தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஸ்காட்லாந்து தேச பரிசுத்தவான் ராபர்ட் மர்ரே மச்செயின்  Counter

Go down
medilta
medilta
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்
Posts : 82
Join date : 24/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்

ஸ்காட்லாந்து தேச பரிசுத்தவான் ராபர்ட் மர்ரே மச்செயின்  Empty ஸ்காட்லாந்து தேச பரிசுத்தவான் ராபர்ட் மர்ரே மச்செயின்

Fri Jan 04, 2013 12:02 am
பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள்

ஸ்காட்லாந்து தேச பரிசுத்தவான் ராபர்ட் மர்ரே மச்செயின்  Robert_murray_mccheyne
ஸ்காட்லாந்து தேச பரிசுத்தவான்
ராபர்ட் மர்ரே மச்செயின்
(1813 - 1843)








"நான் பரிசுத்த ஆவியானவரால் முற்றும்
நிரப்பப்பட்டிருந்தால் தேவனுடைய வார்த்தைகளை அதிகமாக வாசிக்கவும், அதிகமான
நேரத்தை கர்த்தரோடு ஜெபத்தில் செலவிடவும், பாவத்திற்கு எதிராக
என் ஆத்துமாவை பரிசுத்தமாக காத்துக்கொள்ளுவதிலும் மிகுந்த
விழிப்புடையவனாக இருப்பேன்"

"எல்லா நிலைகளிலும் என்னை இயேசுவைப்போல மாற்றும்"

"பரிசுத்தமும் சந்தோசமும், வெளிச்சமும் வெப்பமும் ஒன்றோடு மற்றொன்று இணைபிரியா ஜோடிகளாகும்"

"தேவ மைந்தன் உலகம் அளிக்கக்கூடிய ஒரு சிறிய பாவ இன்பத்தைக்கூட தன் வாழ்வில் அனுமதித்தது கிடையாது"

"நீ உலகில் ஜீவித்தாலும் அதில் ஜீவிக்காமல் உலகைவிட்டு பிரிந்து சென்றுவிட்டவன் போல வாழ்க்கை நடத்து"

"பகற் காலம் முழுவதும் என் இயேசுவுக்காக தேவப்பணி
செய்துவிட்டு இரவில் அந்த அன்பரின் புன்னகைகளின் மத்தியில் படுத்து
இளைப்பாறுவது எத்தனை ஆனந்தம்"

"உனது பரிசுத்தத்துக்குதக்கதாக உனது கிறிஸ்தவ வாழ்வின் வெற்றி அமையும்"

என்பது போன்ற ஏராளமான பரிசுத்த கனி மொழிகளை
உதிர்த்தவரான ராபர்ட் மர்ரே மச்செயின் என்ற பரிசுத்த குருவானவர்
ஸ்காட்லாந்து தேசத்தில் எடின்பரோ என்ற இடத்தில் 1813 ஆம் ஆண்டு மே மாதம் 21
ஆம் நாள் பிறந்தார். பெற்றோருக்கு கடைசி பிள்ளையாகப் பிறந்த அவர் ராபர்ட்
மர்ரே என்று குடும்பத்தில் அழைக்கப்பட்டார்.




இளம் பருவ கால நாட்கள்

ராபர்ட் மர்ரே சிறுவனாக இருந்தபோதே மிக
இனிமையாகவும், பந்த பாசத்தோடும் யாவரிடமும் பழகும் குணசீலம் இருப்பதை அவரை
அறிந்தோர் யாவரும் காண முடிந்தது. எளிதாக எந்த காரியத்தையும்
கிரகிக்கக்கூடிய ஆற்றலும், நல்ல ஆலோசனைகளைக் கூறினால் அதைக் கேட்டு
அவற்றின்படி கீழ்ப்படிந்து நடக்கும் சிறந்த சுபாவமும் அவரில் இருந்தது.

குழந்தைப் பருவத்திலேயே அவரது ஞானம்
வெளிப்படலாயிற்று. அவர் 4 வயது குழந்தையாக இருந்தபோது வியாதி வந்து அந்த
வியாதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சுகம் பெற்றுக்கொண்டிருந்த நாட்களில்
தனது ஓய்வு நேர பொழுது போக்காக கிரேக்க மொழி அரிச்சுவடியை நன்கு புரிந்து
கொண்டு அதை ஒரு சிலேட்டில் வரிசைக் கிரமமாக குழந்தைக்கேற்ற விதத்தில் கோணல்
மாணலாக எழுதலானார்.

ஆரம்ப பள்ளியில் படிக்கும்போது ஆங்கிலப்பாடத்தில்
பள்ளி மாணவர்கள் அனைவரிலும் திறம்பட்டவராக விளங்கினார். தன்னோடு கல்வி
பயின்ற அனைத்து மாணவர்களிலும் அவரது குரல் இனிய குழலோசையின் நாத குரலாக
இருந்ததுடன் மனப்பாடம் செய்து பாடப்பகுதிகளை ஒப்புவிப்பதிலும் அவர்
தன்னிகரற்று திகழ்ந்தார். எடின்பரோ என்ற இடத்திலுள்ள தேவாலயத்தில் பள்ளி
மாணவர்கள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டிய சங்கீதங்கள் மற்றும் வேத
பகுதிகளை நம்முடைய மர்ரே மச்செயின் ஒரு பிழையின்றி கேட்போர் ஆச்சரியத்தால்
பிரமிக்கும் அளவிற்கு மதுரமான குரலில் ஆலய ஆராதனைகளில் ஒப்புவித்ததை
ஆலயத்திற்கு வந்த மக்கள் மறவாமல் என்றும் நினைவில் வைக்க
வேண்டியதாகவிருந்தது.





தேவனுடைய படைப்பின் மாட்சியில் மயக்கம்
மர்ரே மச்செயின் தேவனுடைய அழகான படைப்புகளில்
மிகவும் துரிதமாக தனது உள்ளத்தை பறிகொடுத்துவிடும் இயல்பு அவருடைய இளமை
காலம் தொட்டே இருந்து வந்தது. ஸ்காட்லாந்து தேசத்தின் கிராமப்புற
காட்சிகளில் அவருக்கு கொள்ளை பிரியம் இருந்தது. கோடை கால விடுமுறை
நாட்களில் அவர் தனது நண்பர்களோடு "டம்பிரிஷையர்" "ரூத்வெல்" போன்ற அழகான
இடங்களுக்குச் சென்று பல நாட்களை அங்கு செலவிடுவார். கவிதை எழுதும் வரம்
பெற்றிருந்த அவர் மலைகள், ஏரிகள், பசுமைப் புல்வெளிகள் போன்ற இடங்களுக்குச்
சென்று கவிதை எழுதுவதற்கு வசதியாக தனது உள்ளத்தை அந்த அழகுக்காட்சிகளில்
நன்கு மெருகூட்டிக் கொண்டார்.

இப்படியான அழகுக்காட்சிகளை காணச்சென்ற பயணம் ஒன்றில்
மர்ரே மச்செயினும் அவரது நண்பன் ஒருவனும் சரியாக அகப்பட்டுக் கொண்டார்கள்.
"டங்க்கெல்ட்" என்ற மலை உச்சிக்கு அவரும் அவரது நண்பன் ஒருவனும் கால்
நடையாகப் புறப்பட்டார்கள். உயர்ந்த மலையின் அழகுக்காட்சிகளை எல்லாம்
பார்த்துவிட்டு "ஸ்ட்ராத்டல்" என்ற இடத்தை குறுக்கிடும் மலைகளின் ஊடாகத்
திரும்பி வரும்போது ஒரு அடர்த்தியான மூடுபனி அவர்களை முற்றுமாக
மூடிக்கொண்டது. எந்த திக்கிலும் ஒரு அடி கூட அவர்களால் எடுத்து வைக்க
இயலாமற் போன நிலையில் சூரியன் மேல் வானில் துரிதமாக தனது பொன் நிறக்
கிரணங்களை வீசி மறைய ஆரம்பித்துவிட்டது. வேறு எந்த ஒரு வழியும் இல்லாமல்
மர்ரே மச்செயினும் அவரது நண்பனும் அந்த மலை உச்சியிலேயே இராப் பொழுதை
செலவிட வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. தங்களை மூடிக்கொள்ள ஒரு போர்வை
கூட அவர்களிடம் இல்லாமல் இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்த நிலையில்
குளிரான மலை உச்சியில் இராக்கால மணி நேரங்களை செலவிட்டனர். நள்ளிரவின்
ஆழ்ந்த அமைதியும், தங்களுக்குக் கீழாக பரவி நின்ற மலைத் தொடர்களின் கருமைக்
காட்சிகளும் அவர்களின் உள்ளங்களில் நடுநடுங்கும் பய உணர்வைத்
தோற்றுவித்தன. கடைசியாக இருவரும் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கி கானகப்
பறவைகள் தங்கள் சிருஷ்டிகரை துதித்துப்பாடும் இன்பக்குரல்களின் இனிய சத்தம்
கேட்டு அதிகாலை நேரம் கண் விழித்தார்கள். இப்படிப்பட்ட அனுபவங்கள் எல்லாம்
பின் வந்த நாட்களில் பரவசம் பொங்கும் சிறந்த கவிதைகள் எழுத அவருக்கு
பெரிதும் பயன் உள்ளவைகளாக அமைந்தன.




நல்ல தாலந்துகளைப் பெற்றிருந்த இளைஞன்
மர்ரே மச்செயின் 1827 ஆம் ஆண்டு எடின்பரோ
சர்வ கலாசாலையில் படிக்கச் சேர்ந்து தனது சிறப்பான கல்விக்காக பல
பரிசுகளைப் பெற்றார். உடற்பயிற்சி விளையாட்டுகள் அவருக்கு மட்டற்ற
சந்தோசத்தை அளிப்பதாக இருந்தன. தனது பென்சிலை அவர் எடுத்தால் அழகான
சித்திரங்களை வரைந்து விடுவார். பாலஸ்தீனா தேசத்தின் பல்வேறு
அழகுக்காட்சிகளை அவர் தனது பென்சிலால் நேர்த்தியாக வரைந்திருக்கின்றார்.

இசையிலும் அவருக்கு சிறந்த ஞானம் இருந்தது. பாடல்களை
சரியாகவும், இனிமையான குரலிலும் பாடும் வரத்தை கர்த்தர் அவருக்கு
அளித்திருந்தார். பின் வந்த நாட்களில் அந்தப் பாடும் வரத்தை அவர் தேவ நாம
மகிமைக்காக செலவிட்டார். இவ்விதமான எல்லா சிறந்த தாலந்துகளை அவர் உடையவராக
இருந்தபோதினும் இயேசு இரட்சகரை தனது ஆத்தும நேசராக ஏற்றுக்கொள்ளாத பாவியாக
எபேசியர் 2 ஆம் அதிகாரம் 12 ஆம் வசனத்தின்படி "கிறிஸ்துவைச் சேராதவரும்,
இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவரும், வாக்குத்தத்தத்தின்
உடன்படிக்கைக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவரும், இவ்வுலகத்தில்
தேவனற்றவருமாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்." இந்த நிலையில் அவர் தேவ பணியை
எவ்வாறு பெற்றுக்கொண்டார்? "உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரளான
தண்ணீர்களிலும் இருந்தது. உமது காலடிகள் தெரியப்படாமற் போயிற்று" (சங் 77 :
19) என்ற தேவ வசனத்திற்கு இணங்க மர்ரே மச்செயினின் இருதயத்தை பாவ
உணர்விற்கும் அதைத் தொடர்ந்து ஆண்டவருடைய ஊழியத்திற்கும் ஏவி எழுப்பிவிட்ட
காரியத்தை நாம் அறியோம்.





மர்ரே மச்செயினின் மனந்திரும்புதல்
மர்ரே மச்செயின் எவ்வண்ணமாக கர்த்தர்
இயேசுவின் இரட்சிப்பின் பாத்திரமாக மாறினார் என்பது பற்றி திட்டமான ஒரு
சந்தர்ப்பம் இல்லாதபோதினும் அவர் 18 வயதினனாக இருந்தபோது அவரது
குடும்பத்தில் ஏற்பட்ட அவரது அண்ணன் டேவிட்டின் மரணத்தை ஒருவாறு உறுதியாக
சொல்ல முடியும். டேவிட் சுமார் 8 வருஷங்கள் மர்ரே மச்செயினைவிட மூத்தவர்.
சில காலம் வியாதிப்பட்டு இறுதியில் இரட்சிப்பின் நிச்சயத்தோடு டேவிட்
மரித்தார். டேவிட்டின் மரணத்தின் மூலமாகவே பரிசுத்த ஆவியானவர் மர்ரே
மச்செயினின் உள்ளத்தில் தமது ஆழ்ந்த இரட்சிப்பின் கிரியையை
தொடங்கியிருந்தார். அதற்குப் பின்னர் வந்த நாட்களில்தான் மர்ரே மச்செயின்
தேவனைத் தேடவும், அவரது வசனங்களை கருத்தோடு வாசிக்கவும், ஓய்வு நாள் பள்ளி
ஒன்றில் தனது பணிகளை செய்யவும் ஆரம்பித்தார்.

அண்ணன் டேவிட் இறந்த ஒரு ஆண்டுக்குப் பின்னர் அவர்
தமது நாட் குறிப்பில் "போன வருடம் இதே நாள் காலையில் எனது உலப்பிரகாரமான
ஆனந்த வாழ்வில் பேரிடி விழுந்தது. அந்த பெரிய இழப்பின் மூலமாக நான்
கர்த்தரைக் கண்டடைந்தேன். ஆ, நான் எத்தனை ஆசீர்வதிக்கப்பட்டவன்" என்று
எழுதினார். தனது அண்ணன் டேவிட்டின் மரணத்தை ஒவ்வொரு ஆண்டும் அந்த
குறிப்பிட்ட மரண நாளில் பக்தி வினயத்தோடு மச்செயின் நினைவுகூர்ந்தார்.
பதினொரு ஆண்டுகள் கழித்து அந்த நாளை நினைவுகூர்ந்து ஒரு நண்பனுக்கு எழுதிய
கடிதத்தில் "நான் அதிக பரிசுத்தமுடையோனாகவும், ஞானமுடையோனாகவும் மாறுவதற்கு
எனக்காக ஜெபியுங்கள். எனது மனுஷ சாயல் மறைந்து என் பரலோக தகப்பனின் சாயல்
என்னில் ஒளி வீசிப் பிரகாசிக்க எனக்காக மனறாடுங்கள். அப்பொழுது நான் என்
ஜீவனைப் பொருட் படுத்தாமல் எனது ஓட்டத்தை ஆனந்த மகிழ்ச்சியோடே ஓடி
முடிப்பேன். இந்த நாளில் 11 ஆண்டுகளுக்கு முன்னர் என்னை நேசித்த என்னால்
நேசிக்கப்பட்ட என் அருமை சகோதரனை நான் இழந்தேன். அந்த நாளிலிருந்து என்றும்
மரிக்காமல் இருக்கக்கூடிய ஒரு சகோதரனை (இயேசுவை) நான் தேட ஆரம்பித்தேன்"
என்று எழுதினார்.





உலகத்தின் வாசனை இன்னும் கொஞ்சம்
ஒட்டியே இருந்தது
தனது மனந்திரும்புதலுக்குப் பின்னர் 1831 ஆம்
ஆண்டு குளிர் காலத்தில் மர்ரே மச்செயின் வேதசாஸ்திர கல்லூரியில் சேர்ந்து
புகழ்பெற்ற கிறிஸ்தவ பண்டிதர்கள் "சால்மர்ஸ்" மற்றும் "வேல்ஸ்"
என்பவர்களிடம் இறையியல் பயின்றார். ஆரம்ப நாட்களில் உலகத்தின் வாசனை அவரோடு
சற்று ஒட்டியிருக்கத்தான் செய்தது. அவ்வப்போது அவர் நடனசாலைக்குச் சென்று
விடுவார். சீட்டாட்டமும் அவரிடம் இருந்தது. ஆனால் உடனுக்குடன் மேற்கண்ட
பாவங்களிலிருந்து தேவ பெலத்தால் அவர் தன்னை விடுவித்துக்கொண்டார். அந்தப்
பாவங்களுக்காக அவர் பெரிதும் மனஸ்தாபப்பட்டார். மச்செயினின் உலக
நேசத்திற்குத் துணை போன அலெக்ஸாண்டர் சாமர்வெல் என்ற வாலிபர் பின்
நாட்களில் கிளாஸ்கோ பட்டணத்தில் குருவானவரானார். இருவரும் தாங்கள் கர்த்தரை
விட்டு சில காலம் பின்மாறிப் போனதற்காக பெரிதும் துயரம் அடைந்து
மீண்டுமாகத் தேவனைத் தேடவும் இருவரும் ஒன்றாக வேத வசனங்களை ஆராய்ந்து
பார்க்கவும் தங்கள் இருதயங்களை தேவனுக்கு நேராக ஒரு முகப்படுத்தினார்கள்.
அந்த நாட்களில் நேரிட்ட டாக்டர் ஆண்ட்ரூ தாம்சன் என்பவருடைய பரிசுத்தமான
மரணமும், அவருடைய மரணத்தின் போது பட்டணத்தின் மக்கள் யாவரும் அவருக்கு
காண்பித்த துயரத்தின் சோக நிலையும் மர்ரே மச்செயினுடைய மங்கிய இரட்சிப்பின்
ஒளி தீபத்தை மிகவும் பிரகாசமாக எரிய தூண்டு கோலாக அமைந்தது.





கர்த்தரின் உண்மையும் உத்தமமுமான
பரிசுத்த தேவ ஊழியன்
"நமது பூவுலக ஓட்டம் முற்றுப்பெறும் காலம்
மட்டாக நாம் இந்த உலகத்தில் சாவாமையுள்ளவர்கள்தானே!" என்று பரிசுத்த
புன்னகையுடன் கேட்ட மாபெரும் தேவ மனிதன் மர்ரே மச்செயின் 1836 ஆம் ஆண்டு
ஸ்காட்லாந்து தேசத்திலுள்ள டண்டி பட்டணத்தில் அப்பொழுதுதான் புதிதாக கட்டி
முடிக்கப்பட்டிருந்த பரிசுத்த பேதுரு தேவாலயத்தின் முதல் குருவானவராக
தேவப்பணியை ஏற்றுக் கொண்டார். அப்பொழுது அவருடைய வயது 23 மாத்திரமேதான்.
அவர் அந்த ஆலயத்தின் குருவானவராக தேவப் பணியை ஏற்றபோது அவருடைய வடக்கு
கடற்கரை பட்டணமான டண்டி பற்பலவிதமான பாவ அசுசிகளால் நிரம்பி வழிந்து
கொண்டிருந்தது. அதற்கு இன்னும் பாவ அழகு சேர்க்கும் வண்ணமாக திருச்சபையில்
கள்ளத் தீர்க்கத்தரிசிகள் எழும்பி கள்ளத் தீர்க்கத் தரிசனம் சொல்லி மக்களை
வஞ்சித்துக் கொண்டிருந்தனர். அந்த கள்ளத் தீர்க்கத்தரிசனங்களை பாவ
வாழ்க்கையிலிருக்கும் மக்கள் அப்படியே ஏற்றுக்கொண்டு வந்தனர். அந்த
மக்களுக்கு நம் இளம் போதகர் பாவத்தின் நித்திய தண்டனையான "எரி நரகத்தை"
குறித்து உள்ளத்தின் வியாகுலத்தோடு "இதோ இராக்காலம் வருகிறது" என்று
எங்கும் சுற்றித்திரிந்து முழங்கினார்.

பரிசுத்த பேதுரு தேவாலயத்தின் குருவானவராக பதவி ஏற்ற
மர்ரே மச்செயின் தமது சபை மக்களுக்கு "கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்
மேல் இருக்கிறார்" (ஏசாயா 61 : 1) என்ற தேவ வசனத்தின் பேரில் தனது முதல்
பிரசங்கத்தை பிரசங்கித்தார். அந்த பிரசங்க வசனத்திற்கு ஏற்றவிதமாக பின்
வந்த சுமார் 7 ஆண்டு காலத்திற்கு அதாவது அவருடைய பரம கானான் அழைப்பின்
காலம் வரை தேவனுடைய ஆவியானவர் அவர் மேல் இருந்து அந்த திருச்சபையிலே ஒரு
மாபெரும் உயிர் மீட்சியை ஏற்படுத்திவிட்டார்.

மர்ரே மச்செயின் தனது பிரசங்கங்களை தனது
முழங்கால்களில் நின்று தேவனிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதற்காக அவர்
மணிக்கணக்கான நேரங்களை கர்த்தருடைய சமூகத்தில் செலவிட வேண்டியதாக இருந்தது.
டண்டியில் அவர் குருவானவராக இருந்த நாட்களின் மாலை நேரங்கள் பலவற்றிலும்
"இன்வர்கோர்" என்ற இடத்தில் அழிந்து கிடந்த பண்டைய தேவாலயம் ஒன்றிற்கு தனது
குதிரையில் ஏறிச்சென்று ஜெபித்து வந்தார்.

பேதுரு தேவாலய அங்கத்தினர்களின் எண்ணிக்கை 1100
ஆகும். சுகயீனமாக கட்டில் கிடையாக இருப்போர் மற்றும் மரண படுக்கையில்
இருப்போர் போன்றோரைச் சந்திப்பது என்பது மச்செயினுக்கு வெகு பிரியம்.
குருவானவர் மர்ரே மச்செயினுடைய சந்திப்பால் தங்களுடைய மரண கட்டில்களில்
ஆண்டவர் இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்று பரலோகம் சென்றவர்கள்
பலராவார்கள்.

ஒவ்வொரு வாரமும் வாலிபருக்கு அவர் ஆவிக்குரிய
கூட்டங்களை நடத்தினார். அவருடைய அந்த உயிர் மீட்சி கூட்டங்களின் மூலமாக
தேவன் பெரிய இரட்சிப்பை வாலிபர்களின் நடுவில் உண்டாக்கினார். அவருடைய
திருச்சபையில் அநேக ஓய்வு நாள் பாடசாலைகள் அவரால் நிறுவப்பட்டன. அந்த ஓய்வு
நாள் பள்ளிகளில் பாடக்கூடிய அழகான பாடல்களை அவரே இயற்றினார்.
"தீவட்டிக்குத் தேவையான எண்ணெய்" என்று ஆரம்பிக்கும் அவரது பாடல் மிகவும்
சிறப்பான ஒன்றாகும். ஓய்வு நாள் பள்ளிகளுக்குத் தேவையான அருமையான துண்டுப்
பிரதிகளை எல்லாம் அவரே எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.





குழந்தைகள் மேல் கொள்ளை அன்பு கொண்டோன்
குருவானவர் மர்ரே மச்செயினுக்கு குழந்தைகள்
மேல் அவரது ஆண்டவரைப்போன்று அளவு கடந்த அன்பு உண்டு. அவர்களை அவர் அதிகமாக
நேசித்தார். தனது திருச்சபையின் ஓய்வு நாள் பாடசாலை பிள்ளைகளுக்காக 1839
ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று "இயேசு அப்பாவிடம் குழந்தைகள் ஏன் பாடிப்
பறந்து வர வேண்டும்?" என்ற உள்ளத்தைத் தொடும் துண்டுப் பிரதியை அவரே எழுதி
அச்சிட்டு குழந்தைகளுக்கு வழங்கினார். பின் வந்த நாட்களில் "மந்தையின்
சின்ன ஆட்டுக்குட்டிகள்" என்ற துண்டுப்பிரதியை குழந்தைகளுக்காக
வெளியிட்டார்.

ஒரு நாள் ஒரு சின்ன பையனுடைய கரத்தில் அவனுடைய சிறிய
வேதாகமத்தை மச்செயின் கண்டார். உடனே அதை அவனது கரத்திலிருந்து வாங்கி
வேதாகமத்திலுள்ள முகப்பு பக்கத்தில் காணப்பட்ட வெள்ளைத்தாளில் தனது
உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர் அந்த வேளை உணர்த்திய வரிகளை ஒரு சின்ன
கவிதையாக வடித்துவிட்டார். அந்த பரிசுத்த தேவ மனிதன் அந்த சிறுவனின்
வேதாகமத்தில் எழுதின ஆங்கில கவிதையைப் பாருங்கள்!

Peace be to thee, gentle boy
Many years of health and joy!
Love your Bible more than play,
Grow in wisdom every day,
Like the lark on hovering wing,
Early rise, and mount and sing,
Like the dove that found no rest,
Till it flew to Noah's breast,
Rest not in this world of sin,
Till the Saviour take thee in.

தனது திருச்பையின் ஓய்வு நாள் பள்ளி
ஆசிரியர்களும், ஆசிரியைகளும் மெய்யான இரட்சிப்பின் நிச்சயத்தைப்
பெற்றவர்களாக இருப்பதில் அவர் தீவிர கவனம் செலுத்தினார். அவர்கள் தங்கள்
கரத்தின் கீழுள்ள தங்கள் ஓய்வு நாள் பள்ளிப் பிள்ளைகளை இரட்சிப்புக்கு
நேராக வழிநடத்த வேண்டும் என்று அவர் பெரிதும் விரும்பினார். ஒரு சமயம்
அவருடைய திருச்சபையிலுள்ள பெண் ஒருத்தி மச்செயின் குருவானவரின் ஓய்வு நாள்
பள்ளி ஒன்றின் ஆசிரிய பணிக்காக விண்ணப்பம் செய்திருந்தாள். அவளை ஆவிக்குரிய
நிலையில் பரிசோதித்த குருவானவர் மர்ரே மச்செயின் அந்தப் பெண்ணுக்கு
பரிந்துரை செய்த மனிதருக்கு "நீங்கள் பரிந்துரை செய்த பெண்மணி என் ஓய்வு
நாள் பாடசாலையை நடத்த முற்றும் தகுதியற்றவள். மெய்யான இரட்சிப்பின் அனுபவம்
அவளுக்குக் கிடையாது. ஆனால் தையல் மற்றும் பின்னல் வேலைக்கு அவள்
கெட்டிக்காரி" என்று தபால் எழுதினார்.





சதா தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்த
தேவ மனிதர்

குருவானவர் மர்ரே மச்செயின் வீட்டின் உள்ளே
செல்லும் எந்த ஒரு மனிதனும் தேவனுடைய ஊழியமானது எத்தனை மகிழ்ச்சி
நிரம்பியது என்பதை இலகுவில் கண்டு கொள்ளத்தக்க விதத்தில் அவர் வீட்டின்
பொருட்களும், காரியங்களும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அவருடைய அதிகாலை
மணி நேரங்கள் முற்றுமாக ஜெபத்திற்கும், வேத வசன தியானத்திற்கும்
ஒதுக்கப்பட்டிருந்தன. தினமும் தேவனைப் பார்ப்பதற்கு முன்பாக மற்ற எவர்
ஒருவரையும் அவர் பார்ப்பதே இல்லை. படுக்கையில் அதிகாலை அவர் கண்
விழித்ததும் ஏதாவது ஒரு சங்கீதத்தைப் பாட்டாகப் பாடி தனது ஆத்துமாவை
கர்த்தரைத் துதிப்பதற்கு ஏதுவாக ஒருமுகப்படுத்துவார். தினமும் 3
அதிகாரங்களை அவர் வேதாகமத்தில் வாசிப்பார். வேதாகமம் அவருக்கு உலகின் எல்லா
பொக்கிஷங்களைக் காட்டிலும் மிக அருமையானதாக இருந்தது. உலகத்து புத்தகங்கள்
அனைத்திற்கும் மேலாக அதற்கு தலைமை ஸ்தானம் கொடுத்து, அதை நேசித்து, அதை
கனப்படுத்தி, அதற்குக் கீழ்ப்படிந்து அவர் ஜீவித்தார். உலகத்து மற்ற
புத்தகங்கள், சஞ்சிகைகள், தினசரி செய்தி தாட்களை வாசிக்கும் விஷயத்தில்
ரசவாதி (கெமிஸ்ட்) தனது ஆராய்ச்சி கூடத்தில் விஷத்தைக் கையாள்வது போன்று
தேவ மக்கள் தேவனுடைய வேதாகமத்திற்கு குறுக்காக நிற்கக்கூடியவைகளை
ஜாக்கிரதையாக இனம் கண்டு கையாள வேண்டும் என்று கூறினார்.

"உனது வேதாகமத்தை நீ ஒழுங்காக வாசிக்க வேண்டும்.
வாசிப்பது மட்டுமல்ல அதைப் புரிந்து கொள்ளும்படியாக வாசிப்பதுடன் அதை
அப்படியே அப்பியாசிக்கும் விதத்தில் கருத்தாய் வாசிக்க வேண்டும். ஒரு
சமயத்தில் வேதத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசிக்காமல் அங்கும்
இங்குமாக கலந்து வாசிக்க வேண்டும். உதாரணமாக ஆதியாகமத்தை நீ வாசித்தால் ஒரு
சங்கீதத்தையும் கூட வாசிக்க வேண்டும். மத்தேயு சுவிசேஷத்தை வாசிக்கும்போது
நிருபங்களில் ஒரு அதிகாரத்தையும் வாசித்தல் அவசியமாகும். வேதாகமத்தை
ஜெபமாக மாற்றிவிடு. முதலாம் சங்கீதத்தை வாசித்த பின்னர் வேதாகமத்தை உனக்கு
முன்பாக உள்ள நாற்காலியில் விரித்து வைத்து "ஆண்டவரே, நீர்க்கால்களின்
ஓரமாக நாட்டப்பட்டுத் தன் காலத்தில் தன் கனியைத் தரும் இலை உதிராதிருக்கிற
அந்த முதலாம் சங்கீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசீர்வாதமான மனிதனாக என்னை
மாற்றும்" என்று நீ ஜெபி. வேதத்தை நல்லவிதமாக புரிந்து கொள்ளும் விதமும்,
ஜெபிக்க கற்றுக்கொள்ளும் முறையும் இதுவேதான். உனது ஜெபத்தில் உன்னுடைய
பாவங்களை ஒவ்வொன்றாகப் பெயர் சொல்லி தேவ சமூகத்தில் அறிக்கையிடு. உனக்காக
உன் வீட்டிலுள்ளவர்கள் ஜெபித்து வருவார்கள் என்பது உனக்குத் தெரியும்.
அப்படியானால் நீயும் அவர்களுக்காக ஜெபிக்கலாம் அல்லவா? கட்டாயம் நீயும்
அவர்களுக்காக ஜெபிக்க மறக்காதே. மற்றவர்களுக்காக நீ ஜெபிக்கும்போது உனது
தனிப்பட்ட ஜெப வாழ்வும் சிறப்பாக வளர்வதை நீ காண்பாய்"

மேற்கண்ட விதமாக ஒரு கிறிஸ்தவ பள்ளி மாணவனுக்கு மர்ரே மச்செயின் ஒரு சமயம் கடிதம் எழுதினார்.

அவரது ஜெப வாழ்க்கைக்கு சாட்சிகளாக அவரது வீட்டின்
அறையின் சுவர்கள் எழுந்து நிற்கின்றன. அந்த சுவர்கள் அவர் தேவ சமூகத்தில்
வடித்த கண்ணீர்களையும், அவரது ஏக்க பெரு மூச்சுகளையும் கூட குறித்து
சாட்சியிடக்கூடியவைகளாக உள்ளன. அதிகாலை வேளை நாம் அவரது அறையின் பக்கமாக
செல்லுவோமானால் மிகவும் மதுரமான குரலில் சங்கீதங்களை அவர் பாடுவதை நாம்
கேட்கலாம். அதைத் தொடர்ந்து வேதாகமத்திலிருந்து ஒரு பகுதியை அவர் தனது
ஆத்துமாவின் பரிசுத்த நிலைக்காகவும் ஜெப மணி நேரம் ஆசீர்வாதமாக
இருப்பதற்காகவும் கருத்தாக வாசிப்பதை நாம் செவிமடுத்து கேட்கலாம். அந்த ஜெப
தியான மணி நேரங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பரிசுத்தவான்கள் யோனத்தான்
எட்வர்ட்ஸ் என்பவரின் எழுத்துக்களையும், சாமுவேல் ரூத்தர்ஃபோர்ட் என்ற
பரிசுத்தவானின் கடிதங்களையும் மிகவும் ஆர்வத்தோடு வாசிப்பதுண்டு.

அதிகாலை எழுந்து சில மணி நேரம் தேவ சமூகத்தில் இன்ப
உறவாடிவிட்டு அவர் தனது மேல் அறையில் இருந்து தேவப்பிரசன்னத்தின் நிறைவோடு
தனது காலை ஆகாரத்திற்காக கீழே இறங்கி வரும் காட்சி காண்போர் உள்ளத்தை
ஆவிக்குள் பரவசப்படுத்தக் கூடிய ஒன்றாகும். அவர் எப்பொழுதும் ஏனோக்கைப் போல
தேவனோடு சஞ்சரித்துக் கொண்டே இருந்தார்.





தேவ மனிதரின் பாலஸ்தின சுவிசேஷ பிரயாணம்

1839 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து தேசத்து பொதுவான
திருச்சபை மர்ரே மச்செயினையும் அவரோடு கூட 3 ஸ்காட்லாந்து தேச
குருவானவர்களையும் பாலஸ்தீனா நாட்டில் புதிதாக வந்து குடியேறிய யூத
மக்களுக்கு தேவனுடைய சுவிசேஷ நற்செய்தியை அறிவிக்கும்படியாக அனுப்பி
வைத்தது. அந்த மூவரில் ஆண்ட்ரூ போனர் என்ற சிறந்த தேவ பக்தன் ஒருவராவார்.
மர்ரே மச்செயினின் நெருங்கிய ஆவிக்குரிய தோழன் அவர்.

அந்த பாலஸ்தீன பயணம் 6 மாத காலம் நீடித்தது. இயேசுவே
மெய்யான மேசியா என்று நமது சுவிசேஷகர்கள் யூதர்களுக்கு பறைசாற்றினர்.
இப்போது இருப்பதைப் போன்று வசதியான விமான போக்குவரத்து எதுவும் இல்லாத
நாட்கள் அவை. அதின் காரணமாக மர்ரே மச்செயினும் அவரது 3 நண்பர்களும்
ஒட்டகங்களிலும், கழுதைகளிலுமாக தேவனுடைய பரிசுத்த நாட்டிற்கு பயணம்
செய்தனர். சில சமயங்களில் நாள் ஒன்றுக்கு 14 மணி நேரம் கூட அவர்கள்
பாலைவனத்தில் பிரயாணம் போக வேண்டியதாக இருந்தது. ஐரோப்பாவை விட்டதும்
அவர்களின் பயணம் பாலைவன மார்க்கமாகவே இருந்தது. மர்ரே மச்செயின் அந்த
வனாந்திர பாலைவன யாத்திரை வாழ்வைக்குறித்து கீழ்க்கண்டவாறு தமது டயரியில்
எழுதி வைத்துள்ளார்:-

"வனாந்திரமான பாலைவனத்தின் மணல் பரப்பில் இருப்பது
என்பது ஒரு வித்தியாசமான அனுபவமாகும். உபவாச நாட்களில் வீட்டில் முற்றும்
தனித்திருப்பதைப் போன்ற அனுபவம் அது. அந்த வனாந்திர தனிமை தேவனை வெகு
அருகாமையில் அழைத்துக் கொண்டு வருவதாக இருக்கின்றது. கூடாரங்களில்
குடியிருந்து கொண்டு பல நாட்கள் அந்த கூடாரத்தையே வட்டம் சுற்றி வருவது
என்பது புது புது பரிசுத்த உணர்வுகளை உள்ளத்தில் தோன்றப் பண்ணுகின்றன.
பாலைவனத்தில் நாங்கள் நால்வரும் ஒரு விந்தையான வாழ்வை மேற்கொண்டோம்
என்றுதான் சொல்ல வேண்டும். எங்களைச் சுற்றிலும் பாலைவன மணற் பரப்புகள் வட்ட
வட்டமாக காட்சி தருகின்றன. பாலைவனத்தில் மாத்திரம் வளரக்கூடிய
முட்புதர்களையும் நாங்கள் பார்க்கின்றோம். விரிந்து வியாபித்துக் கிடக்கும்
நீல வான மண்டலத்தில் ஒரு சிறிய உள்ளங்கை அளவு மேகம் தானும் கிடையாது.
வெளியில் சூரிய உஷ்ணம் 96 டிகிரி செல்சியஸ் என்று எங்கள் கூடாரத்திலுள்ள
வெப்பமானி காண்பிக்கின்றது. அந்த தகிக்கும் வெயிலில் நாங்கள் எங்கள்
கூடாரத்தில் முடங்கிக் கிடக்கின்றோம். மாலைப்பொழுது வருகின்றது. விஸ்தாரமான
சமுத்திரத்தில் சூரியனின் அஸ்தமனம் எப்படி இருக்குமோ அவ்விதமாகவே
பாலைவனத்தில் சூரிய அஸ்தமனமும் நடைபெறுகின்றது. சூரியன் அஸ்தமிக்கவும்
வானமெங்கும் நட்சத்திரங்கள் தங்கள் முழு மகிமையிலும் பவனி வர
ஆரம்பித்துவிடுகின்றன. இரவில் நாங்கள் நால்வரும் பெரும் பாலைவனத்தில்
தனிமையாக இருக்கின்றோம். எங்களுக்கு அருகில் எங்கள் ஒட்டகங்களின்
சொந்தக்காரர்களான பெடுயீன் என்ற பாலைவன அராபிய பழங்குடி மக்கள் தங்கள்
கூடாரத்தில் இருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாம் அறிந்தவரும்,
எல்லாரையும் விட எங்களை அதிகமாக நேசிக்கின்ற எங்கள் ஆண்டவர் இயேசு
எங்களுக்கு அருகில் உள்ளார். பொழுது விடிய விடிய நாங்கள் எங்கள் பாலைவன
பயணத்தை தொடங்கிவிடுகின்றோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.




தேவ மனிதர் மர்ரே மச்செயினின் பாலஸ்தீன அனுபவங்கள் சிலவற்றை கவனியுங்கள்:-

"எகிப்து தேசத்தில் சோவான் என்ற இடத்திற்கு
நாங்கள் வந்து எங்கள் கூடாரங்களை போட்டோம். இந்த சோவானில்தான் யோசேப்பு
அடிமையாக இஸ்மவேலருக்கு விற்கப்பட்டார். இங்குதான் பார்வோனுக்கு முன்பாக
மோசே அதிசயங்களைச் செய்து இஸ்ரவேலரின் மீட்புக்காக அவனிடம் வேண்டி
நின்றார். நாங்கள் பாலைவன மார்க்கமாக பிரயாணம் பண்ணி வந்த இடங்கள்
எல்லாவற்றைப் பார்க்கிலும் இந்த சோவானில் குடியிருந்த சுதேசிகளால்தான்
நாங்கள் பெரிய ஆபத்தை எதிர்நோக்க வேண்டியதாக இருந்தது. சோவானின் குடிகள்
குரூரமான காட்டு மிராண்டிகளாக இருந்தபடியால் எங்களது ஒட்டக ஓட்டிகளான
அராபியர்கள் அவர்களுக்கு மிகவும் அஞ்சி இரா முழுவதும் எங்களையும், தங்கள்
ஒட்டகங்களையும் கரங்களில் துப்பாக்கிகள் ஏந்தி கண் உறக்கமின்றி காவல்
காத்துக்கொண்டிருந்தனர். இரவில் அவ்வப்போது தங்கள் துப்பாக்கிகளிலிருந்து
பாதுகாப்புக்காக வேட்டுகள் எழுப்பிக் கொண்டிருந்தனர். இரவில் நிலவு
வெளிச்சம் நன்கு காய்ந்து கொண்டிருந்தது. தேவன் எங்களில் எவர் ஒருவருக்கும்
சேதமில்லாமல் எங்களை பத்திரமாக பாதுகாத்துக்கொண்டார்"

எகிப்தின் வனாந்திரத்தில் நாங்கள் கடைசியாக
தங்கியிருந்த நாளுக்கு முந்தின நாளில் கோனாட்டர் என்ற இடத்தில் நாங்கள்
கூடாரமிட்டிருந்தோம். அந்த இடத்தில் ஒரு மரம் கூட கிடையாது. வெப்ப நிலை 92
டிகிரியாக இருந்தது. கடுமையான வெப்பத்தின் காரண
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum