பணியிடத்தில் தேவை… படிப்படியான முன்னேற்றம்!
Sat Jan 03, 2015 8:11 am
கங்காதர் அப்படி ஓர் அதிர்ஷ்டம் தனக்குக் கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் சேர்ந்த மூன்று வருடத்தில் டாப் போஸ்ட்டை அடைந்து விட்டார். குறுகிய காலத்தில் ஒரே தாவலில் பெரிய பதவியில் போய் உட்கார்ந்ததை நினைத்து அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
ஆனால், அந்த மகிழ்ச்சி சில வாரம்கூட நிலைக்கவில்லை. டாப் பதவிக்கான பொறுப்பு மிக அதிகமாக இருந்தது. அத்தனைப் பொறுப்புகளையும் நல்லபடியாக செய்து முடிக்க, அவர் பெரும்பாடுபட வேண்டியிருந்தது. சில வாரங்களுக்குள் ஏன்தான் இந்தப் பதவிக்கு வந்தோமோ என்று நினைத்து வருந்தத் தொடங்கினார். ஒரு வேலையில் படிப்படியாக பதவி உயர்வு பெற்று வந்திருந்தால், எல்லா வேலைகளிலும் உள்ள நெளிவுசுளிவுகளை தெரிந்துகொண்டு வந்திருக்கலாம். அப்போது தனக்கு அனுபவமும் மன தைரியமும் கிடைத்திருக்குமே என்று நினைத்தார்.
வேலைக்குச் செல்பவர்கள் அலுவலகங்களில் இருக்கும் ஒவ்வொரு நிலையிலும் எப்படி தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும், அந்தந்த நிலைகளில் ஒரு பணியாளர் என்ன செய்ய வேண்டும் என எம்சிஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவின் மேலாளர் ந.பத்மலட்சுமியிடம் கேட்டோம். அவர் சொன்ன விஷயங்கள் இங்கே உங்களுக்காக…
நிலை 1 பரிசோதனைக் காலம் (வயது 22-25 வரை)
இந்த வயதினர் முதன் முதலாக வேலைக்குச் சேர்ந்திருப்பார்கள். பெற்றோர்கள், உறவினர் கள், நண்பர்களின் வழிகாட்டுதலில் நிறுவனத்தை தேர்வு செய்திருப்பார்கள். பணிச் சூழல் என்பது இந்த நிலையில் அவர்களுக்குப் புதிதாகவே இருக்கும். சேர்ந்திருக்கும் வேலை பிடிக்கவில்லை எனில், மற்றொரு வேலையைத் தேடும் மனநிலையே இவர்களுக்கு இருக்கும்.
ஆனால், இந்த நிலையை ஒருவர் சாதுரியமாகக் கடந்துவிட்டால், எதிர்கால வாழ்க்கை உறுதியாகவும், எளிதில் சமாளிக்கக்கூடிய வகையிலும் அமைந்துவிடும். இது ஒரு பரிசோதனைக் காலம் என்பதால் நிறைய பொறுமை தேவை.
இந்த நிலையில் பின்பற்ற வேண்டியவை!
தான் சேர்ந்திருக்கும் அலுவலகத்தில் உள்ள சீனியர்களிடம் வேலையைக் கேட்டுப் பெற்று அதை உத்வேகத்துடன் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்.
படிப்பு என்கிற விஷயத்தைக் கல்லூரியுடன் நிறுத்திக் கொள்ளாமல், இந்த நிலையில் வேலைக்குத் தொடர்புள்ள படிப்புகளை மேலும் படிக்க ஆர்வம் காட்ட வேண்டும்.
தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது, அதைத் திருத்திக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நிறுவனம் குறித்தும், சக பணியாளர்கள் குறித்தும் குறைசொல்லக் கூடாது.
வேலை வரட்டும் என்று காத்திருக்காமல், தானே முன்வந்து வேலையை எடுத்துச் செய்பவராக இருக்க வேண்டும்.
நிலை 2 நிலைநிறுத்திக் கொள்ளும் காலம் (26-35 வயது வரை)
முதல் நிலையில் தன்னைச் சரியாகப் பொருத்திக் கொண்டவர்களுக்கே இந்த இரண்டாம் நிலையானது வசப்படும். இந்த நிலையில் வேலைக்குச் சேர்ந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் உங்களின் மீதும், உங்களின் பணியின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையால் நிறுவனமானது உங்களுக்கு உயர்பதவியை வழங்கி இருக்கும்.
பொதுவாகவே, தனக்கென்று ஒரு தனி இடத்தைத் தக்கவைத்துக் கொள்பவரே உயர் பதவிக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள் என்பதைப் புரிந்துகொள்ள தவறவிடக்கூடாது.
இந்த நிலையில் பின்பற்ற வேண்டியவை!
தன் மீதான தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
முதல் நிலையைவிட துல்லியமாக, அதேசமயத்தில் அசுர வேகத்தில் வேலை செய்ய வேண்டும்.
பணியிடத்தில் உள்ள வலுவான வேலைகளை முன்வந்து எடுத்துச் செய்யும் பக்குவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
தனக்கான பணி என்ன, தான் விடுப்பில் போகும்போது அந்தப் பணியானது பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும், வேலையை எளிமையாக்க என்ன செய்யலாம் என்கிற மாதிரியான திட்ட வரையறைகளைத் தீர்மானித்திருக்க வேண்டும். இந்தத் திட்டத்தைத் தங்களின் உயர் அதிகாரியிடம் சமர்ப்பிப்பதிலும் அல்லது தெரியப்படுத்துவதிலும் தவறில்லை.
நிலை 3 நடுநிலைக் காலம்(36-48 வரை)
இரண்டாவது நிலையைக் கடந்தவர்கள், அந்த நிலையில் தான் செய்த அசுர வேக பணியை இந்த நிலையில் இருமடங்காக்கியிருக்க வேண்டியது அவசியம். ஆனால், பணிச் சூழலிலும், பொதுவாழ்க்கையிலும் பல்வேறு பிரச்னைகள் இந்த நிலையில் இருப்பவர்களைப் பாடாய்ப்படுத்தும். அதையும் மீறி சாதித்துக் காட்டுவதுதான் இவர்களுக்கு முன் இருக்கும் பெரிய சவால்.
இந்த நிலையில் செய்ய வேண்டியது!
தான் கற்றுக்கொள்ள அதிகமில்லை என்றாலும், தனக்குக் கீழ் இருக்கும் பணியாளர்களுக்கு வேலை களைக் கற்றுக்கொடுத்து தனது மதிப்பை நிலைநாட்ட வேண்டும்.
இந்த நிலையில்கூட சிறு தவறும் செய்யாமல் இருப்பது அவசியம். அப்படி செய்தால், அடுத்தகட்ட முன்னேற்றங்களை நீங்கள் இழக்க வேண்டிய சூழல் உருவாகும்.
தான் முன்வைக்கும் கருத்துகளில் தெளிவும், அதை நடைமுறைப்படுத்துவதில் வேகத்துடனும் செயல்பட வேண்டும்.நிலை 4 தலைமை நிலை(49-58 வரை)
இதுநாள்வரை பட்ட கஷ்டங்களுக் கெல்லாம் இந்த நிலைதான் பலன் தரக்கூடியதாக இருக்கும். இந்த நிலையில் இருப்பவர்களால்தான், தான் கடந்துவந்த பாதையில் பயணித்து வருபவர்களின் மனநிலையைக் கனகச்சிதமாகப் புரிந்துகொண்டு அவர்களைச் சிறப்பாக வழிநடத்த முடியும்.
இந்த காலகட்டத்துக்கு முன்பே ஒரு சிலர் தங்களின் அலுவலக வாழ்க்கையை நிறைவு செய்து கொள்கிறார்கள். ஆனால், மிகச் சிலரே தங்களைப் புனரமைத்துக் கொண்டு வேலையில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்தி, மேலும் பல முன்னேற்றங் களைக் காண்கிறார்கள்.
இந்த நிலையில் பின்பற்ற வேண்டியவை!
பணிச் சூழலில் இருக்கும் அனைத்து விஷயங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
ஒரு முடிவை எடுக்கும் முன், அது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எந்த வகையில் துணை நிற்கும் என்பதைப் பல்வேறு கண்ணோட்டத்தில் ஆராய வேண்டும்.
தான் வாழ்ந்து வந்த வழித்தடங்களில் இருப்பவர் களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
பிறர் தன்னை முன்னுதாரணமாக்கிக் கொள்ளும் அளவுக்கு உழைப்பில் உறுதி கொண்டவராக இருக்க வேண்டும்” என்று சொல்லி முடித்தார் பத்மலட்சுமி.
ஆக, இந்த நான்கு நிலைகளையும் சரியாக கடந்து வருபவர்களே வாழ்க்கையின் லட்சியப் பதவிகளை அடைந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வார்கள்!
ஆனால், அந்த மகிழ்ச்சி சில வாரம்கூட நிலைக்கவில்லை. டாப் பதவிக்கான பொறுப்பு மிக அதிகமாக இருந்தது. அத்தனைப் பொறுப்புகளையும் நல்லபடியாக செய்து முடிக்க, அவர் பெரும்பாடுபட வேண்டியிருந்தது. சில வாரங்களுக்குள் ஏன்தான் இந்தப் பதவிக்கு வந்தோமோ என்று நினைத்து வருந்தத் தொடங்கினார். ஒரு வேலையில் படிப்படியாக பதவி உயர்வு பெற்று வந்திருந்தால், எல்லா வேலைகளிலும் உள்ள நெளிவுசுளிவுகளை தெரிந்துகொண்டு வந்திருக்கலாம். அப்போது தனக்கு அனுபவமும் மன தைரியமும் கிடைத்திருக்குமே என்று நினைத்தார்.
வேலைக்குச் செல்பவர்கள் அலுவலகங்களில் இருக்கும் ஒவ்வொரு நிலையிலும் எப்படி தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும், அந்தந்த நிலைகளில் ஒரு பணியாளர் என்ன செய்ய வேண்டும் என எம்சிஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவின் மேலாளர் ந.பத்மலட்சுமியிடம் கேட்டோம். அவர் சொன்ன விஷயங்கள் இங்கே உங்களுக்காக…
நிலை 1 பரிசோதனைக் காலம் (வயது 22-25 வரை)
இந்த வயதினர் முதன் முதலாக வேலைக்குச் சேர்ந்திருப்பார்கள். பெற்றோர்கள், உறவினர் கள், நண்பர்களின் வழிகாட்டுதலில் நிறுவனத்தை தேர்வு செய்திருப்பார்கள். பணிச் சூழல் என்பது இந்த நிலையில் அவர்களுக்குப் புதிதாகவே இருக்கும். சேர்ந்திருக்கும் வேலை பிடிக்கவில்லை எனில், மற்றொரு வேலையைத் தேடும் மனநிலையே இவர்களுக்கு இருக்கும்.
ஆனால், இந்த நிலையை ஒருவர் சாதுரியமாகக் கடந்துவிட்டால், எதிர்கால வாழ்க்கை உறுதியாகவும், எளிதில் சமாளிக்கக்கூடிய வகையிலும் அமைந்துவிடும். இது ஒரு பரிசோதனைக் காலம் என்பதால் நிறைய பொறுமை தேவை.
இந்த நிலையில் பின்பற்ற வேண்டியவை!
தான் சேர்ந்திருக்கும் அலுவலகத்தில் உள்ள சீனியர்களிடம் வேலையைக் கேட்டுப் பெற்று அதை உத்வேகத்துடன் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்.
படிப்பு என்கிற விஷயத்தைக் கல்லூரியுடன் நிறுத்திக் கொள்ளாமல், இந்த நிலையில் வேலைக்குத் தொடர்புள்ள படிப்புகளை மேலும் படிக்க ஆர்வம் காட்ட வேண்டும்.
தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது, அதைத் திருத்திக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நிறுவனம் குறித்தும், சக பணியாளர்கள் குறித்தும் குறைசொல்லக் கூடாது.
வேலை வரட்டும் என்று காத்திருக்காமல், தானே முன்வந்து வேலையை எடுத்துச் செய்பவராக இருக்க வேண்டும்.
நிலை 2 நிலைநிறுத்திக் கொள்ளும் காலம் (26-35 வயது வரை)
முதல் நிலையில் தன்னைச் சரியாகப் பொருத்திக் கொண்டவர்களுக்கே இந்த இரண்டாம் நிலையானது வசப்படும். இந்த நிலையில் வேலைக்குச் சேர்ந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் உங்களின் மீதும், உங்களின் பணியின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையால் நிறுவனமானது உங்களுக்கு உயர்பதவியை வழங்கி இருக்கும்.
பொதுவாகவே, தனக்கென்று ஒரு தனி இடத்தைத் தக்கவைத்துக் கொள்பவரே உயர் பதவிக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள் என்பதைப் புரிந்துகொள்ள தவறவிடக்கூடாது.
இந்த நிலையில் பின்பற்ற வேண்டியவை!
தன் மீதான தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
முதல் நிலையைவிட துல்லியமாக, அதேசமயத்தில் அசுர வேகத்தில் வேலை செய்ய வேண்டும்.
பணியிடத்தில் உள்ள வலுவான வேலைகளை முன்வந்து எடுத்துச் செய்யும் பக்குவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
தனக்கான பணி என்ன, தான் விடுப்பில் போகும்போது அந்தப் பணியானது பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும், வேலையை எளிமையாக்க என்ன செய்யலாம் என்கிற மாதிரியான திட்ட வரையறைகளைத் தீர்மானித்திருக்க வேண்டும். இந்தத் திட்டத்தைத் தங்களின் உயர் அதிகாரியிடம் சமர்ப்பிப்பதிலும் அல்லது தெரியப்படுத்துவதிலும் தவறில்லை.
நிலை 3 நடுநிலைக் காலம்(36-48 வரை)
இரண்டாவது நிலையைக் கடந்தவர்கள், அந்த நிலையில் தான் செய்த அசுர வேக பணியை இந்த நிலையில் இருமடங்காக்கியிருக்க வேண்டியது அவசியம். ஆனால், பணிச் சூழலிலும், பொதுவாழ்க்கையிலும் பல்வேறு பிரச்னைகள் இந்த நிலையில் இருப்பவர்களைப் பாடாய்ப்படுத்தும். அதையும் மீறி சாதித்துக் காட்டுவதுதான் இவர்களுக்கு முன் இருக்கும் பெரிய சவால்.
இந்த நிலையில் செய்ய வேண்டியது!
தான் கற்றுக்கொள்ள அதிகமில்லை என்றாலும், தனக்குக் கீழ் இருக்கும் பணியாளர்களுக்கு வேலை களைக் கற்றுக்கொடுத்து தனது மதிப்பை நிலைநாட்ட வேண்டும்.
இந்த நிலையில்கூட சிறு தவறும் செய்யாமல் இருப்பது அவசியம். அப்படி செய்தால், அடுத்தகட்ட முன்னேற்றங்களை நீங்கள் இழக்க வேண்டிய சூழல் உருவாகும்.
தான் முன்வைக்கும் கருத்துகளில் தெளிவும், அதை நடைமுறைப்படுத்துவதில் வேகத்துடனும் செயல்பட வேண்டும்.நிலை 4 தலைமை நிலை(49-58 வரை)
இதுநாள்வரை பட்ட கஷ்டங்களுக் கெல்லாம் இந்த நிலைதான் பலன் தரக்கூடியதாக இருக்கும். இந்த நிலையில் இருப்பவர்களால்தான், தான் கடந்துவந்த பாதையில் பயணித்து வருபவர்களின் மனநிலையைக் கனகச்சிதமாகப் புரிந்துகொண்டு அவர்களைச் சிறப்பாக வழிநடத்த முடியும்.
இந்த காலகட்டத்துக்கு முன்பே ஒரு சிலர் தங்களின் அலுவலக வாழ்க்கையை நிறைவு செய்து கொள்கிறார்கள். ஆனால், மிகச் சிலரே தங்களைப் புனரமைத்துக் கொண்டு வேலையில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்தி, மேலும் பல முன்னேற்றங் களைக் காண்கிறார்கள்.
இந்த நிலையில் பின்பற்ற வேண்டியவை!
பணிச் சூழலில் இருக்கும் அனைத்து விஷயங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
ஒரு முடிவை எடுக்கும் முன், அது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எந்த வகையில் துணை நிற்கும் என்பதைப் பல்வேறு கண்ணோட்டத்தில் ஆராய வேண்டும்.
தான் வாழ்ந்து வந்த வழித்தடங்களில் இருப்பவர் களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
பிறர் தன்னை முன்னுதாரணமாக்கிக் கொள்ளும் அளவுக்கு உழைப்பில் உறுதி கொண்டவராக இருக்க வேண்டும்” என்று சொல்லி முடித்தார் பத்மலட்சுமி.
ஆக, இந்த நான்கு நிலைகளையும் சரியாக கடந்து வருபவர்களே வாழ்க்கையின் லட்சியப் பதவிகளை அடைந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வார்கள்!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|