ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராமல்
Thu May 22, 2014 7:04 pm
1. இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
2. இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
சகரியா நெஹெமியா செருபாபேல், எஸ்றா, போன்ற தேவமனிதர்கள் இடுக்கமான காலத்தில் கட்டி எழுப்பப்பட்ட எருசேமின் இரண்டாவது ஆலயம் முழுவது ஒருகல்லின்மேல் ஒரு கல் இராதபடிக்கு இடிக்கப்பட்டு போகும் என்றார் கிறிஸ்து!!
அவர் சொன்ன தீர்க்கதரிசனத்தின்படி கிபி.70வதில் ரோம பேரரசன் டைடஸ் தலைமையில் ரோமானிய படைகள் எருசலேமின் 2வது ஆலயத்தை ஒருகல்லின்மேல் ஒரு கல் இராதபடிக்கு இடித்துப் போட்டான்!!
அம்முற்றுகை புகழ்பெற்ற இரண்டாம் எருசலேம் தேவாலயம் கொள்ளையிடப்பட்டு, அழிக்கப்பட்டதும் நிறைவுற்றது. முதலாம், இரண்டாம் எருசலேம் தேவாலய அழிவு இன்றும் யூத நோன்பான "திஸ்சா பாவ்" என ஆண்டுதோறும் துக்கம் கொண்டாடப்படுகின்றது. உரோமையர் எருசலேம் தேவாலயத்தை கொள்ளையிடப்பட்டு கொண்டாடிய தைத்தஸ் வளைவு இன்றும் உரோமில் உள்ளது.
இப்படி தேவாலயம் அழிக்கப்பட்டதால் தேவாலயத்தில் நாள்தோறும் செலுத்தப்பட்டுவந்த பலிகள் நீக்கப்பட்டது. இது தானி.9:27ம் தீர்க்கதரிசன்மும் நிறைவேறிற்று!
இயேசுகிறிஸ்து தாம் சொன்ன இன்னொரு தீர்க்கதரிசனத்தையும் நினைவுக்கூறலாம்.
யோவா2:19. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.
யோவா2:20. அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்.
யோவா2:21. அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.
22. அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்.
இயேசு தேவ ஆவி வாசம் பண்ணும் சரீரமே ஜீவனுள்ள தேவனின் ஆலயம் என்பதை நிலைநிறுத்த, கைகளினால் கட்டப்பட்ட ஆலயத்தை அழித்துப்போட்டார். ஏனெனில் அவர் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் வாசம் பண்ணுகிறதில்லை!!
2. இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
சகரியா நெஹெமியா செருபாபேல், எஸ்றா, போன்ற தேவமனிதர்கள் இடுக்கமான காலத்தில் கட்டி எழுப்பப்பட்ட எருசேமின் இரண்டாவது ஆலயம் முழுவது ஒருகல்லின்மேல் ஒரு கல் இராதபடிக்கு இடிக்கப்பட்டு போகும் என்றார் கிறிஸ்து!!
அவர் சொன்ன தீர்க்கதரிசனத்தின்படி கிபி.70வதில் ரோம பேரரசன் டைடஸ் தலைமையில் ரோமானிய படைகள் எருசலேமின் 2வது ஆலயத்தை ஒருகல்லின்மேல் ஒரு கல் இராதபடிக்கு இடித்துப் போட்டான்!!
அம்முற்றுகை புகழ்பெற்ற இரண்டாம் எருசலேம் தேவாலயம் கொள்ளையிடப்பட்டு, அழிக்கப்பட்டதும் நிறைவுற்றது. முதலாம், இரண்டாம் எருசலேம் தேவாலய அழிவு இன்றும் யூத நோன்பான "திஸ்சா பாவ்" என ஆண்டுதோறும் துக்கம் கொண்டாடப்படுகின்றது. உரோமையர் எருசலேம் தேவாலயத்தை கொள்ளையிடப்பட்டு கொண்டாடிய தைத்தஸ் வளைவு இன்றும் உரோமில் உள்ளது.
இப்படி தேவாலயம் அழிக்கப்பட்டதால் தேவாலயத்தில் நாள்தோறும் செலுத்தப்பட்டுவந்த பலிகள் நீக்கப்பட்டது. இது தானி.9:27ம் தீர்க்கதரிசன்மும் நிறைவேறிற்று!
இயேசுகிறிஸ்து தாம் சொன்ன இன்னொரு தீர்க்கதரிசனத்தையும் நினைவுக்கூறலாம்.
யோவா2:19. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.
யோவா2:20. அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்.
யோவா2:21. அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.
22. அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்.
இயேசு தேவ ஆவி வாசம் பண்ணும் சரீரமே ஜீவனுள்ள தேவனின் ஆலயம் என்பதை நிலைநிறுத்த, கைகளினால் கட்டப்பட்ட ஆலயத்தை அழித்துப்போட்டார். ஏனெனில் அவர் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் வாசம் பண்ணுகிறதில்லை!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|