தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இயேசுகிறிஸ்து கடவுளாக முடியுமா? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இயேசுகிறிஸ்து கடவுளாக முடியுமா? Empty இயேசுகிறிஸ்து கடவுளாக முடியுமா?

Tue Sep 13, 2016 9:05 am
JESUS IS TRUE LORD * இயேசுகிறிஸ்துவும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தபடியினால் அவர் எப்படி கடவுளாக முடியுமா?
***************************************************
1. ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதால், கடவுள் ஆக முடியாது, ஏனென்றால், பலர் பைபிளின் படி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்

2. இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது. 

3. இயேசு இறைவன் என்றால்? பின் ஏன் சோதிக்கப்பட்டார்? 

4. இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்று தெரிகிறது. 

5. இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா?

1. ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதால், கடவுள் ஆக முடியாது, ஏனென்றால், பலர் பைபிளின் படி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். 
============================================
இதைப் பற்றி சரியான வாதம் இப்படி இருக்கும், அதாவது, 

"இயேசு பரிசுத்த ஆவியை உடையவராக இருப்பதால் மட்டும் தேவகுமாரன் அல்ல, இயேசு பரிசுத்த ஆவியினால் பிறந்ததால், தான் அவர் தேவகுமாரன். “ 

இயேசு ("ஆண் பெண் இயற்கை உடலுறவு முறையில் இல்லாமல், பரிசுத்த ஆவியினால்") பிறந்தது போல இவ்வுலகத்தில் எத்தனை பேர் பிறந்துள்ளார்கள் என்று சொல்லமுடியுமா? 

ஆதாம் தாயுமில்லாமல், தந்தையுமில்லாமல் பிறந்தான் என்றுச் சொல்லவேண்டாம், ஏனென்றால், ஆதாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான், தேவனின் ஆவியிலிருந்து பிறக்கவில்லை. நான் கேட்பது, தாயுமில்லாமல் தந்தையுமில்லாமல் பிறப்பதைப் பற்றி இல்லை, தேவனுடைய ஆவியினால் உலக முறையின்படி அல்லாமல், பிறந்தவர் யார் ? 

ஒருவேளை இதை சில கிறிஸ்தவர்கள் தெரியாமல் சொல்லியிருந்தாலும் சரி. 
============================================
இதற்காக இயேசு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படவில்லை என்று நான் சொல்லவரவில்லை. பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது, இயேசு தேவகுமாரன் என்பதை நிருபிக்கும் சரியான‌ அளவுகோள் இல்லை என்றுச் சொல்கிறேன். 

2. இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது . 
============================================
இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது. பிசாசினால் அவர் சோதிக்கப்பட்டார். (ம‌த்தேயு 4:1-10) இந்த சந்தர்பங்களில் பரிசுத்த ஆவி அவரை விட்டு விலகி விட்டது என்று தெரிகின்றது .

பரிசுத்த ஆவி இயேசுவை விட்டு விலகிவிட்டது என்று சொல்லும் ஒரு வசனத்தை உங்களால் காட்டமுடியுமா? 

"விலகியிருக்கலாம்" அல்லது "விலகிவிட்டு இருக்கும் என்று தெரிகின்றது " என்று கற்பனை செய்துக்கொண்டு சொல்லமுடியுமே தவிர, இதற்கு ஆதாரம் காட்டமுடியாது. 

ஆனால், இயேசு சோதிக்கப்படும் போது, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார் என்று எங்களால் நிருப்பிக்க முடியும். 

2.1 ஞானஸ்நானமும் பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல் இறங்குவதும் : 
இயேசு ஞானஸ்நானம் பெற்று கரையேறும் போது, பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர் மேல் இறங்கினார். தேவன், இயேசுவைப் பற்றிய சாட்சியை இங்கு எல்லாருக்கும் முன்பாக தெரிவிக்கிறார். 

லூக்கா 3: 21. ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;22. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார் . வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது . 
மேலே பார்த்த வசனத்தின் படி, இயேசு சோதிக்கப்பட போவதற்கு முன்பு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தார் என்பதை அறிந்துக்கொள்ளலாம். 

2.2 இயேசு சோதிக்கப்பட பரிசுத்த ஆவியானவரே அழைத்துச் செல்கிறார் : 

மத்தேயு: 4:1. அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்குஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். 

மாற்கு: 1:12. உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார். 

லூக்கா 4:1. இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானைவிட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு,

இயேசு சோதிக்கப்பட்டதைப் பற்றி மூன்று சுவிசேஷங்கள் சொல்கின்றன, இந்த மூன்று நற்செய்தி நூல்களிலும், இயேசு ஆவியானவரினால் தான் சோதிக்கப்பட அழைத்து செல்லப்பட்டார் அல்லது ஆவியானவரின் ஏவுதலினால் இயேசு சென்றார் என்று மிகவும் தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள் காட்டிய‌ மத்தேயு அதிகாரம் 4 வசனங்கள் 1- 10 வரையுள்ள வசனங்களை படித்திருந்தாலே போதுமே, இயேசுவோடு அல்லது இயேசுவை வனாந்திரத்திற்கு அழைத்துச் சென்றது ஆவியானவர் என்று தெளிவாக புரிந்துவிடும். மேற்கோள் காட்டிய வசனங்களை நிதானமாக படித்திருந்தாலே போதும், புரிந்திருக்கும். 

ஒருவேளை "நாம் நம் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது, பள்ளிக்கூட வாசல் வரை சென்றுவிட்டு, அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு, டா டா சொல்லி, திரும்பி வீட்டிற்கு வந்துவிடுகிறோமே, அப்படி, ஆவியானவரும் வானாந்திரம் வரை இயேசுவை விட்டுவிட்டு, திரும்பி வந்துவிட்டார் என்று தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இயேசுவை விட்டு பரிசுத்த ஆவியானவர் விலகிவிடவில்லை, விலகவேண்டிய அவசியமுமில்லை. ஏனென்றால், இயேசுவைப் பற்றி யோவான் ஸ்நானகன் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். இயேசு பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்றுச் சொல்கிறார். 

யோவான்: 1:33. நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னைஅனுப்பினவர்; ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ , அவரே பரிசுத்தஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார்.34. அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றான் . 

இயேசுவிற்கு தேவன் அளவில்லாமல் ஆவியானவரை கொடுத்துள்ளதாக யோவானே சொல்லியுள்ளார். தன் சிடர்களுக்கும் ஆவியானவரை கொடுப்பதாக இயேசு சொன்னார். அவர்களோடு எப்போதும் ஆவியானவர் இருப்பதாக இயேசு சொன்னார். 

யோவான் 3:34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமதுஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். 

யோவான்: 15:26. பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்துபுறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச்சாட்சிகொடுப்பார் . 

2.3 சோதிக்கப்பட்ட பின்பு, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு திரும்பி வருதல் : 
சோதிக்கப்பட போகும் போது மட்டுமல்ல , திரும்பி வரும்போதும் இயேசு பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிறைந்தவராக வந்தார் என்று வசனம் சொல்கிறது. 

லூக்கா 4:14. பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று. 

இயேசுவை விட்டு ஆவியானவர் விலகியிருந்தால், சோதிக்கப்பட்ட பின்பு இயேசு பலவீனமாக அல்லவா இருந்திருப்பார், ஆனால், வசனம் சொல்கிறது, அவர் ஆவியானவரின் பலத்தினால் திரும்பிவந்தார் . 

2.4 "சோதிக்கப்படுதல்" என்பதை தவறாக கருதுதல்
============================================
"ஒருவர் சோதிக்கப்படுகிறார்" என்றுச் சொன்னால், அவரை விட்டு பரிசுத்த ஆவியானவர் விலகிவிட்டார் என்று நினைக்கிறார்கள். வேறு வகையில் சொல்லவேண்டுமானால், "நாம் சோதிக்கப்படுகிறோம்" என்றுச் சொன்னால், நம்மை விட்டு ஆவியானவர் விலகிவிட்டார் என்று பொருள் சொல்கிறார்கள். 
இது தவறான கருத்தாகும். எப்படி என்று புரிந்துக்கொள்ள மேற்கொண்டு படியுங்கள். 

2.4.1 சோதிக்கப்படுதல் பாவமில்லை, சோதனையில் தோல்வியடைதல் தான் பாவம் : 
============================================
"ஒருவர் சோதிக்கப்பட்டார்" என்று வைத்துக்கொண்டால், அவரை தீமையிலிருந்து காப்பாற்றும் சக்தி ( கிறிஸ்தவத்தை பொருத்தவரையில் பரிசுத்த ஆவியானவர்) அவரை விட்டு விலகிவிட்டது, அதனால், தான் தீமையினால்(பிசாசினால்) அவர் சோதிக்கப்படுகிறார் என்று அல்ல. 
ஒரு மனிதன் சோதிக்கப்பட்டால் - அவன் பாவம் செய்ததாக அர்த்தம் அல்ல, ஆவியானவர் அவரைவிட்டு விலகிவிட்டார் என்று அர்த்தமல்ல . 

ஆனால், ஒரு மனிதன் சோதிக்கப்படும் போது, அதில் விழுந்துவிட்டால், அதாவது தோல்வியடைந்து விட்டால் தான் அது பாவமாக கருதப்படும், இந்த நேரத்திலும் ஆவியானவர் அவனை விட்டு விலகமாட்டார். எப்படி என்பதை கீழே உள்ள உதாரணத்தை படிக்கவும் . 

உதாரணம் :
============================================
ஒரு மனிதன் இயேசுவை தன் உள்ளத்தில் தெய்வம் என்று நம்பி ஏற்றுக்கொள்கிறான் என்று வைத்துக்கொள்வோம் (இதையே இரட்சிக்கபடுதல் என்று கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள்). 
ஒரு மனிதன், இயேசுவை தன் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளும் போது, அவனது உள்ளத்தில் ஆவியானவர் வந்து விடுகிறார். அவன் இனி நான் தவறுகள் செய்யமாட்டேன், என்று முடிவு செய்கிறான் (கவனிக்கவும் முடிவு மட்டும் செய்கிறான், ஆனால், மரணம் வரை அவன் அப்படி வாழவேண்டும் என்பது தான் முக்கியம்). அவன் பரிசுத்தமாக வாழ்வதற்கு, வாராவாரம் சபையில் அவன் கேட்கும் போதனைகளும், அவன் அனுதின பைபிள் வாசிப்பும், பரிசுத்த ஆவியின் எச்சரிப்பும், அவன் ஜெபமும், அவன் குடும்ப நபர்களின் உட்சாகமும் அவனுக்கு உதவி செய்கின்றன. 

இவன் ஒரு அரசு ஊழியர் என்று வைத்துக்கொள்வோம், இவன் யாரிடமும் இலஞ்சம் வாங்குவதில்லை என்று முடிவும் செய்துள்ளான். 

ஒரு நாள், இவன் இலஞ்சம் வாங்குவதற்கு ஏற்ற சூழல் ஏற்படுகிறது, அதாவது, ஒரு பெரிய பணக்கார மனிதர் இவரிடம் வந்து, இவர் செய்யவேண்டிய வேலையை சீக்கிரமாக செய்தால், பல ஆயிரம் பணமும் தருவதாகச் சொல்கிறார். அதாவது, தன் கடமையை சீக்கிரமாக செய்தாலே பணம் தருவதாகச் சொல்கிறார். இந்த பணத்தை வாங்கிக்கொண்டு, இவர் மற்ற வேலையை பக்கத்தில் வைத்துவிட்டு, இந்த பணக்கார மனிதனுடைய வேலையை செய்துத் தரலாம். இதனால், ஒன்றும் பிரச்சனை இல்லை, இவர் மாட்டிக்கொள்ள வாய்ப்பும் இல்லை. இது ஒரு அருமையான வாய்ப்பு, அதாவது, பல ஆயிரங்கள் ஒரு நாளில் சம்பாதிப்பதற்கு. 
============================================
இதைத் தான் நான் சோதனை என்றுச் சொல்வேன். இந்த மனிதனுக்கு சோதனை வந்தது, இது பாவமில்லை. இப்போது பரிசுத்த ஆவியானவர் இவரை விட்டு விலகவேண்டிய அவசியமுமில்லை, காரணம் சோதிக்கபடுவது பாவமல்ல். மனிதனாக பிறந்த எல்லாரும் சோதிக்கபடுகிறார்கள், அதாவது பரிட்சை எழுதுகிறார்கள். யாரொ ஒருவன் வந்து நாம் தவறு செய்ய நம்மை தூண்டுவான், அதற்கு நாம் காரணம் ஆகமுடியாது. இதனால் பரிசுத்த ஆவியானவரும் நம்மைவிட்டு விலகவேண்டிய அவசியமுமில்லை. இந்த சோதனையில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொருத்து தான் ஆவியானவரின் செயல்பாடும் இருக்கும். 
இந்த உதாரணத்தில், இவன் வீட்டிற்குச் செல்கிறான், சிந்திக்கிறான், ஆவியானவர் மனசாட்சியோடு பேசுகிறார், நீ பணம் வாங்காதே, உன் கடமையை மட்டும் சரியாகச் செய் என்கிறார். பல பைபிள் வசனங்கள் மனதிலே வந்துச் செல்கிறது, தன் போதகர் சொன்ன அறிவுரைகள் மனதில் வந்துச் செல்கிறது. 

பதில்: 1 
============================================
மறு நாள், அலுவலகம் செல்கிறான், அந்த நபருக்குச் சொல்கிறான், உங்கள் பணம் எனக்கு வேண்டாம், ஆனால், என் கடமையைச் செய்ய எனக்கு சட்டப்படி இத்தனை நாட்கள் ஆகும், அது வரை நீங்கள் காத்திருக்கவேண்டும், இத்தனை நாட்கள் கழித்து வாருங்கள், உங்கள் வேலை முடிந்திருக்கும், என்றுச் சொல்கிறான் என்று நினைத்துக்கொள்ளுங்கள். 
------------------------------------------------------------------------------------------------------
இவன் சோதிக்கப்பட்டான், ஆனால், அதில் ஜெயித்தான், பரிட்சை எழுதினான் ஆனால், வெற்றிப்பெற்றான் . 
------------------------------------------------------------------------------------------------------
எனவே, என்னை பொருந்தவரையில், சோதிக்கபடுவது ஒரு பாவமில்லை, அதில் தோல்வி அடைதல் தான் பாவம் . இந்த எடுத்துக்காட்டில், இவனது இந்த செயலால், இவனுள் இருக்கும் ஆவியானவர், "சபாஷ் என் மகன் வெற்றிப் பெற்றான் " என்றுச் சொல்லி சந்தோஷப்படுவார். 
அல்லது 

பதில்: 2 
============================================
ஒருவேளை மறுநாள் சென்று, அந்த மனிதரிடம் பணம் பெற்றுக்கொண்டு,மற்ற நியாயமான வேலையை பக்கத்தில் வைத்து, இவரது வேலையை முடித்துக்கொடுக்கிறார் என்று நினைத்துக்கொள்ளுங்கள். 
------------------------------------------------------------------------------------------------------
இப்போது இந்த மனிதன் சோதிக்கப்பட்டான், அப்போது இவன் தவறு செய்தனாக கருதக்கூடாது, ஆனால், சோதனையில் விழுந்துவிட்டான், அதாவது தோல்வியடைந்தான், இது தான் பாவம். ஆவியானவர் துக்கமடைவார் . 
------------------------------------------------------------------------------------------------------
இப்போது இவனை விட்டு ஆவியானவர் விலகுவாரா என்றால், இப்போதும் இல்லை.அதாவது நான் புரிந்துக்கொண்ட கிறிஸ்தவ கோட்பாடுகளின் படி: 

இவன் செய்த குற்றத்தை நியாபகத்தில் கொண்டு வந்து ஆவியானவர் இவனை கடிந்துக்கொள்வார், மனசாட்சி இவனை குத்தும், மனசாட்சி சொல்லிக்கொண்டே இருக்கும், நீ ஒரு தவறு செய்தாய் என்று... இது எத்தனை நாட்கள் தொடரும் என்றால், ஒன்று இவன் மறுபடியும் மனம் திரும்பும் வரையில் தொடரும். இவன் திருந்திவிட்டால், பிறகு பரிசுத்தமாக வாழ்ந்தால், இப்படிப் பட்ட தவறுகள் மறுபடியும் செய்யாமல் இருந்தால், ஆவியானவர் இவனை விட்டு விலகமாட்டார். 

ஆனால், ஆவியானவர் சொல்வதையும், மனசாட்சியில் குத்தப்படுகிறதையும் பொருட்படுத்தாமல், இவன் இதை ஒரு வாடிக்கையாகக் கொண்டு மறுபடியும் செய்துக்கொண்டே இருந்தால், அப்போது ஆவியானவர் தானாகவே இவனை விட்டு விலகிவிடுவார், அதாவது, இவன் மனசாட்சி செத்துப்போகும். இனி எந்த பயமுமில்லாமல் குற்றங்கள் தவறுகள் செய்துக்கொண்டு இருப்பான். 

எனவே, ஆவியானவர் எப்போது ஒரு மனிதனை விட்டு விலகுவார் என்றால், அடிக்கடி கடிந்துக்கொள்ளப் பட்டும், தன்னை திருத்திக்கொள்ளாமல் தன் மனதை கடினப்படுத்துகிறவனை விட்டு ஆவியானவர் விட்டுவிலகுவார் , இதையே கிறிஸ்தவ முறையில், பின்மாற்றமடைதல் என்றுச் சொல்வார்கள். 

எபிரெயர்: 6: 4. ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும்,பரிசுத்த ஆவியைப் பெற்றும்,5. தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,6. மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.7. எப்படியெனில, தன்மேல் அடிக்கடிபெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.8. முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது;சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு .

முஸ்லீம்கள் கேட்கலாம், ஆவியானவர் ஒரு இரட்சிக்கப்பட்டவனின் உள்ளத்தில் வந்தால், ஏன் அவனை பாவம் செய்யாமல் தடுக்கமுடியவில்லை? 
============================================
கிறிஸ்தவத்தைப் பற்றி ஒன்றை எல்லாரும் சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும், அது என்னவென்றால், தேவன் மனிதனுக்கு சுயமாக சிந்திக்கும், முடிவு எடுக்கும்( Free Will) திறமையை கொடுத்துள்ளார். எதையும் கட்டாயப்படுத்தமாட்டார், நல்ல வழி எது தீய வழி எது என்றுச் சொல்வார், தவறாக நடந்துக்கொண்டால், என்ன தண்டனை கிடைக்கும் என்றுச் சொல்வார், ஆனால், முடிவு எடுக்கும் உரிமையை மட்டும் அவனிடமே விட்டு விடுவார். 

எனவே, நாம் எடுக்கும் முடிவுகளின் படித்தான் நம் வாழ்க்கை அமையும். இயேசு கதவுக்கு வெளியே நிற்பார், தட்டுவார், தான் யார் என்றுச் சொல்வார், அதைக் கேட்டு கதவை திறந்தால், நம் உள்ளத்திலே வருவார். ஆனால், நாம் கதவை திறக்கவில்லையென்று கதவை உடைத்துக்கொண்டு உள்ளே கட்டாயத்தின் பேரில் வரமாட்டார். 

[இந்த விசயத்தில் இஸ்லாம் வேறுபடுகிறது, ஒருவன் முஸ்லீமாக மாறிய பிறகு, அதிலிருந்து வெளியே வருவேன் என்றுச் சொன்னால், அவனுக்கு மரண தண்டனை என்று இஸ்லாம் சொல்கிறது. அதனால், உயிருக்கு பயந்து இஸ்லாமிலேயே இருந்துவிடுகிறான், அதனால் என்ன பிரயோஜனம்? நாளைக்கு மரணம் வந்தபிறகு, அல்லா இவனைப் பார்த்து, என் ஊழியனே, உனக்காக சொர்க்கம் தயாராக உள்ளது என்றுச் சொன்னால், இவன் சிரிப்பான், உயிருக்கு பயந்து நான் இஸ்லாமியே இருந்தேன், உம்மில் பக்தியுள்ளவனாக நான் இத்தனை நாட்கள் வாழவில்லை என்றுச் சொல்வான். 

இப்போது முஸ்லீம்கள் சொல்வீர்கள், இப்படிப் பட்டவனுக்கு அல்லா சொர்க்கம் கொடுக்கமாட்டார் என்று, அப்படியானால், ஏன் அவனை இத்தனை ஆண்டுகள் இஸ்லாமில் நம்பிக்கை இல்லையானாலும், பயப்படவைத்து இஸ்லாமியே இருக்கச்செய்தீர்கள். அவன் இஸ்லாமை விட்டு வெளியே போகும் போது அனுப்பியிருந்தால், குறைந்த பட்சம், இந்த உலகத்திலாவது அவன் சந்தோஷமாக தான் நம்பும் நம்பிக்கைப்படி (இந்துவாகவோ, கிறிஸ்துவனாகவோ, நாத்தீகனாகவோ..) வாழ்ந்து இருப்பான் அல்லவா..? நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இஸ்லாம் போல கிறிஸ்தவத்தில் கட்டாயம் இல்லை என்பதை சொல்லவருகிறேன். இதைப் பற்றி இன்னும் அதிகமாக தனி கட்டுரையில் சிந்திக்கலாம் ] 

எனவே, சோதிக்கப்படுவது பாவமில்லை, ஆவியானவர் பிசாசினால் சோதிக்கபடுகின்ற மனிதனை விட்டு போகவும் மாட்டார், சோதிக்கப்படும்போது தோல்வி அடைந்தால் தான் தவறாகும். பரிட்சை எழுதினால் தானே, நம் திறமை வெளிப்படும். 

நம் திறமையை, பரிசுத்தத்தை, இறைவன் மீது நாம் வைத்துள்ள திடமான நம்பிக்கையை வெளிக்காட்ட நமக்கு வரும் சந்தர்ப்பம் தான் சோதிக்கப்படுவது என்பது . 
============================================
[எகிப்திலே யோசேப்பிற்கு போத்திபாரின் மனைவி மூலம் சோதனை வந்ததால் தான், யோசேப்பு எப்படி தன் பரிசுத்தத்தை காத்துக்கொள்ள முயற்சி எடுத்தான் என்று நமக்கு தெரியவந்தது, அதுபோல]

இயேசுவை விட்டு ஆவியானவ‌ர் விலகிவிட்டார் என்று நினைத்துக்கொண்டார். 
============================================
கிறிஸ்தவ கோட்பாடுகளின்படி அல்ல, பொதுவாகவே, நாம் சோதிக்கப்படுவது தவறில்லை, ஆனால், ஜாக்கிரதையாக இருந்து அதில் வெற்றி பெற முயலவேண்டும். இது இஸ்லாமுக்கும் பொருந்தும், ஒரு முஸ்லீம் சோதிக்கபடுவது பாவமில்லை, அவன் அதில் விழுந்துவிட்டால் தான் அது பாவம் என்று நான் நினைக்கிறேன். 

ஒரு முஸ்லீம் வியாபாரம் செய்யும் போது, மற்றவர்களை ஏமாற்ற கிடைக்கும் வாய்ப்புக்கள் அது அவனுக்கு சோதனை தான், ஒரு நல்ல மாணவனுக்கு பரிட்சை எழுதும் போது, தனக்கு தெரியாத கேள்வியின் பதிலை மற்றவனை பார்த்து எழுத கிடைக்கும் வாய்ப்பு ஒரு சோதனை தான், தவறான வழியில் சம்பாதிக்க ஒரு முஸ்லீமுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஒரு சோதனை தான், ஆனால், இதில் வெற்றிப்பெற்றால், அது பாவமாகாது, அவனைப் பற்றி இறைவன் சந்தோஷப்படுவார். 

ஆவியானவர் விலகிவிட்டார் எனவே, இயேசு சோதிக்கப்பட்டார் என்ற தோரனையில் நீங்கள் நினைப்பது, ஒரு மிகப்பெரிய தவறான புரிந்துக்கொள்ளுதலாகும். ஆவியானவர் நம்முடனே இருக்கும் போது தான் நாம் சோதிக்கப்படுகிறோம், தோல்வியோ வெற்றியோ பெருகிறோம். அதன் பிறகு தான் நம்மோடு ஆவியானவர் இருக்கமுடியுமா? இல்லையா? என்பது நிர்ணயிக்கப்படும் .

ஆமென் ..
(இயேசுவே வழி, சத்தியம், ஜீவன்!)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இயேசுகிறிஸ்து கடவுளாக முடியுமா? Empty Re: இயேசுகிறிஸ்து கடவுளாக முடியுமா?

Tue Sep 13, 2016 9:06 am
JESUS IS TRUE LORD * (மத்தேயு 19:17, மாற்கு 10:18) வசனங்களின் படி .இயேசு தன்னை நல்லவன் இல்லை என்று சொல்லும் போது எப்படி தெய்வாக முடியும்?
*****************************************************
இயேசுக்கிறிஸ்து கடவுள் இல்லை அவர் தன்னையே நல்லவன் அல்ல என்று சொல்லியுள்ளார் என்று சுட்டிக் காட்டும் வேதவசனம், “தம்மை நல்ல போதகரே“ என்று அழைத்தவனுக்கு இயேசுக்கிறிஸ்து கொடுத்த பதிலாகும்
அதற்கு அவர்
:============================================
“நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே (மத்தேயு 19:17, மாற்கு 10:18)=================================

என்று இயேசுக்கிறிஸ்து கூறியமையால் அவர் நல்லவர் அல்ல என்றும், இயேசுக்கிறிஸ்துவின் கூற்றின்படி தேவன் மட்டுமே நல்லவராயிருப்பதால், இயேசுக்கிறிஸ்து தேவன் அல்ல. அவர் சாதாரண மனிதன் என்று கூறுகின்றனர். இயேசுக்கிறிஸ்துவின் கூற்று இத்தகைய அர்த்தம் கொண்டதல்ல. தாம் நல்லவர் இல்லை என்று அவர் இவ்வசனத்தில் கூறவில்லை. மாறாக தேவன் மட்டுமே நல்லவர் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகளில் ஒரு கேள்வியும் இருப்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். தன்னை நல்ல போதகரே என்று தம்மை அழைத்தவனிடம்

(மத். 19.16) “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?“ என்று கேட்கிறார்.
=======================================
அதாவது, நீ என்னை இவ்வாறு அழைப்பதற்கான காரணம் என்ன என்று அவனிடம் கேட்கிறார். ஏனென்றால் “அக்காலத்தில் யூதர்கள் தங்கள் மதத்தலைவர்களை இவ்வாறு “நல்ல போதகரே“ என்று அழைப்பதில்லை.தேவனை மட்டுமே இவ்வாறு அழைக்க முடியும் என்பதே அக்காலத்து யூதரது கருத்தாயிருந்தது. எனவே, அவன் தேவனுக்கு மட்டுமே உரிய தன்மையை அதாவது நல்லவர் என்னும் தன்மையை இயேசுக்கி்றிஸ்துவுக்கு உபயோகித்தமையால் நீ என்னை இவ்வாறு நல்லவன் என்று சொல்வதற்கான காரணம் என்ன? தேவனை அழைப்பதைப் போல நீ என்னை ஏன் அழைக்கிறாய்? என்று அவனி்டம் கேட்டார். இதனால்தான் தேவன் மட்டுமே நல்லவர் என்பதையும் இயேசுக்கிறிஸ்து அவனுக்குச் சுட்டிக் காட்டியுள்ளார். “அவன் தம்மை நல்லவன் என்று அழைக்க வேண்டுமானால், தாம் தேவன் என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை அவனுக்கு உணர்த்துவதற்காகவே இயேசுக்கிறிஸ்து இவ்வாறு கூறியுள்ளார்.

இயேசுக்கி்றிஸ்து வார்த்தைகள் “நான் தேவனாக இல்லாதுவிட்டால் நீ என்னை இவ்வாறு அழைக்க வேண்டாம். ஏனென்றால் தேவன் மட்டுமே நல்லவர் எனும் அர்த்தமுடையது எனவே, “இவ்வசனம் இயேசுக்கி்றிஸ்து தேவத்துவத்தை மறுதலிக்கவில்லை. மாறாக அதை மறைமுகமாக அறிய தருகிறது.

இயேசுகிறிஸ்து மெய்யான தேவனாக இருக்கிறவர். அவர் மனிதனுக்காகவே மனித சாயலாகினார். இயேசு மனிதனாக இருக்கும் போதே தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் அவருக்குள்ளே வாசமாயிருந்தது. உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே (மத்தேயு 4:10 ) என்று சாத்தானிடம் சொல்லிய இயேசு கிறிஸ்துவே தான் தேவனாக இருக்கிறபடியால் தன்னை துதிப்பதற்கு அனுமதித்தார். உதாரணமாக:
============================
இயேசு பிறந்த பின்பு சாஸ்த்திரிகள் வந்து இயேசுவை துதித்தார்கள் என்று மத்தேயு 2:11 ல் இவ்வாறாகச் சொல்லப்படுகிறது. “அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு (worshipped), தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.”

இன்னுமாய்,
=============
மத்தேயு 21:9ல் முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

இன்னுமாய்,
=============
யோவான் 12:13ல் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.

இன்னுமாய்,
============
மத்தேயு 14:33ல் அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்(worshipped).

இன்னுமாய்,
=============
அப்போஸ்தலர்களும் இயேசுவைப் பணிந்து கொண்டார்கள்.
மத்தேயு 28:9. அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

யோவான் 20:28. தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்

இயேசுகிறிஸ்து மனிதர்கள் அவரைப் பணிந்து கொள்வதையும், ஸ்த்தோத்தரிப்பதையும் தடுக்கவில்லை.காரணம் அவர் மனிதனல்ல. ஆனால் பேதுருவாகிய மனிதன் தன்னை ஒருவன் பணிவதைப் பார்த்து அதைத் தடுக்கின்றான்.

அப்போஸ்தலர் 10:25-26 பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். 26. பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்.

ஆகவே இயேசு இங்கே மத்தேயு 19:17, மாற்கு 10:18 களில் தன்னை நல்லவன் என்று சொல்வானேன்? என்று கேட்டமைக்கு காரணம் இயேசு நல்லவன் இல்லை என்று அர்த்தமல்ல. தேவன் ஒருவரே நல்லவர் என்று யூதர்கள் நிச்சயித்து இருக்க இயேசு தேவன் இல்லை என்றவர்கள் அவன் தம்மை நல்லவன் என்று அழைக்க வேண்டுமானால், தாம் தேவன் என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை அவனுக்கு உணர்த்துவதற்காகவே இயேசுக்கிறிஸ்து இவ்வாறு கூறியுள்ளார்.

இயேசுகிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கின்றார்.! 

ஆமென் ..
(இயேசுவே வழி, சத்தியம், ஜீவன்!)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இயேசுகிறிஸ்து கடவுளாக முடியுமா? Empty Re: இயேசுகிறிஸ்து கடவுளாக முடியுமா?

Tue Sep 13, 2016 9:07 am

DEC

25




இயேசுகிறிஸ்து சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்


இயேசுகிறிஸ்து கடவுளாக முடியுமா? 12

ESUS IS TRUE LORD * இயேசுகிறிஸ்து சர்வசிருஷ்டிக்கும் முந்தின பேறு என்றால் என்ன அர்த்தம்?
****************************************************
கொலேசேயர் 1:15 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்
=============================================
இங்கே இந்தவசனத்தை வாசித்ததும் விமர்சகர் உடனே இவ்வாறாகச் சொல்லிவிடுவார்கள்,

“இயேசு தேவனின் படைப்பு. அவர் படைப்புக்களிலே தேவன் முந்திய விஷேசமானவர்” என்று. ஆனால் அப்படி அல்ல. ஒரு அதிகாரத்தில் உள்ள ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு அதைத் தூக்கிப்பிடித்து கதைத்துக் கொண்டு இருப்பதுஅறிவுடைமை ஆகாது. 

இந்த அதிகாரத்தில் 15-21 வசனங்கள் இவ்வாறாகச் சொல்கிறது.
=============================================
கொலேசேயர் 1:15-21 15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். 16. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. 17. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. 18. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். 19. சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், 20. அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. 21. முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்

இங்கே இந்த வசனத்தில் இயேசுகிறிஸ்து சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் என்று கூறப்பட்டுள்ளது. 
=============================================
முந்தின பேறு என்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையானது "G4413 - prototokos" ஆகும். 

இந்த வார்த்தையானது இயேசுகிறிஸ்துவை சிருஷ்டிப்புகளில் முதன்மையானவர் என்று அர்த்தப்படுத்தாமல் எல்லாவற்றைப் பார்க்கிலும் முதன்மையானவர் இயேசுகிறிஸ்து என்று அர்த்தப்படுத்துகிறது. அதாவது தேவனுக்குள்ள உரிமை மற்றும் அதிகாரம் எந்தளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு இயேசுகிறிஸ்துவின் உரிமை அல்லது அதிகாரம் முதன்மையானது என்று சொல்லப்படுகிறது.

வேதம் சொல்கிறது, இயேசுகிறிஸ்து தேவனுடைய மகிமையின் பிரகாசமும், தேவனுடைய சொரூபமும்,சர்வத்தையும் தம் வசனத்தால் தாங்குகிறவராயும், உன்னத்தேவனுடைய மகிமையிலே இருக்கிறவராகவும் இருக்கிறார் (எபி 1:3).

இயேசுகிறிஸ்துவே தேவனின் வார்த்தை.இந்த வார்த்தைதான் தேவன் என்று யோவான் 1:1 தெளிவாகச் சொல்கிறது. 

இன்னுமாய் வேதம் சொல்கிறது உலகம் இயேசுவாலேதான் உண்டாயிற்று என்று(யோவா 1:10). எப்படியெனில் வேதம் சொல்கிறது, கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது(சங்கீதம் 33:6) என்று. 

இயேசுகிறிஸ்துதான் தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது.
=============================================
இன்னுமாய் வேதம் சொல்கிறது அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்(சங்கீதம் 107:20).

வேதாகமத்தில் தேவனது திட்டமும் அவருடைய வார்த்தைகளும் எப்படி இருக்கிறது என்று சரியாக தெரிந்து கொள்ளாத வரையில் இயேசு கிறிஸ்துவின் உண்மையான தெய்வீக மகிமையை அறிந்து கொள்ளுதல் அனேகம் பேருக்கு மிக்க கஷ்ட்டமாக இருக்கலாம். ஆனால் வேத வசனம்தெளிவாகவே சொல்லுகிறது இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் என்று(1யோவான் 5:20).
=============================================
முந்தின பேறு
=============================================
கொலோயேர் 1:15 -21 
15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். 

Who 3739 is 2076 5748 the image 1504 of the invisible 517 God 2316, the firstborn 4416 of every 3956 creature 2937

16. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. 17. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. 18. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். 19. சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், 20. அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. 21. முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.

இவ்வசனத்தில் இயேசுக்கிறிஸ்து “சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு “சகலமும் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்னர் சிருஷ்டிக்கப்பட்டவர்“ என்று கூறுகின்றனர். இதில “முந்தினபேறுமானவர்“ என்னும் வார்த்தை “முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர்“ என்னும் அர்த்தமுடையது என்பதே வேதபுரட்டர்களின் தர்க்கமாகும். இதனால், இயேசுக்கிறிஸ்து “யெகோவா குடும்பத்தின் மூத்தபிள்ளை என்று இவர்கள் கூறுகின்றனர். ஆங்கில வேதாகமத்தில் firstborn என்று மொழிபெயர்க்கப்பட்டிருப்பதும் இவர்களது தர்க்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. 

எனினும் மூலமொழியில் இப்பதம் (Prototokos) “காலத்தில் முந்தினவர்“ என்றும் “தரத்தால் உயர்ந்தவர்“ என்னும் இரு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. 

இயேசுகிறிஸ்து முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர் என்று போதிப்பவர்கள் “காலத்தால் முந்தினவர்“ என்னும் அர்த்தத்திலேயே இப்பதத்தை விளக்குகின்றனர். 

ஆனால் கொலோசெயர் 1.15 ஐத் தொடர்ந்து வரும் வசனங்களைக் கருத்திற் கொள்ளும்போது இயேசுக்கிறிஸ்து “காலத்தால் முந்தியவர்“ எனும் அர்த்தம் இவ்வசனத்திற்குப் பொருத்தமற்றது என்பதை அறிந்திடலாம். ஏனென்றால் இயேசுக்கிறிஸ்து “சபைக்குத் தலைவராகவும் “எல்லாவற்றிலும் முதல்வராகவும்“ இருப்பதாக அவ்வசனங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதால் (கொலோ. 1.18) “சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்“ எனும் சொற்பிரயோகம் இயேசுக்கிறிஸ்து “சிருஷ்டிக்கப்பட்ட சகலவற்றுக்கும் மேலானவராக இருக்கிறார்“ எனும் அர்த்தத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரமாய் உள்ளது(கொலோசேயர் 1:18, ரோமர் 8:29 எபிரேயர் 1:6 போன்ற வசனங்களிலும் இயேசுக்கிறிஸ்து இவ்விதமாக்க் குறிப்பிடப்பட்டுள்ளார்).

மேலும், சகலமும் இயேசுக்கிறிஸ்துவினால் சிருஷ்டிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்துவரும் வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளமையால், சிருஷ்டிக்கராகிய அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல என்பது தெளிவாகின்றது. 

உண்மையில் இயேசுக்கிறிஸ்து “முதற்தரமானவர்“ என்பதையே கொலோசெயர் 1:15 அறியத் தருகிறது.

யெகோவாவின் சாட்சிகள் தங்களது உபதேசத்தை நிரூபிப்பதற்காக 
=============================================
கொலோசெயர் 1:15 தொடர்ந்து வரும் வசனங்களில் “சகல“ எனும் பதத்திற்கு முன் ஏனைய (Other) என்னும் பதத்தினை புகுத்தியுள்ளனர். இதன்படி இவ்வசனங்கள் “அவருக்குள் (ஏனைய)சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; 

பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான (ஏனைய)சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், (ஏனைய)சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் (ஏனைய) எல்லாவற்றிற்கும் முந்தினவர், (ஏனைய)எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 

இயேசுக்கிறிஸ்துவைத் தவிர ஏனையவை அனைத்தும் அவரால் சிருஷ்ட்டிக்கப்பட்டவை என்றும், இயேசுக்கிறிஸ்துவோ தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்றும் யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். 
=============================================
ஆனால். ஒரு உபதேசத்தை நிரூபிப்பதற்காக இவ்வாறு வேதவசனங்களை மாற்றுவது முழுமையான வேதபுரட்டாகும். 

“ஏனைய“ என்னும் பதம் மூலமொழியில் இல்லாதபோதிலும், மூலமொழியின் சரியான அர்த்தத்தை தருவதற்காக இப்பதத்தை தாங்கள் சேர்த்துள்ளதாக இவர்கள் கூறினாலும் இவர்கள் மூலமொழியின் சரியான அர்த்தத்தைத் தருவதற்குப் பதிலாக, தங்களது உபதேசத்தினையே வேதத்திற்குள் புகுத்தியுள்ளனர். 

உண்மையில் “இயேசுவை சிருஷ்டிக்கப்பட்டவராகக் காண்பிப்பதற்காகவே மூலமொழியில் இல்லாத இப்பதம் இவ்வசனத்தில் புகுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் “சிருஷ்டிகராகிய இயேசுக்கிறிஸ்துவை இவர்கள் சிருஷ்டிக்கப்பட்டவராக மாற்றியுள்ளனர். 

யெகோவாவின் சாட்சிகள் தங்களது தர்க்கத்திற்கு ஆதாரமாய் பழைய ஏற்பாட்டில் இப்பதம் உபயோகிக்கப்பட்டுள்ள பகுதிகளையும் சுட்டிக் காட்டுவது வழமை. எனினும் பழைய ஏற்பாட்டின் கிரேக்கமொழி பெயர்ப்பிலும், இப்பதமானது “முன்னுரிமையையும் உயர்தரத்தையும் குறிக்கும் விதத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது ஆனால் பழைய ஏற்பாட்டில் “பார்வோனின் முதற்பேறானவன்“ பார்வோனின் முதற்பிள்ளையாக இருப்பதனால் இயேசுக்கிறிஸ்து முதற்பேறானவர் என்று கூறும்போது, அவர் முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டவர்“ அவர் “தேவனுடைய முதலாவது பிள்ளை“ எனும் அர்த்தத்திலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாக யெகோவாவின் சாட்சிகள் தர்கிக்கின்றனர் 

எனினும் கொலோசெயர் 1:15 இல் நாம் அவதானிக்க வேண்டிய முக்கியமான விடயம், இயேசுக்கிறிஸ்து “தேவனுடைய முதற்பேறானவர் என்று இவ்வசனத்தில் குறிப்பிடப்படாதிருப்பதாகும். 

அதாவது “சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் என்றே இவ்வசனம் உள்ளது. யெகோவாவின் சாட்சிகள் கூறுவதுபோல இவ்வசனத்தில் “பிறப்பித்தல்“ அல்லது “சிருஷ்டித்தல்“ எனும் அர்த்தத்துடனேயே இப்பதம் உபயோகிக்கப்பட்டிருந்தால் இயேசுக்கிறிஸ்து தேவனுடைய பிள்ளையாக அல்ல. மாறாக சிருஷ்டிக்கப்பட்டவற்றின் பிள்ளையாக இருப்பதாகவே கருதவேண்டும். எனவே இது அர்த்தமற்ற விளக்கமாகவே உள்ளது.

பழைய ஏற்பாட்டில், முதலாவது பிறந்தவர்களே முதற்பேறானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர் எனும் யெகோவாவின் சாட்சிகளின் தர்க்கத்திலும் எந்தவித உண்மையும் இல்லை.

உதாரணத்திற்கு 
=============================================
தாவீது குடும்பத்தின் கடைசி பிள்ளையாக இருந்தாலும் சங்கீதம் 89.:27ல் அவன் முதற்பேறானவன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளான்.

அதேபோல். எப்பிராயீம் யோசேப்பின் இரண்டாவது மகனாக இருந்தபோதிலும் (ஆதி 41:50-51) எரேமியா 31:9 இல் அவனும் ”முதற்பேறானவன்“ என்று அழைக்கப்பட்டுள்ளான். 

மேலும் இஸ்மவேல் பிறந்து 13 வருடங்களின் பின்னர் பிறந்த ஈசாக்கு ஆபிரகாமின் முதற்பேறானவனாக இருப்பதும் இப்பதத்தின் அர்த்தத்தை நமக்கு அறியத் தருவதாய் உள்ளது. 

“வேதாகமக் காலத்தில், முதற்பேறானவன் எனும் பதம் முதலாவதாக பிறந்தவன் எனும் அர்த்தத்தில் உபயோகிக்கப்படவில்லை. 

மாறாக இப்பதம் முன்னுரிமையையும் முதன்மையான இடத்தையும் முதற்தரத்தையும் குறிக்கும் சொல்லாகவே இருந்தது. 
=============================================
எனவே இயேசுக்கிறிஸ்து முதலாவதாகச் சிருஷ்டிக்கப்பட்டவர் என்று வேதம் கூறவில்லை. 
=============================================
அவர் சிருஷ்டிக்கப்பட்ட சகலவற்றையும் விட மேலானவராகவும், சகலவற்றிற்கும் முதல்வராகவும் இருக்கிறார் என்பதையே சுட்டிக் காட்டுகிறது. 

மேலும், யெகோவின் சாட்சிகள் தர்க்கிப்பதுபோல் இவ்வசனம் இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவத்தை மறுதலிக்கவில்லை. 

ஏனென்றால் அடுத்த அதிகாரத்தில் ““தேவத்துவத்தின் பூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது“ எனும் வாக்கியத்தின் மூலம் இயேசுக்கிறிஸ்துவின் தேவத்துவம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (கொலோ. 2:9) .

ஆமென் ..
(இயேசுவே வழி, சத்தியம், ஜீவன்!)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இயேசுகிறிஸ்து கடவுளாக முடியுமா? Empty Re: இயேசுகிறிஸ்து கடவுளாக முடியுமா?

Tue Sep 13, 2016 9:07 am

DEC

25




குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசுகிறிஸ்து


இயேசுகிறிஸ்து கடவுளாக முடியுமா? 11

JESUS IS TRUE LORD * குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசுகிறிஸ்து )
****************************************************
இஸ்லாம் கல்வி தளத்தில் "நாம் யாரை வணங்க வேண்டும் " என்ற கட்டுரை பதியப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் இயேசு சொல்லாத ஒரு விவரம் அவர் சொன்னதாக எழுதப்பட்டுள்ளது. 
இஸ்லாம் கல்வி எழுதியது: 

ஒரு மனித தூதர் தம் சமுதாய மக்களை அழைத்து தன்னை வழிபட வேண்டாம் எனக் கூறினார். ஆனால் அது - அந்தப் பிரச்சாரம்- வீணானது. மக்களை அவரையே வழிபடலாயினர். (மத்தேயு 15:9)

Source : http://www.islamkalvi.com/religions/to_whom_worship.htm

இஸ்லாம் கல்வி தளத்திற்கு ஈஸா குர்‍ஆனின் முந்தைய பதிலை இங்கு ( இஸ்லாம்கல்வி தளமும் 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் ) படிக்கலாம். 

ஈஸா குர்‍ஆன் பதில்: 
=============================================
"இயேசு தன்னை வணங்கவேண்டாம் என்று சொன்னாராம், ஆனாலும் மக்கள் அவரையே வணங்கினார்களாம்" இது தான் இஸ்லாம் கல்வி தள கட்டுரை சொல்லும் செய்தி. இதற்கு ஆதாரமாக இக்கட்டுரை மேற்கோள் காட்டும் வசனம் மத்தேயு 15:9 ஆகும். 

இஸ்லாம்கல்வி சொல்லும் தகவல் தவறானது என்பதையும், இவர்கள் மேற்கோள் காட்டிய வசனம் சொல்லும் செய்தி வேறு என்பதையும் இந்த பதிலில் நாம் பார்க்கலாம். 
=============================================
1. மேற்கோள் காட்டப்பட்ட வசனமும், அதன் பொருளும்: 

இஸ்லாம் கல்வி மேற்கோள் காட்டிய மத்தேயு 15:9 வசனத்தை முதலாவது படிப்போம். 
மத்தேயு: 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

இந்த வசனத்தில் இயேசு தன்னை வணங்கக்கூடாது என்றுச் சொன்னார் என்று இஸ்லாம் கல்வி தளம் சொல்கிறது. முதலாவது இக்கட்டுரையை எழுதிய கலாம் ரசூல் அவர்கள் இந்த மத்தேயு 15ம் அதிகாரத்தை படித்தாரா இல்லையா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது . 

இந்த வசனத்தில் இயேசு தன்னை வணங்கக்கூடாது என்றுச் சொல்லவில்லை, 

அதற்கு பதிலாக, மனிதர்களின் சடங்குகளை குப்பையில் போடுங்கள் என்றுச் சொல்கிறார். முதலில் இறைவனின் கட்டளைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்றுச் சொல்கிறார். மனிதர்களின் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, என் கட்டளைகளை பின்பற்றாமல் இருந்தால், உங்கள் பக்தி, தொழுகை எல்லாம் வீண் என்றுச் சொல்கிறார். 

2. இவ்வசனம் சொல்லப்பட்ட சூழ் நிலை: 
=============================================
இஸ்லாம் கல்வி கட்டுரையை எழுதிய கலாம் ரசூல் அவர்கள் மத்தேயு 15ம் அதிகாரம் வசனங்கள் ஒன்றிலிருந்து ஒன்பதுவரை ( 1- 9) ஒரு முறை படித்து இருந்தால், இப்படியெல்லாம் அவர் எழுதியிருக்கமாட்டார். 

மத்தேயு 15:1-9 வரை சொல்லப்பட்ட செய்தி: 
-----------------------------------------------------------------------
1. இயேசுவின் சீடர்கள் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று யூத குருக்கள் அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஏன் சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை (சடங்குகளை) மீறி நடக்கிறார்கள் என்று இயேசுவிடமே அவர்களைப் பற்றி குற்றம் சாட்டுகிறார்கள். 

2. இயேசு அதற்கு பதிலாக, உங்கள் சடங்குகளுக்காக ஏன் தேவனின் கட்டளைகளை நீங்கள் மீறி நடக்கிறீர்கள்? எது முக்கியம் மனித சடங்குகளா? தேவனின் கட்டளைகளா? என்று கேள்வி கேட்கிறார். 

3. இப்படி இறைவனின் கட்டளைக்கு கீழ்படியாமல், மனித சடங்குகளுக்கு (கை கழுவுதல்) முக்கியத்துவம் கொடுத்தால், நீங்கள் இறைவனுக்காக செய்யும் தொழுகையினால் ஒரு நன்மையும் இல்லை, அது வீண் என்று இயேசு சொன்னார். 

4. நீங்கள் இறைவனை தொழும் போது உங்கள் வாய் (உதடுகள்) மட்டும் தான் தொழுகிறதே தவிர உங்கள் இதயம் இறைவனுக்கு தூரமாக இருக்கிறது என்றுச் இயேசுச் சொன்னார். 

இதை படிக்கும் சகோதரரே, நீங்கள் கீழே கொடுக்கப்பட்ட மத்தேயு 15:1-14 வசனங்களை படித்துவிட்டு, நான் மேலே சொன்னது போல இவ்வசனங்கள் சொல்கிறதா, 

அல்லது கலாம் ரசூல் அவர்கள் சொல்வது போல "இயேசு தன்னை வணங்காதீர்கள்" என்று சொன்னதாக பொருள் வருகிறதா என்று நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள்.
=============================================
[இதை தெரிந்துக்கொள்ள பைபிள் கல்லூரியின் பட்டமோ, குர்‍ஆன் படிப்போ தேவையில்லை. கீழுள்ள வசனங்களை மேலோட்டமாக படித்தாலே போதும்] 
=============================================
மத்தேயு: 15: 1 அப்பொழுது எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து, 2. உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள் . 3. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக, நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? 4. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே. 5. நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி, உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவன் கடமை தீர்ந்ததென்று போதித்து, 6. உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள். 7. மாயக்காரரே, உங்களைக்குறித்து, 8. இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. 9. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார். 10. பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி, நீங்கள் கேட்டு உணருங்கள். 11. வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். 12. அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரோ என்றார்கள். 13. அவர் பிரதியுத்தரமாக, என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும். 14. அவர்களை விட்டு விடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடறாயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.

3. யூதர்களின் விபரீத சடங்குகள்: 
=============================================
இறைவனுடைய ஆலயத்தில் ஊழியம் செய்யும் போது, மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று பழைய எற்பாட்டில் பல கட்டளைகள் உள்ளது. ஆனால், யூதர்கள் சொந்தமாக சில சடங்குகளை செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒன்று தான் "சாப்பிடும் முன்பு, பின்பு கைகளை கழுவுதல் " என்பது. இப்படி கை கழுவாதவர்கள் பெரிய பாவம் செய்ததாகவும், அவர்கள் குற்றம் சுமத்தினர். இதைத் தான் இயேசு எதிர்த்தார். அதாவது, சுத்தம் முக்கியம் ஆனால், ஒருவன் கை கழுவாததற்காக அவனுக்கு தண்டனை அளிப்பது என்பது சரியானது அல்ல என்று இயேசு சொன்னார். 

கைகழுவுதல் பற்றிய யூத சடங்குகள் : 
=============================================
1. கைகழுவாமல் ஒருவன் சாப்பிட்டால், அவன் பன்றியின் கறியை சாப்பிட்ட குற்றத்திற்கு ஏற்ற குற்றம் செய்பவன் ஆவான்.

2. கைகழுவாமல் சாப்பிடுபவன் இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும் தண்டிக்கப்படுவான்.

3. கைகழுவாமல் சாப்பிடுபவன் மரண தண்டனைக்கு உரியவன் .

4. கைகழுவாமல் சாப்பிடுபவன் ஏழ்மையில் வாழ்வான், அவன் விபச்சாரம் செய்த குற்றம் செய்ததற்கு சமமாவான்.

5. கைகழுவாமல் சாப்பிடுவதை விட 4 மைல்கள் நடந்துப்போய் கைகழுவி வருவது தான் சிறந்தது.

6. சாப்பிட்ட பிறகு கைகளை கழுவாதவன், கொலை குற்றம் செய்தவனாவான் .
---------------------------------------------------------------------------------------------------------
“The legal washing of the hands before eating was especially sacred to the Rabbinist; not to do so was a crime as great as to eat the flesh of swine. 'He who neglects hand-washing,' says the book Sohar, 'deserves to be punished here and hereafter.' 'He is to be destroyed out of the world, for in hand-washing is contained the secret of the ten commandments.' 'He is guilty of death.' 'Three sins bring poverty after them,' says the Mishnah, 'and to slight hand-washing is one.' 'He who eats bread without hand-washing,' says Rabbi Jose, 'is as if he went in to a harlot.' The later Schulchan Aruch, enumerates twenty-six rules for this rite in the morning alone. It is better to go four miles to water than to incur guilt by neglecting hand-washing,' says the Talmud. 'He who does not wash his hands after eating,' it says, 'is as bad as a murderer.' The devil Schibta sits on unwashed hands and on the bread. It was a special mark of the Pharisees that 'they ate their daily bread with due purification,' and to neglect doing so was to be despised as unclean. . . .” (The Mortal Messiah: From Bethlehem to Calvary, 2: 400.)Source: http://www.gospeldoctrine.com/NewTestament/Matt15.htm
---------------------------------------------------------------------------------------------------------
யூதர்களின் இந்த கைகழுவுதல் சடங்கைப் பற்றி "தானியேல் ரெஃபர‌ன்ஸ் வேதாகமம்" பக்கம் 1021 இப்படியாகச் சொல்கிறது : 
=============================================
"…குன்றுபோன்ற அந்தப் பழக்கத் தொகுப்புக்களில் ஒன்று தான் கழுவுதல் சடங்குகள். இந்த கழுவுதல், உணவு உண்ணும் முன்பு மட்டும் போதாது. சந்தையிலிருந்து வரும்போதும் கழுவவேண்டும். கழுவுதல் சட்டங்கள் மனிதருக்கு மட்டுமல்ல அவர்கள் பயன்படுத்தும் பாத்திரங்களும் கோப்பைகளும் செப்புப்பாத்திரங்களும் மேசைகளும் கழுவப்படவேண்டும். கழுவுதலுக்கு சில முறைகள் உண்டு, அதற்காகப்பயன்படுத்தும் நீருக்கு அளவு உண்டு கழுவும் போது எத்தனை பாத்திரங்களப் பயன்படுத்தவேண்டும் எத்தனை தடவை கழுவவேண்டும். கழுவும் போது எத்தனை தடவை தண்ணீரை மாற்றவேண்டும், என்பதற்கெல்லாம் சட்டங்கள் உண்டு. இந்தக் குப்பைச் சடங்குகளை இயேசு செய்யவில்லை என்பதே பரிசேயர் மற்றும் சதுசேயரின் குற்றச்சாட்டு.

கைகழுவுவது நல்லது தான், அதற்காக செய்யாதவனுக்கு தண்டனை கொடுப்பது என்பது, காட்டுமிராண்டித் தனம் என்று இயேசு அவர்களை கடிந்துக்கொள்கிறார். 

இப்படிப்பட்ட எண்ணங்களை யூத ஆசாரியர்கள் உடையவர்களாக இருந்ததினால், தான் இயேசுவின் சீடர்கள் கைகழுவாமல் சாப்பிட்டதை மிகப்பெரிய குற்றமாக வந்து அவரிடம் முறையிடுகின்றனர். இந்த சடங்குகளை செய்யும்படி, இதற்கு இவ்வித தண்டனை கொடுக்கும்படி தேவன் சொல்லவில்லை. 

இறைவன் வெளிப்புற சுத்தத்தை மட்டும் பார்க்கிறவர் இல்லை. அவர் முதலாவது, நம் உள்ளம் சுத்தமாக இருக்கிறதா என்று பார்க்கிறார். 

இப்படி வெளிப்புற சுத்தம் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, என் கட்டளைகளை மீறிவிட்டீர்களே என்று இயேசு வேதனைப்படுகிறார். 

பெற்றோரை உதவி செய்யாமல் தடுத்த யூத சடங்குகள்: (கொர்பான் - CORBAN) 
=============================================
தேவன் கொடுத்த 10 கட்டளைகளில் ஒரு கட்டளை "உன் தாயையும் தந்தையையும் கனம் செய்வாயாக " என்பது. அப்படி கனம்செய்யாமல், பெற்றோரை நிந்திக்கிறவர்கள் கொலை செய்யப்படவேண்டும் என்றும் கட்டளையிட்டார். 

ஆனால், யூதர்களின் ஒரு குறிப்பிட்ட சடங்கு, இக்கட்டளையை மனிதன் மீறும் படி செய்துள்ளது என்று இயேசு அவர்களை கடிந்துக்கொள்கிறார். 

(மற்றும் பார்க்க மாற்கு 7:11ம் வசனம்) 
===========================
மத்தேயு: 15: 3 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக, நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? 4. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே. 5. நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி, உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவன் கடமை தீர்ந்ததென்று போதித்து, 6. உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள். 

யூதர்களின் ஒரு சடங்கு இருந்தது, அது என்னவென்றால், ஒரு மனிதன், தன் சொத்தை எல்லாம், தேவாலயத்திற்கு என்று நேர்ந்துக்கொள்ளவேண்டுமாம், ஆனால், தேவாலயத்திற்கு அதை கொடுக்கமாட்டான், தான் மற்றும் தன் குடும்பம் (மனைவி பிள்ளைகள்) மட்டும் அந்த சொத்தை அனுபவிப்பார்கள். 

பெற்றோர்கள் அந்த சொத்தைக்கொண்டு தங்களை போஷிக்கவேண்டும் என்று தன் பிள்ளைகளிடம் கேட்டால், "இல்லை இல்லை, இந்த சொத்து தேவாலயத்திற்கு நேர்ந்துக்கொள்ளப்பட்டது, உங்களுக்கு தரக்கூடாது” என்றுச் சொல்லி, தங்கள் பெற்றோரை போஷிக்காமல் விட்டுவிடுவார்கள் [1][2][3]. 

இந்த சடங்கை பற்றித் தான் இயேசு அந்த ஆசாரியர்களிடம் வாக்குவாதம் செய்கிறார். உங்கள் சடங்குகளினால், பெற்றோருக்கு தீமை செய்கிறீர்களே என்று கேட்கிறார். 

இதனால், தான் இயேசு பழைய ஏற்பாட்டு வசனம் ஒன்றை இங்கு குறிப்பிடுகிறார். 

இப்படியெல்லாம், இறைவனுக்கு விரோதமான சடங்குகளை பின்பற்றிக்கொண்டு நீங்கள் தொழுதுக்கொண்டால், உங்கள் வாய் அல்லது உதடுமட்டும் தான் இறைவனை தொழுதுக்கொள்ளும், உங்கள் இதயமோ அவரது கட்டளையை பின்பற்றாததினால் தூரமாக உள்ளது. இப்படிப்பட்ட “தொழுகை வீண்” என்றுச் சொல்கிறார். 

4. குருடருக்கு வழி காட்டும் குருடர்கள்: 
=============================================
இஸ்லாம் கல்வி தளத்தின் கட்டுரை சொல்லும் விவரம் தவறானது எனபதை அறிய, 

மத்தேயு 15:12-14ம் வசனங்களைப் படித்தால் தெரிந்துவிடும். இயேசு ஆசாரியர்களின் பாரம்பரியத்தையும், சடங்குகளையும் பற்றி கடிந்துக்கொண்டதை இயேசுவின் சீடர்கள் கண்டு, உம்முடைய இந்த வார்த்தையினால், அவர்கள் "இடறல்-கோபம்" அடைந்தார்கள் என்று உமக்கு தெரியுமா என்று கேட்கிறார்கள். ஏன் அவர்கள் இடறல் அடைந்தார்கள் என்று கேள்வி எழுப்பினால்? இதற்கு பதில், "இயேசு அவர்களின் பாரம்பரிய சடங்குகள் தவறானது" என்று சொன்னார் என்பதினால் தான் என்று புரியும்.

தன்னை வணங்கவேண்டாம் என்று ஆசாரியர்களிடம் ஏன் இயேசு சொல்லப்போகிறார்?
=============================================
அவர்கள் தான் ஏற்கனவே அவரை தேவகுமாரன் என்று நம்பவில்லையே?

அவர்களிடம் எப்படி என்னை வணங்கவேண்டாம் என்று இயேசு சொல்லப்போகிறார்?

முஸ்லீம்களிடம் சென்று, "நீங்கள் இயேசுவை வணங்காதீர்கள்" என்று நான் சொன்னால், எனக்கு என்ன பதில் கிடைக்கும்? " 
? ? ? ? ? ? ? ? ? ?
நாங்கள் தான் அவர் நபி என்று மட்டும் சொல்கிறோமே, பின் எப்படி எங்களிடம் வணங்கவேண்டாம் என்றுச் சொல்கிறாய் நீ? என்று கேட்கமாட்டார்களா?" அதே போலத்தான், யூத ஆசாரியர்களும் இயேசுவை தேவகுமாரன் என்று நம்பவில்லை. ]

அதற்கு இயேசு சொல்கிறார், அவர்களை விட்டு விடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டும் குருடர்கள், அவர்களை (இப்படிப்பட்ட சடங்குகளை) பின்பற்றுகிறர்கள், குழியிலே விழுவார்கள் என்றுச் சொல்கிறார். 

ஏனென்றால், சடங்குகள் தான் முக்கியம் என்று சொல்கிறவர்கள் “குருடர்கள்” என்று இயேசு சொல்கிறார். 
=============================================
எனவே, இயேசு தன்னை வணங்காதீர்கள் என்று சொல்லவில்லை என்பது இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

5. இசுலாமியர்கள் தவறாக புரிந்துக்கொள்ளுதல்: 

இசுலாமியர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இது தான். ஏதோ ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு, தலையும் புரியாமல், காலும் புரியாமல் புரிந்துக்கொண்டு, உங்கள் விருப்பப்படி வியாக்கினம் செய்யாதீர்கள். 

இயேசு தன்னை வணங்காதீர்கள் என்றுச் சொல்லவில்லை வெளிப்புறம் சுத்தம் மட்டும் இறைவனை தொழுதுகொள்வதற்கு போதுமானது இல்லை. நம் உள்ளமும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று சொல்லவே அவர் அவ்விதம் சொன்னார். 

இந்த வசனத்திற்கு நான் அளித்த விளக்கம் தவறாக இருக்கும் என்று நீங்கள் (மூஸ்லீம்கள், முஸ்லீம் அறிஞர்கள்) நினைத்தால், இவ்வசனங்களுக்கு உங்கள் விளக்கத்தை எனக்கு அனுப்புங்கள். நான் மேலும் விவரிக்கிறேன். 

6. இஸ்லாமில் சடங்குகள்: 
=============================================
யூதர்களைப் போல இஸ்லாமிலும் பல சடங்குகள் உண்டு. அல்லாவை தொழுதுக்கொள்ள போவதற்கு முன்பு, கைகளை கழுவுதல், கால்களை கழுவுதல், மூக்கை கழுவுதல், காதுகளை கழுவுதல், அதுவும் இத்தனைமுறை கழுவவேண்டும், இப்படி கழுவவேண்டும் என்று இன்னும் பல சடங்குகள் முஸ்லீம்கள் பின்பற்றுகின்றனர். 

நாமாஜ் செய்துக்கொண்டு இருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு விரலை ஆட்டவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள். சிலர் அப்படி அந்த விரலை ஆட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். இந்த விரல் சடங்கு போல, இன்னும் பல சடங்குகளினால் இஸ்லாமிய அறிஞர்களிடையே பல கருத்து வேறுபாடுகள், சண்டைகள் போன்ற பல நிகழ்வுகள் நடக்கிறதை பார்க்க, உலகத்தில் வேறு எங்கும் செல்லவேண்டாம், நம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய சொற்பொழிவுகளை பார்த்தாலே போதும் எல்லாரும் புரியும். 

முடிவுரை: 
=============================================
சுத்தமாக இருப்பது தவறல்ல. வெளிப்புறம் சுத்தமாக இருப்பது மட்டும் போதும் என்றுச் சொல்லி, இறைவனின் கட்டளைகளை பின்பற்றாமல் போவது தான் தவறு. இதைத் தான் இயேசுவும் யூதர்களிடம் சொல்கிறார். 

இதைத் தான் இயேசு சொன்னார், 
=============================================
கைகழுவாமல் சாப்பிட்டால், அது வயிற்றுக்குள் சென்று ஜீரணமாகி கழிவாக சென்றுவிடும், ஆனால், இதயத்திலிருந்து வரும் கெட்ட சிந்தனைகளே மனிதனை இறைவனிடமிருந்து வேறுபடுத்தும். எனவே, முக்கியமானவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள் என்றுச் சொல்கிறார்.

அருமையான இஸ்லாமிய அறிஞர்களுக்கு: நீங்கள் பைபிளை நன்றாக படித்து, நீங்கள் குறிப்பிட விரும்பும் வசனத்தின் முந்தைய வசனங்களை, பிந்தைய வசனங்களை படித்து தெரிந்துக்கொண்டு, பிறகு அவற்றை உங்கள் கட்டுரைகளில் பதிக்க முயற்சி செய்யுங்கள். 

இயேசு சொன்னது போல, இறைவனை ஆவியோடும், உண்மையும் தொழுதுக் கொள்ளுங்கள். உடல் சுத்திகரிப்பு முக்கியம், அதை விட உள்ளம் சுத்திகரிப்பு மிக மிக முக்கியம். அப்படி இல்லையானால், நம்முடைய வாய் மட்டும் தான் இறைவனுக்கு பக்கத்தில் இருக்கும், இருதயமோ.... தூரமாக..... இருக்கும். நம்முடைய தொழுகையும், வணக்க வழிபாடுகளும், ஆராதனைகளும் "வீண்" என்று இயேசு சொல்லியுள்ளார்.

ஏசாயா: 29:13. இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. 14. ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.15. தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து, நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார் என்கிறவர்களுக்கு ஐயோ!

ஆமென் ..
(இயேசுவே வழி, சத்தியம், ஜீவன்!)

நன்றி நமது கிறிஸ்து இயேசுவுக்குள்ளான சகோதரர்
(== ஈஸா குர்‍ஆன் ==)
Sponsored content

இயேசுகிறிஸ்து கடவுளாக முடியுமா? Empty Re: இயேசுகிறிஸ்து கடவுளாக முடியுமா?

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum