தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
தபால் நிலைய சேமிப்பு Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தபால் நிலைய சேமிப்பு Empty தபால் நிலைய சேமிப்பு

Wed Aug 10, 2016 8:34 am
வீட்டுச் செலவுக்கென கணவர் கொடுக்கும் பணத்தில் ஒரு ரூபாயையாவது மிச்சப்படுத்திவைப்பது நம்மூர் இல்லத்தரசிகளின் குணம் மட்டுமல்ல, அவர்களது நிர்வாகத் திறமையின் வெளிப்பாடும் கூட. என்னதான் பார்த்துப் பார்த்து பட்ஜெட் போட்டாலும் ஒவ்வொரு மாதமும் நிச்சயம் வரவுக்கு மீறிய செலவு ஒன்றாவது இருக்கும்.
அதுபோன்ற நேரத்திலும் அவசர மற்றும் எதிர்பாராத செலவுகளுக்கும் கைகொடுப்பது இல்லத்தரசிகளின் இந்த சேமிப்புதான்.

இப்படி சிறுகச் சிறுகச் சேமிப்பதை கிராமப்புறங்களில் சிறுவாட்டுப் பணம் என்பார்கள். சேமிக்கிற பணத்தை சமையலறையில் மட்டுமே வைப்பதைவிட ஏதாவது சேமிப்பு கணக்கில் போட்டுவைத்தால் அசலுடன் வட்டியும் சேர்ந்து உங்களது தேவைக்கு கைகொடுக்குமே. அப்படி பணத்தை எந்த வகையில் சேமிக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் உதவியுடன் உங்களுக்கு வழிகாட்டத்தான் இந்தப் புதிய பகுதி!

இந்த இதழில் அஞ்சலக சேமிப்பு குறித்து விளக்குகிறார் எஃப்.சி.எம் செண்ட்ரம் பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் முதலீட்டு ஆலோசகருமன முரளிதரன்.

இன்று எத்தனையோ சேமிப்பு முறைகள் வந்தாலும் எல்லா வகையிலும் பாதுகாப்பானது போஸ்டல் சேவிங்ஸ் எனப்படும் அஞ்சலக சேமிப்பு முறைதான். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக தன் சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது இது. இந்த சேமிப்பில் குறைவான வட்டி விகிதம் என்பதுடன் இது ஏழை மக்களுக்கான சேமிப்பு எனப் பலர் தவறான நினைக்கிறார்கள். உண்மையை சொல்வதென்றால் இல்லத்தரசிகளுக்கு ஏற்றது அஞ்சல சேமிப்புதான். பெண்கள் தைரியமாக நம்பிக்கையுடன் போகக்கூடிய இடங்களில் போஸ்ட் ஆபிஸும் ஒன்று.

இங்கு ஏழை, பணக்காரர் என்கிற வித்தியாசமோ, பெரிய கடைகள் அல்லது நிறுவனங்களில் உள்ளது போன்ற பகட்டான தோற்றமோ கிடையாது. சிலருக்கு வங்கியில் நுழைவதற்கு தயக்கமோ, எப்படி உதவி கேட்பது என்கிற கூச்சமோ இருக்கும். ஆனால் போஸ்ட் ஆபிஸ் அப்படி அல்ல. இங்கு 10 ரூபாயைக்கூட கவுரவமாக சேமிக்க முடியும். மற்ற முதலீட்டு சாதனங்களான ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை போன்றவற்றில் உள்ளது போன்ற கடுமையான மற்றும் சிக்கலான நிபந்தனைகள் இங்கு கிடையாது. அஞ்சலக முதலீடுகளின் பிளஸ் பாயின்ட்டே இங்கு 100% பாதுகாப்பு உண்டு என்பதுதான். இவை எல்லாவற்றையும் விட ஆண் துணை இல்லாமல் தைரியமாக அஞ்சலகத்தில் சேமிக்க முடியும். பெண்களுக்கு இதைத்தவிர வேறென்ன வேண்டும்! என்றவர், பலவிதமான அஞ்சலக சேமிப்பு முறைகள் குறித்தும் சொல்கிறார்.

பெண்களுக்கு ஏற்றவாறு முக்கியமாக 6 திட்டங்கள் இருக்கின்றன. அவை:

 அஞ்சலக சேமிப்பு கணக்கு (Post office Savings Account), 
தொடர் வைப்புக்கணக்கு ((Rezcurring Deposit Account),  
அஞ்சலக மாந்தாந்திர வருமான கணக்கு (PostOffice Monthly Income Account),
 வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund Account), 
கிசான் விகாஸ் பத்திரம் (KisanVikas Patra), 
தேசிய சேமிப்புப் பத்திரம் (National Savings Certificate), 
அஞ்சலக வைப்பு கணக்கு (Post Office Time Deposit Account).

முதலாவதாக, அஞ்சலக சேமிப்பு கணக்கு என்பது ஒரு வங்கி சேமிப்பு கணக்கு  போன்றது. அதற்கு இருப்பதுபோல செக் வசதியும் உண்டு. இதற்கு குறைந்தபட்சம் 50 ரூபாய் இருந்தாலே போதும்.

அடுத்தகாக, தொடர் வைப்புக் கணக்கு. இது மிகவும் பிரபலமான திட்டம். இன்று  வங்கிகளில் காணப்படுகின்ற தொடர்வைப்புக் கணக்கு திட்டங்களுக்கு இதுவே  முன்னோடி. இந்தத் திட்டத்தில் மாதம் 10 ரூபாய்கூட சேமிக்க முடியும். உதாரணத்துக்கு, ஒரு மாதத்துக்கு வெறும் 50 ரூபாய் செலுத்தி வந்தால், 5 வருடங்களுக்குப் பிறகு அவருக்கு வட்டியுடன் சேர்த்து 3644.50 ரூபாய் கிடைக்கும். மாதம் 100 ரூபாய் செலுத்தினால்  5 வருடங்களுக்குப் பிறகு 7289.50 ரூபாய் கிடைக்கும். மாதம் 150 ரூபாய் செலுத்தினால் 5 வருடங்களுக்குப் பிறகு 10933.50 ரூபாய் கிடைக்கும்.

அடுத்ததாக, அஞ்சலக மாந்தாந்திர வருமான கணக்கு. இதற்கு குறைந்தபட்ச தொகை 1,500 ரூபாய்.

அடுத்ததாக, வருங்கால வைப்பு நிதி. இந்தத் திட்டம் தொழிலாளர் களுக்காகவும், உழைக்கும் வர்க்கத்தினரின் எதிர்கால தேவையைப் பூர்த்தி செய்யவும் உருவாக்கப் பட்டது. இதில், குடும்பப் பெண்களும் முதலீடு செய்து சேமிக்கலாம். அடுத்ததாக, கிசான் விகாஸ் பத்திரம் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம். ஒரு காலத்தில் பெண் குழந்தை பிறந்தவுடன் இந்த பத்திரம் ஒன்றை வாங்கிவிடுவார்கள். இந்தப் பத்திரங்கள் முதிர்வு காலம் வந்தவுடன், அவை மீண்டும் புதுப்பிக்கப்படும். பலருக்கு பொருளாதார ஆலோசனை கூறும் ஆடிட்டர்கள்கூட இவற்றை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். எனவே, அஞ்சலகத்திலோ அல்லது அஞ்சலக முகவர்களிடம் நேரடியாகச் சென்று தங்களது சேமிப்பைத் தொடங்கலாம் என்றவர், இந்த சேமிப்பின் பாதுகாப்பு குறித்தும் விளக்கினார்.

அஞ்சலக சேமிப்புக்கு 100% பாதுகாப்பு உண்டு. ஏனென்றால், அஞ்சலக துறை நேரடியாக மத்திய அரசின் கீழ் வருகின்றது. இதன் செயல்பாடுகளும், முதலீடுகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. அஞ்சலகத் துறை நாடு முழுவதும் பரந்து விரிந்து காணப்படுகின்றது. வங்கிக்கிளை இல்லாத ஊர்களில்கூட அஞ்சலகக் கிளை இருக்கும். இப்படி மக்களோடு பின்னிப் பிணைந்து நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் நிறைந்திருக்கிற அஞ்சலகத் துறையை நாம் பயன்படுத்திக்கொள்வது அவசியம் என்று முடித்தார் முரளிதரன்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தபால் நிலைய சேமிப்பு Empty Re: தபால் நிலைய சேமிப்பு

Wed Aug 10, 2016 8:44 am
அஞ்சலக் முதலீடுகளுக்கான வட்டி விகிதங்கள் என்ன?

சேமிப்பு கணக்குகளுக்கு – 4%,
ஆர்டி கணக்குகளுக்கு – 8.4%,
டைம் டெப்பாசிட்களுக்கு (TD)
1 வருடம் – 8.4%, 2 வருடம் – 8.4%, 3 வருடம் 8.4%, 5 வருடம் 8.5%
மந்த்லி இன்கம் ஸ்கீம் (Monthly income scheme) – 8.4%
பிபிஎஃப் – 8.7%
செல்வமகள் சேமிப்பு கணக்கு – 9.2%
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கு – 9.3%
கிஷான் விகாஸ் பத்திரம் – 8.7%
நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட்
(8ஆவது வெளியீடு, 5 வருடங்கள்) – 8.5%, (9ஆவது வெளியீடு, 10 வருடங்களுக்கு ) – 8.8%

வரிச் சேமிப்புக்கு திட்டமிடுபவர்கள் ...

கீழ்க்காணும் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

5 வருட டைம் டெபாசிட், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், பிபிஎஃப், என்எஸ்சி, அஞ்சலக, ஆயுள் காப்பீடு, செல்வ மகள் சேமிப்புத் திட்டம், ஊரக அஞ்சல் காப்பீடு ஆகிய திட்டங்களின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரி பிரிவு 80சியின் கீழ் வருமான வரி விலக்கு பெற முடியும்.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் குறித்த விபரங்கள்

அஞ்சலகத் துறை வலைப்பதிவிலிருந்து ... 
---
Senior Citizen Savings Scheme (SCSS) Account

• From 1.4.2015, interest rates are as follows:-

9.3% per annum, payable from the date of deposit of 31st March/30th Sept/31st December in the first instance & thereafter, interest shall be payable on 31st March, 30th June, 30th Sept and 31st December.

• There shall be only one deposit in the account in multiple of ₹.1000/- maximum not exceeding ₹ 15 lakh.


• An individual of the Age of 60 years or more may open the account.

• An individual of the age of 55 years or more but less than 60 years who has retired on superannuation or under VRS can also open account subject to the condition that the account is opened within one month of receipt of retirement benefits and amount should not exceed the amount of retirement benefits.

• Maturity period is 5 years.

• A depositor may operate more than one account in individual capacity or jointly with spouse (husband/wife).

• Account can be opened by cash for the amount below ₹ 1 lakh and for ₹ 1 Lakh and above by cheque only.

• In case of cheque, the date of realization of cheque in Govt. account shall be date of opening of account.

• Nomination facility is available at the time of opening and also after opening of account.

• Account can be transferred from one post office to another

• Any number of accounts can be opened in any post office subject to maximum investment limit by adding balance in all accounts.

• Joint account can be opened with spouse only and first depositor in Joint account is the investor.

• Interest can be drawn through auto credit into savings account standing at same post office, through PDCs or Money Order.

• In case of SCSS accounts, quarterly interest shall be payable on 1st working day of April, July, October and January. It will be applicable at all CBS Post Offices.

*Quarterly interest of SCSS accounts standing at CBS Post offices can be credited in any savings account standing at any other CBS post offices.

• Premature closure is allowed after one year on deduction of an amount equal to1.5% of the deposit & after 2 years 1% of the deposit.

• After maturity, the account can be extended for further three years within one year of the maturity by giving application in prescribed format. In such cases, account can be closed at any time after expiry of one year of extension without any deduction.

TDS is deducted at source on interest if the interest amount is more than ₹ 10,000/- p.a.

Investment under this scheme qualifies for the benefit of Section 80C of the Income Tax Act, 1961 from 1.4.2007.

மூத்த குடிமக்களுக்கு அஞ்சலக துறையில்...

Senior Citizen Savings Scheme (SCSS) அக்கௌன்ட்-ல்தற்போது வருமான வரி விலக்குக்கான முதலீடு தொகை
எவ்வளவு..?


வட்டி 10000/- தாண்டினால் ,15 H கொடுத்தாலும் 10% வரி விதிப்பு இருக்கும் எனவும் , பிறகு claim பண்ணவேண்டும்  


அதனால் தான் வட்டி வாங்கப் போகும்போது , வட்டி பெறும் ,இடத்தை காலியாக வைக்க சொல்லுகின்றனர் . பிறகு PO சொல்லும் தொகையை நிரப்ப வேண்டும் .
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தபால் நிலைய சேமிப்பு Empty Re: தபால் நிலைய சேமிப்பு

Wed Aug 10, 2016 9:20 am
சம்பள பட்டியல் சேமிப்புத் திட்டம் அலைய வைக்காத அஞ்சலக சேமிப்பு!

மாதச் சம்பளம் வாங்குகிறவர்களில் பலர் வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலோ ஆர்.டி. போன்ற திட்டங்களில் சேர்ந்துதான் சிறுக சிறுக சேமித்து வருகிறார்கள். இப்படி சேமிக்கும்போது ஒவ்வொரு மாதமும் வங்கி 
அல்லது அஞ்சல் அலுவலகத்துக்குச் செல்லவேண்டும். ஆனால், தபால் அலுவலகம் செல்லாமலே அதில் கிடைக்கும் வருமானம் மற்றும் வசதியை நீங்கள் பெற விரும்பினால், நீங்கள் தபால் அலுவலகத்திலுள்ள சம்பள பட்டியல் சேமிப்பு (payroll saving scheme) வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். 

அது என்ன சம்பள பட்டியல் சேமிப்பு வசதி? இது யாருக்கானது?, இந்த முறையில் எப்படி சேமிப்புக் கணக்கைத் தொடங்குவது?, வட்டி எவ்வளவு? என பல விஷயங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார் தென்மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர். அவர் தந்த விவரங்கள் இதோ:

 சிறப்பு வசதி!

 ''ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ஆர்.டி. (Recurring Deposits), டி.டி. (Time Deposits), தேசிய சேமிப்பு பத்திரம் (NSCs) மற்றும் பி.பி.எஃப். (PPF) போன்ற சேமிப்புத் திட்டங்களுக்கான சிறப்பு வசதிதான் சம்பள பட்டியல் சேமிப்பு. இந்த வசதியை சம்பளதாரர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். ஆனால், தனிநபராக இதில் சேரமுடியாது. நிறுவன பணியாளர்கள் பலர் சேர்ந்துதான் இம்முறையில் சேமிப்பை ஆரம்பிக்க முடியும்.

இந்த முறையில் தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்க வயது வரம்பு இல்லை. சம்பளதாரராக இருந்தால்போதும். தனிநபர்கள், தபால்  அலுவலகத்தில் ஆர்.டி., டைம் டெபாசிட் (டி.டி). போன்ற சேமிப்பு கணக்கை ஆரம்பித்து, மாதந்தோறும் பணம் செலுத்த தபால் அலுவலகம் செல்வது வழக்கம். இதனால் நேரம் மற்றும் போக்குவரத்துக்காக செலவிடும் தொகை வீணாகிறது.

ஆனால், சம்பள பட்டியல் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பை மேற்கொள்ளும்போது பணத்தைப்போலவே நேரமும், உழைப்பும் சேமிக்கப்படுகிறது. அதுதவிர, இத்திட்டத்தில் சேர்ந்திருக்கும் நிறுவனத்துக்கு கமிஷனும் வழங்கப்படுகிறது.
 
 யாருக்கு?

அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்யும் அனைவரும் இந்த சம்பள பட்டியல் சேமிப்பு திட்டத்தின் மூலம் சேமிக்க முடியும்.  குறைந்தபட்சம் 5 நபர்களில் இருந்து அதிகபட்சம் எவ்வளவு பணியாளர்கள் வேண்டுமானாலும் இதில் ஒருங்கிணைந்து பயன் பெறலாம்.

ஒவ்வொரு மாதமும் பணியாளர்களின் சம்பளத்திலிருந்து சேமிப்பு தொகையைப் பிடித்து, தபால் அலுவலகத்தில் நிறுவனம் கட்டிவிடும். சேமிப்பு ஐந்தாண்டுகளுக்கானது என்றாலும், அதற்கு முன்னரே விதிமுறைகளுக்கு உட்பட்டு சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

 நிறுவனத்துக்கு கமிஷன்!

சம்பள பட்டியல் சேமிப்பு திட்ட வசதியின் கீழ் சேமிப்பைத் தொடர விரும்பாத பணியாளர்கள் அவர்களின் நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டு விலகிக்கொள்ளலாம். மீண்டும் இணைந்துகொள்ள விரும்பினால் இடையில் சேமிப்பைத் தொடராமல் விட்ட மாதங்களுக்கான தொகையை  அபராதத்துடன் செலுத்த வேண்டும்.  

ஆர்.டி. சேமிப்பு திட்டத்தில் இந்த வசதியை பயன்படுத்தினால், ஆர்.டிக்கு வழங்கப்படும் 8.3% வட்டி வழங்கப்படுகிறது.  இதேபோல், அந்தந்த திட்டத்துக்கு ஏற்ற வட்டி கிடைக்கும். இதில் கூடுதல் சலுகை என்பது இந்த வசதியைப் பயன்படுத்தும் நிறுவனத்துக்கு 2.5% கமிஷன் வழங்கப்படுவதாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் கமிஷன் தொகையானது வழங்கப்படும்.  

சம்பள பட்டியல் சேமிப்பு திட்ட வழிமுறையில் சேர்ந்து சேமிக்க நினைக்கும் நிறுவனத்துக்கு கூடுதலாக 2.5 சதவிகித கமிஷனும், டி.டி. சேமிப்புக்கு 1%, என்.எஸ்.சி. சேமிப்புக்கு 1%, பி.பி.எஃப். சேமிப்புக்கு 1% கமிஷனும் வழங்கப்படுகிறது'' என்று முடித்தார் அவர்.

அங்குமிங்கும் அலையாமல் பாதுகாப்பாக சேமிக்க நினைப்பவர்கள் இத்திட்டத்தைப் பரிசீலிக்கலாமே!

- செ.கார்த்திகேயன்,  படம்: ஆ.முத்துக்குமார்.
Sponsored content

தபால் நிலைய சேமிப்பு Empty Re: தபால் நிலைய சேமிப்பு

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum