தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
புதிதாக பங்குசந்தை பற்றி தெரிந்து கொள்ள ... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிதாக பங்குசந்தை பற்றி தெரிந்து கொள்ள ... Empty புதிதாக பங்குசந்தை பற்றி தெரிந்து கொள்ள ...

Wed Aug 10, 2016 9:17 am
தலைவாழை இலை போட்டிருக்கிறது. சாப்பிட உட்காருகிறோம்.

கேசரி வைக்கிறார்கள். பொன் நிறத்தில், நெய் வழியும் கேசரி. தொடமுடியவில்லை. அவ்வளவு சூடாக இருக்கிறது. ஒரு விள்ளல் எடுத்து வாயில் போடுகிறோம். நல்ல இனிப்பாக இருக்கிறது. நிமிர்ந்து பரிமாறுபவரைப் பார்க்கிறோம். இன்னும் கொஞ்சம் கேசரி வைக்கிறார். நகராமல் சற்று நேரம் அங்கேயே நிற்கிறார். பின் மீண்டும் சிறிது கேசரி வைக்கிறார். சற்று நேரம் போகிறது. அடுத்தும், சில்வர் வாளியில் இருந்து வழித்து ஒரு கரண்டி கேசரி எடுக்கிறார். நம் இலையில் வைக்கிறார். போய்விடுகிறார்.

இது எப்படி இருக்கிறது?

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் கிரிக்கெட் டெஸ்ட் பந்தயம். இந்திய அணியில் விளையாடவிருக்கும் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்படுகின்றன. அணியில் மொத்தம் பதினோறு வீரர்கள் ஆடலாம். தோனி, சேவாக் போன்ற பதினோரு அதிரடி மட்டையாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆமாம், அணியில் ஆடுவதற்காகத் தேர்வுசெய்யப்பட்ட பதினோரு பேருமே ‘பேட்ஸ்மென்’கள். பேட்ஸ்மென்கள் மட்டுமே!

இது எப்படி இருக்கிறது?

ஒருவர் புதியதாக பங்குச்சந்தை பற்றி தெரிந்துகொள்கிறார். அதில் இறங்குகிறார். சுவாரசியமாக இருக்கிறது. பங்குகள் வாங்குகிறார். இன்னும் கொஞ்சம் பங்குகள் வாங்குகிறார். சேமிப்பு தொடர, மீண்டும் பங்குகள் வாங்குகிறார். மற்றவகை முதலீடுகளில் இருந்து பணத்தினை எடுத்து, அந்தப் பணத்திற்கும் பங்குகளே வாங்குகிறார்.

இன்னொருவர் வேறுமாதிரியானவர். அவருக்கு முன்ஜாக்கிரதை அதிகம். அவர் செய்யும் முதலீடு, எப்போதும் வங்கி டெபாசிட்தான். வேறு ஒருவர், எவ்வளவு பணம் சேர்ந்தாலும், அதற்கு வீடு தான் வாங்குவார். இன்னும் சிலர் எல்லா பணத்தினையும் நகையிலேயே போடுவார்கள். வேறு சிலருக்கு முதலீடு என்றாலே இடம் வாங்குவதுதான்.

கேசரி. மீண்டும் கேசரி. திரும்பவும் கேசரி. இதுவேதானா மொத்த பலகாரமும்! உடன் ஒரு இட்லி, வடை, காபி வேண்டாம்?

தேர்வுசெய்யப்பட்ட பதினோரு பேருமே பேட்ஸ்மென் களாக இருந்தால் எப்படி? பந்துவீச்சாளர்கள், விக்கெட் கீப்பர் போன்றவர்கள் இல்லாமல் ஓர் அணியா? இதென்ன வெற்றிபெறுகிற வழியாகத் தெரியவில்லையே என்று தோன்றுகிறதா இல்லையா?

அதேதான் முதலீட்டு விஷயத்திலும். எது தெரிந்ததோ அது மட்டுமேதான் என்று ஒன்றில் எல்லாவற்றையும் இறக்குவது புத்திசாலித்தனம் அல்ல. அந்த அணுகுமுறையின் மூலம் ஒருவர் கூடுதல் ரிஸ்க் எடுக்கிறார். அல்லது மற்ற வாய்ப்புகளை தவறவிடுகிறார்.

உணவு என்றால், சரிவிகித உணவு. அணி என்றால் பல்திறன் பெற்றவர்கள் இருக்கும் ‘பேலன்ஸ்டு’ அணி. அதேபோல, முதலீடுகளுக்கும், ‘பேலன்ஸ்டு போர்ட்போலியோ’ தான் சரி.

சேமிக்கிற பணத்தினை முதலீடு செய்வதற்கு ஒன்றல்ல, பல வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு. அவற்றின் சாதக பாதகங்களில் வித்தியாசம் இருக்கிறது.

அதனால்தான் பங்குகள், பரஸ்பர நிதிகள் தங்கம் தவிர, இ.எல்.எஸ்.எஸ், Fixed Deposit, சேமநல நிதி போன்றவற்றையும் பார்த்தோம். இதெல்லாம் எனக்கு எதற்கு? என்று எதையும் தள்ள வேண்டாம். என்ன? ஏன்? எப்படி? என்று தெரிந்துகொள்ளலாம். வயது, தேவைகளுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கலாம்.

அந்த வரிசையில் அடுத்து பார்க்கவேண்டியது, கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகள்.

சில ஆண்டுகளாகவே லாபத்தினை கொட்டிக்கொடுத்துக் கொண்டிருந்த பங்குச் சந்தையின் ‘காளை மாடு’, தற்போது சோர்ந்துவிட்டது. மீண்டும் எப்போது வேகமெடுக்கும், பாயும் என்று தெரியவில்லை.

லாபம் என்றால் அள்ளித்தரும்தான். ஆனால் எதிர்பாராத நேரத்தில் இப்படியும் செய்யும். அதனால்தான், பணத்தினை, எல்லாவிதமான முதலீடுகளிலுமாக பிரித்துப்போட வேண்டும் என்பது.

வருமான வாய்ப்புக் குறைவாக இருந்தாலும், போடுகிற பணத்திற்கு பாதுகாப்பு இருக்கிற முதலீடுகளிலும், ஓரளவு பணத்தினையாவது போடத்தான் வேண்டும்.

அப்படிச் செய்யக்கூடிய முதலீடுகளில் பலவும் அரசு தொடர்புடையன. தேசிய சேமிப்புப் பத்திரம் (NSC) ஆறு ஆண்டுகளுக்கானது. தேவை என்றால் இடையிலும் எடுக்கலாம்தான். ஆனால் அதற்கு முதலீடு பத்தாயிரமோ அதற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும். தவிர குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்.

கிசான் விகாஸ் பத்திரத்தில் (KVP) போடும் தொகை 8 வருடம் 7 மாதங்களில் இரட்டிப்பாகும். “வட்டியைக் குறைத்துக்கொள்ளுவதானாலும் சரிதான். எனக்கு அவசரம். போட்ட பணத்தினை திரும்பத் தாருங்கள்’’ என்று கேட்டாலும், குறைந்தபட்சம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகுதான் எடுக்க அனுமதிப்பார்கள்.

அஞ்சலகத்திலும் போடலாம்தான். தொடர் சேமிப்பு ஆரம்பித்தால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்குத்தான் போடலாம். ‘டைம் டெபாசிட்’ ஆக போடுவதென்றால், குறைந்தபட்சம் ஒரு வருடம் விட்டுவைக்க வேண்டும். ஆறு மாதத்தில் வேண்டுமென்று கேட்டால் கொடுப்பார்கள். வட்டியைக் குறைத்துவிடுவார்கள். அதற்கு சேமிப்பு கணக்கு வட்டிதான் கிடைக்கும்.

ஆகக் கூடி, பணம் பத்திரமாக இருக்க வேண்டுமென்றால், அதே சமயம் ஓரளவு கூடுதல் வருமானமும் (வட்டி) வேண்டுமென்றால், பணத்தினை உடனடியாக எடுக்க முடியாதனவற்றுள்தான் போட வேண்டிவரும். இதை மாற்ற முடியாதா?

முடியும். அதற்கு வங்கிகளில்தான் போட்டுவைக்க வேண்டும். அங்கேயும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் விட்டுவைப்பதற்குதான் கூடுதல் வட்டி. மற்றவற்றுக்கு சொற்ப வட்டிதான்.

வேறு ஏதும்? வேண்டும்போது எடுக்கவும் முடிய வேண்டும். வங்கிவட்டியைவிட கொஞ்சமேனும் கூடுதலாகக் கிடைக்கவேண்டும், பணமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முடியுமா?

அங்கே தான் ‘டெப்ட் ஃபண்ட்ஸ்’ (Debt Funds) வருகின்றன. அரசின் கியாரண்டி கிடையாதே ஒழிய, இங்கேயும் பணம் பத்திரமாகத்தான் இருக்கும். வேண்டும்போது எடுத்துக் கொள்ளலாம். வட்டியும் ஓரளவு கூடுதலாகவே இருக்கும். தவிர , இதில் கிடைக்கும் முதல் பெருக்கத்திற்கு, வருமான வரியிலும் சில சாதகங்கள் உண்டு.

அட! அதனால் தான் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத நிறுவனங்கள் (கார்ப்பரேட்ஸ்) இப்படிப்பட்ட ஃபண்டுகளில் பணத்தினைப் போட்டு வைக்கிறார்கள். தவிர அவர்களுக்கு திடீர் திடீரென பணம் தேவைப்படலாம். உடனே எடுக்கவும் முடிய வேண்டும். அதற்கு ஏற்றவை இந்த விதமான ‘நிதிகள்’.

நிறுவனங்களுக்கு மட்டுமா? எங்களுக்கும்தான் அப்படிப்பட்ட தேவைகள் இருக்கின்றன என்று நினைப்பவரா நீங்கள்? அப்படியென்றால் கூடுதல் கவனமாகவே படியுங்கள்.

இவற்றிலும் பல வகைகள் உண்டு.

இன்கம் ஃபண்டுகள்: நம்மிடம் இருந்து பெறப்படும் பணம், கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்யப்படும். ஆண்டுக்கு 8 முதல் 9% வரைகூட வருமானம் கிடைக்கும்.

லிக்விட் ஃபண்ட்ஸ்: மிகக் குறுகிய காலத்திற்குக் கூட போடமுடியும். நிலமோ, வீடோ வாங்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம். கையில் ரொக்கமாக வைத்துக்கொள்ளாமல், சில மாதங்களுக்கு அல்லது நாட்களுக்குக் கூட போட்டு வைக்கலாம். வேண்டும்போது உடனே எடுக்கலாம்.

இவையெல்லாம் தவிர, ஷார்ட் டர்ம் புளோட்டர், லாங் டர்ம் புளோட்டர் போன்றவையும் உண்டு.

எஃப்.எம்.பி என்று ஒரு வகை. ஆங்கிலத்தில் Fixed Maturity Plan. போடுகிற பணத்தினை குறிப்பிட்ட காலத்திற்கு திரும்ப கேட்கமாட்டோம் என்று சொல்லிப் போடுவது. அதனால் கூடுதல் வருமானம் கிடைக்கும். வைப்பு காலம் முழுவதும் ஒரே அளவிலான நிலையான வட்டியும் கிடைக்கும்.

எவ்வளவு காலம் என்பதுதான் நிச்சயமாக இருக்க வேண்டுமே ஒழிய, அது வெறும் முப்பது நாட்கள் ஆகக் கூட இருக்கலாம். ஒன்று, இரண்டு, மூன்று வருடங்கள் வரை கூட எஃப்.எம்.பி.கள் போடலாம். வங்கி வட்டியைவிட எஃப்.எம்.பி ஒருவிதத்தில் உசத்தி. வட்டி வருமானத்திற்கு வருமான வரி உண்டு. ஆனால் இதில் வரும் வருமானத்திற்கு வட்டி கணக்கிடும் போது இண்டெக்ஸ்ஷேன் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். வரி குறையும்.

இவற்றையெல்லாம் பங்குகள் போலவே, தரகு நிறுவனங்கள் மூலம் வாங்கலாம் விற்கலாம். தரகு கட்டணம் இல்லை. ஆனால் நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணங்கள் உண்டு.

டி.மேட் கணக்கு தேவையில்லை. ஆனால் பான் கார்டு தேவை. வட்டிவிகிதம் உயர்ந்துகொண்டே போகப்போகிறது என்று தெரியவந்தால், இதுபோன்ற ஃபண்டுகள் அவ்வளவு லாபம் அல்ல. வரும் ஆண்டுகளில் வட்டிவிகிதம் குறையப் போகிறது என்றால், உடனே இவற்றை வாங்கலாம். ஒரே தவணையில்தான் போட வேண்டும் என்பதில்லை. எஸ்.ஐ.பி. முறையிலும் இவற்றில் பணம் போட முடியும்.

முதலீடுகளில் எல்லாம் கலந்துதான் இருக்க வேண்டும், பங்குச் சந்தை போன்ற கேசரியோடு, இட்லி, வடை, காபி போல, இவையும் கொஞ்சம் தேவைதான்..

நன்றி: சோம.வள்ளியப்பன்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum