தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
செல்வமகள் சேமிப்புத் திட்டம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செல்வமகள் சேமிப்புத் திட்டம் Empty செல்வமகள் சேமிப்புத் திட்டம்

Wed Aug 10, 2016 8:28 am
செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்காக திருநெல்வேலி கோட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் பள்ளிகள்தோறும் களமிறங்கி கணக்குகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் இதுவரை 22 ஆயிரத்து 957 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
 
          பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின்பு பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காககொண்டுவரப்பட்ட திட்டங்களில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் முக்கியமானதாகும். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூ.1000 இந்தக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும். மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக ரூ.1000இல் இருந்து அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை பணம் செலுத்தலாம்.

திட்டம் தொடங்கப்பட்டபோது ஆண்டுக்கு 9.1 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. இப்போது வட்டி விகிதம் சற்று குறைக்கப்பட்டுள்ளது. இக் கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தும் தொகைக்கு வருமான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வுத் தொகையை 21ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம். மேலும், பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும்போது அவரது கல்வி அல்லது திருமணச் செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.இந்தியாவில் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. திருநெல்வேலி கோட்டத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்குகளை அதிகரிக்க ஏதுவாக பள்ளிகள்தோறும் அஞ்சல் ஊழியர்கள் சென்று சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறார்கள். பெற்றோர்-ஆசிரியர் சங்கக் கூட்டங்கள் நடைபெறும் நாள்களில் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும் விண்ணப்பங்களை பெற்றோர் பூர்த்தி செய்து கொடுத்துவிட்டால், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பாதுகாப்பாளர் மற்றும் பெற்றோரின் முகவரிச் சான்று ஆவண நகல்கள், தொகையை அந்தந்தப் பகுதி தபால்காரர்கள் மூலம் அஞ்சல்துறை சேகரித்து அவர்களது முகவரிக்கு கணக்குப் புத்தகங்களை அனுப்பி வைக்கிறது. இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

22 ஆயிரம் கணக்குகள் தொடக்கம்:

இதுகுறித்து திருநெல்வேலி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் வி.டி.சந்திரசேகர் கூறியதாவது: திருநெல்வேலி கோட்டத்தில் 3 தலைமை அஞ்சல் அலுவலகங்களும், 92 துணை அஞ்சல் அலுவலகங்களும், 234 கிளை அஞ்சல் அலுவலகங்களும் உள்ளன. இங்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது பள்ளிகள்தோறும் அஞ்சல் ஊழியர்களை அனுப்பி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதனால் கணக்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில் இதுவரை 22 ஆயிரத்து 957 கணக்குகள் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் ரூ.24.84 கோடி வைப்புத்தொகை பெறப்பட்டுள்ளது.பெண் குழந்தைகளுக்கு மிகவும் பயனளிக்கும் இத் திட்டம் குறித்து கிராமப்புறங்களில் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.இதுதவிர அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் ஓய்வூதியம் பெறும் வகையில் கணக்குத் தொடங்கி அவர்களுக்கு வயதுக்குத் தகுந்தாற்போலமாதந்தோறும் ரூ.210 முதல் ரூ.1454 வரை செலுத்தி மாதம் ரூ.5 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெற முடியும்.மத்திய அரசின் தங்கப் பத்திர விற்பனையின்கீழ் இந்த அஞ்சல் கோட்டத்தில் 408 கிராம் தங்கம் விற்பனையாகியுள்ளது. விபத்துக் காப்பீடு, வங்கிச் சேவை வசதிகளும் அஞ்சல் துறையின் கீழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.


மாணவர்களைக் கவரும் "மை ஸ்டாம்ப்'

அஞ்சல் துறை சார்பில் அவரவர் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் தலைகளை விநியோகிக்கும் "மை ஸ்டாம்ப்' திட்டம் நடைமுறையில் உள்ளது.ரூ. 300 செலுத்தினால் தங்களது புகைப்படத்துடன் கூடிய 6 அஞ்சல் தலைகளை மாணவர்கள், பொதுமக்கள் பெற முடியும். தனியார் நிறுவனங்கள் மொத்தமாக தங்களது நிறுவனப் படங்களுடன் 100 அஞ்சல் தலைகள் வரை பெறும்போது அதற்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுகிறது."மை ஸ்டாம்ப்' திட்டம் மாணவர்களைக் கவரும் வகையில் உள்ளது. செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்காக பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் இந்த அஞ்சல் தலைகளைப் பெறவும் பலர் விண்ணப்பித்துச் செல்வதாக அஞ்சல் ஊழியர்கள் தெரிவித்தனர்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செல்வமகள் சேமிப்புத் திட்டம் Empty Re: செல்வமகள் சேமிப்புத் திட்டம்

Wed Aug 10, 2016 8:54 am
செல்வமகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா / கணக்கு) திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் :

v மத்திய அரசு பெண் குழந்தைகளுக்காக அஞ்சலகம் மூலம் சிறப்பு
சேமிப்பு திட்டத்தைஅறிமுகம் செய்துள்ளது.

v 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் /காப்பாளர் உதவியுடன்சுகன்யா சம்தி கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் துவங்கலாம். ( அறிமுக சலுகையாக 11 வயதுள்ள பெண்குழந்தைகள் இந்த வருடம் மட்டும் 02.12.2015 வரைசேர்த்துக்கொள்ளப்படுவார்கள் )

v ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு வீதம், ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகளுக்கு மட்டும்.***

v இதற்கு வாரிசு நியமனவசதி இல்லை.

v கணக்கு துவங்க முதல் தவணை குறைந்த பட்சம் ரூ 1000, மற்றும் அதிகபட்ச முதலீடாக ரூ. 1,50,000/- ஒரு நிதியாண்டில் சேமிக்கலாம்

v இந்த கணக்கில் 100ன் மடங்காக எத்தனை முறை வேண்டுமானாலும், அனைத்து(CBS) அஞ்சலகங்களிலும் பணம் செலுத்தலாம்.

v 2014-2015 நடப்பு நிதியாண்டில் வட்டி விகிதம் 9.1 %

v கணக்கு துவங்கிய நாள் முதல் 14 ஆண்டுகள் வரைபணம் செலுத்த வேண்டும்.

v மேலும், கணக்கு வைத்திருக்கும் பெண்குழந்தையின் 18 வயது முடிந்த பின், கடந்த நிதி ஆண்டு இறுதியில் உள்ள இருப்புத்தொகையில் இருந்து அதிகபட்சமாக 50 சதவீதம் வரை படிப்புக்காக பணம்எடுத்துக் கொள்ளலாம்.

v 21 ஆண்டுகள் முடிந்தபின் கணக்கை முடித்து முதிர்வு தொகையை பெற்றுகொள்ளலாம் அல்லது திருமணத்தின் போது கணக்கை முடித்துக்கொள்ளலாம்

v செலுத்தும் தொகைக்கு(அசல் & வட்டி) வருமானவரி விலக்கு உண்டு (80-C IT Act 1961 )

தேவையான விபரங்கள் :

பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் & புகைப்படம்
பெற்றோர் / காப்பாளரின் இருப்பிட மற்றும் ஆளறி சான்றிதழ் நகல். ( Address & ID Proof )

முதிர்வு தொகை :

செலுத்தும் தொகை : ரூ 1000 வீதம் 14 வருடங்கள் ( 1000 x 12 x 14 = 1,68,000 ) வட்டி = 439128 மொத்தம் = 6,07,128 ( தோராயமாக )

மேலும் விவரங்களுக்கு, இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள அருகில்உள்ள அனைத்து அஞ்சலகங்களை அணுகி பயன்பெறலாம்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum