மூலம் நோய்க்கு எளிய மருந்து
Sun Mar 20, 2016 10:59 pm
மூலம் நோய்க்கு எளிய மருந்து
இந்த நோய் பசியைத் தாங்கி சரியான நேரத்தில் சாப்பிடாதிருந்தாலும், உடலுறவின் போது சிறுநீர், மலம் அடக்குவதாலும் , ஒரே இடத்தில் நாற்காலில் அமர்ந்து தொழில் புரிவோர்க் கும் மூலாதாரம் எனப்படும் ஆசன வாய்ப்பகுதியில் வெப்பம் மிகுந்து இந்நோய் தோன்றுகிறது .
மற்றும் உணவில் நார்ச்சத்து வகைகளை குறைத்து உண்பதா லும் மலச்சிக்கல் ஏற்பட்டு மூலநோய் ஏற்படும், அடிக்கடி நீர் அருந்தாமையினாலும் குடல் இளக்கமின்றி இந்நோய் தோன் றும். அதிக உடலுறவு ,அதிக காரமான உணவு உண்போருக்கும் பெண்களின் குழந்தைப்பேறு கால சமயங்களில் குழந்தை வெளி வரும் போது முக்குவதாலும் மூல நோய் தோன்றும்.
மருத்துவத்தில் இதனை மூன்று வகையாகக் கூறு கின்றனர். வெளிப்படையாக நமக்கு புலப்படுவதும் இவைகள் தான்.
1- உள் மூலம் - ஆசன வாயின் உட்பகுதியில் குருத்து போல் வளர்வது.
2- வெளி மூலம் - ஆசனவாயின் தசைப்பகுதிகள் பிதுங்கி வெளி வருவது .
3- இரத்த மூலம் - மலம் வெளிவரும் போது இரத்தம் கசிவது.
மூல நோயின் அறிகுறிகள் :
மலச்சிக்கல், அடித்தொடை கணுக்கால் வலி குடைச்சல், உடல் சோர்வு, களைப்பு, ஆசன வாய் எரிச்சல், ஆசனக்கடுப்பு, மலத்தோடு இரத்தம் கழிதல், மார்பு துடிப்பு, முக வாட்டம்,போன்றவை ஏற்படும். மேலும் இரத்தமூலம் ஏற்பட்டு தினமும் இரத்தம் வெளி ஏறிக்கொண்டிருந்தால் உடலில் பலம் குறையும்,மயக்கம் உண்டாகும் .
மூல நோய் வராமல் தடுக்க :
[size]உணவில் கீரை வகைகள்,காய் பழ வகைகள்,தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடிக்கடி நீர் அருந்தவேண்டும்,தினமும் காலை மாலை மலம் கழித்தல் வேண்டும், மலச்சிக்கல் உள்ள போது உடலுறவு கூடாது,தின மும் நடைப் பயிற்சி அல்லது எளிய உடற் பயிற்சி மேற்கொள்ளுதல் நல்லது. உணவில் விளக்கெண்ணை, நெய், வெங்காயம், தவறாது சேர்த்தல் வேண்டும். கருணைக் கிழங்கு அடிக்கடி உணவில் சேர்த்தல் நன்று.
மூல நோய்க்கு எளிய மூலிகை மருந்துகள்:
1- பிரண்டைக் கொடியின் கணுப்பகுதியை நீக்கிவிட்டு நெய் விட்டு வதக்கி புளி, பருப்பு சேர்த்து துவையல் செய்து வாரம் இரு முறை சாப்பிட்டு வர மூலம் கரைந்து விடும்.
2- மூல நோய்க்கு துத்தி இலை சிறந்த மருந்தாகும். இரண்டு கை அளவு துத்தி இலை, நறுக்கிப் போட்டு, சிறிது மஞ்சள் தூள், சிறிய வெங்காயம் பத்து,அரிந்து போட்டு விளக்கெண்ணை விட்டு வதக்கி மிளகுத்தூள், உப்பு சிறிது சேர்த்து பத்து நாள் தொடர்ந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.
3- வெளி மூலத்திற்கு துத்தி இலை ஒரு கை பிடி அளவு எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள்தூள் விளக்கெண்ணை விட்டு வதக்கி இளம் சூட்டுடன் ஆசன வாயில் வைத்து இரவில் கட்டிவர சில நாட்களில் வெளி மூலம் சுருங்கி விடும்.(தினமும் கட்டவும்)
4- நன்றாக செழித்து வளர்ந்த குப்பைமேனி செடியைத் தேவையான அளவு எடுத்து வந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் போட்டு நன்கு காய விடவும். காய்ந்த பின் இலை, வேர், தண்டு அனைத்தையும் இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும். இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு சேர்த்துப் பிசைந்து காலை , மாலை என நாற்ப்பது நாள் சாப்பிட்டு வர அனைத்து மூல வியாதியும் குணமாகும் .
இந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரும் போது அதிக காரம், பச்சை மிளகாய், கோழிக்கறி சேர்க்கக் கூடாது. மிளகு சேர்த்துக் கொள்ளலாம். உடல் உறவு கூடாது.
http://anbinvaasal.blogspot.in/
இன்னும் சில வீட்டு மருத்துவக்குறிப்புகள் !!!
[/size]
மூல பவுத்திரம் ( Anal Fistula )
[size]மூல பவுத்திரம் எனப் படும் அனல் பிஸ்டுலா, மூலம் ,ஆசன வாய் எரிச்சல் ,ஆசன வாய் வெடிப்பு ,போன்ற அனைத்து வகை மூல நோய்களுக்கும் எளிய அனுபவ வீட்டு மருத்துவம்
விளக்கெண்ணெய் .....நூறு மில்லி
குப்பை மேனி இலைகளை அரைத்து எடுத்த சாறு ....ஐந்து தேக்கரண்டி
வாணலியில் விளக்கெண்ணெயயை ஊற்றி நன்கு காய்ச்சி அத்துடன் குப்பைமேனி இலை சாறு ஊற்றிக் கலந்து கொதிக்க விட்டு தைலப் பதம் வந்தவுடன் இறக்கி பத்திரப் படுத்திக் கொள்ளவும்
மேற்கூறிய நோய் உள்ளவர்கள் தினமும் இரவில் உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்து நூறு மில்லி நாட்டுப் பசும்பாலைக் காய்ச்சி இறக்கி இளஞ்சூட்டில் இருக்கும் பாலுடன் அரை தேக்கரண்டி ஏற்கெனவே செய்து வைத்துள்ள குப்பைமேனி தைலம் கலந்து மிதமான சூட்டில் குடித்துவர அனைத்து ஆசன வாய் நோய்களும் மூல பவுத்திரமும் குணமாகும்
நோய் குணமாகும் வரை குடிக்க வேண்டும்
இது எளிய கைகண்ட அனுபவ வீட்டு மருந்து ஆகும்
=================================================
[/size]
மூல நோய் !!!
[size]வெள்ளை வெங்காயம் ...... நூறு கிராம் நறுக்கியது
சுத்தி செய்த சீரகம் ......தேவையான அளவு அரைத்து தூளாக்கிக் கொள்ளவும்
நாட்டுப் பசு நெய் ..... தேவையான அளவு
( சீரகம் சுத்தி செய்ய .....
சீரகம் தேவையான அளவு சீரகம் எடுத்து
எலுமிச்சை சாற்றில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து
மறு நாள் வெயிலில் நன்கு காய வைத்து எடுத்தால்
அது சுத்தி செய்த சீரகம் ஆகும்
அதை அரைத்து தூளாக்கிக் கொள்ளவும் )
நாட்டுப் பசு நெய் சிறிது வாணலியில் ஊற்றி நன்கு சூடானபின்
வெள்ளை வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்
சுத்தம் செய்து அரைத்து வைத்துள்ள சீரகத்தூளை கொஞ்சம் கொஞ்சமாக தூவிக் கிளறவும் கிளறக் கிளற இரண்டும் நன்கு பிணைந்து ஒரு நல்ல பதத்தில் கிடைக்கும்
மூல நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் காலை இரவு மூன்று தேக்கரண்டி சாப்பிட்டு வர பதினைந்து நாட்களில் முழுமையான குணம் கிடைக்கும்
ஒவ்வொரு நாளும் புதியதாக செய்து சாப்பிட்டு வர வேண்டும்
இது ஒரு எளிய வீட்டு அனுபவ வீட்டுமருத்துவம் ஆகும்
தகவல் நன்றி :- நண்பர்.திரு.பொன்.தங்கராஜ்[/size]
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|