தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
முதலீடு செய்யும் நம் பணம் பத்திரமாக இருக்க வேண்டும். எவையெல்லாம் பத்திரமான முதலீடுகள்? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

முதலீடு செய்யும் நம் பணம் பத்திரமாக இருக்க வேண்டும். எவையெல்லாம் பத்திரமான முதலீடுகள்? Empty முதலீடு செய்யும் நம் பணம் பத்திரமாக இருக்க வேண்டும். எவையெல்லாம் பத்திரமான முதலீடுகள்?

Wed Aug 10, 2016 9:09 am
தங்கம், வீடுகள், நிலம், இடங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரிகிற முதலீடுகள். எப்போதாவது வாங்கிய பிறகு அவற்றின் விலை இறங்கினாலும் இறங்கலாம். ஆனால் வித்தியாசங்கள் அவ்வளவு பெரியதாக இருக்காது. இவற்றை ‘பிசிக்கல் அசெட்ஸ்’ என்கிறார்கள். நம் நாட்டில் இன்னும்கூட பெரும்பாலானவர்களுக்கு முதலீடு என்றால் இவைதான்.

தவிர, நிதி தொடர்பான சொத்துக்களும் உண்டு. அவற்றின் மீது இப்போதுதான் கூடுதலான மக்களுக்கு அதிக கவனம் வந்திருக்கிறது. நம் பணத்தினைக் கொண்டு நாமே சொத்துக்கள் வாங்காமல், வேறு எவரும் வியாபாரம் செய்யவோ, முதலீடு செய்யவோ கொடுக்கிறோம். அதுதான் ‘பைனான்சியல் அசெட்ஸ்’ செய்யும் வேலை.

எல்லோருக்கும் தெரிந்தது, வங்கிகளில் செய்யப்படும் வைப்புகள். பிக்செட் டிப்பாசிட்ஸ் என்பது இதன் பெயர். எல்லா வங்கிகளிலும் செய்யலாம். வருமானம் ஓரளவுதான் இருக்கும். அதிகபட்சம் வருடத்துக்கு எட்டரை சதவிகிதம் வரை கொடுக்கப்படுகிறது. இது வங்கிக்கு வங்கி மாறுபடும். வங்கி வைப்புகளிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு ( 65 வயது நிறைவானவர்கள்) அரை முதல் முக்கால் % வரை கூடுதல் வட்டி கொடுக்கப்படுகிறது. சில வங்கிகளில் 9.25% .

வங்கி வைப்புகளில் இருக்கும் பயன்கள் : போட்ட பணத்தினை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். எத்தனை வருடங்களுக்கு என்று போடுகிறோமோ, அதற்கு முன்னதாக திரும்ப எடுக்க விரும்பினாலும் செய்யலாம். இதற்கு ‘ஃபோர் குளோசர்’ என்று பெயர். குறிப்பிட்ட காலம் விட்டு வைக்காதற்காக, அவர்கள் கொடுக்கும் வட்டியில் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுவார்கள். மற்றபடி பணத்தினை எப்போது வேணுமானாலும் திரும்ப எடுக்கலாம் என்பது இதன் முக்கிய அம்சம்.

வங்கிகளில் போடப்படும் வைப்புகளுக்குக் கிடைக்கும் வட்டி முழுவதுமே வருமானமாக கருதப்படும். வருமான வரிக்காக டி.டி.எஸ் (TDS) தொகை பிடிப்பார்கள். ‘15 ஜி’ என்கிற படிவம் கொடுத்தால் டி.டி.எஸ் பிடித்தம் செய்யமாட்டார்கள். வருமான வரி வரம்புக்குள் வருபவர்கள்தான் வரி கட்ட வேண்டும். இல்லாவிட்டால், பிடித்தம் செய்யப்பட்ட டி.டி.எஸ் சினை, வரிக்கணக்கு (ரிட்டர்ன்) தாக்கல் செய்யும் போது, அதில் காட்டி, திரும்பப் பெறலாம்.

வங்கிகளில் நபர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் வரை வங்கிகளில் செய்யும் வைப்பு பணத்தினை (அசல்), வருமான வரி சட்டப்பிரிவு ‘80 சி’ யின் கீழ் காட்டி, வரி விலக்குப் பெறலாம். அதாவது, ஒருவருக்கு ஆண்டு ஒன்றுக்கு நான்கு லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. அவர் வரி கட்ட வேண்டிவருகிறது. அவர், அந்த வருமானத்தில் இருந்து, 30ஆயிரம் ரூபாயை, ஒரு வங்கியில் ஐந்து ஆண்டுகளுக்கு, வைப்பாகப் போடுகிறார் என்றால், அந்த 30 ஆயிரம் ரூபாயினை 80சி கணக்கில் எடுத்துக்கொண்டு அவருக்கு வரி விலக்கு கொடுக்கப்படும். (‘80சி’யின் கீழ் மொத்தமாக ஒரு லட்சம் வரைதான் அனுமதி. வேறு சேமிப்புகள் ஏதும் செய்யாத பட்சம், அவர் வங்கி வைப்பேகூட ஒரு லட்சம் வரை அதிகபட்சமாக செய்து வரிவிலக்குப் பெறலாம்.) இந்தச் சலுகை குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்குப் போடப்படும் வைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.

இப்படிக் கிடைக்கிற வரிவிலக்கினையும் சேர்த்துப் பார்த்தால், கிடைக்கிற வருமானம் (வட்டி+ வரிச்சலுகை) கணிசமாகவே இருக்கும். மற்ற கடன் பத்திரங்களைவிட இந்தக் காரணங்களினால் வங்கி வைப்பு, விரும்பப்படுகிறது.

கையில் ரொக்கம் இருக்கிறதா? இன்னும் ஒருசில மாதங்கள் கழித்துதான் அதற்கு தேவை இருக்கிறதா? அப்படியென்றால் அந்தப் பணத்தினை வங்கிகளில் போட்டுவைக்கலாம். குறைந்த பட்சம் 15 நாட்களுக்குக்கூட பணத்தினை வங்கிகளில் வைப்பாகப் போட்டு வைக்கலாம். குறைவாகவே இருந்தாலும் அதற்கு 3 அல்லது 3லு% வட்டி கிடைக்கும்.

வங்கிகள் என்றாலே பாதுகாப்பானது தானா? அதில் போடப்படும் பணதிற்கு பிரச்னை ஏதும் இல்லையா? என்கிற கேள்வி வரலாம். பொதுவாக பிரச்னை இல்லைதான். ஆனால், சில வங்கிகள் பிரச்னைகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. சமீபத்திய உதாரணம் குளோபல் டிரஸ்ட் வங்கி. வங்கிகளுக்கு அப்படி ஏதும் ஆகிவிட்டால், வங்கியில் போட்ட பணம், முதலீட்டாளருக்குத் திரும்பக் கிடைக்குமா? கிடைக்காதா?

இங்கேயும் ஒரு லட்சம் என்பது தான் வரம்பு. இதற்காக வங்கிகளே காப்பீடு செய்துள்ளன. முதலீட்டாளர் ஒவ்வொருவர் செய்யும் வைப்புக்கும் காப்பீடு உண்டு. அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய். வங்கிக்கு ஏதும் ஆகிவிட்டாலும் நபர் ஒன்றுக்கு அவர் செய்த வைப்புத் தொகை அல்லது ஒரு லட்சம் இது இரண்டில் எது குறைவோ அது கிடைக்கும். வங்கி வைப்புகளுக்கு இருக்கும் இன்னொரு கூடுதல் நன்மை இது. இது பரஸ்பர நிதியிலோ பங்குகளிலோ இல்லாத வாய்ப்பு. ஆனால் அஞ்சலக சேமிப்பு வைப்பு, தேசிய சேமிப்புப் பத்திரம், பப்ளிக் பிராவிடெண்ட் பண்ட் போன்றவற்றில் முழுப்பணத்திற்கும் கியாரண்டி உண்டு. வங்கி வைப்புகளில் ஆபத்து ஏதும் ஏற்படும் பட்சம், அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய்க்குத்தான் காப்பீடு உண்டு.

வங்கி வைப்புத் தவிர, வேறு என்ன முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன? பப்ளிக் பிராவிடெண்ட் பஃண்ட் (PPF) என்கிற அரசின் திட்டம் இருக்கிறது. இது வங்கி மூலம்தான் நடத்தப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கான திட்டம். இதில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கும் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. பணத்திற்கு முழு கியாரண்டி. ஆனால் விருப்பம் போல திரும்ப எடுக்க முடியாது. குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் ஆகவேண்டும். கடன் வேண்டுமானால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும்.

இன்னும் என்ன என்ன பத்திரமான முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன?

பங்குச் சந்தை நிலவரம்

அமெரிக்காவின் பொருளாதாரம் கொஞ்சம் சிக்கலில் இருக்கிறது. அங்கே வளர்ச்சி குறைகிறது. 1929 களில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி போன்றதொரு வீழ்ச்சி, அல்லது 1974, 1990_களில் ஏற்பட்டது போன்ற நிலைகள் வந்துவிடுமோ என்கிற பயம் ஏற்பட்டு இருக்கிறது. பெரிய வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கொடுத்த கடன்கள் எதற்கும் பொறாத மாதிரி ஆகியிருக்கின்றன. பெரிய பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை தொலைத்திருக்கிறார்கள். இது 16 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் அமெரிக்கப் பங்குச் சந்தையும் பெரிய வீழ்ச்சியினை சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் டாலர் மதிப்பு இந்திய ரூபாய்க்கு எதிராகக் குறைந்து வருவது போல, ஜப்பானின் யென் மற்றும் ஐரோப்பாவின் யூரோவிற்கு எதிராகவும், ஸ்விட்சர்லாந்தின் (பிராங்க்) பணத்திற்கு எதிராகவும்கூட மதிப்பிழந்து வருகிறது.

இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் ஏனைய ஆசியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கிறது. பிரச்னை தீர, நிச்சயம் சில காலம் ஆகும். பிரச்னையின் தீவிரம் அப்படி. அதனால் தான், யு.எஸ்சின் ரிசர்வ் வங்கி போன்ற ‘பெட்’ , தொடர்ந்து வட்டி விகிதத்தினை குறைத்து பொருளாதார சக்கரத்தினை சுழற்றிவிடப் பார்க்கிறது.

இந்தியப் பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு மிக கணிசமானது. அதனால் மட்டுமல்ல, தற்சமயம் தொழிற்துறை போன்ற துறைகளின் வளர்ச்சியும் சற்று மட்டுப்பட்டிருக்கிறது. அதனால் தான் மிக அதிகம் உயர்ந்திருந்த பங்கு விலைகளும் குறியீட்டு எண்ணும் இப்போது சரிந்திருக்கின்றன. நல்ல நிறுவனப் பங்குகளை நீண்ட கால முதலீடாக வாங்கியவர்கள் பயப்பட வேண்டாம். இதுவரை வாங்காமல் இருந்தவர்கள், நிப்டி பங்குகளை சிறிய அளவுகளில் (மொத்த பணத்தில் 20% க்கு) வாங்கலாம். இயன்றால் நல்ல எஸ்.ஐ.பி திட்டங்களில் சேர்ந்து தொடர் முதலீட்டினை இப்போது தொடங்கலாம். அதேபோல மூன்று நான்கு வருடங்களுக்கு விட்டு வைக்கக் கூடிய பணத்தின் ஒரு பகுதியை, நல்ல பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம்.
 

யூலிப் முதலீட்டால் அதிக நஷ்டமில்லை!
பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலைகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் குறியீட்டு எண்களும் குறைந்து வருகின்றன. இதனால் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி நேரடியாக முதலீடு செய்துள்ளவர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் நேரடியாக முதலீடு செய்தவர்களுடன் ஒப்பிடுகையில், யூலிப் திட்டத்தின் வாயிலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களின் நஷ்டம் குறைந்த அளவில் உள்ளது.

(காப்பீடு நிறுவனங்கள், காப்பீடு செய்து கொண்டவர்கள் செலுத்தும் பிரிமியத்தை (காப்பீடு தொகை) பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றன. இதில் இருந்து வரும் வருவாயை, காப்பீடு செய்து கொண்டவர்களுக்கு திருப்பித் தருகின்றன. இந்தத் திட்டமே ஆங்கிலத்தில் யூனிட் லிங்க்ட் இன்ஷ்யூரன்ஸ் பிளான் என கூறப்படுகிறது. இதை சுருக்கமாக யூலிப்ஸ் என அழைக்கின்றார்கள்)

இந்த வருடம் ஜனவரி 10 ந் தேதியில் இருந்து, கடந்த வாரம் வரை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சுமார் 30 விழுக்காடு குறைந்துள்ளது.

இதே காலகட்டத்தில் ஒன்பது யூலிப் திட்டங்களின் கீழ் பங்குச் சந்தையின் முதலீடூ செய்தவைகளின் மதிப்பு 20 விழுக்காடுதான் குறைந்துள்ளது. இந்த யூலிப் திட்டங்களின் முதலீட்டை கையாளும் நிபுணர்கள், பங்குச் சந்தையின், குறிப்பிட்ட பங்குகளின் விலை நிலவரத்தை கணித்து, பங்குகளை விற்பனை செய்துள்ளனர். அதற்கு பதிலாக மற்ற பங்குகளை வாங்கியுள்ளனர். இதனால் தான் சென்செக்ஸ் குறியீட்டு எண்ணுடன் ஒப்பிடுகையில், யூலிப் முதலீடு மதிப்பு குறைவது குறைவாக இருக்கின்றது.

இதை வேறு மாதிரியாக கூறுவது என்றால், நீங்கள் நேரடியாக பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால் ஏற்படும் நஷ்டத்தை விட, யூலிப் திட்டத்தின் மூலம் முதலீடூ செய்திருந்தால் நஷ்டம் குறைந்திருக்கும்.

காப்பீடு செய்து கொள்பவர்களிடம் இருந்து யூலிப் திட்டத்தின் மூலம் பெறப்படும் பணம், பங்குச் சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி போன்ற பிரிவுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகின்றது. உள்நாட்டு பொருளாதார நிலைமை, அயல் நாடுகளின் நிலவும் சூழ்நிலை உட்பட, பல்வேறு காரணங்களினால் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைவதும், மீண்டும் அதிகரிப்பதும் நடக்கின்றன.

அதே நேரத்தில் யூலிப், பரஸ்பர நிதி நிறுவனங்கள் குறைந்த கால முதலீடாக இல்லாமல், நீண்ட கால முதலீடு என்ற நோக்கில் பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றன. அத்துடன் இந்த நிதியை பங்குச் சந்தைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் நிர்வகிப்பதால், பாதிப்பு குறைவாக இருக்கின்றது.

யூலிப் திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களும், மற்ற பரஸ்பர நிதியில் முதலீடு செய்துள்ளவர்களும் பங்குச் சந்தை குறித்த செய்திகளை தினசரி உன்னிப்பாக கவனிக்கின்றனர். பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் அதிகரிக்கும் போது எல்லை இல்லாத ஆனந்தம் அடையும் இவர்கள், அவை சரியும் போது மனமுடைந்து போகின்றனர். குறியீட்டு எண்கள் குறைவதால் எல்லா பங்குகளின் விலைகளும் சரிந்து விடுவதில்லை. அத்துடன் முதலீடு நிறுவனங்கள் சந்தை அபாயத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு, பல்வேறுபட்ட துறைகளில் உள்ள நிறுவனங்களிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளில் முதலீடு செய்கின்றனர். இதனால் ஒன்றில் நஷ்டம் அடைந்தாலும், மற்றொன்றில் கிடைக்கும் இலாபத்தால் இழப்பு குறைகின்றது.

பங்குச் சந்தைகளில் சரிவு இருக்கும் நேரத்தில், பங்குச் சந்தையுடன் இணைந்த காப்பீடு திட்டத்தில், புதிதாக சேருபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

இர்டா என்று அழைக்கப்படும் காப்பீடு ஒழுங்குபடுத்தல் மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் புள்ளி விபரங்களின் படி டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜனவரியில் யூலிப் திட்டத்தில் கட்டப்படும் தொகை அதிகரித்துள்ளது. இதில் டிசம்பர் மாதம் இறுதிவரை ரூ.8,880 கோடி முதலீடு திரட்டப்பட்டு இருந்தது. இது ஜனவரி மாதம் ரூ.9,551 கோடியாக அதிகரித்துள்ளது.

இதிலிருந்தே யூலிப் திட்டத்தில் முதலீடு செய்திருப்பவர்கள், பங்குச் சந்தையின் குறீயீட்டு எண்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, வாய்ப்பு இருந்தும் இந்த திட்டத்தில் இருந்து வெளியேறவில்வலை. அத்துடன் இதில் புதிதாகவும் பல நூற்றுக்கணக்கான பேர் இணைந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

நன்றி: சோம.வள்ளியப்பன் - குமுதம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum