குடும்பங்கள் உடைபடாமல் காக்கப்பட ஐந்து ஆலோசனைகள்....
Tue May 24, 2016 9:52 am
1.தேவனுக்கு முதலிடம் கொடுங்கள்.
இக்கனியை நீ புசிக்க வேண்டாம் என்று தேவன் ஆதாமிற்கு நேரடியாகவே சொல்லியிருந்த போதிலும்,
தன் மனைவியாகிய
ஏவாளின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து,
அக்கனியைப் புசித்து,
தேவனை கனம்பண்ண தவறிவிட்டான் ஆதாம்.
இதனால் தேவனுக்கு முன்பாக நிற்கும் தகுதியை இழந்தார்கள்.
பூமிக்கு சாபம் வருவதற்கு காரணமாக மாறிப்போனர்கள்.
அதற்காக குடும்பத்தை அலட்சியமாக நடத்தவோ, கடினமாக நடத்தவோ
வேதம் நமக்கு சொல்லவில்லை.
தேவனுக்குரிய இடத்தை தேவனுக்கும், குடும்பத்திற்குரிய இடத்தை குடும்பத்திற்கும் சரியாய் கொடுப்போம்.
தேசத்திற்கு ஆசீர்வாதமாய் இருப்போம்.
2.உடன்படிக்கையில் உண்மையாக இருங்கள்.
போத்திப்பாரின் மனைவின் மனதில் யோசேப்பு, வாழ்வில் போத்திப்பார்.
மனதில் ஒருவர், வாழ்வில் ஒருவர்.
எத்தகைய அவல நிலை!!
உங்கள் நினைவையும் கண்களையும் காத்துக் கொள்ளுங்கள்.
அவர் ஒருவனையல்லவா படைத்தார்!!
3.குறைகளைப் பெரிதுப்படுத்தாதீர்கள்.
மலடியாயிருந்த தன் மனைவிக்காக தேவனிடம் ஜெபம் செய்தான் ஈசாக்கு.
ஆபிரகாம் மற்றும் யாக்கோபைப்போல வேறே மனைவிகளை தேடவுமில்லை
இந்த ஈசாக்கு.
மலடி என்று தன் மனைவியை கசந்து கொள்ளவுமில்லை,
அவளைக் குறித்து சலிப்படையவுமில்லை.
மாறாக,
தன் மனைவியை நேசித்தும்,
அவளுக்காக ஜெபித்தும்,
அவளோடு விளையாடிக் கொண்டும்,
அவளோடு மட்டுமே இறுதிவரை வாழ்ந்துக் கொண்டிருந்தான் இந்த ஈசாக்கு.
காரணமென்ன???
அன்பு! அன்பு!! அன்பு!!!
வெறும் சரீர இச்சைகளை மட்டுமே உலகம் இன்று அன்பு என்று காண்பித்து வருகிறது.
ஆனால் நமது பரிசுத்த வேதம் காட்டும் அன்போ சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகிக்கும்.
அன்பு தீங்கு நினையாது.
இந்த அன்பு நம்மிடைய பெருகினால்
"இன்று ஆவிக்குரிய குடும்பங்களில் பெருகிவரும் விவாகரத்துக்கள்
நிச்சயமாக மறைந்தே போய்விடும்".
4.வெளியரங்கமாயிருங்கள்.
உங்கள் வாழ்க்கையானது
தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக
திறந்த புத்தகமாய் இருப்பதாக.
அனனியா சப்பீராளைப்போல
இருக்க வேண்டாம்.
5.தேவனுக்கு ஊழியம் செய்யுங்கள்.
ஆக்கில்லா பிரிஸ்கில்லா குடும்பத்தைப்போல,
நோவாவின் குடும்பத்தைப்போல
கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்.
இறுதிவரை கர்த்தருக்கு குடும்பமாக
சேவை செய்வதை பாக்கியமாக கருதுங்கள்.
இந்த ஐந்து காரியங்களையும்
வாழ்வில் மறவாதிருங்கள்.
உங்களுடைய விலையேறப்பெற்ற குடும்பம் காக்கப்படும், ஸ்திரப்படும், உடைபடாமலிருக்கும்.
God Bless You.
-RRG..
இக்கனியை நீ புசிக்க வேண்டாம் என்று தேவன் ஆதாமிற்கு நேரடியாகவே சொல்லியிருந்த போதிலும்,
தன் மனைவியாகிய
ஏவாளின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து,
அக்கனியைப் புசித்து,
தேவனை கனம்பண்ண தவறிவிட்டான் ஆதாம்.
இதனால் தேவனுக்கு முன்பாக நிற்கும் தகுதியை இழந்தார்கள்.
பூமிக்கு சாபம் வருவதற்கு காரணமாக மாறிப்போனர்கள்.
அதற்காக குடும்பத்தை அலட்சியமாக நடத்தவோ, கடினமாக நடத்தவோ
வேதம் நமக்கு சொல்லவில்லை.
தேவனுக்குரிய இடத்தை தேவனுக்கும், குடும்பத்திற்குரிய இடத்தை குடும்பத்திற்கும் சரியாய் கொடுப்போம்.
தேசத்திற்கு ஆசீர்வாதமாய் இருப்போம்.
2.உடன்படிக்கையில் உண்மையாக இருங்கள்.
போத்திப்பாரின் மனைவின் மனதில் யோசேப்பு, வாழ்வில் போத்திப்பார்.
மனதில் ஒருவர், வாழ்வில் ஒருவர்.
எத்தகைய அவல நிலை!!
உங்கள் நினைவையும் கண்களையும் காத்துக் கொள்ளுங்கள்.
அவர் ஒருவனையல்லவா படைத்தார்!!
3.குறைகளைப் பெரிதுப்படுத்தாதீர்கள்.
மலடியாயிருந்த தன் மனைவிக்காக தேவனிடம் ஜெபம் செய்தான் ஈசாக்கு.
ஆபிரகாம் மற்றும் யாக்கோபைப்போல வேறே மனைவிகளை தேடவுமில்லை
இந்த ஈசாக்கு.
மலடி என்று தன் மனைவியை கசந்து கொள்ளவுமில்லை,
அவளைக் குறித்து சலிப்படையவுமில்லை.
மாறாக,
தன் மனைவியை நேசித்தும்,
அவளுக்காக ஜெபித்தும்,
அவளோடு விளையாடிக் கொண்டும்,
அவளோடு மட்டுமே இறுதிவரை வாழ்ந்துக் கொண்டிருந்தான் இந்த ஈசாக்கு.
காரணமென்ன???
அன்பு! அன்பு!! அன்பு!!!
வெறும் சரீர இச்சைகளை மட்டுமே உலகம் இன்று அன்பு என்று காண்பித்து வருகிறது.
ஆனால் நமது பரிசுத்த வேதம் காட்டும் அன்போ சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகிக்கும்.
அன்பு தீங்கு நினையாது.
இந்த அன்பு நம்மிடைய பெருகினால்
"இன்று ஆவிக்குரிய குடும்பங்களில் பெருகிவரும் விவாகரத்துக்கள்
நிச்சயமாக மறைந்தே போய்விடும்".
4.வெளியரங்கமாயிருங்கள்.
உங்கள் வாழ்க்கையானது
தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக
திறந்த புத்தகமாய் இருப்பதாக.
அனனியா சப்பீராளைப்போல
இருக்க வேண்டாம்.
5.தேவனுக்கு ஊழியம் செய்யுங்கள்.
ஆக்கில்லா பிரிஸ்கில்லா குடும்பத்தைப்போல,
நோவாவின் குடும்பத்தைப்போல
கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்.
இறுதிவரை கர்த்தருக்கு குடும்பமாக
சேவை செய்வதை பாக்கியமாக கருதுங்கள்.
இந்த ஐந்து காரியங்களையும்
வாழ்வில் மறவாதிருங்கள்.
உங்களுடைய விலையேறப்பெற்ற குடும்பம் காக்கப்படும், ஸ்திரப்படும், உடைபடாமலிருக்கும்.
God Bless You.
-RRG..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|