கொஞ்சம் குடும்பத்த கவனியுங்க...
Tue Jan 08, 2013 2:50 am
அந்த
தந்தை கடின உழைப்பாளி, தன் குடும்பத்திற்கு சிறந்ததைக் கொடுக்க
இயன்றதையும் தாண்டி உழைப்பவர். அவர் குடும்பத்தோடு நேரம் செலவழிப்பது மிகக்
குறைவு. வேலை நேரத்திற்கு பின்
மேற்கொண்டு படித்து டிகிரி வாங்கிவிட்டால் இதை விட சிறந்த வேலை கிடைக்கும்
என்ற ஆசையில் மாலை நேர கல்லூரியில் சேர்ந்து கொண்டார். “அப்பா! எப்போ நீங்க
எங்க கூட ,இருப்பீங்க” என்று பிள்ளைகள் ஏக்கத்தில் கேட்கத் தொடங்கினர்.
அவர்களிடம் “உங்களுக்காகத் தானே நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். இந்த டிகிரி
மட்டும் வாங்கிவிடுகிறேன். அதுக்கப்புறம் உங்க கூடவே தான் இருப்பேன்
கண்ணுகளா” என்று வாக்குறுதி அளிப்பார்.
நாட்கள் சென்றது கடின
உழைப்பு தேர்வில் வெற்றியை பரிசாக்கியது. டிகிரி வாங்கியதால் இப்போது
இருப்பதை விட சிறந்த வேலை கிடைத்தது. நல்ல கம்பனியில் மேற்பார்வையாளராக பணி
அமர்த்தப்பட்டார். மேலும் ஒரு டிகிரி வாநிவிட்டால் அதிவேகமாக சம்பாதித்து
விடலாம் என்ற ஆசையில் மேற்கொண்டு படிக்க திட்டமிட்டார். தன் வீட்டில் அவர்
செலவழிக்கும் நேரங்கள் குளிக்கவும், சாப்பிடவும், தூங்கவுமே என்றாகிப்
போனது. “என்னங்க! எப்பதான் நீங்க வீட்ல இருப்பீங்க. உங்கட்ட மனசு விட்டு
பேச கூட முடியலைங்க” என்று புலம்பித் தள்ளும் மனைவியிடம் “உங்களுக்காகத்
தானே நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். இந்த ஒரு டிகிரி தான்’டி, அப்புறம்
உன் கூடவே தான் இருப்பேன்” என்பார்.
நாட்கள் சென்றது ‘முயற்சி
திருவினையானது’. முதுகலை பட்டம் பெற்றார். அதே கம்பனியில் மேற்பார்வையாளர்
பொறுப்பிலிருந்து மேலாளராக பதவி உயர்வு கிடைத்தது. பதவி உயர்வால் வேலைப்
பளு அதிகமானது. இரவு தூங்கக் கூட வீடு வர முடியாத நிலை. “செய்வன திருந்த
செய்” என்பதை தாரக மந்திரமாக கொண்டிருந்ததால் அலுவலகமே கதியென கிடந்தார்.
மாதத்தின் சில நாட்களே அவரை வீட்டில் காண முடியும்.
“எப்போதான்
நீங்க எங்க கூட நேரம் செலவிடுவீங்க?” என்று மனைவி கேட்கும் போது
“உங்களுக்காகத் தானே நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். அழகான ஒரு
அப்பார்ட்மென்ட் வாங்கிய பிறகு, அந்த புது வீட்டில் உங்களோடு தான் அதிக
நேரம் இருக்கப் போகிறேன்.” என்று வாக்களித்தார்.
நாட்கள் சென்றது
“கனவு இல்லம் நனவானது” புது வீட்டிற்கு வந்த முதல் நாள் இரவு மனைவியையும்,
பிள்ளைகளையும் அழைத்து “இத்தனை நாள் உங்களோடு நேரம் செலவழிக்காமல் வேலையே
கதி என்று இருந்துவிட்டேன். நாளை காலை முதல் உங்களோடு தான் என் நேரங்கள்
அத்தனையையும் செலவழிக்கப் போகிறேன்” என்று சொல்லி உறங்க சென்றார்.
அந்த தந்தை அடுத்த நாள் காலை கண் விழிக்கவில்லை.
பணம், வேலை என்ற வலையில் சிக்கி குடும்பம், கடவுள் என்ற ஆனந்த உறவுகளை இழந்த அனாதை ஆகிவிடாதிருங்கள்.
சங்கீதம் 127: 2 நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து,
வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப்
பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.
நன்றி: கதம்பம்
தந்தை கடின உழைப்பாளி, தன் குடும்பத்திற்கு சிறந்ததைக் கொடுக்க
இயன்றதையும் தாண்டி உழைப்பவர். அவர் குடும்பத்தோடு நேரம் செலவழிப்பது மிகக்
குறைவு. வேலை நேரத்திற்கு பின்
மேற்கொண்டு படித்து டிகிரி வாங்கிவிட்டால் இதை விட சிறந்த வேலை கிடைக்கும்
என்ற ஆசையில் மாலை நேர கல்லூரியில் சேர்ந்து கொண்டார். “அப்பா! எப்போ நீங்க
எங்க கூட ,இருப்பீங்க” என்று பிள்ளைகள் ஏக்கத்தில் கேட்கத் தொடங்கினர்.
அவர்களிடம் “உங்களுக்காகத் தானே நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். இந்த டிகிரி
மட்டும் வாங்கிவிடுகிறேன். அதுக்கப்புறம் உங்க கூடவே தான் இருப்பேன்
கண்ணுகளா” என்று வாக்குறுதி அளிப்பார்.
நாட்கள் சென்றது கடின
உழைப்பு தேர்வில் வெற்றியை பரிசாக்கியது. டிகிரி வாங்கியதால் இப்போது
இருப்பதை விட சிறந்த வேலை கிடைத்தது. நல்ல கம்பனியில் மேற்பார்வையாளராக பணி
அமர்த்தப்பட்டார். மேலும் ஒரு டிகிரி வாநிவிட்டால் அதிவேகமாக சம்பாதித்து
விடலாம் என்ற ஆசையில் மேற்கொண்டு படிக்க திட்டமிட்டார். தன் வீட்டில் அவர்
செலவழிக்கும் நேரங்கள் குளிக்கவும், சாப்பிடவும், தூங்கவுமே என்றாகிப்
போனது. “என்னங்க! எப்பதான் நீங்க வீட்ல இருப்பீங்க. உங்கட்ட மனசு விட்டு
பேச கூட முடியலைங்க” என்று புலம்பித் தள்ளும் மனைவியிடம் “உங்களுக்காகத்
தானே நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். இந்த ஒரு டிகிரி தான்’டி, அப்புறம்
உன் கூடவே தான் இருப்பேன்” என்பார்.
நாட்கள் சென்றது ‘முயற்சி
திருவினையானது’. முதுகலை பட்டம் பெற்றார். அதே கம்பனியில் மேற்பார்வையாளர்
பொறுப்பிலிருந்து மேலாளராக பதவி உயர்வு கிடைத்தது. பதவி உயர்வால் வேலைப்
பளு அதிகமானது. இரவு தூங்கக் கூட வீடு வர முடியாத நிலை. “செய்வன திருந்த
செய்” என்பதை தாரக மந்திரமாக கொண்டிருந்ததால் அலுவலகமே கதியென கிடந்தார்.
மாதத்தின் சில நாட்களே அவரை வீட்டில் காண முடியும்.
“எப்போதான்
நீங்க எங்க கூட நேரம் செலவிடுவீங்க?” என்று மனைவி கேட்கும் போது
“உங்களுக்காகத் தானே நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். அழகான ஒரு
அப்பார்ட்மென்ட் வாங்கிய பிறகு, அந்த புது வீட்டில் உங்களோடு தான் அதிக
நேரம் இருக்கப் போகிறேன்.” என்று வாக்களித்தார்.
நாட்கள் சென்றது
“கனவு இல்லம் நனவானது” புது வீட்டிற்கு வந்த முதல் நாள் இரவு மனைவியையும்,
பிள்ளைகளையும் அழைத்து “இத்தனை நாள் உங்களோடு நேரம் செலவழிக்காமல் வேலையே
கதி என்று இருந்துவிட்டேன். நாளை காலை முதல் உங்களோடு தான் என் நேரங்கள்
அத்தனையையும் செலவழிக்கப் போகிறேன்” என்று சொல்லி உறங்க சென்றார்.
அந்த தந்தை அடுத்த நாள் காலை கண் விழிக்கவில்லை.
பணம், வேலை என்ற வலையில் சிக்கி குடும்பம், கடவுள் என்ற ஆனந்த உறவுகளை இழந்த அனாதை ஆகிவிடாதிருங்கள்.
சங்கீதம் 127: 2 நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து,
வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப்
பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|