தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
 ஒருவருக்காக ஒருவர் ஜெபம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 ஒருவருக்காக ஒருவர் ஜெபம் Empty ஒருவருக்காக ஒருவர் ஜெபம்

Tue Sep 13, 2016 7:37 am
ஒருவருக்காக ஒருவர் ஜெபம்

“நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது”. (யாக்.5:16)

கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. சில தினங்களுக்கு முன்பாக ஒரு சகோதரி சிவகாசியில் இருந்து என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார். அந்த சகோதரி தனக்கு தெரிந்த தென்காசியில் வசிக்கும் சகோதரி ஒருவரின் குழந்தை பாக்கியத்திற்காக ஜெபிக்கும் படியாக கேட்டிருந்தார். நாம் செய்து வருகின்ற அன்னாளின் ஜெபத்தில் கடந்த வாரத்திலிருந்து பங்கெடுத்து உபவாசித்து ஜெபித்து வந்துள்ளார். தென்காசியில் வசிக்கும் சகோதரி நமது அனுதின செய்திகளை படிப்பவரா என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய பெயரைக் கொடுத்த சகோதரி அவருக்காக ஐந்து நாட்கள் உபவாசித்து ஜெபித்துள்ளார். கர்த்தர் இந்த ஜெபத்தின் சத்ததைக் கேட்டு தென்காசியில் வசிக்கும் சகோதரிக்கு கர்ப்பத்தின் பாக்கியத்தை கொடுத்து ஆசிர்வதித்துளார்.

உலகத்தில் பலவிதங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியும். அதைப்போல ஒரு பலசாலி பலவீனமானவனுக்கு உதவி செய்ய முடியும். அதைப்போலவே ஆள்பலம் கொண்டவர் தன்னுடைய பலத்தினால் மற்றவர்களுக்கு அரசாங்கத்தில் சிபாரிசு செய்ய முடியும். 

அதைப்போலவே பல பட்டங்களை பெற்ற அறிவுள்ளவர்கள் படிப்பறிவில்லாத மக்களுக்கு கல்வி உதவியை அருள முடியும். இவை அனைத்திலும் மிக முக்கியமான பேருதவி ஜெப உதவி ஆகும். இந்த ஜெப உதவியை யாரால் செய்ய முடியும்? ஜெபிக் கிறவர்கள், அதாவது ஜெபத்தின் மேல் விசுவாசமும் ஆண்டவர் பேரில் முழு நம்பிக்கையும் உடையவர்களே.

நீங்கள் ஒரு பெரிய ஐசுவரியவானாக அல்லது பெரிய அந்தஸ்து உடையவர்களாக இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதே வேளையில் நீங்கள் தனிமையில் முழங்காலில் நின்று, ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பீர்கள் என்றால் பரலோக தேவன் உங்களை விசேஷித்தவர்களாகக் காண்பார். நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள். மேலும், உங்கள் ஜெபம் ஏராளமான ஆசீர்வாதங்களை பரலோகத்திலிருந்து கொண்டு வரும். நீங்கள் இனியும் தாமதிக்காமல் நீங்கள் இனியும் தாமதிக்காமல் ஒருவருக்கொருவர் ஜெபிக்க உங்களை அர்ப்பணியுங்கள். நிச்சயமாக தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். அநேகருக்கு நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பீர்கள்.

கர்த்தர் அன்னாளின் கர்ப்பத்தை அடைத்திருந்ததால், பெனின்னாள் அவளை துக்கப்படும்படியாக மிகவும் இகழ்ந்து பேசுகின்றாள். இது அதிகபடியான மனஉளச்சலை அன்னாளுக்கு அளித்தது. அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். (Iசாமு 1:1-7). அநேக நேரங்களில் நாமும் கூட அன்னாளைப்போல அழுகின்றவர்களாகவே இருகின்றோம். கர்த்தர் ஏன் அன்னாளின் கர்ப்பத்தை அடைக்க வேண்டும். ஏன் இப்படிப்பட்ட இகழ்ச்சியான சூழ்நிலை அன்னாளுக்கு வரவேண்டும்? என்ற கேள்விகலுளுக்கான பதிலை தெரிந்திருந்தால் நீங்கள் அழமாட்டீர்கள்.

முதலாவது பிறர் நம்மை இகழ்ந்து பேசும்படியான சூழ்நிலையை கர்த்தர் நமது வாழ்க்கையில் அனுமதித்துள்ளார். இரண்டாவது நம்மை இகழ்ந்து பேசும்படியாக ஒரு சிலருக்கு தேவனே கட்டளையிட்டுள்ளார் (II சாமு 16:11). மூன்றாவது புகழ்ச்சி நமக்கு எதிராளியாகவும், இகழ்ச்சி நமது ஆசிர்வாத வாழ்க்கையின் திறவுகோளாகவும் இருக்கின்றது. இந்த மூன்று காரியங்களையும் நீங்கள் நன்கு உணர்ந்திருக்க வேண்டும்.

புகழ்ச்சியான வார்த்தைகளால் புகழப்பட்ட தாவீது, மகா வேதனையான அனுபவங்களுக்குள் கடந்து சென்ற சம்பவத்தை நாம் வேதத்தில் வாசிக்க முடியும். தாவீது பெலிஸ்தியனாகிய கோலியாத்தை கொன்று திரும்பி வந்தபின்பு, ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று புகழ்ந்து பாடினார்கள். இந்த புகழ்ச்சியான வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது. அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்கு குறைவாயிருக்கிறது என்று சொல்லி, அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் கொலை செய்ய வகை தேடினான். (Iசாமுவேல் 18:6-9).

தாவீது தனது மகன் அப்சலோமுக்கு பயந்து, எருசலேமை விட்டு வெறியேறி பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தாவீதை தூஷித்துக்கொண்டே நடந்துவந்து, கற்களை எறிந்தான். மேலும் சீமேயி, "இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ" என்று தாவீதைத் தூஷித்தான். அப்பொழுது தாவீது தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து, "இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத்தேடும்போது, சீமேயி என்னை தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார் (II சாமு 16:1-11).

தாவீது கல்லெறி வாங்கிய பின்னும் அமைதியாக, “ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார்” (II சாமு 16:12) என்கிறார். பின்னாட்களில் தாவீது அரசனின் ராஜ்யம் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. பிறருடைய இகழ்ச்சியான பேச்சுக்களால் நீங்களும் கூட மனமுறிவினால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கலாம். அன்னாளின் வாழ்க்கையைப் போல எனது வாழ்க்கையில் ஏன் இத்தனை நிந்தனைகள்? ஏன் இத்தனை இகழ்ச்சிகள்? என்று சிந்திக்கலாம். தேவன் நிந்தனைக்குப் பதிலாக நன்மையையும், இகழ்ச்சிக்கு பதிலாக புகழ்ச்சியையும் தருகின்றவராக இருகின்றார் என்பதை மறந்து விடாதீரகள்.

சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும் (ஏசாயா 61:3) இயேசு கிறிஸ்து ஆவலுடன் காத்திருகின்றார். உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும் (ஏசாயா 61:7). ஆமேன். அல்லேலுயா.

வேதத்தில் அநேக தந்தைமார்கள் இருந்தாலும் “விசுவாசிகளின் தந்தை” (Father of faith) என்று அழைக்கப்படுகின்றவர் ஆபிரகாமே! (எபி 11:8-9). “கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி.. நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்” (ஆதி 17:1-6) என்று வாக்களித்தார்.

ஆபிராம் மற்றும் ஆபிரகாம் என்ற இரண்டு பெயர்களின் அர்த்தமுமே தந்தை என்பதாகும். ஆனால் ஆபிராம் என்றால் “ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு தந்தை” (Father for the specific region or people) என்றும், ஆபிரகாம் என்றால் “மக்களினங்களின் தந்தை” (Father of the multitude) என்றும் பொருள். ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு தந்தையாக இருக்கும் ஆபிராமை, பூமியில் உள்ள எல்லா மக்களுக்கும் தந்தை யாகவும் மாறச்செய்ய வெண்டுமென்பது அதாவது ஆபிராமை, ஆபிரகாமாக மாற்றவேண்டுமென்பது தேவனுடைய விருப்பம்.

வேதத்தில் அநேக தாய்மார்கள் இருந்தாலும் விசுவாசிகளின் தாய் என்று அழைக்கப்படுகிறவள் சாராளே! (எபி 11:11). “தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும். நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்” (ஆதி 17:15-16). விசுவாசிகளுக்கு மட்டுமல்ல, ஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும் கூட தாயாகும்படி, கர்த்தர் சாராளை ஆசீர்வதித்தார். இளவரசி தான் ஒரு நாட்டின் ராஜாவுக்கு தாயாக இருக்க முடியும்.


சாராய் மற்றும் சாராள் என்ற இரண்டு பெயர்களின் அர்த்தமுமே தாய் அல்லது இளவரசி என்பதாகும். ஆனால் சாராய் என்றால் “ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு தாய் அல்லது இளவரசி” (Mother or Princess for the specific region or people) என்றும், சாராள் என்றால் “மக்களினங்களின் தாய் அல்லது இளவரசி” (Mother or Princess of the multitude) என்றும் பொருள். ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு இளவரசியாக அல்லது தாயாக இருக்கும் சாராயை, பூமியில் உள்ள எல்லா மக்களுக்கும் இளவரசியாகவும் அல்லது தாயாகவும் மாறச்செய்ய வேண்டுமென்பது அதாவது சாராயை, சாராளாக மாற்றவேண்டுமென்பது தேவனுடைய விருப்பம்.

 manna
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum