தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இருதயம், சிறுநீரகத்தை பாதுகாக்கும் மண்ணீரல் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இருதயம், சிறுநீரகத்தை பாதுகாக்கும் மண்ணீரல் Empty இருதயம், சிறுநீரகத்தை பாதுகாக்கும் மண்ணீரல்

Fri Jun 03, 2016 12:13 pm
இருதயம், சிறுநீரகத்தை பாதுகாக்கும் மண்ணீரல் 201606010810034282_spleen-protecting-Heart-and-kidneys_SECVPF
மண்ணீரலானது கல்லீரல் அருகில் உள்ளது. இது மனிதனின் ரத்தத்தை சுத்தம் செய்யும் பணியை செய்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மனிதன் நோயின்றி வாழ மண்ணீரல் உதவுகிறது. உடலில் உள்ள 25,00,000 வியர்வை பைகளின் வியர்வை சுரப்பிகளையும் தூண்டி விடுகிறது. வியர்வை மூலமாக உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளும், உப்புகளும் வெளியேற்றப்படுகிறது.

பழைய சிவப்பணுக்களை அழித்து புதிய சிவப்பணுக்களை உருவாக்குகிறது. அவரவர் உடலுக்கும் வயதுக்கும் ஏற்றாற்போல் தேவையான சிவப்பணுக்களை உருவாக்கி சரியான முறையில் சீரான அளவில் சிவப்பணுக்களை வைத்துக் கொள்கிறது. அதே போல் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கிருமிகளை அழித்து விடுகிறது.

72,000 நரம்புகளின் ரத்த ஓட்டப் பாதையை சீராக்குகிறது. உள் உறுப்பான இரைப்பையுடனும் வெளிப்புற உணர்வு உறுப்பான வாயுடனும் மண்ணீரல் தொடர்புடையது. மண்ணீரல் சீராக இயங்கினால் இருதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், இரைப்பை ஆகியவை சீராக இயங்கும். அத்துடன் உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

கல்லீரலை போலவே மண்ணீரலும் பித்த நீர் சுரப்பை உருவாக்குகிறது. ஒருவர் நினைத்த எண்ணங்களை செயல்படுத்த வேண்டுமானால் மண்ணீரல் சிறப்பாக இயங்க வேண்டும். ஆழ்ந்த தூக்கம் இல்லாமை, மலச்சிக்கல் போன்ற காரணங்களால் மண்ணீரல் பாதிக்கப்படும். மண்ணீரல் பாதிக்கப்பட்டால் பெரிதும் பாதிக்கப்படுவது சிறுநீரகம், இருதயம்.

மண்ணீரல் பாதிப்பை வர்மகலை மருத்துவத்தால் சரி செய்ய முடியும். மண்ணீரல் தொடர்புடைய வர்மபுள்ளி வெள்ளீரல் வர்மப்புள்ளியாகும். இதற்கு அடுத்தப்படியாக தொடர்புடையது பள்ள வர்ம புள்ளியாகும். இந்த இரு வர்ம புள்ளியை தூண்டுவதால் மண்ணீரலை சீராக இயங்க வைக்க முடியும்.

மனித உடலில் 7 முதன்மை சக்கரங்களும் 125 துணை சக்கரங்களும் இயங்குகின்றன. இதில் மண்ணீரலுக்கு தனி சக்கரம் இயங்குகிறது. இச்சக்கரத்தை தூண்டினாலும் மண்ணீரலை சீராக இயங்க வைக்க முடியும்.

பஞ்சபட்சி சாஸ்திரத்தில் பஞ்ச பட்சிகளில் ஒன்றான கோழி பட்சிக்கும், மண்ணீரலுக்கும் தொடர்புள்ளது. பஞ்சபட்சி சாஸ்திரப்படி ஒருவருக்கு இப்பட்சி பாதித்தால் அவருடைய மண்ணீரல் பாதிப்பு ஏற்படும்.

வர்ம புள்ளியை தூண்டுவதாலும் பட்சி பரிகாரம் செய்து கொள்வதாலும் மண்ணீரலை சீராக இயங்க வைக்க முடியும். வெள்ளீரல் வர்மம் தூண்டும் போதும் மண்ணீரல் பலப்படும். நெஞ்சு வலி குறையும். இளைப்பு நோய் குறையும், சுவாசம் சீராகும், நுரையீரலில் உள்ள பிரச்சினைகள் குறையும்.

மண்ணீரலில் தொடர்புடைய மற்றொரு வர்மபுள்ளியான பள்ள வர்ம புள்ளியை தூண்டுவதால் மண்ணீரல் சீராக இயங்கும். ஜீரணம் சீராகும், கருப்பை தொடர்பான சிக்கல் தீரும், அல்சர் குணமாகும், முதுகெலும்பில் உள்ள வலி குறையும், வயிற்று வலியும் குறையும். இந்த இரு வர்ம புள்ளியை தூண்டினால் இது போன்ற பிரச்சினைகள் தீரும்.

அதே போல் மண்ணீரல் சக்கரம் தூண்டப்படும்போது மண்ணீரல் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய் சீராக நடைபெறும். ஆண்மை பலப்படும். ஆண் & பெண் இன சேர்க்கை உணர்வை வெளிப்படுத்தும்.

மனமும் உடலும் எப்போதும் உற்சாகமாக இருக்கும். நீண்ட நாள் கரு தங்காமை இருப்பவர்களுக்கு, கரு தங்கி தாய்மை அடையும் நிலை உருவாகும். அதே போல் பட்சி சாஸ்திர முறையில் மண்ணீரல் பட்சி எவருக்கு பாதிக்கப்பட்டுள்ளதோ அவர்களுக்கு அப்பட்சி நல்ல நிலையில் உள்ள வகையில் அந்த உறுப்பு சம்பந்தமான நரம்பை தூண்டுவதால் மண்ணீரலும் பலப்படும். மற்ற உறுப்புகளும் பலப்படும். அனைத்து நரம்புகளில் ரத்த ஓட்டமும் சீராகும். அப்பட்சிக்கான பரிகாரம் செய்யும்போது உடல் நலமும், வாழ்க்கை வளமும் ஏற்படும்.

தூக்கமும் மூலையின் அதிர்வு அலைகளும்

மண்ணீரல் மீது நமது முக்கிய கவனம் தேவை. ஏன் என்றால் மண்ணீரல் தான் நம் மூளையின் செயல்களையும், நரம்புகளின் மூலமாக தன் செயலை சீராக வைத்துக் கொள்கிறது. மனிதன் சீராக தொடர்ந்து 6 மணி நேரம் (அல்லது) 7, 8 மணி நேரம் தொடர்ந்து ஆழ்ந்து தூங்க வேண்டும். அவ்வாறு தூங்கினால் மண்ணீரலும் சீராக இயங்கும்.

மூளையின் அதிர்வு அலை என்பது நாம் ஆழ்ந்த உறக்கத்தின் போது 3.5 அதிர்வு அலையாக இருக்கும். நாம் கனவு காணும் போது 5.5 முதல் 7.5 வரை அதிர்வு அலை இருக்கும். மனிதன் விழித்த பின்பு அல்லது பணியாற்றும் போது 21.1 அதிர்வு அலையாகும். மனிதனுக்கு கோபம் வரும்போது மூளையின் அதிர்வு அலை 21.5 முதல் 25 வரை ஏற்படும்.

மனிதன் சாதாரண நிலையிலும் அதிர்வு அலை அதிகமானால் ரத்த அழுத்தமும் அதிகம் ஆகும். மூளையின் அதிர்வு அலையை நாம் அடிக்கடி அதிகம் ஆக்கினால் இருதயம் பாதிக்கப்படும்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum