கிறிஸ்துவின் சரீரமாகிய சபை
Fri Aug 19, 2016 8:49 am
கிறிஸ்துவின் சரீரமாகிய சபை
காணாமல் போன சபையின் அடையாளம்
1.கிறிஸ்துவின் அன்பால் நிரப்பட்டவர்களின் சபை (ரோமர் 5:5,13:8, 1தெசலோனிக்கேயர் 3:12,4:9)
2.ஒருவரையொருவர் அன்பால் தாங்கும் சபை(எபேசியர் 4:2,கொலோ 3:13)
3.ஒருவரையொருவர் அன்பினால் விசாரிக்கும் சபை ( எபிரெயர் 10:24,25)
4.ஏழை பணக்காரன், கற்றவர் கல்லாதவர், உயர் குலம் தாழ்ந்த குலம், முதலாளி தொழிலாளி வேற்றுமையில்லாத சபை (கலாத்தியர் 3:28, யாக்கோபு 2:1-9)
5.அனைவரையும் சம அந்தஸதுடன் நடத்தும் சபை ( 1கொரிந்தியர் 12:13, யாக்கோபு 2:1)
6.திக்கற்றப்பிள்ளைகள், விதவைகளை சகல கனத்துடன் விசாரிக்கும் சபை (யாக்கோபு 1:27, அப்போஸ்தலர் 6:1-3)
7.இல்லாதவர்களையும், ஊனமுற்றோர்களையும் பராமரிக்கும் சபை( 1கொரிந்தியர் 12:23-25,ரோமர் 15:1)
6.ஏழைகளை காரிசனையுடன் விசாரித்து தேவைகளை சந்திக்கும் சபை (கலாத்தியர் 2:10)
9.அனைவருக்கும் கற்றுக்கொள்ளவும், தேறவும் வாய்ப்பளிக்கும் சபை( 1கொரிந்தியர் 14: 30,31)
10.அனைவரையும் கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சிக்குள் நடந்த தேவையான அப்போஸ்தலர், தீர்க்கதரிசி, சுவிஷேசகர் ,மேய்ப்பர் போதக ஊழியம் உள்ள சபை( எபேசியர் 4:11-15)
11.ஒருவொருக்கொருவர் புத்திசொல்லும் சபை ( ரோமர் 15:14, எபிரெயர் 10:23-25)
12.ஒருவொருக்கொருவர் ஊழியம் செய்யும் சபை( கலாத்தியர் 5:13)
13.ஒருவொருக்கொருவர் கீழ்படிந்திருக்கும் சபை (எபேசியர் 5:21, 1பேதுரு 5:5)
14.ஒருவரையொருவர் தேற்றும் சபை (1தெசலோனிக்கேயர் 4:18,5:11,14)
15. ஒருவரையொருவர் உபசரிக்கும் சபை( 1பேதுரு 4:9)
16.ஒருவொருக்கொருவர் மனத்தாழ்மையுடன் கால்களையும் கழுவும் மனம் உடையவர்களின சபை. (யோவான் 13:13-15)
17. ஒருவொருக்கு ஒரு குறைவுயென்றால், பெலவீனம் என்றால் மற்றவர்கள் உதவும் சபை, ( 1கொரிந்தியர் 12:26, ரோமர் 15:1)
18.தனக்குள்ளதை தன்னுடையது என்று சொல்லாமல் மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் சபை ( அப்போஸ்தலர் 5:32)
19. சகோதரருக்காய் உயிரையும் கொடுக்கும் சபை ( 1யோவான் 3:16)
20. மிகுந்த மனத்தாழ்மையுடன் கண்ணீருடன் தேவனை சேவிப்போரின் சபை (அப்போஸ்தலர் 20:19)
21.மற்றவர்களை தன்னிலும் மேன்மையாக கருதுபவர்களின் சபை (பிலிப்பியர் 2:3)
22.சிறுகுழந்தைகள் வாலிபர்களை சகல கண்ணியத்துடன் நடத்தும் சபை (மாற்கு 10:13-16)
23.முதியோர்களை கனம்பண்ணும் சபை ( 1தீமோத்தேயு 5:1, 1பேதுரு5:5)
24.திருவசனத்திலும், உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை இரட்டிப்பான கனத்துக்குரியவர்களாக நடத்தும் சபை. (1தீமோத்தேயு 5:17, எபிரெயர் 13:17)
25.ஏக மனம், ஏக சிந்தை உடையவர்களின் கூடுகை ( அப்போஸ்தலர் 4:32, ரோமர் 12:16,15:5)
26.ஒரே நோக்கம், ஒரே விசுவாசம், ஒரே அறிவுடையவர்களின் சபை( எபேசியர் 4:4,5,11)
27. கபடு, வஞ்சனை, பொறாமை இல்லாத சபையார் ( எபேசியர் 5:31, கொலோசெயர் 3:
28. சாந்தம், மனத்தாழ்மை, மன்னிதல், நீடிய பொறுமை போன்ற திவ்விய சுபாவங்களில் இயேசுவை பிரதிபலித்தல் (ரோமர்8:29)
29.உலக முழுவதும் சகல சிருஷ்டிக்கும் சுவிஷேசத்தைப் பிரசங்கிப்பதில் அனைவரின் ஈடுபாடு ( லூக்கா24:47,அப்போஸ்தலர் 8 ;4)
30) ஆவியின் வரங்கள் எல்லாம் நிறைவாய் உள்ள் சபை.((1கொரிந்தியர் 1:7,12:7-12,14:1)
31.தவறுகளை அன்புடன் சுட்டிக்காட்டி சீர்படுத்தும் சபை ( 2தீமோத்தேயு 2: 26,27)
32.சபை ஐக்கியத்தை கெடுக்கிறவர்கள் மேல் அன்புடன் கண்டிப்பான நடவடிககைகள் ( 1கொரிந்தியர் 5:11-13, 2தெசலோனிக்கேயர் 3:6)
33.பெரும்பாலும் எல்லா சபை கூடுகையிலும் திருவிருந்தும், ஐக்கிய உணவும் பரிமாறும் சபை (அப்போஸ்தலர் 2:46,1கொரிந்தியர் 11:33)
34.ஒரு மனிதனையோ, சபையின் கோட்பாடுகளையோ துதியாமல் தேவனை மட்டும் உயர்த்தும் சபை ( அப் 4:30, பிலிப்பியர் 2: 9-11)
35.சபையின் அசையும், அசையா சொத்துக்களை ஸ்தாபனங்களோ, தனிமனிதனோ நிர்வாகிக்காமல் அந்த அந்த ஊர் சபையாரே நிர்வாகிக்கும் சபை.( அப்போஸ்தலர் 14:23)
36.பாவம், சாபம்,வியாதி, வறுமை, அநீதி போன்ற பிசாசின் கிரியைகளை ஜெயித்து வாழ தேவையான கிருபையின் பிரமாணத்தை போதிக்கும் சபை. ( எபிரெயர் 10:10,14. கலாத்தியர் 3:13, 1பேதுரு 2:24,2கொரிந்தியர் 8:9, ரோமர் 5:19)
37.ஆவிக்குரிய போர் ஆயுதங்களை தரித்து உலகம், மாமிசம், பிசாசை ஜெயித்து ஜெய ஜீவியம் செய்யும் சபையார் ( எபேசியர் 6:12-17)
38. கற்புள்ள கன்னிகையாய் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்நோக்கி வாழும் சபையார் (2கொரிந்தியர் 11:2)
^^^ Sam Daniel 's facebook status
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|