தொலைநிலைப் படிப்புகள்
Mon Sep 15, 2014 12:42 pm
கல்லூரிகளில் சேருவதற்கு வாய்ப்பில்லாத மாணவர்களும் வேலை செய்துகொண்டே படிக்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்களும் தங்களது வேலைவாய்ப்புக்கான தகுதியை உயர்த்திக்கொள்ள உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது தொலைநிலைப் படிப்புகள்.
நாட்டில் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உள்பட 14 திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களிலும் 187 பல்கலைக்கழகங்களிலும் தொலைநிலைக் கல்வி மூலம் 1,600-க்கும் மேற்பட்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன. பள்ளிப் படிப்பை முடிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிகளிலோ அல்லது பல்கலைக்கழகங்களிலோ நேரடியாகப் படிக்கின்ற வாய்ப்பு கிடைக்காது. பல மாணவர்கள் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக தங்களது மேற்படிப்பைத் தொடர முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள். சிலர் உடனடியாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற மாணவர்கள், எப்படியாவது படிக்க வேண்டும் என்ற தாகத்தைத் தீர்த்துக் கொள்ள தொலைநிலைக் கல்வி படிப்புகள் உதவியாக இருக்கின்றன.
சிஏ போன்ற படிப்புகளைப் படித்துக்கொண்டே நேரடியாக கல்லூரிகளில் சேர்ந்து பிகாம் போன்ற படிப்புகளைப் படிக்க முடியாது. இந்த நிலையில் சிஏ படிக்கும் மாணவர்கள் தொலைநிலைக் கல்வி மூலம் பிகாம் படிப்பிலும் சேருகிறார்கள். அதனால் சிஏ படிப்பை முடிக்கும்போதே பிகாம் படிப்பையும் முடித்து விடுகிறார்கள். சிஏ படித்துக் கொண்டே பிகாம் படிக்கும் மாணவர்களுக்கு சில பல்கலைக்கழகங்கள் சில பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகளை எழுதுவதிலிருந்து சலுகைகளை வழங்குகின்றன.
பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்கின்ற மாணவர்களைவிட அதிகமான மாணவர்கள் தொலைநிலைக் கல்வி மூலம்தான் படிக்கிறார்கள். கணிசமான மாணவர்கள் உயர்கல்வியை எட்டிப் பிடிக்க தொலைநிலைக் கல்வி பாதையைத் திறந்து விட்டிருக்கிறது.
தற்போது ஆன்லைன் மூலம் வழங்கப்படும் படிப்புகளும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி மூலம் ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் குறித்து எம்எஸ்சி (சிஎஸ்-ஃபாஸ்) என்ற ஆன்லைன் படிப்பைத் தொடங்கியுள்ளது. இந்தப் படிப்பில் சேரும் மாணவர்கள், ஆன்லைன் மூலம் பேராசிரியர்களின் விரிவுரைகளைக் கேட்க முடியும். வேலைக்குப் போகிறவர்கள், தங்களது ஓய்வு நேரங்களில் இந்த விரிவுரைகளைக் கேட்கலாம். என்ஜினீயரிங் படித்த மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் தங்களது படிப்புத் தகுதியை உயர்த்திக் கொண்டு வேலைவாய்ப்பைப் பெற இந்தப் படிப்பு உதவியாக இருக்கும் என்கிறார்கள். இதுபோல, குறிப்பிட்ட சில படிப்புகளை தொலைநிலைக் கல்வி மூலம் சிறப்பாக வழங்கும் பல்கலைக்கழகங்களைப் பார்த்து சேரலாம்.
தொலைநிலைக் கல்வி மூலம் பல மாணவர்கள் படிப்பதற்கு முக்கியக் காரணம் கட்டணம். நேரடியாகக் கல்லூரிகளில் படிக்கும்போது செலுத்த வேண்டிய கட்டணத்தைவிட தொலைநிலைக் கல்வி மூலம் படிப்பதற்கு ஆகும் செலவு குறைவு. கல்வி நிறுவனங்களில் நேரடியாக எம்பிஏ படிப்பதற்கு சில லட்சங்கள் செலவாகும். ஆனால், தொலைநிலைக் கல்வி மூலம் குறைந்த செலவில் எம்பிஏ படித்து விடலாம். அத்துடன், அட்மிஷன் பெறுவதும் எளிது. எனவே, சராசரியாகப் படிக்கும் மாணவர்களுக்கும் அந்தப் படிப்புகளில் இடம் கிடைத்து விடும். அதனால்தான், பல மாணவர்கள் தொலைநிலைக் கல்வியை நாடுகிறார்கள்.
தொலைநிலைக் கல்விப் படிப்புகளில் ஆண்டுக்கு இரு முறை மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். எனவே, பட்டப் படிப்புகளில் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள் கூட, அந்தப் பாடங்களில் தேர்ச்சி பெற்று விட்டால், ஓராண்டு காலம் படிக்காமல் சும்மா இருக்க வேண்டியதில்லை. அந்த மாணவர்கள் தொலைநிலைக் கல்வி அட்மிஷன் தேதியைத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இந்த அட்மிஷனுக்கும் வழக்கமாக கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களைக் கொடுக்க வேண்டியதிருக்கும். அதாவது, மதிப்பெண் சான்றிதழ், பிறந்த தேதிச் சான்றிதழ், டி.சி. போன்ற சான்றிதழ்கள் தேவைப்படும். சில படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் இருக்கலாம்.
தொலைநிலைக் கல்வி மூலம் படிப்பதைவிட, முழு நேரப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும்போது படிப்புக்காக அதிக நேரம் செலவிட முடியும் என்பது உண்மைதான். ஆனால், வழக்கமான வகுப்பறைப் படிப்புக்கு மாற்றாக தொலைநிலைக் கல்வி முக்கியத்துவம் பெற்று வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தொலைநிலைக் கல்வி படிப்புகளைத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ…
வழக்கமான கல்லூரி அல்லது பல்கலைக்கழகப் படிப்புக்கு நிகரானதுதான் தொலைநிலைக் கல்விப் படிப்பும். எந்தக் கல்வி நிறுவனம் நடத்தும் தொலைநிலைப் படிப்பாக இருந்தாலும் சரி, அந்தப் படிப்பு தொலைநிலைக் கல்விக் கவுன்சில் அங்கீகாரம் பெற்றிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
பிளஸ் டூ படித்து முடிக்காத மாணவர்கள் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் படிக்க முதலில் பேச்சலர் பிரிப்பரேட்டரி புரோகிராம் தேர்வை எழுத வேண்டும். இது பிளஸ் டூ தேர்வுக்கு நிகரானது இல்லை என்ற போதும், இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இளநிலைப் பட்டப் படிப்பில் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். பிளஸ் டூ தேர்வை தனித் தேர்வராக எழுதி தேர்ச்சி பெறவும் வாய்ப்புகள் உள்ளன அல்லது நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்கூலிங் கல்வி நிலையத்தில் சீனியர் செகண்டரி படிப்பில் சேர்ந்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பிறகு பட்டப் படிப்பில் சேரலாம்.
இளநிலைப் பட்டப் படிப்பை முடிக்காமல் நேரடியாக முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிப்பதோ அல்லது பிளஸ் டூ படிக்காமல் இளநிலையோ அல்லது முதுநிலைப் படிப்போ படிப்பது அரசு வேலைகளில் சேர உதவாது. பத்தாம் வகுப்பு படித்து விட்டு பிளஸ் டூ படிப்பை முடித்த மாணவர்கள், இளநிலைப் பட்டப் படிப்புகளை முடித்த பிறகுதான் முதுநிலைப் படிப்பைப் படிக்க வேண்டும்.
தொலைநிலைக் கல்வி மூலம் நடத்தப்படும் பிஎட் பட்டப் படிப்புகளில், நுழைவுத் தேர்வு மூலம் தகுதியுடையவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். அந்தப் படிப்பில் சேருபவர்களுக்கு இரண்டு ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் இருக்க வேண்டும். அத்துடன் ஆசிரியர் பணியிலும் இருக்க வேண்டும் என்பது விதி. இதைக் கருத்தில் கொண்டுதான் இந்தப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களும் வழங்கும் அனைத்துப் பட்டப் படிப்புகளும் சமமானதுதானே என்று சிலர் கேட்கலாம். அதேசமயம், பல ஆண்டுகளாக நல்ல முறையில் இயங்கி பெயர் பெற்ற பல்கலைக்கழகங்கள் நடத்தும் தொலைநிலைக் கல்விப் படிப்புகளில் சேருவது நல்லது. அந்தக் கல்வி நிறுவனங்கள் நடத்தும் படிப்புகளில் தரம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இளநிலைப் பட்ட நிலையில் தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கும் சில மாணவர்கள், முதுநிலைப் படிப்புகளைப் பல்கலைக்கழகங்களில் நேரடியாகச் சேர்ந்து படிக்கிறார்கள். தொலைநிலைக் கல்வி மூலமே படித்து ஐஏஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களும் இருக்கிறார்கள். தொலைநிலைக் கல்வி மூலம் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளைப் படித்த மாணவர்கள் பல்கலைக்கழங்களில் நேரடியாக ஆய்வுப் படிப்பைப் படித்து பேராசிரியர்களானவர்களும் உண்டு.
தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கின்ற மாணவர்களுக்கு காண்டாக்ட் கிளாசஸ் என்று சொல்லப்படும் நேரடிப் பயிற்சி வகுப்புகள் விடுமுறை நாட்களில் நடத்தப்படும். அந்த வகுப்புகளில் பங்கு பெறும் மாணவர்கள் ஆசிரியர்களிடம் தங்களது சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளலாம். எனவே அதை தவற விட்டுவிடக்கூடாது.
தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கும் மாணவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் நோட்ஸ்கள் தவிர, பரிந்துரைக்கப்படும் புத்தகங்களையும் பார்த்துப் படித்து தங்களது அறிவை வளர்த்துக் கொள்வது நல்லது.
பல பல்கலைக்கழகங்களில் தொழில் படிப்புகளை தொலைநிலைக் கல்வி மூலம் நடத்துகிறார்கள். அதுபோன்ற படிப்புகளுக்கு செயல் முறைப் பயிற்சி எந்த அளவுக்கு வழங்கப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அத்துடன், இந்தப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தரமானவையா, மாணவர்களுக்கு அக்கறையுடன் பயிற்சி அளிக்கின்றனவா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பட்டப் படிப்பை முடித்த மாணவர்கள், தொழில் அனுபவம் ஏதுமில்லாத நிலையில் தொலைநிலைக் கல்வி மூலம் எம்பிஏ படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் மேனேஜ்மெண்ட் பணிகளில் சேருவதற்கு எம்பிஏ படிப்பை முக்கியமானதாகக் கருதுகிறார்கள். நமது நாட்டில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கிறார்கள். அவர்களிலேயே 50 சதவீத மாணவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது அல்லது குறைந்த ஊதியத்தில் வேலை கிடைக்கும் நிலை உள்ளது. அதற்காக, தொலைநிலைக் கல்வி மூலம் எம்பிஏ படிப்பது சரியானது அல்ல என்று கூறி விட முடியாது. பணிகளில் புதிதாக சேர்ந்தவர்களுக்கும் ஏற்கெனவே பணிகளில் இருந்து வருபவர்களுக்கும் தொலைநிலைக் கல்வி மூலம் எம்பிஏ படிப்பது அவர்களது பணியில் உயர்வு பெற உதவியாக இருக்கும். எம்பிஏ படிப்பது வேலைவாய்ப்பைத் தேடுவதற்கும் கூடுதல் தகுதியாக இருக்கும். எம்பிஏ படிப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது. அதற்கேற்ற திறன்களை வளர்த்துக் கொள்பவர்களுக்குத்தான் வேலை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சில கல்வி நிறுவனங்களில் தொலைநிலைக் கல்வி மூலம் நடத்தப்படும் மேனேஜ்மெண்ட் படிப்புகளும் நேரடி வகுப்பறைப் படிப்புகளுக்கு நிகராக உள்ளன.
கல்லூரிகளில் சேர்ந்து சட்டப் படிப்புகளை முடித்த மாணவர்கள் தங்களது தகுதிகளை வளர்த்துக் கொள்ள நேஷனல் லா ஸ்கூல் உள்பட சில சட்டக் கல்வி நிறுவனங்களில் காம்பெட்டிஷன் லா, சைபர் லாஸ், ஏவியேஷன் லா, மனித உரிமைகள் சட்டம், இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் லா, இன்டலக்சுவல் புராப்பர்ட்டி லா, மாரிடைம் லா, ஸ்போர்ட்ஸ் லா போன்ற பல்வேறு துறைகளில் சான்றிதழ், டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ படிப்புகளைத் தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கலாம். தொலைநிலைக் கல்வி மூலம் சட்டப் படிப்புகளைப் படித்து வழக்கறிஞராக முடியாது. அதனை பார் கவுன்சில் ஏற்பதில்லை.
பல பல்கலைக்கழகங்களில் மேனேஜ்மெண்ட் தொடர்பான சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் போன்ற சிறப்புப் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளையும் நடத்துகின்றன. மேனேஜ்மெண்ட் படிப்புகளைப் படித்த மாணவர்கள் சிறப்புப் பாடப் பிரிவுகளில் தங்களது தகுதியை வளர்த்துக் கொள்ளலாம்.
இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழில்நுட்பத் துறையில் சான்றிதழ் படிப்புகளைப் படிக்கலாம். இங்கு, மெக்கானிக்கல், சிவில் என்ஜினீயரிங் படித்தவர்கள் பிஎச்டி படிக்கவும் வாய்ப்பு உண்டு. பிஎஸ்சி நர்சிங், பிஎஸ்சி (ஆனர்ஸ்) ஆப்டோமெட்ரி மற்றும் ஆப்தால்மாலஜி டெக்னிக்ஸ் போன்ற படிப்புகளையும் வேளாண்மை தொடர்பான படிப்புகளையும் படிக்கலாம். இதே போல அறிவியல் தொடர்பான படிப்புகளையும் இதழியல் தொடர்பான படிப்புகளையும் படிக்கலாம்.
வேலை பார்த்துக்கொண்டே தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கின்றவர்கள், படிப்பதற்கான நேரத்தைத் திட்டமிடுவதுடன், அதன்படி பாடங்களைப் படிக்க வேண்டும். கிடைக்கும் விடுமுறை நாட்களில் கணிசமான நேரத்தை படிக்கச் செலவிடலாம். அப்போதுதான், உரிய காலத்தில் பாடங்களைப் படித்து முடிக்க முடியும். தேர்வு நேரத்தில் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக் கொண்டு தேர்வுக்காகப் படிப்பதில் முழுமையாகக் கவனம் செலுத்துவது நல்லது.
தொலைநிலைப் படிப்புகளுக்கான அசைன்மெண்ட்டுகளையும் புராஜெக்ட்டுகளையும் உரிய நேரத்தில் முடித்துவிட வேண்டும். ஆய்வுக் கட்டுரை எழுத வேண்டியதிருந்தால், அதையும் வழிகாட்டியிடம் கேட்டு உரிய காலத்தில் முடிக்க வேண்டும்.
தற்போது பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் தொலைநிலைக் கல்விக் கவுன்சிலின் அறிவிக்கைப்படி, கல்லூரிகளில் சேர்ந்து வழக்கமான பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் அதே காலகட்டத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் டிப்ளமோ படிப்பையும் படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வாய்ப்பை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொலைநிலைக் கல்வி மூலம் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்று கேட்டால், மாணவர்களின் திறமையைப் பொருத்துதான் என்பது பதில். நேரடியாக கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களது திறமையைப் பொருத்து வேலை கிடைக்கிறதோ அதேபோலத்தான் தொலைநிலைக் கல்வி மூலம் படித்தவர்களின் திறமையைப் பொருத்து வேலை கிடைக்கும். பட்டம் என்பது அடிப்படைத் தகுதி மட்டுமே. அதனுடன், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் மற்ற திறன்கள் இருக்கும்பட்சத்தில்தான் வேலை கிடைக்கும்.
உயர்கல்வி படிப்பதற்கான மற்றொரு பாதை தொலைநிலைக் கல்வி. தங்களது தேவையைப் புரிந்து கொண்டு தகுந்த படிப்புகளை எடுத்து சிறப்பாகப் படிப்பவர்கள் அதன் பலன்களை உடனடியாக அறுவடை செய்கிறார்கள். ஒரு காலத்தில் அஞ்சல் வழிக் கல்வி என்று தபால் மூலம் படிப்புகளை வழங்கும் கல்வியாக இருந்தது தற்போது தொலைநிலைக் கல்வியாக மாறி இருக்கிறது. இதன் அடுத்த வடிவம்தான் ஆன்லைன் படிப்புகள்.
———–
பொன்.தனசேகரன்
நாட்டில் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உள்பட 14 திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களிலும் 187 பல்கலைக்கழகங்களிலும் தொலைநிலைக் கல்வி மூலம் 1,600-க்கும் மேற்பட்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன. பள்ளிப் படிப்பை முடிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிகளிலோ அல்லது பல்கலைக்கழகங்களிலோ நேரடியாகப் படிக்கின்ற வாய்ப்பு கிடைக்காது. பல மாணவர்கள் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக தங்களது மேற்படிப்பைத் தொடர முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள். சிலர் உடனடியாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற மாணவர்கள், எப்படியாவது படிக்க வேண்டும் என்ற தாகத்தைத் தீர்த்துக் கொள்ள தொலைநிலைக் கல்வி படிப்புகள் உதவியாக இருக்கின்றன.
சிஏ போன்ற படிப்புகளைப் படித்துக்கொண்டே நேரடியாக கல்லூரிகளில் சேர்ந்து பிகாம் போன்ற படிப்புகளைப் படிக்க முடியாது. இந்த நிலையில் சிஏ படிக்கும் மாணவர்கள் தொலைநிலைக் கல்வி மூலம் பிகாம் படிப்பிலும் சேருகிறார்கள். அதனால் சிஏ படிப்பை முடிக்கும்போதே பிகாம் படிப்பையும் முடித்து விடுகிறார்கள். சிஏ படித்துக் கொண்டே பிகாம் படிக்கும் மாணவர்களுக்கு சில பல்கலைக்கழகங்கள் சில பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகளை எழுதுவதிலிருந்து சலுகைகளை வழங்குகின்றன.
பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்கின்ற மாணவர்களைவிட அதிகமான மாணவர்கள் தொலைநிலைக் கல்வி மூலம்தான் படிக்கிறார்கள். கணிசமான மாணவர்கள் உயர்கல்வியை எட்டிப் பிடிக்க தொலைநிலைக் கல்வி பாதையைத் திறந்து விட்டிருக்கிறது.
தற்போது ஆன்லைன் மூலம் வழங்கப்படும் படிப்புகளும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி மூலம் ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் குறித்து எம்எஸ்சி (சிஎஸ்-ஃபாஸ்) என்ற ஆன்லைன் படிப்பைத் தொடங்கியுள்ளது. இந்தப் படிப்பில் சேரும் மாணவர்கள், ஆன்லைன் மூலம் பேராசிரியர்களின் விரிவுரைகளைக் கேட்க முடியும். வேலைக்குப் போகிறவர்கள், தங்களது ஓய்வு நேரங்களில் இந்த விரிவுரைகளைக் கேட்கலாம். என்ஜினீயரிங் படித்த மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் தங்களது படிப்புத் தகுதியை உயர்த்திக் கொண்டு வேலைவாய்ப்பைப் பெற இந்தப் படிப்பு உதவியாக இருக்கும் என்கிறார்கள். இதுபோல, குறிப்பிட்ட சில படிப்புகளை தொலைநிலைக் கல்வி மூலம் சிறப்பாக வழங்கும் பல்கலைக்கழகங்களைப் பார்த்து சேரலாம்.
தொலைநிலைக் கல்வி மூலம் பல மாணவர்கள் படிப்பதற்கு முக்கியக் காரணம் கட்டணம். நேரடியாகக் கல்லூரிகளில் படிக்கும்போது செலுத்த வேண்டிய கட்டணத்தைவிட தொலைநிலைக் கல்வி மூலம் படிப்பதற்கு ஆகும் செலவு குறைவு. கல்வி நிறுவனங்களில் நேரடியாக எம்பிஏ படிப்பதற்கு சில லட்சங்கள் செலவாகும். ஆனால், தொலைநிலைக் கல்வி மூலம் குறைந்த செலவில் எம்பிஏ படித்து விடலாம். அத்துடன், அட்மிஷன் பெறுவதும் எளிது. எனவே, சராசரியாகப் படிக்கும் மாணவர்களுக்கும் அந்தப் படிப்புகளில் இடம் கிடைத்து விடும். அதனால்தான், பல மாணவர்கள் தொலைநிலைக் கல்வியை நாடுகிறார்கள்.
தொலைநிலைக் கல்விப் படிப்புகளில் ஆண்டுக்கு இரு முறை மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். எனவே, பட்டப் படிப்புகளில் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள் கூட, அந்தப் பாடங்களில் தேர்ச்சி பெற்று விட்டால், ஓராண்டு காலம் படிக்காமல் சும்மா இருக்க வேண்டியதில்லை. அந்த மாணவர்கள் தொலைநிலைக் கல்வி அட்மிஷன் தேதியைத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இந்த அட்மிஷனுக்கும் வழக்கமாக கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களைக் கொடுக்க வேண்டியதிருக்கும். அதாவது, மதிப்பெண் சான்றிதழ், பிறந்த தேதிச் சான்றிதழ், டி.சி. போன்ற சான்றிதழ்கள் தேவைப்படும். சில படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் இருக்கலாம்.
தொலைநிலைக் கல்வி மூலம் படிப்பதைவிட, முழு நேரப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும்போது படிப்புக்காக அதிக நேரம் செலவிட முடியும் என்பது உண்மைதான். ஆனால், வழக்கமான வகுப்பறைப் படிப்புக்கு மாற்றாக தொலைநிலைக் கல்வி முக்கியத்துவம் பெற்று வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தொலைநிலைக் கல்வி படிப்புகளைத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ…
வழக்கமான கல்லூரி அல்லது பல்கலைக்கழகப் படிப்புக்கு நிகரானதுதான் தொலைநிலைக் கல்விப் படிப்பும். எந்தக் கல்வி நிறுவனம் நடத்தும் தொலைநிலைப் படிப்பாக இருந்தாலும் சரி, அந்தப் படிப்பு தொலைநிலைக் கல்விக் கவுன்சில் அங்கீகாரம் பெற்றிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
பிளஸ் டூ படித்து முடிக்காத மாணவர்கள் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் படிக்க முதலில் பேச்சலர் பிரிப்பரேட்டரி புரோகிராம் தேர்வை எழுத வேண்டும். இது பிளஸ் டூ தேர்வுக்கு நிகரானது இல்லை என்ற போதும், இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இளநிலைப் பட்டப் படிப்பில் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். பிளஸ் டூ தேர்வை தனித் தேர்வராக எழுதி தேர்ச்சி பெறவும் வாய்ப்புகள் உள்ளன அல்லது நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்கூலிங் கல்வி நிலையத்தில் சீனியர் செகண்டரி படிப்பில் சேர்ந்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பிறகு பட்டப் படிப்பில் சேரலாம்.
இளநிலைப் பட்டப் படிப்பை முடிக்காமல் நேரடியாக முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிப்பதோ அல்லது பிளஸ் டூ படிக்காமல் இளநிலையோ அல்லது முதுநிலைப் படிப்போ படிப்பது அரசு வேலைகளில் சேர உதவாது. பத்தாம் வகுப்பு படித்து விட்டு பிளஸ் டூ படிப்பை முடித்த மாணவர்கள், இளநிலைப் பட்டப் படிப்புகளை முடித்த பிறகுதான் முதுநிலைப் படிப்பைப் படிக்க வேண்டும்.
தொலைநிலைக் கல்வி மூலம் நடத்தப்படும் பிஎட் பட்டப் படிப்புகளில், நுழைவுத் தேர்வு மூலம் தகுதியுடையவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். அந்தப் படிப்பில் சேருபவர்களுக்கு இரண்டு ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் இருக்க வேண்டும். அத்துடன் ஆசிரியர் பணியிலும் இருக்க வேண்டும் என்பது விதி. இதைக் கருத்தில் கொண்டுதான் இந்தப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களும் வழங்கும் அனைத்துப் பட்டப் படிப்புகளும் சமமானதுதானே என்று சிலர் கேட்கலாம். அதேசமயம், பல ஆண்டுகளாக நல்ல முறையில் இயங்கி பெயர் பெற்ற பல்கலைக்கழகங்கள் நடத்தும் தொலைநிலைக் கல்விப் படிப்புகளில் சேருவது நல்லது. அந்தக் கல்வி நிறுவனங்கள் நடத்தும் படிப்புகளில் தரம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இளநிலைப் பட்ட நிலையில் தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கும் சில மாணவர்கள், முதுநிலைப் படிப்புகளைப் பல்கலைக்கழகங்களில் நேரடியாகச் சேர்ந்து படிக்கிறார்கள். தொலைநிலைக் கல்வி மூலமே படித்து ஐஏஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களும் இருக்கிறார்கள். தொலைநிலைக் கல்வி மூலம் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளைப் படித்த மாணவர்கள் பல்கலைக்கழங்களில் நேரடியாக ஆய்வுப் படிப்பைப் படித்து பேராசிரியர்களானவர்களும் உண்டு.
தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கின்ற மாணவர்களுக்கு காண்டாக்ட் கிளாசஸ் என்று சொல்லப்படும் நேரடிப் பயிற்சி வகுப்புகள் விடுமுறை நாட்களில் நடத்தப்படும். அந்த வகுப்புகளில் பங்கு பெறும் மாணவர்கள் ஆசிரியர்களிடம் தங்களது சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளலாம். எனவே அதை தவற விட்டுவிடக்கூடாது.
தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கும் மாணவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் நோட்ஸ்கள் தவிர, பரிந்துரைக்கப்படும் புத்தகங்களையும் பார்த்துப் படித்து தங்களது அறிவை வளர்த்துக் கொள்வது நல்லது.
பல பல்கலைக்கழகங்களில் தொழில் படிப்புகளை தொலைநிலைக் கல்வி மூலம் நடத்துகிறார்கள். அதுபோன்ற படிப்புகளுக்கு செயல் முறைப் பயிற்சி எந்த அளவுக்கு வழங்கப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அத்துடன், இந்தப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தரமானவையா, மாணவர்களுக்கு அக்கறையுடன் பயிற்சி அளிக்கின்றனவா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பட்டப் படிப்பை முடித்த மாணவர்கள், தொழில் அனுபவம் ஏதுமில்லாத நிலையில் தொலைநிலைக் கல்வி மூலம் எம்பிஏ படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் மேனேஜ்மெண்ட் பணிகளில் சேருவதற்கு எம்பிஏ படிப்பை முக்கியமானதாகக் கருதுகிறார்கள். நமது நாட்டில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கிறார்கள். அவர்களிலேயே 50 சதவீத மாணவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது அல்லது குறைந்த ஊதியத்தில் வேலை கிடைக்கும் நிலை உள்ளது. அதற்காக, தொலைநிலைக் கல்வி மூலம் எம்பிஏ படிப்பது சரியானது அல்ல என்று கூறி விட முடியாது. பணிகளில் புதிதாக சேர்ந்தவர்களுக்கும் ஏற்கெனவே பணிகளில் இருந்து வருபவர்களுக்கும் தொலைநிலைக் கல்வி மூலம் எம்பிஏ படிப்பது அவர்களது பணியில் உயர்வு பெற உதவியாக இருக்கும். எம்பிஏ படிப்பது வேலைவாய்ப்பைத் தேடுவதற்கும் கூடுதல் தகுதியாக இருக்கும். எம்பிஏ படிப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது. அதற்கேற்ற திறன்களை வளர்த்துக் கொள்பவர்களுக்குத்தான் வேலை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சில கல்வி நிறுவனங்களில் தொலைநிலைக் கல்வி மூலம் நடத்தப்படும் மேனேஜ்மெண்ட் படிப்புகளும் நேரடி வகுப்பறைப் படிப்புகளுக்கு நிகராக உள்ளன.
கல்லூரிகளில் சேர்ந்து சட்டப் படிப்புகளை முடித்த மாணவர்கள் தங்களது தகுதிகளை வளர்த்துக் கொள்ள நேஷனல் லா ஸ்கூல் உள்பட சில சட்டக் கல்வி நிறுவனங்களில் காம்பெட்டிஷன் லா, சைபர் லாஸ், ஏவியேஷன் லா, மனித உரிமைகள் சட்டம், இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் லா, இன்டலக்சுவல் புராப்பர்ட்டி லா, மாரிடைம் லா, ஸ்போர்ட்ஸ் லா போன்ற பல்வேறு துறைகளில் சான்றிதழ், டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ படிப்புகளைத் தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கலாம். தொலைநிலைக் கல்வி மூலம் சட்டப் படிப்புகளைப் படித்து வழக்கறிஞராக முடியாது. அதனை பார் கவுன்சில் ஏற்பதில்லை.
பல பல்கலைக்கழகங்களில் மேனேஜ்மெண்ட் தொடர்பான சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் போன்ற சிறப்புப் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளையும் நடத்துகின்றன. மேனேஜ்மெண்ட் படிப்புகளைப் படித்த மாணவர்கள் சிறப்புப் பாடப் பிரிவுகளில் தங்களது தகுதியை வளர்த்துக் கொள்ளலாம்.
இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழில்நுட்பத் துறையில் சான்றிதழ் படிப்புகளைப் படிக்கலாம். இங்கு, மெக்கானிக்கல், சிவில் என்ஜினீயரிங் படித்தவர்கள் பிஎச்டி படிக்கவும் வாய்ப்பு உண்டு. பிஎஸ்சி நர்சிங், பிஎஸ்சி (ஆனர்ஸ்) ஆப்டோமெட்ரி மற்றும் ஆப்தால்மாலஜி டெக்னிக்ஸ் போன்ற படிப்புகளையும் வேளாண்மை தொடர்பான படிப்புகளையும் படிக்கலாம். இதே போல அறிவியல் தொடர்பான படிப்புகளையும் இதழியல் தொடர்பான படிப்புகளையும் படிக்கலாம்.
வேலை பார்த்துக்கொண்டே தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கின்றவர்கள், படிப்பதற்கான நேரத்தைத் திட்டமிடுவதுடன், அதன்படி பாடங்களைப் படிக்க வேண்டும். கிடைக்கும் விடுமுறை நாட்களில் கணிசமான நேரத்தை படிக்கச் செலவிடலாம். அப்போதுதான், உரிய காலத்தில் பாடங்களைப் படித்து முடிக்க முடியும். தேர்வு நேரத்தில் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக் கொண்டு தேர்வுக்காகப் படிப்பதில் முழுமையாகக் கவனம் செலுத்துவது நல்லது.
தொலைநிலைப் படிப்புகளுக்கான அசைன்மெண்ட்டுகளையும் புராஜெக்ட்டுகளையும் உரிய நேரத்தில் முடித்துவிட வேண்டும். ஆய்வுக் கட்டுரை எழுத வேண்டியதிருந்தால், அதையும் வழிகாட்டியிடம் கேட்டு உரிய காலத்தில் முடிக்க வேண்டும்.
தற்போது பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் தொலைநிலைக் கல்விக் கவுன்சிலின் அறிவிக்கைப்படி, கல்லூரிகளில் சேர்ந்து வழக்கமான பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் அதே காலகட்டத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் டிப்ளமோ படிப்பையும் படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வாய்ப்பை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொலைநிலைக் கல்வி மூலம் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்று கேட்டால், மாணவர்களின் திறமையைப் பொருத்துதான் என்பது பதில். நேரடியாக கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களது திறமையைப் பொருத்து வேலை கிடைக்கிறதோ அதேபோலத்தான் தொலைநிலைக் கல்வி மூலம் படித்தவர்களின் திறமையைப் பொருத்து வேலை கிடைக்கும். பட்டம் என்பது அடிப்படைத் தகுதி மட்டுமே. அதனுடன், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் மற்ற திறன்கள் இருக்கும்பட்சத்தில்தான் வேலை கிடைக்கும்.
உயர்கல்வி படிப்பதற்கான மற்றொரு பாதை தொலைநிலைக் கல்வி. தங்களது தேவையைப் புரிந்து கொண்டு தகுந்த படிப்புகளை எடுத்து சிறப்பாகப் படிப்பவர்கள் அதன் பலன்களை உடனடியாக அறுவடை செய்கிறார்கள். ஒரு காலத்தில் அஞ்சல் வழிக் கல்வி என்று தபால் மூலம் படிப்புகளை வழங்கும் கல்வியாக இருந்தது தற்போது தொலைநிலைக் கல்வியாக மாறி இருக்கிறது. இதன் அடுத்த வடிவம்தான் ஆன்லைன் படிப்புகள்.
———–
பொன்.தனசேகரன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|