தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
தேநீர் – ஒரு சுவையான பானம்! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தேநீர் – ஒரு சுவையான பானம்! Empty தேநீர் – ஒரு சுவையான பானம்!

Wed Mar 27, 2013 1:14 am


தேநீர் – ஒரு சுவையான பானம்! 485559_385597608230136_1909614339_n


தேநீர் என்பது இயற்கை பானம். அதை வெந்நீரில் போட்டு வடிக்கட்டி குடிப்பதே
சிறந்த முறை. இதில் பால் சேர்க்கும்போது அதில் உள்ள வேதிப் பொருட்கள்
தேநீரில் உள்ள சத்துக்களை முறித்துவிடும். எந்த வகை டீத்தூளாக
இருந்தாலும், தண்ணீரில் டீத்தூளைப் போட்டு கொதிக்கவிடக் கூடாது. மாறாக,
டீத்தூளை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொண்டு அதில், நன்கு
கொதிக்கவைக்கப்பட்ட வெந்நீரை ஊற்ற வேண்டும். இரண்டு - மூன்று நிமிடங்களில்
டீத்தூளின் சாறு அனைத்தும் வெந்நீரில் கலந்துவிடும். அந்த நீரை அப்படியே
அருந்தலாம்'' என்கிறார் தொட்டபெட்டா டீ ஃபேக்டரியின் பொது மேலாளர்
வரதராஜன்.

டீயில் ஆறு விதமான பாலிபீனால்கள் உள்ளன. மேலும்
காஃபின், தியோபுரோமின், தியாஃபிலின் போன்ற அல்கலாய்டுகள் உள்ளன. இவை மனித
உடலுக்கு புத்துணர்வைத் தருபவை. சிகரெட் புகைப்பதால் உடலில் படியும்
நிகோடின் அளவை தியோபுரோமின் குறைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.


வயது முதிர்வைத் தாமதப்படுத்தும் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் இதில் அதிக அளவில்
உள்ளன. இது உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்பை குறைத்து உடலினை சமச்சீராக
பராமரிக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. எபிகேலோ கேட்சின்
என்ற பொருள் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது. பாலிபீனால்கள்
புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கின்றன. மேலும் மூளையில் ஆல்ஃபா
அலைகளைத் தூண்டி மனதுக்கு அமைதி தருகின்றன. இவை தவிர டீயில் வைட்டமின் பி,
சி, ஈ, கே; பொட்டாசியம், துத்தநாகம், மாங்கனீசு ஆகியவையும் உள்ளன. கலோரி
இதில் துளியும் இல்லை. அனைத்துச் சத்துக்களும் க்ரீன் டீயில் அதிகபட்ச
அளவிலும் டஸ்ட் டீயில் குறைந்தபட்ச அளவிலும் உள்ளன.

சில்வர் டிப்ஸ் டீ


இந்த வகை டீ தயாரிக்க தேயிலையின் மொக்குகள் மட்டுமே
பயன்படுத்தப்படுகின்றன. தேயிலையின் மொக்குகள் வெண்மையாக வெள்ளி நிறத்தில்
இருப்பதால் இதற்கு சில்வர் டிப்ஸ் டீ என்று பெயர் வந்துள்ளது. க்ரீன்
டீக்கு அடுத்தபடியாக இதில் தேயிலையின் சத்துக்கள் மிகுதியாக உள்ளன. இதன்
சுவை அதிகம்.

டஸ்ட் டீ


பெரும்பாலானவர்கள்
அருந்தும் டீ. துளிர், மொக்குகள் தவிர்த்து ஏனைய இலைகளைப் பறித்து
இயந்திரத்தின் உதவியுடன் இந்த டீத்தூள் தயாரிக்கப்படுகிறது. முழுமையாக
ஆக்சிடேஷன் செய்வார்கள் (சுமார் ஒன்றரை மணி நேரம்). இதனால் பச்சை நிறத்தில்
இருக்கும் தேயிலை பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். இதில் சுவையைவிட திடம்
அதிகமாக இருக்கும். காஃபின் அதிக அளவில் இருக்கும். இதனால் இந்த டீ
குடித்ததும் புத்துணர்வு தூண்டப்படும். மற்ற டீத்தூள் வகைகளைவிட இதில்
ஊட்டச்சத்துக்கள் குறைவே.

க்ரீன் டீ


தேயிலைச்
செடியின் முதல் இரண்டு துளிர் இலைகளும் அவற்றுடன் இணைந்த மொக்கும்
பறிக்கப்பட்டு, தயாரிக்கப்படும் டீத்தூள் இது. தேயிலையில் இருக்கும்
பெரும்பாலானச் சத்துக்கள் இதில் அப்படியே இருக்கின்றன. சுவையைப் பொறுத்தவரை
மற்ற டீ வகைகளைப் போல அல்லாமல் சற்று துவர்ப்பாக இருக்கும். அதனால்தான்,
இந்த டீத்தூளைக் கொண்டு டீ தயாரிக்கும்போது எலுமிச்சையைச்
சேர்த்துக்கொள்ளும்படிப் பரிந்துரைக்கிறார்கள்.

லெமன் டீ


லெமன் டீ ஒரு இயற்கையான கிருமிநாசினி. க்ரீன் டீயுடன் எலுமிச்சை சேர்வதால்
தேயிலையின் பயன்களுடன் எலுமிச்சையின் நற்பயன்களையும் இது தருகிறது.
உடலுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் புத்துணர்வை இந்த டீ தருகிறது.
செரிமானத்துக்கு உதவுவதுடன் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறவும்
பயன்படுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியையும் லெமன் டீ அளிக்கிறது.

ஓலாங் டீ


'ஓலாங்’ என்றால் சீன மொழியில் 'கருப்பு ட்ராகன்’ என்று பொருள். க்ரீன் டீ
போன்று இரண்டு துளிர் இலைகள் மற்றும் அதனுடன் சேர்ந்த மொக்கு ஆகியவற்றைப்
பறித்து பதமாக காயவைக்கப்படும் டீத்தூள் இது. கைகளால் நசுக்கித்
தயாரிக்கப்படுவது என்பதால் இதன் விலை அதிகம். மேலே சொன்ன டீத்தூள் வகைகளைப்
போல அல்லாது குளிர்ந்த காற்று மற்றும் வெப்பக் காற்றை மாற்றி மாற்றிக்
கொடுத்து பதப்படுத்தும் ஆக்சிடேஷன் முறையைப் பின்பற்றி தயாரிக்கப்படுகிறது.
எனினும், இதில் பதப்படுத்தப்படும் நேரம் குறைவு (அதிகபட்சம் 20
நிமிடங்கள்). க்ரீன் டீயைவிட இதில் சத்துக்கள் சற்று குறைவுதான்.

இஞ்சி டீ


தேநீருடன் இஞ்சி சேரும்போது இஞ்சியின் பலன்களும் அப்படியே கிடைக்கின்றன.
ஒற்றைத் தலைவலி, வாந்தி போன்றவற்றை இஞ்சி டீ பருகுவதால் தவிர்க்கலாம். உணவு
செரிமானத்துக்கும் இது உதவுகிறது. மூட்டுவலி மற்றும் மூட்டு
வீக்கத்துக்கும் நிவாரணம் தரும். ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.
சர்க்கரைக்குப் பதிலாக, இஞ்சியைத் தேனில் ஊற வைத்துப் பயன்படுத்தினால்
கூடுதல் சுவை கிடைக்கும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தேநீர் – ஒரு சுவையான பானம்! Empty Re: தேநீர் – ஒரு சுவையான பானம்!

Wed Mar 27, 2013 1:17 am
தேநீர் – ஒரு சுவையான பானம்! 5436_453594378054147_1683495_n

சுவையாக
தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். ஒரு கப் தேநீர் தயாரிக்க, அரை கப்
நீரில், இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, ஒரு தேக்கரண்டி தேயிலை போட்டு, நன்கு
கொதி வந்ததும், அத்துடன் அரை கப் பால்
சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டி அருந்தவும். சில
வித்தியாசமான, சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளையும் பார்ப்போம்.

மசாலா டீ: ஏலக்காய் – 6, கிராம்பு – 6, சோம்பு – 1 தேக்கரண்டி, தனியா – அரை
தேக்கரண்டி, ஜாதிக்காய் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, பட்டை போன்றவற்றை
பொடி செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்ததும், இந்த பொடியையும்,
தேயிலையுடன் சேர்த்து போட்டு கொதி வந்ததும், சர்க்கரை, பால் சேர்த்து,
வடிகட்டி அருந்தவும். இது, குளிர்காலத்தில் உடம்பிற்கு சூடு கொடுக்கும்;
அருமையான தேநீர்.
ரோஸ் டீ: தேநீர் கொதிக்கும் போது, புத்தம் புதிய
ரோஜா இதழ்களை போட்டு தேநீர் தயாரிக்கலாம். ரோஜாப்பூ இதழ்களை காயவைத்து, ஒரு
டப்பாவில் போட்டு வைத்தால், தேவையான போது உபயோகிக்கலாம்.
கோகோ டீ:
குழந்தைகள், சாக்லேட் மணம் கொண்ட கோகோ டீயை மிக விரும்புவர். இந்த டீயை
தயாரிக்கும் போது, தேவையான கோகோ பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு
அருந்தவும்.
இஞ்சி டீ: அஜீரணம், வயிற்று கோளாறுகளை நீக்க வல்லது இஞ்சி
டீ. இஞ்சியை தோலை நீக்கி, நன்கு இடித்து, டீ கொதிக்கும் போது போட்டால்,
இஞ்சி டீ ரெடி!
ஏலக்காய் டீ: ஏலக்காயை தோலுடன் பொடி செய்து, தேநீரில்
சேர்த்து கொதிக்க விடவும். பலகாரங்கள் செய்ய, ஏலப்பொடி செய்யும் போது,
ஏலக்காய் தோலை எறியாமல், சேகரித்து வைத்து உபயோகிக்கலாம்.
எலுமிச்சை
டீ: நீரை கொதிக்க விட்டு, தேயிலையை போட்டு நன்கு கொதித்ததும், இறக்கி
வடிகட்டவும். ஆறியதும், அதில் தேவையான எலுமிச்சை சாறு பிழியவும். தேவையான
சர்க்கரை சேர்த்து, சில ஐஸ்கட்டிகளைப் போட்டு, பால் இல்லாமல் குடிக்கவும்.
புதினா டீ: சில புதினா இலைகள், துளசி இலைகளோடு, சிறுதுண்டு இஞ்சியை
நசுக்கிப் போட்டு, 5 மிளகையும் பொடி செய்து போட்டு, நீரை கொதிக்க விடவும்.
பின், தேயிலை, சர்க்கரை, பால் கலந்து, வடிகட்டி அருந்தவும். இது, ஜலதோஷம்,
இருமல் போன்றவற்றிற்கு உடனடி நிவாரணம் அளிக்கும்.

குறிப்பு:

தேநீர் நம் இதயத்திற்கும், நுரையீரலுக்கும் பலமளிக்கும். நரம்பு, தசை
மண்டலங்களை சுறுசுறுப்பாக்கி, புத்துணர்வு தருகிறது. காபி அருந்துவதை விட,
தேநீர் அருந்துவது நல்லது. அளவோடு அருந்த வேண்டும். அளவுக்கு மிஞ்சினால்
நரம்புகளையும், வயிற்றையும் பாதிக்கும். மிக சூடாக அருந்தும் தேநீர்,
வயிற்றின் உட்சுவர்களை புண்ணாக்கும்.

நன்றி: செந்தில்வயல் தளம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum