சபை எடுத்துக்கொள்ளப்படுதலை மறுக்கும் வேதப் புரட்டு
Wed Jul 06, 2016 8:44 am
Taken from Whatsappp.
~|| ஏஞ்சல் டிவி - ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ||~
இராணுவத்தில் ஆளெடுப்பது போல ஏஞ்சல் டிவியிலும் ஆளெடுக்கிறார்கள்... கைநிறைய
சம்பளம்... குவாட்டர்ஸ்.. கேண்டீன் சலுகைகளெல்லாம் இல்லை...
அந்தி கிறிஸ்துவின் ஆட்சி
அமைந்ததும் சதாம் ஹூசென்/ பின்லேடன் / ஐஎஸ் தீவிரவாதிகளைப் போல அவனுக்கு
எதிராய் போரிடுவதற்காக. அதற்குள் இயேசு மகராஜா வந்திடுவாராம்... அவர் வரும்போது
நாம் இங்கே ரெடியாக நேதாஜி போல ஒரு மிலிட்டரி ரெடி பண்ணி வெக்கணும்னு ஏஞ்சல்
சாமியார் சொல்றாருங்க...
இளம் வாலிபர்களுக்கு இந்த சேனையில் வாய்ப்புடனே இரத்த சாட்சியாய் செத்துபோகும் அருளும் உண்டு என்று சொல்லப்படுகிறது.
எனவே
குழந்தைகளையும் அப்படியே இரத்த சாட்சிகளாய் வளர்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
தேவைப்பட்டால் தற்கொலைப் படை தீவிரவாதிகளாகவும் உருவாக்குவார்கள் போல ?
**இவையாவும் சபை எடுத்துக்கொள்ளப்படுதலை மறுக்கும் வேதப் புரட்டு ஆகும்.
Re: சபை எடுத்துக்கொள்ளப்படுதலை மறுக்கும் வேதப் புரட்டு
Wed Jul 06, 2016 8:46 am
எச்சரிக்கை!
இதோ லூசிபரின் வேலைக்காரார்கள்!
தேவனுடைய ஊழியக்காரர் என்ற பெயரில் கையில் பைபிலோடு விக்கிரகத்திற்க்கு மாலை போடும் இவர்களே கிறிஸ்துவின் முதல் அந்திகிறிஸ்துவின் கூட்டாளிகள்.
பணத்திற்க்கு இவர்கள் எதையெல்லாம் கூட்டி கொடுக்க போகிறார்களோ தெரியல..
பாவிகளா?
மனசாட்சியில் சூடுண்ட பொய்யர்கள்,தேவனுடைய கிருபையை காமவிகாரத்திற்க்கு ஏதுவாக புரட்டுகிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்க வழியாய் நுழைந்து மக்களை ஏமாற்றுகிறார்களப்பா?
ஒருவனும் உன்னை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கை யாயிரு!
ஒளிக்கும்,இருளுக்கும் ஐக்கியம் ஏது?
கடைசி காலத்தில் தன் துன்மார்க்கமாய் நடக்கிற பரியாசக்காரர்கள் தோன்றுவார்கள்.
நீயோ எல்லாவற்றிலும் மனதெளிவுள்ளவனாயிரு.....
ஒ சபையே மனந்திரும்பு இப்படிப்பட்ட வேஷ தாரிகளை நம்பி உன் அபிஷேகத்தை இழந்து போகாதே!
ஜாமக்காரன்
Re: சபை எடுத்துக்கொள்ளப்படுதலை மறுக்கும் வேதப் புரட்டு
Wed Jul 06, 2016 8:47 am
இவர் நல்ல தீர்க்கதரிசியா அல்லது
கள்ளத்தீர்க்கதரிசியா ???
இந்த ரெவரண்டு அவர்களின் பிறந்தநாள் அன்று கர்த்தர் இந்த உலகத்திற்கு ஏதோ ஒரு முக்கியமான செய்தியை சொல்லப்போகிறார் என்றால் இவர் எவ்வளவு பெரிய ரெவண்டு ஆக இருப்பார்.
வலைத்தளங்களில் இது போன்ற ஆட்கள் தங்களை மேன்மைப்படுத்திக்கொண்டு வலம் வருகிறார்கள். இவர்களுடைய நோக்கம் திருச்சபையாகிய மணவாட்டியை கறைப்படுத்துவதுதான். நாம் எச்சரிக்கையாய் இருப்போம்.
ஜாமக்காரன்
Re: சபை எடுத்துக்கொள்ளப்படுதலை மறுக்கும் வேதப் புரட்டு
Wed Jul 06, 2016 8:48 am
பண மோசடி கும்பல்.. ஜாக்கிரதை!
கவனம்! எச்சரிக்கை! ( Please share ..)
ஒரு கும்பல் Tb Joshua என்ற பெயரில் உங்களை Facebook ல add பண்ணி, வசனங்களை அனுப்பி, தீர்க்கதரிசனங்களை சொல்லி, பிறகு உங்களிடம் நாங்கள் பணம் அனுப்புகிறோம் என்று சொல்லி, உங்களுடைய தணிப்பட்ட விபரங்களை கேட்டு வாங்கி உங்கள் பணத்தை தந்திரமாக சூரையாடுகிறார்கள்! இது உண்மையான Tb Joshua அல்ல. அவருக்கு உங்களோடு chat பண்ண நேரமும் இல்லை. இது பண மோசடியின் கும்பல் வேலை.
இதேபோல மற்ற முக்கியமான ஊழியர்களின் பெயர்களையும் போட்டாக்களையும் பயன்படுத்தி சிலர் பணம் பறிக்கின்றனர். எச்சரிக்கை... எச்சரிக்கை... எச்சரிக்கை! (இதை share பண்ணுங்கள்!
கவனம்! எச்சரிக்கை! ( Please share ..)
ஒரு கும்பல் Tb Joshua என்ற பெயரில் உங்களை Facebook ல add பண்ணி, வசனங்களை அனுப்பி, தீர்க்கதரிசனங்களை சொல்லி, பிறகு உங்களிடம் நாங்கள் பணம் அனுப்புகிறோம் என்று சொல்லி, உங்களுடைய தணிப்பட்ட விபரங்களை கேட்டு வாங்கி உங்கள் பணத்தை தந்திரமாக சூரையாடுகிறார்கள்! இது உண்மையான Tb Joshua அல்ல. அவருக்கு உங்களோடு chat பண்ண நேரமும் இல்லை. இது பண மோசடியின் கும்பல் வேலை.
இதேபோல மற்ற முக்கியமான ஊழியர்களின் பெயர்களையும் போட்டாக்களையும் பயன்படுத்தி சிலர் பணம் பறிக்கின்றனர். எச்சரிக்கை... எச்சரிக்கை... எச்சரிக்கை! (இதை share பண்ணுங்கள்!
Re: சபை எடுத்துக்கொள்ளப்படுதலை மறுக்கும் வேதப் புரட்டு
Wed Jul 06, 2016 8:49 am
ஆபிரகாம் சார்லஸ் என்கிற அதிகப்பிரசங்கி. ஆதி அப்போஸ்தலர்களும் செய்யாத அற்புதமான ஊழியம் இது.
வித்தியாசமான முறையில் உப்பு மூட்டை ஏறிக்கொண்டு கோமாளித்தனமாக நற்செய்தி அறிவிக்கும் ஆபிரகாம் சார்லஸ் என்கிற அதிகப்பிரசங்கி. ஆதி அப்போஸ்தலர்களும் செய்யாத அற்புதமான ஊழியம் இது.
Re: சபை எடுத்துக்கொள்ளப்படுதலை மறுக்கும் வேதப் புரட்டு
Wed Jul 06, 2016 8:50 am
சிந்திப்போம், செயல்படுவோம்.
இன்றய கிறிஸ்தவத்தை தெளிவாக காட்டும் வார்த்தைகள்
(நன்றி - விஷ்வவாணி சமர்ப்பண்)
Re: சபை எடுத்துக்கொள்ளப்படுதலை மறுக்கும் வேதப் புரட்டு
Wed Jul 06, 2016 8:51 am
வேளாங்கண்ணி திருத்தல பாதயாத்திரை..
ஒரு தவறான வழிபாடு.
எரேமியா 10
2. புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.
3: ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.
4. வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள்.
5. அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக்கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 44:
13. தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குக் குறிபோட்டு, உளிகளினால் உருப்படுத்தி கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டி வைக்கிறான்.
14. அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருதமரத்தையாவது கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும்.
15. மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.
16. அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப்பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி;
17. அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.
18. அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.
- பொறியாளர் ஆன்டனி வளன்
Re: சபை எடுத்துக்கொள்ளப்படுதலை மறுக்கும் வேதப் புரட்டு
Sat Jul 16, 2016 9:39 am
#whatsapp_group
ஏஞ்சல் டிவியின் புண்ணியத்தில் மனித கற்பனைகளுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.
சிங்காசனத்தையும் குதிரைகளையும் பரலோகத்தையும் இன்னும் துணிகரமாக பிதாவையும் கூட இஷ்டத்துக்கும் சித்தரித்து அதையே மீண்டும் மீண்டும் தங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி ஒருவித கருத்து மோசடியை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்களே, அவர்களை நாமும் இப்படியெல்லாம் கற்பனை செய்வதைவிட கொடுக்கப்பட்ட கற்பனைகளை முதலில் நிறைவேற்றுவதே நமக்கு நன்மை பயக்கும். பச்சிளங் குழந்தைகளை தரிசனம் பார்க்க தூண்டுவதாகக் கூறி அதுகள் சொல்லும் சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடுகளையெல்லாம் தீர்க்கதரிசனம் என்று சித்தரிக்குமளவுக்கு சென்றுவிட்டது.
இயேசுவை ஏறக்குறைய சிங்க ராஜாவாகவே சித்தரித்து பிள்ளைகள் மனதில் பதிய வைத்துவிட்டார்கள். இது கத்தோலிக்கர் உருவாக்கிய அந்தோணியார் மாயையை விட ஆபத்தானதாகும்.
எச்சரிக்கை
சபையே விழித்தெழு
ஜாமக்காரன்
ஏஞ்சல் டிவியின் புண்ணியத்தில் மனித கற்பனைகளுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.
சிங்காசனத்தையும் குதிரைகளையும் பரலோகத்தையும் இன்னும் துணிகரமாக பிதாவையும் கூட இஷ்டத்துக்கும் சித்தரித்து அதையே மீண்டும் மீண்டும் தங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி ஒருவித கருத்து மோசடியை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்களே, அவர்களை நாமும் இப்படியெல்லாம் கற்பனை செய்வதைவிட கொடுக்கப்பட்ட கற்பனைகளை முதலில் நிறைவேற்றுவதே நமக்கு நன்மை பயக்கும். பச்சிளங் குழந்தைகளை தரிசனம் பார்க்க தூண்டுவதாகக் கூறி அதுகள் சொல்லும் சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடுகளையெல்லாம் தீர்க்கதரிசனம் என்று சித்தரிக்குமளவுக்கு சென்றுவிட்டது.
இயேசுவை ஏறக்குறைய சிங்க ராஜாவாகவே சித்தரித்து பிள்ளைகள் மனதில் பதிய வைத்துவிட்டார்கள். இது கத்தோலிக்கர் உருவாக்கிய அந்தோணியார் மாயையை விட ஆபத்தானதாகும்.
எச்சரிக்கை
சபையே விழித்தெழு
ஜாமக்காரன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|