வேதவசனங்களை தியானம் செய்வது எப்படி?
Tue Jan 08, 2013 3:47 am
பரிசுத்த வேதாகமமாகிய தேவனுடைய வார்த்தையை உட்கொள்வதற்கு அடிப்படையாக 5 முறைகள் உண்டு அவையாவன...
1.வாசித்தல்
2.கேட்டல்
3.மனப்பாடம் செய்தல்
4.தியானித்தல்
5.ஆராய்தல்
இவைகளில் வேதவசனங்களை தியானித்தல் மிகவும் முக்கியதாகும்.
நீங்கள் வாசித்த பகுதியில் ஒரு வசனத்தையோ அல்லது சில வசனங்களையோ
தியானிக்கலாம். நீங்கள் பிரசங்கத்தில் அல்லது விசுவாசிகளோடு உரையாடின போது
கேட்ட வசனத்தை அல்லது வசனங்களை தியானிக்கலாம். நீங்கள் வேதத்தை வாசிக்கும்
போது குறித்துக் கொள்வதும், பிரசங்களைக் கேட்கும் போதும் குறிப்புகள்
எடுப்பதும் நீங்கள் கேட்ட, கற்றுக் கொண்ட வேதாகம உண்மைகளை மற்றவர்களோடு
பகிர்ந்து கொள்வதும் மிகவும் அவசியம்.
தியானம் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட பொருளை (கருத்து அல்லது சம்பவம் அல்லது எண்ணம்)
குறித்து தொடர்ந்து யோசித்துக் கொண்டேயிருப்பது தியானமாகும். நாம் ஏதாவது
ஒரு பொருளை தொலைத்துவிட்டால் ‘அது காணாமல் போய் விட்டதே’ ‘எப்படி அதைக்
கண்டுபிடிப்பது?’ ‘எங்கெல்லாம் அதைத் தேடுவது?’ என்று யோசித்துக் கொண்டே
இருக்கிறோம்.
நமது சரீரத்தில் ஒவ்வொரு அவயவமும் தொடர்ந்து இயங்கிக்
கொண்டேயிருக்கிறது. நமது மனதும் தொடர்ந்து யோசிக்கக் கூடிய ஆற்றலைக்
கொண்டது. நாம் நம்முடைய சொந்த எண்ணங்களினாலும், நம்மைச் சுற்றிலுமிருந்து
நமது எண்ணங்களினாலும், நம்மைச் சுற்றிலுமிருந்து நமது எண்ணங்களைத் தூண்டக்
கூடிய பலவற்றினாலும் கவரப்பட்டு, தூண்டப்பட்டு யோசிக்கிறோம். நாம் எதைக்
குறித்து யோசித்துக் கொண்டே இருக்கிறோம்? என்று நாம் சிந்திக்க வேண்டியது
அவசியம்.
நாம் விரும்பும் காரியங்களையும், நம் உள்ளத்தின் உணர்ச்சிகளை
தூண்டியவைகளைப் பற்றித் தொடர்ந்து தீவிரமாக யோசிப்பதற்கு எளிதில் நமது மனதை
ஒருமுகப் படுத்திவிடுகிறோம்.
ஒரு குறிப்பிட்ட காரியத்தை யோசிக்கும் போது பல கேள்விகளை எழுப்புகிறோம்.
சில உண்மைகளை மனதில் மீண்டும் யோசிக்கக் கூடிய வகையில் பதித்து வைத்துக்
கொள்கிறோம்.
நாம் மனதில் வைத்திருப்பவைகளை நினைவிலிருந்து எடுத்து யோசிக்கிறோம்.
இவைகளெல்லாம் தியானம் என்பதில் அடங்கும். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும்
அவருடைய சிந்தனையை அல்லது யோசிக்கும் எண்ணங்களை பொறுத்தது என்பதை
கீழ்க்கண்ட வசனம் போதிக்கிறது. ‘அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ அப்படியே
அவன் இருக்கிறான்’.நீதிமொழிகள் 22:7
நம்மைச் சுற்றிலும் நடைபெறும் நிகழ்ச்சிகள் நாம் பார்க்கிறவைகள்,
கேட்கிறவைகள், யோசிக்கிறவைகள் நமது மனப்போக்கையம் மனப் பான்மையையும்
பாதிக்கிறது, மாற்றுகிறது. நாம் பரிசுத்தத்திற்கேற்ற வகையில் மனப் பக்குவம்
அடைய வேதவசனங்களை தியானிக்க வேண்டும். நாம் வேத வசனங்களை அடிக்கடி
கருத்துடன் யோசிப்பது நம்முடைய எண்ணங்கள் தெளிவு பெறவும் தூய்மையடையவும்
தேவனுக்குப் பிரியமானதைச் செய்யும் வகையில் யோசிக்கவும் வழிவகுக்கிறது.
நன்றி: Dr.செல்வின்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|