தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
உண்மையின் வாழ்க்கை தத்துவங்கள் : Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உண்மையின் வாழ்க்கை தத்துவங்கள் : Empty உண்மையின் வாழ்க்கை தத்துவங்கள் :

Mon May 26, 2014 8:54 am
01. ஒவ்வோர் இன்பமும் இறுதியில் துன்பமாகப் பரிணமிப்பதை ஒவ்வொருவரும் நாளடைவில் அறிவார்கள்.

02. காதுகள் இருந்தும், புண்ணியக் கதைகளைக் கேட்காதவன், பகுத்தறிவு இல்லாத பசுக்கள் முதலான பிராணிகளுக்கே ஒப்பாவார்கள்.

03. நல்லது செய்வோன் எவனும் நலிவுறுதல் இல்லை. அதே போன்று தீயது செய்பவன் எவனும் அதன் பலனை அனுபவிக்காமல் விட்டதுமில்லை.

04. இப் புவியில் பிறந்த எந்த மனிதனும் பிற மனிதனால் இரட்சிக்கப்படுகிறான் என்றோ, அழிக்கப்படுகிறான் என்றோ கூறுவது மடத்தனமானது.

05. உறுதியான மனமுடையோன் தான் செய்யும் காரியம் அனைத்தும் தான் செய்ததாகக் கருதமாட்டான்.

06. தெய்வத்தை மனிதன் யாண்டும் முழுமனதோடு ஆராதித்தால், அத் தெய்வத்தின் விபூதிகளெல்லாம் அம் மனிதனை வந்தடைகின்றன.

07. அரசமரத்தின் விதை கண்ணுக்குத் தெரியாது. அது மிகவும் நுட்பமானது. ஆனால் அது ஒரு கட்டிடத்தின் இடுக்கில் விழுந்து வேர்விட்டுச் செடியாகி, மரமாகிக் கட்டிடத்தையே பெயர்த்துத் தள்ளுகிறது அப்படித்தான் நல்லவர் மனதையும் மிக எளிதில் கெட்ட சக்தி மாற்றி அணைய வைக்கும்

08. இனிய வாழ்க்கை கிட்டும் என்ற விருப்பத்தில் பரதர்மத்தில் பிரவேசிப்பது குளத்தில் குளிக்கப் போய் சேற்றை அள்ளிப் பூசுவது போலாகும்.

09. நம்பிக்கை இல்லாதவனுக்கு இவ்வுலகம் இல்லை, அவ்வுலகமும் இல்லை.

10. கடவுளைக் கான் நினைப்பவனுக்கு கல்லும் கடவுளே, கடவுளைக் கல்லாகப் பார்ப்பவனுக்கு கடவுளும் கல்லே.

11. சத்தியவான்களான உத்தம புருஷர்களுக்கு கிருதயுகம் யுத்தமானது என்றும் பொய்மையாளர்களான அதர்மபுருஷர்களுக்கு கலியுகம் உன்னதமானதென்றும் கலியுகத்தில் ஒருவன் சத்தியவானாகவும், தருமாத்மாவாகவும் இருந்தால் பூலோகத்தார் அவனைப் பரிகாசம் செய்வார்களே தவிரப் பெரிதாகப் போற்றமாட்டார்கள்.

12. நீரில் ஏற்படும் நுரைக்குச் சமமான இந்த மனிதப் பிறவியை நிலையானது என்று எண்ணுகின்றனரே மூடர்கள்.

13. இந்த வையகம் முழுவதையும் தமதாக்கிக் கொள்ள வேண்டும் என்று பேராசை கொண்டு ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டிருக்கின்றனரே அந்தோ பரிதாபம்.

14. நம் முன்னோர்கள் கொண்டு போக முடியாததை நாம் மட்டும் கொண்டு போக முடியுமா? இதையெண்ணிப் பார்ப்பதில்லையே என் செய்வேன் யான்.

15. பராக்கிரமமும் நான் என்ற மமதையும் நானே செய்தேன் இனியும் நானே செய்வேன் என்ற ஆணவமெல்லாம் நெருப்பில் பட்ட இலவம் பஞ்சு போல் காலமென்னும் சக்கரத்தில் அகப்பட்டு அழிந்து விடும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உண்மையின் வாழ்க்கை தத்துவங்கள் : Empty Re: உண்மையின் வாழ்க்கை தத்துவங்கள் :

Mon May 26, 2014 9:08 am
1.வாழ்வு நெடுகக் கற்க வேண்டுமென்ற எண்ணத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்துவதே கல்வியின் நோக்கம். -ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்
2.சாகும் வரையிலும் ஒருவனது கல்வி நிறைவு பெறுவதில்லை. - ராபர்ட் லீ
3.கூர்த்த மதி நூறு கைகளை விடவும் வலுவானது. - தாமஸ் ஃபுல்லர்
4.மதி விதியை வெல்லும். - எமர்சன்
5.உன்னையே நீ நன்றாக எடை போட்டுப் பார்; உன் வலிமை உனக்குப் புலப்படும்.
6.வாழ்க்கை என்பது ஊக்கம்; ஊக்கம் வலிமை தரும். - ஃப்ரெடரிக் நீட்ஷே
7.பேசும் பொழுது தெரிந்ததைச் சொல்கிறீர்கள்; கேட்கும்பொழுது தெரியாததைத் தெரிந்து கொள்கிறீர்கள். - ஜேரட் ஸ்பார்க்ஸ்
8.திறமையுடன் பணிவும் கொண்டவனை மக்கள் மதிக்கிறார்கள். - ஜேம்ஸ் ஏஜீ
9.பணிவு இல்லாமல் பிற நலன்களைப் பெற்றுப் பயன் என்ன? - எராஸ்மஸ்
10.ஒருவன் உண்மையானவன் என்பதை மதிப்பிடும் அளவுகோல் அவனது பணிவு. - ரானடே
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உண்மையின் வாழ்க்கை தத்துவங்கள் : Empty Re: உண்மையின் வாழ்க்கை தத்துவங்கள் :

Mon May 26, 2014 9:20 am
* ஆற்றில் ஓடுகின்ற நீரானது தடைகளை கண்டு நின்றுவிடாமல் வளைந்து, ஒதுங்கி ஓடுவதுபோல, நாமும் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும்.
* நேற்றைய கவலைகளை ஒதுக்கிவிட்டு, இன்றைய தினத்தை எப்படி பயனுடையதாக்குவது என்று சிந்திப்பவன் வாழ்வில் வெற்றி பெறுகிறான்.
* பின்விளைவுகளை பற்றி எண்ணி தயங்கிக் கொண்டு இருக்காமல், முயற்சியுடனும், முழு ஆர்வத்துடனும் செயல்படுபவர்களை வெற்றி தேடிச் செல்கிறது.
* எல்லாவற்றையும் சிறப்பாக செய்வதும், எதற்கும், எப்பொழுதும் தயாராக இருப்பதும் வெற்றியின் ரகசியம் ஆகும்.
* சரியாக திட்டமிட்டு, சுறுசுறுப்போடும், சிறப்பாகவும் செயல்படுபவர்களே பெரும் வெற்றியை அடைகிறார்கள்.
* மனம் தளராமல் நம்பிக்கையோடு உழைப்பவர்கள் நிச்சயமாக தங்களது குறிக்கோளை அடைய முடியும்.
* எந்த ஒரு சாதனையும் செய்யாமல் வாழ்க்கை முழுவதும் வாழ்வதைவிட, புகழ் சூழ்ந்த ஒரு மணி நேர வாழ்வு கூட மேன்மையானதாகும்.
* நமது லட்சியம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் நிச்சயம் நிறைவேறும்.
* வெற்றியின் உச்சிக்கு செல்ல விரும்பினால், உங்கள் பணியை கீழ் மட்டத்தில் இருந்தே சிறப்பாக செய்யுங்கள்.
Sponsored content

உண்மையின் வாழ்க்கை தத்துவங்கள் : Empty Re: உண்மையின் வாழ்க்கை தத்துவங்கள் :

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum