ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு விமானப்படையில் வேலை
Tue Apr 12, 2016 12:27 am
ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளில் ஒன்று இந்திய விமானப்படை. தற்போது இந்த படைப்பிரிவில் 'குரூப்-சி' பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 226 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பொதுப் பிரிவினருக்கு 92 பணியிடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 71 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 19 இடங்களும், எஸ்.டி. பிரிவின ருக்கு 15 இடங்களும், மாற்றுதிறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு 29 இடங்களும் உள்ளன.
'லோயர் டிவிசன் கிளார்க்' மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 27 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். மற்ற பணிக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு தளர்வு அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படும்.
ஐ.டி.ஐ. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு பெரும்பாலான பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும், மெக்கானிக்கல், சிவில் 2 வருட டிப்ளமோ படித்தவர்களுக்கும், 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கும் கணிசமான பணியிடங்கள் உள்ளன.
அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்...
எழுத்து தேர்வு மற்றும் திறமைத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட மாதிரியில் தட்டச்சு செய்து விண்ணப்ப படிவம் தயாரிக்க வேண்டும். பின்னர் அதை சொந்த கையெழுத்தில் நிரப்பி, தேவையான சான்றுகள் இணைத்து அனுப்ப வேண்டும். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். எந்த பணியில் விருப்பம் உள்ளதோ அந்த பணியை குறிப்பிட்டு, அந்த பணி உள்ள விமானப்படை நிலைய முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இது பற்றிய அறிவிப்பு ஏப்ரல் 2-8 தேதியிட்ட 'எம்ப்ளாய்மென்ட் நியூஸ்' இதழில் பிரசுரமாகி உள்ளது. விரிவான விவரங்களை அந்த
இதழில் பார்க்கலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|