தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
நான் வந்திருப்பது மதிப்பிற்குரிய ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நான் வந்திருப்பது மதிப்பிற்குரிய ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு Empty நான் வந்திருப்பது மதிப்பிற்குரிய ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு

Thu Nov 06, 2014 11:17 am
ஐ.ஏ.எஸ் தேர்வு முடிஞ்சு இண்டர்வ்யூ நடந்துக்கிட்டிருந்திச்சு. அப்போ தேர்வுக்கு வந்திருந்த நபரிடம்..இண்டர்வ்யூ குழுவினர் இப்படி கேள்வி கேட்டாங்க..

நீங்க எத்தனை படி ஏறி வந்தீங்க?

நான் எத்தனை படி இறங்கப் போறேனே..அத்தனை படி ஏறி வந்தேன் சார்.

அமாவாசை அன்னிக்கு, ஒரு காட்டிலே கறுப்பு தொப்பி, கண்ணாடி, கோட், சூட் போட்ட ஒரு கறுப்பு மனிதர், கறுப்பு நிறக் காரை100 கி.மீ வேகத்தில் ஓட்டிக்கிட்டு வந்துக்கிட்டிருந்தாரு. அந்தக் காரோட ஹெட் லைட் எரியலை. சாலையிலும் விளக்கும் எதுவும் எரியலை. அப்போ திடீர்ன்னு கறுப்புப் பூனை ஒண்ணு ரோட்டைக் கிராஸ் செஞ்சுச்சு. ஆனாலும் அவர் லாவகமா அதன் மேலே இடிக்காம காரை ஓட்டிக்கிட்டுப் போனாரு? எப்படி?

அது பகல் வேளை சார். அதான் தெருவிளக்கு எதுவும் எரியலை. காரோட ஹெட் லைட்டும் எரியலை. கறுப்பு கண்ணாடி போட்டிருந்தாலும் அவராலே தெளிவா சாலையைப் பாத்து ஓட்ட முடிஞ்சுது.


வெரி குட்..அந்த வாட்டர் ஃபில்டர்லேர்ந்து ஒரு கிளாஸ் வாட்டர் கொண்டு வந்து கொடுக்கறீங்களா?


உடனே இண்டர்வியூக்கு வந்தவர் டேபிள் மேல் இருந்த காலிங் பெல்லை அழுத்தி...ப்யூனை வரவழைச்சு...அவருக்கு ஒரு கிளாஸ் வாட்டர் கொண்டு வந்து கொடுங்கன்னு சொன்னாரு. ப்யூன் தண்ணீரைக் கொடுத்துட்டுப் போனதும்,


அதிகாரிங்க ஏன் அப்படி செஞ்சீங்க..நீங்களே எழுந்து போயி தண்ணீரைக் கொண்டு வந்திருக்கலாமே? நாங்க உங்களைத் தானே கொண்டு வரச் சொன்னோம்?ன்னு கேட்டாங்க.


அதுக்கு அவர்,”நான் வந்திருப்பது மதிப்பிற்குரிய ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு. ப்யூன் வேலைக்கு அல்ல. ஒரு ஐ.ஏ.எஸ் ஆபீசருக்கு தண்ணீர் தேவைப் பட்டால் என்ன செய்வாரோ அதைத்தான் நான் செஞ்சேன்”ன்னு சொன்னாரு.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நான் வந்திருப்பது மதிப்பிற்குரிய ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு Empty Re: நான் வந்திருப்பது மதிப்பிற்குரிய ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு

Fri Nov 07, 2014 2:51 pm
நான் வந்திருப்பது மதிப்பிற்குரிய ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு Interview_2184665f
நேர்முகத் தேர்வு தொடங்கவிருக்கிறது. உள்ளுக்குள் பதற்றம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாதபடி அமர்ந்திருக்கிறான் ஞானசேகர். சில நொடிகளுக்குப் பிறகு தேர்வாளர்களில் ஒருவர் பேசத் தொடங்குகிறார்.

தேர்வாளர் 1 – உங்க பெயர்?


ஞானசேகர் - ஞானசேகர் சார்.


தேர்வாளர் 1 – ஞானேஸ்வரா?


ஞானசேகர் - இல்லை. ஞானசேகர்.


தேர்வாளர் 2 – என்ன படிச்சிருக்கீங்க?


ஞானசேகர் – (தேர்வாளர்கள் கையில் தனது தன்விவரக் குறிப்பு இருப்பதைப் பார்த்து) - என்னுடைய சி.வி.யிலேயே அதைக் குறிப்பிட்டிருக்கேன் சார்.


தேர்வாளர் 2 – அதை உங்க வாயாலே ஒருமுறை சொல்லு​வீங்களா, மாட்டீங்களா?


ஞானசேகர் - நான் EEE படிச்சிருக்கேன் சார்.


தேர்வாளர் 1 – ECE-யா?


ஞானசேகர் - இல்லை சார். EEE


தேர்வாளர் 1 – நாங்க எந்த வேலைக்காக உங்களை இன்டர்வியூ செய்றோம்னு தெரியுமில்லையா?


ஞானசேகர் - நிச்சயம் தெரியும் சார்.


தேர்வாளர் 1 – இந்த வேலை சுலபமா செய்யக்கூடிய வேலை இல்லை.


ஞானசேகர் - தெரியும் சார்.


தேர்வாளர் 2 – தீர்மானங்களை உடனுக்குடன் எடுக்க வேண்டியிருக்கும்.


ஞானசேகர் - தெரியும் சார்.


தேர்வாளர் 1 – உங்களால் பிரஷருக்கு நடுவே வேலை செய்ய முடியுமா?


ஞானசேகர் - முடியும். சார், நான் ஒரு கதை சொல்லவா?


(தேர்வாளர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர். பிறகு அவர்களில் ஒருவர் ஞானசேகரைப் பார்த்து ‘சொல்லு’ என்பது போலக் கையசைக்கிறார்.)


ஞானசேகர் - மூன்று சின்ன கதாபாத்திரங்கள். முதலாவதில் கேரட். இரண்டாவதில் முட்டை. மூன்றாவதில் நன்கு வறுக்கப்பட்ட காப்பிக் கொட்டைகள்....


(விரிவாக இதைச் சொல்லி முடிக்க முழுமையாக இரண்டு நிமிடங்கள் தேவைப்படுகின்றன ஞானசேகருக்கு. இறுதியாக...)
ஞானசேகர் - நானும் காப்பிக் கொட்டைகள் மாதிரிதான் சார். ஒர்க் பிரஷர் போன்ற சோதனைகளுக்கு சுலபமாகத் தாக்குப் பிடிப்பேன்.
(நேர்முகத் தேர்வு தொடர்கிறது).


முணுமுணுப்பு


ஞானசேகரின் நேர்முகத் தேர்வு பற்றிக் கொஞ்சம் அலசலாமா? அவனுக்குக் குரல் மிகவும் மெலிந்திருக்க வேண்டும். அதனால்தான் இரண்டு தேர்வாளர்களுமே அவன் தொடக்கத்தில் கூறும் பதில்களை மீண்டும் கேட்டுத் தெளிவு பெறுகிறார்கள். நேர்முகத் தேர்வில் உங்கள் குரல் பளிச்சென்று இருக்க வேண்டும். அதிகார தொனி கூடாதுதான். அதற்காக முணுமுணுப்பதுபோல் இருக்கக் கூடாது. மிகவும் உற்றுக் கேட்டால்தான் உங்கள் பதிலைப் புரிந்து கொள்ள முடியும் என்றால், அது சந்தேகமில்லாமல் நீங்கள் தேர்வு செய்யப்படும் வாய்ப்பைக் குறைக்கும்.


Electrical and Electronics Engineering பிரிவை முடித்திருக்கிறார் ஞானசேகர். இதைக் குறிப்பிடும்போது ஒன்று அதை முழுவதுமாகக் குறிப்பிட வேண்டும். அல்லது குழப்பம் நேராதபடி, பலரும் குறிப்பிடுவதுபோல ‘ட்ரிபிள் ஈ’ என்று கூறியிருக்க வேண்டும். அப்போது குழப்பம் வந்திருக்காது.


தகவல் பரிமாற்றம் அல்ல


வேலையின் தன்மைகளைப் பற்றித் தேர்வாளர்கள் குறிப்பிடும்போது ‘தெரியும் சார்’ என்று மட்டுமே ஒவ்வொரு முறையும் ஞானசேகர் பதிலளிப்பது நல்ல வாய்ப்புகளை அவர் கோட்டைவிடுவதைக் காட்டுகிறது. ‘இது கடினமான வேலை, உடனடியாக தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் வேலை’ என்றெல்லாம் தேர்வாளர்கள் குறிப்பிடும்போது ஞானசேகர் ‘ரொம்ப சந்தோஷம் சார். எனக்கு இதுபோன்ற சவால்களை ஏற்றுக்கொள்ள மிகவும் பிடிக்கும்’ என்று கூறியிருக்க வேண்டும். ஏனென்றால் வேலை குறித்த இந்த விவரங்கள் அவருக்குத் தெரிந்திருக்கிறதா என்பது குறித்த தகவல் பரிமாற்றம் அல்ல இது. ‘வேலைக்கான இந்த இந்தத் தகுதிகள் உங்களுக்கு இருக்கிறதா?’ என்பதை மறைமுகமாகக் கேட்டு உறுதி செய்து கொள்ளும்படியான தகவல்கள் இவை.


நேர்முகத் தேர்வு என்பது கதை சொல்வதற்கான இடமல்ல. உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வது உங்களை செலக்ட் செய்துகொள்ள உதவும் என்று கருதினால்கூட, 30 நொடிகளுக்குத் தாண்டாமல் அதைக் கூறத் தெரிந்திருக்க வேண்டும்.


கதைச்சுருக்கம்


ஞானசேகர் கதை சொல்வதற்கான அனுமதியை தேர்வாளர்களிடம் கேட்பது உண்மை. ஆனால் தேர்வாளர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதையும், அவர்களில் ஒருவர் அரைகுறையாக மட்டுமே அனுமதி அளிப்பதையும் ஞானசேகர் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். உடல் மொழியை அறிந்து கொள்வது நேர்முகத் தேர்வுகளில் பெரிதும் உதவும்.


பொதுவாகக் கதையைக் கூற அனுமதி வாங்குவதைவிட ‘கேரட், காப்பிக்​ கொட்டை கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும் சார்’ என்று ஞானசேகர் கூறியிருக்கலாம். தேர்வாளர்கள் இருவருமே அதைக் கேட்டிருப்பதாக பதிலளித்தால், அந்தக் கதையை அவன் கூறுவதைத் தவிர்த்து முடிவுரையை மட்டும் பகிர்ந்து கொண்டிருக்கலாம். மாறாக அவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடிய கதையையே அவன் நீளமாக விவரித்தால், அது போரடிப்பதோடு ‘வேறு கேள்விகளை நாம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்தக் கதையைக் கூறும் உத்தியைக் கடைபிடிக்கிறானோ?’ என்ற எண்ணத்தையும் உண்டாக்கலாம். தவிர ‘தெரியாது. அது என்ன கதை?’ என்று தேர்வாளர்கள் கேட்டால் அப்போது இந்தக் கதையை (அப்போதும் சுருக்க மாகத்தான்) கூறினால் தப்பில்லை.


முழுக்கதை


உங்களுக்கு கேரட், முட்டை, காப்பிக் கொட்டை கதை தெரியும்தானே? தெரியாதவர்கள் மேலே படிக்கலாம்.


மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களைத் தண்ணீர் அடங்கிய மூன்று பாத்திரங்களில் வைத்து சுமார் 20 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வையுங்கள். இருபது நிமிடங்களுக்கு கொதித்த பிறகு அந்தப் பொருள்களுக்கு என்ன ஆனது?



உறுதியாக இருந்த கேரட் கொழகொழவென மாறிவிட்டது. தொடக்கத்தில் முட்டைக்குள்ளே இருந்த பகுதி சாஃப்டாக இருந்தது. இருபது நிமிடங்கள் கொதித்த பின் முட்டையின் உட்புறம் கெட்டியாகி விட்டது. நன்கு வறுக்கப்பட்ட காப்பிக் கொட்டைகள் தண்ணீரில் கலந்து அதை டிகாஷன் ஆக்கிவிட்டன.

அதுபோல சோதனைகளும், பிரச்சினைகளும் சூழும்போது நாம் நம் இயற்கைத் தன்மைகளைத் தொலைத்துவிடாமல் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். அவற்றைப் புறமுதுகிட்டு ஓடச் செய்ய வேண்டும். காப்பிக்கொட்டைகள் தங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை. தண்ணீரைத்தான் மாற்றின!


தொடர்புக்கு: aruncharanya@gmail.com
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum