தேவனின் எதிர்பார்ப்பு !
Thu Mar 21, 2013 8:37 pm
ஒவ்வொரு விசுவாசியிடமும் தேவன் எதிர்பார்க்கும் குணாதிசயம் என்னவென்றால்
அவன் தன்னைப்போலவே இரக்கமும், அன்பும் உள்ளவனாகக் காணப்படவேண்டும் என்பதே.
நாம் தேவனை அறியாமல் பாவிகளாய் இருந்த நாட்களில் தற்பிரியராயும்,
சிற்றின்பப் பிரியராயும், சுகபோகப் பிரியராயும் வாழ்ந்து வந்தோம். ஆனால்,
இப்பொழுதோ தேவனுடைய பிள்ளைகளாய் தேவனைப் பிரியப்படுத்துகிறவர்களாய்
மாறியிருக்கிறோம்.
இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு தேவபிள்ளையும் தன்னுடைய குணாதிசயத்தில் தேவனைப்போலவே மாறவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
முதலாவது ஒரு பாவியினுடைய குணாதிசயம் எப்படிப்பட்டது என்று பார்போம்.
ஒரு பாவி, தன்னை நேசித்து தன்னிடம் அன்பு கூறுகிறவர்களிடம் மட்டுமே அன்பு
கூறுவான். தனக்கு நன்மை செய்வர்களுக்கு மட்டுமே நன்மை செய்வான்.
நல்லவனுக்கு நல்லவனாகவும், பொல்லாதவனுக்கு பொல்லாதவனாகவும் மாறிவிடுவான்.
சிநேகிதனுக்கு சிநேகிதனாகவும், பகைவனுக்கு பகைவனாகவும் இருப்பான்.
இப்படிப்பட்ட பாவ வாழ்கையில் இருந்து மனம் திரும்பிய ஒவ்வொருவரிடமிருந்து தேவன் எதிர்பார்க்கும் காரியங்களாவன:
இப்படிப்பட்ட குணாதிசயங்கள் நம்மில் காணப்பட ஒருசில காரியங்கள் நாம் செய்யாதிருக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. அவையாவன:
இப்படிப்பட்ட குணாதிசையங்கள் நம்மில் உருவாகும்போது நாம் நம்முடைய
வார்த்தையினாலும், நம்முடைய நடத்தையினாலும் தேவனை மகிமைப்படுத்த முடியும்.
ஆமென்!
அவன் தன்னைப்போலவே இரக்கமும், அன்பும் உள்ளவனாகக் காணப்படவேண்டும் என்பதே.
நாம் தேவனை அறியாமல் பாவிகளாய் இருந்த நாட்களில் தற்பிரியராயும்,
சிற்றின்பப் பிரியராயும், சுகபோகப் பிரியராயும் வாழ்ந்து வந்தோம். ஆனால்,
இப்பொழுதோ தேவனுடைய பிள்ளைகளாய் தேவனைப் பிரியப்படுத்துகிறவர்களாய்
மாறியிருக்கிறோம்.
இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு தேவபிள்ளையும் தன்னுடைய குணாதிசயத்தில் தேவனைப்போலவே மாறவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
முதலாவது ஒரு பாவியினுடைய குணாதிசயம் எப்படிப்பட்டது என்று பார்போம்.
ஒரு பாவி, தன்னை நேசித்து தன்னிடம் அன்பு கூறுகிறவர்களிடம் மட்டுமே அன்பு
கூறுவான். தனக்கு நன்மை செய்வர்களுக்கு மட்டுமே நன்மை செய்வான்.
நல்லவனுக்கு நல்லவனாகவும், பொல்லாதவனுக்கு பொல்லாதவனாகவும் மாறிவிடுவான்.
சிநேகிதனுக்கு சிநேகிதனாகவும், பகைவனுக்கு பகைவனாகவும் இருப்பான்.
இப்படிப்பட்ட பாவ வாழ்கையில் இருந்து மனம் திரும்பிய ஒவ்வொருவரிடமிருந்து தேவன் எதிர்பார்க்கும் காரியங்களாவன:
- ஏதோ ஒரு வகையில் பிறருக்கு நாம் நன்மை செய்யவேண்டும்.
- பிறருடைய (உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்) ஆவிக்குரிய, சரீர ஆசீர்வாதங்களுக்காக ஜெபம் செய்யவேண்டும்.
- பிறரை (குறிப்பாக நம்மைச் சபிக்கிறவர்களை) வாயாற வாழ்த்தி ஆசீர்வதியுங்கள்.
- கேட்கிற எவருக்கும் கூடுமானால் கைமாறு கருதாமல் கடன் கொடுங்கள்.
- பிறர் நிமித்தம் வரும் சரீர துன்பங்களையும், பாடுகளையும் சகித்துக்கொள்ளுங்கள்.
இப்படிப்பட்ட குணாதிசயங்கள் நம்மில் காணப்பட ஒருசில காரியங்கள் நாம் செய்யாதிருக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. அவையாவன:
- ஒருவரையும் குறைசொல்லி குற்றவாளிகளாய் தீர்க்காதிருங்கள்.
- பிறருடைய தப்பிதங்களை பெரிதுபடுத்தி அவர்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்காதிருங்கள்.
- கோபத்தில் ஒருவர்மேலும் சாபமான வார்த்தைகளைச் சொல்லிவிடாதிருங்கள்.
- எவரையும் வேண்டாமென்று வெறுத்து ஒதுக்கிவிடாதிருங்கள்.
- கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று சொல்லி பதிலுக்குப் பதில் செய்யாதிருங்கள்.
இப்படிப்பட்ட குணாதிசையங்கள் நம்மில் உருவாகும்போது நாம் நம்முடைய
வார்த்தையினாலும், நம்முடைய நடத்தையினாலும் தேவனை மகிமைப்படுத்த முடியும்.
ஆமென்!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|