த எந்த யோசனையும் இல்லாமல் இருப்போம். கடைசியில் மார்ச் மாதம் சம்பளத்தில் மொத்தமான வரிப் பிடித்தம் செய்யப்படுகிறபோது மட்டும் வருத்தப்படுவோம்.
ஆனால் ஆண்டில் ஆரம்பத்திலேயே இதற்கு திட்டமிட்டால் வருமான வரி குறித்த கவலையில்லாமல் இருக்கலாம் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். சம்பாதித்த பணத்தை இப்படி வரியாக செலுத்துகிறோமே என்கிற வருத்தமும் வேண்டாம்.
இப்படி முன் கூட்டியே திட்டமிடுவதன் மூலம் அரசு அனுமதிக்கும் பல்வேறு வரிச் சேமிப்பு திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர்.
ஆனால் இதற்கு நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே திட்டமிடுதல் அவசியம். முன்னேற்பாடு இல்லாமல் கடைசி நேரத்தில் கண்ட வகைகளிலும் முதலீடு செய்வது பலன் தராது.
தவிர இந்த முதலீட்டுத் திட்டங்களை அவசரத்தில் தேர்வு செய்வதன் மூலம் அதன் பாதுகாப்பு, அதிலிருந்து கிடைக்கும் வருமானம், அதை எளிதில் பணமாக்கும் வாய்ப்பு மற்றும் அதற்கான செலவுகள் குறித்தெல்லாம் யோசிப்பதில்லை.
வரிச் சேமிப்புக்கு என்று நமது வருமானத்தை வளர்ச்சி இல்லாமல் முடக்குவதும் சரியான செயல்பாடு அல்ல.
அந்த வகையில் ஒரு தனிநபர் எந்த எந்த வகைகளில் வரிச் சலுகை பலன்களை அனுபவிக்க முடியும் என்று பல வருமான வரி தணிக்கையாளர்களிடம் (ஆடிட்டர்) பேசியதிலிருந்து பொதுவாக ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருப்பவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை.
மேலும் மூத்தக் குடிமக்கள் சிறப்புச் சலுகையாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் ரூ.3 லட்சம் வரையிலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் ரூ.5 லட்சம் வரையிலும் வருமான வரி கட்டத் தேவை இல்லை.
ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேற்படுகிறபோது வரி கட்ட வேண்டியிருக்கும். ஆனால் குறிப்பிட்ட முதலீடுகள் மற்றும் செலவுகளுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படுகிறது.
இதன்படி ரூ.2.50 லட்சத்துக்கும் மேற்படும் ஆண்டு வருமானத்தி லிருந்து ரூ.1.5 லட்சம் வரை வருமானத்துக்கு வரிச்சலுகை பெறலாம். அதை எந்தெந்த வகை களில் பெற முடியும் என்பதைப் பார்க்கலாம். பொதுவாக பிஎஃப் முதலீடு, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு பிரீமியம் செலுத்துவது வீட்டுக்கடனுக்கு செலுத்தும் வட்டி போன்றவற்றுக்கு வரிச் சலுகைகள் கிடைக்கும்.
மருத்துவக் காப்பீடு பிரீமியம்
மருத்துவக் காப்பீட்டுக்கு செலுத்தும் ஆண்டு பிரீமிய கட்டணத்துக்கு வரி சலுகை பெறலாம். ஒரு ஆண்டில் மருத்துவக் காப்பீடு பிரீமியத்துக்கு ரூ.15,000 வரை வரிச்சலுகை கிடைக்கிறது.
மூத்த குடிமக்களுக்கு ரூ.20,000 வரையிலான பிரீமியத்துக்கு வரிச் சலுகை பெறலாம். ப்ளோட்டர் பாலிசியில் மூத்தக் குடிமக்களை இணைந்திருந்தால் இதற்கு ரூ.20,000 வரை வரி சலுகை பெறலாம்.
வீட்டுக் கடனுக்கான வட்டி
வீட்டுக் கடன் வாங்கி திரும்பச் செலுத்தும் வட்டியில் ஒரு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வரி சலுகை உள்ளது. (அந்த வீட்டில் குடியிருந்தால் மட்டும்) ஆனால் வீட்டை வாடகைக்கு விட்டு, அதை வருமானமாகக் காட்டினால், திரும்ப செலுத்தும் முழு வட்டிக்கும் வரி சலுகை கிடைக்கும்.
கணவன் மனைவி இருவரும் வருமானம் ஈட்டும்பட்சத்தில் கூட்டாக வீட்டுக்கடன் வாங்கினால், இருவரது ஆண்டு வருமானத்திலிருந்தும் தனித்தனியே அசல் மற்றும் வட்டி வரி சலுகை பெற முடியும்.
வரிச்சலுகை முதலீடுகள்
சிலவகை முதலீடுகளை மேற் கொள்வதன் மூலமும் வரிச்சலுகை கிடைக்கும்.
குறிப்பாக நமது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் பிஎப் தொகைகூட ஒரு வகை முதலீடுதான். இதற்கு வரிச்சலுகை உண்டு. இந்த கணக்கில் கூடுதலாக பணத்தை செலுத்த வசதியும் உள்ளது.
நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே பணியாற்றும் நிறுவனத்தில் இது குறித்து சொல்லிவிட வேண்டும். இடையில் சேரவோ வெளியேறவோ முடியாது.
சுயதொழில் செய்பவர்கள், ஓய்வூதியம் அதிகமாக எதிர்பார்ப்பவர்கள் மற்றும் சம்பளத்தில் பிஎஃப் பிடித்தம் செய்யப்படாத பிரிவினர் பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மேலும் வங்கி வைப்பு நிதி போன்ற வழிகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கும் வரி சலுகை உள்ளது.
இதர முதலீடுகள்
அஞ்சலகங்களில் செய்யப்படும் தேசிய சேமிப்புப் பத்திரம். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உள்ள மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். தேசிய ஓய்வூதிய திட்டம். வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள் (இஎல்எஸ்எஸ்)
ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம்
பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதன்முறையாக முதலீடு செய்பவர்களுக்கு முதலீட்டுத் தொகையிலிருந்து 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.50,000 வரை வரிச்சலுகை கிடைக்கும். 80சி முதலீடு தவிர, கூடுதலாக இந்தச் சலுகை தரப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வரிச்சலுகை பெற ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
வீட்டு வாடகை
தற்போது குடியிருந்துவரும் வாடகை வீட்டுக்குத் தருகிற வாடகை தொகைக்கும் வரிவிலக்கு சலுகை உள்ளது.
ஆனால் மொத்த சம்பளத்திலிருந்து 10 சதவீத தொகை வாடகையாகத் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நகரம், நிறுவனத்திலிருந்து பெறும் வீட்டு வாடகை படியை பொறுத்துக் இதற்கான சலுகை கிடைக்கும்.
கல்விக் கடன்
மகன் அல்லது மகளுக்காக வாங்கிய உயர் கல்வி கடனுக்கான திரும்ப செலுத்தும் வட்டிக்கு வரிச் சலுகை உண்டு. மேலும் கடனைக் கட்டத் தொடங்கி, எட்டு ஆண்டு களுக்கு மட்டுமே இந்த வரி சலுகை கிடைக்கும்.
மருத்துவச் செலவுகள்
வருமான வரி செலுத்துபவர்களைச் சார்ந்துள்ள செயல்பட முடியாத அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கான மருத்துவச் செலவில் ரூ.50,000 (தீவிர பாதிப்புக்கு ரூ.1 லட்சம்) வரை வருமான வரி சலுகை கிடைக்கும். அதுபோல எய்ட்ஸ், புற்றுநோய், நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட தீவிர நோய்களுக்குச் செய்யப்படும் மருத்துவச் செலவுகளுக்கு அதிக பட்சமாக ரூ.40,000 வரை வரிச் சலுகை கிடைக்கும். மூத்த குடி மக்களுக்கு ரூ.60,000 வரை சலுகை கிடைக்கும்.
80சி முதலீட்டு வாய்ப்புகள்
இஎல்எஸ்எஸ் (ELSS Equity Linked Savings Schemes) அல்லது டாக்ஸ் சேவர் மியூச்சுவல் ஃபண்டுகள்.
மியூச்சுவல் ஃபண்டுகள் வழங்கும் ரிட்டையர்மென்ட் பெனிஃபிட் பென்ஷன் திட்டங்கள்
என்பிஎஸ் (NPS National Pension System)
இபிஎஃப் (EPF Employee Provident Fund)
பிபிஎஃப் (PPF Public Provident Fund)
வங்கி மற்றும் என்ஹெச்பி (NHB National Housing Bank) டெபாசிட்டுகள்
ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்
a. யூலிப் திட்டங்கள்
b. எண்டோவ்மென்ட் திட்டங்கள்
c. பென்ஷன் திட்டங்கள்
அஞ்சலகச் சேமிப்புகள்
a. 5 வருட டைம் டெபாசிட்
b. சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம்
c. என்எஸ்சி (NSC National Savings Certificate)
நீரை மகேந்திரன்
maheswaran.p@thehindutamil.co.in
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வருமான வரி சலுகை பெறுவோம்! Empty Re: வருமான வரி சலுகை பெறுவோம்!

Wed Mar 04, 2015 6:46 am
எப்படி தட்டி கேட்க முடியும்?

                                                                                வாசகர் பக்கம்
மீபத்தில் எங்கள் நிறுவனத்தில் நடப்பு நிதியாண்டுக்கான  (FY 2014-2015) வருமான வரி கணக்கிடல் ஆரம்பித்தது. அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிப்பு துவங்கியது முதல், உடன் பணியாற்றுபவர்கள் மெடிக்கல் பில் வாங்கவும், ரூம் அக்ரிமெண்ட் தயார் செய்யவும் துவங்கினர். அவர்கள் கூறிய அனைத்தும் என்னை ஆச்சரியப்பட வைத்தது.
வருமான வரி சலுகை பெறுவோம்! It
ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களிலும் இந்த மெடிக்கல் பில் விதி பொருந்துகிறது. நீங்கள் மெடிக்கல் பில் கொடுத்தால் உங்களுக்கு 15000 ரூபாய்க்கு (அதிகபட்ச வரம்பு)  வரி விலக்கு. அது உண்மையான பில்லாக இருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை, ஏனெனில் மெடிக்கல் ஸ்டோர்களில் இதற்கென்றே  தனியாக பில் புத்தகம் வைத்துள்ளனர்.  அவர்கள் 10% அல்லது 5% வாங்கிகொண்டு நமக்கு பில் தருகின்றனர்.

இந்த கமிஷன் அவர்கள் கட்டும் வரிக்காவாம். அதாவது நமக்கு 1000 ரூபாய் பில்லுக்கு அவர்கள் 100 ரூபாய் கமிஷன் வாங்குகிறார்கள். இந்த கமிஷன் தொகையில் ஒரு பங்கை அவர்கள் அரசிற்கு வரியாக கட்டுவார்களாம்.  

மற்றுமொன்று, HRA ( HOUSE RENT ALLOWANCE ) எனப்படும் ஹவுஸ் ரெண்ட் அலவென்ஸ், இதற்கு தேவையான ஆவணங்கள் ரெண்ட் அக்ரிமெண்ட் ( அரசின் முத்திரை தாளில் பதியப்பட வேண்டியது), மற்றும் ரெண்ட் ரெசிப்ட் ( வீட்டு உரிமையாளரின் கையெழுத்து ரெவென்யூ ஸ்டாம்புடன்).

இதற்கும் எளிய நடைமுறைகள். ரெண்ட் அக்ரிமெண்ட்டுகள் எளிதாக பதியலாம். இதற்கென்றே xerox கடைகளும், Fancy ஸ்டோர்களும் உள்ளன. நீங்கள் ஏதாவது ஒரு முகவரி மட்டும் கொடுத்தால் போதுமானது. உங்களுக்கு வேண்டிய அட்வான்ஸ் மற்றும் ரெண்ட் உடன் கூடிய ரெண்ட் அக்ரிமெண்ட் ( அரசின் முத்திரை தாளில் பதியப்பட்டது ) கிடைத்துவிடும்.  இதில் உங்கள் கையொப்பமும் வீட்டு உரிமையாளரின் கையொப்பமும் இட்டால் ரெண்ட் அக்ரிமெண்ட் ரெடி.  

பின் குறிப்பு : இங்கே வீட்டு உரிமையாரின் முகவரியும் கையொப்பமும் உங்கள் விருப்பம், நீங்கள் 'விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு...!' என்று கூட போடலாம்.

அதன் பின் ரெண்ட் ரெசிப்ட், இங்கும் அதே உரிமையாளரின் முகவரியும் கையொப்பமும் ரெவென்யு ஸ்டாம்புடன்).  

இந்த இரண்டையும் வைத்து நீங்கள் 1,00,000 ரூபாய் வரை வரி சலுகை பெறலாம். அதற்கு மேலும் பெற வழிகள் உள்ளன.  இந்த வழிமுறைகள் அனைத்தும் அனைவரும் அறிந்ததே (  நான் என் நிறுவனத்தில் கண்டது ). இவை அனைத்தும் நிறுவனத்தின் ஆடிட்டர் ஒப்பதுலுடன் அரசுக்கு சமர்பிக்கப்படுகின்றன. அரசும் இதனை ஏற்றுகொள்கிறது. 

இதற்கு எதற்கு வரி விலக்கு என்று பெயர் ? 

பணிக்கு புதிதாய் சேர்ந்த எனக்கே இவ்வளவு விவரங்கள் அறியப்படும்பொழுது,  இது அதிகாரிகள் அறியாததா? 

இங்கே பல கேள்விகள் எழுகின்றன.

1. அரசை ஏமாற்ற மக்கள் போலி மெடிக்கல் பில் சமர்ப்பிக்கின்றபோது,   அரசு அதிகாரிகள், எம். எல். ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் மோசடியை எப்படி தட்டி கேட்க முடியும்?

2. போலி பில் தரும் மெடிக்கல் ஸ்டோர்கள் அரசுக்கு வரி செலுத்துவர்களா?

3. ஆடிட்டர்கள் இதனை அறியாமல் ஒப்புதல் செய்கிறார்களா?

ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் பார்த்த திரைப்படம் "சதுரங்க வேட்டை" யில் நாயகன் கூறுவார், " குற்ற உணர்ச்சி இல்லாம செய்யற  எந்த தப்பும் தப்பே இல்லே". 

கே. பிரபு 
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum