ஆரானை விட்டு வெளியேறு
Wed Mar 02, 2016 2:14 am
ஆரான் பட்டணம் விக்கிரக வழிபாட்டை உடைய செழிப்பான பட்டணமாக இருந்தது. தேராகு ஆரானிலேயே மரித்த பின்பு, அவருடைய மகன் நாகோர் அங்கேயே வாழ்வதை விரும்பினார். தகப்பனுடைய ஆஸ்திகளும் அந்த பட்டணத்திலேயே இருக்கும். ஆனால் ஆபிரகாமை தேவன் ஆசிர்வதிக்க வேண்டுமென்றால், அவர் ஆரான் பட்டணத்தை விட்டு வெளியேற வேண்டும். அந்த நாட்களில் “ஒருவருக்கு அளிக்கும் தண்டனைகளிலேயே மிகக் கடுமையான தண்டனை, அவரை குடும்ப அங்கத்தினர் என்ற ஸ்தானத்தை விட்டு துரத்திவிடுவது தான்”. “கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” (ஆதி 12:1) என்றார். தேவனுடைய இந்த அழைப்பு சுதேசியாயிருந்த ஆபிரகாமை பரதேசியாக மாற்றி விட்டது.
தேவனின் வார்த்தையை நம்பி அனைத்தையும் விட்டு விட்டுச் சென்ற ஆபிரகாம் விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்படுவது ஏற்புடையது தானே. அதைக் குறித்து ஆபிரகாம் கவலைப்படாமல் கர்த்தர், வாக்குத்த பூமியை காட்டும் வரை தன் மனைவியோடும் ஆடு, மாடுகள் வேலைக்காரர்கள் என பரிவாரங் களுடனும் பயணிக்க தன்னை அர்ப்பணித்தார். ஆபிரகாம் தன் தேசத்தை மட்டுமல்லாமல் தன் உறவினரையும் விட்டு சென்றது, அவருடைய உடனடியான கீழ்ப்படிதலையும் தேவனிடம் அவருக்கிருந்த அசாதாரணமான நம்பிக்கையையும், விசுவாசத்தையும் வெளிக்காட்டியது.
“நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதி 12:2) என்று தேவன் ஆபிராமின் வாழ்வில் ஒரு பெரிய திட்டத்தையே வைத்திருந்தார். ஆபிரகாமுக்கு முன்பு வாழ்ந்த ஆபேல், ஏனோக்கு, நோவா போன்றவர்கள் விசுவாசத்தை காண்பித்திருந்தாலும், பூமியின் சகல ஜனத்தாரையும் ஆசீர்வதிப்பதற்கான உடன்படிக்கை ஆபிரகாமுடன்தான் செய்யப்பட்டது. (ஆதி 22:18). இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசமார்க்கத்தார், விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் (கலா 3:9). ஆபிரகாமின் முழு வாழ்க்கையுமே பல பரீட்சைகளும் சோதனைகளும் நிறைந்ததாய் இருந்தாலும், அவருடைய விசுவாசம் நாம் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக இருக்கிறது.
ஆபிராகாமைப் போலவே, உங்கள் வாழ்விற்கும் தேவன் ஒரு உன்னதமான ஆசிர்வாதத்தை வைத்திருக்கிறார். ஆரான் என்னும் பாவ வாழ்க்கையை விட்டு வெளியேறும் பொழுது நாம் அந்த ஆசிர்வாதத்தை அடைய முடியும். இஷ்டம்போல நமது பாவ வாழ்கையில் வாழ்ந்து விட்டு, இறுதிமூச்சுப் போகும்வேளையில், “ஆண்டவரே, உமது சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்கிறேன்” என்று கூறுவது பயனற்றது. “குடும்ப அங்கத்தினர்” என்ற மேன்மையை விட்டுகொடுத்து ஆபிராகாம் ஆரான் பட்டணத்தை விட்டு வெளியேறினார். நீங்கள் உங்கள் பாவ வாழ்க்கையை விட்டு வெளியேற ஆயத்தமாக இருகின்றீர்களா? ஆரானை விட்டு வெளியேறினால் ஆசிர்வாதம் நிச்சயம் ஆமேன். அல்லேலுயா.
தேவனின் வார்த்தையை நம்பி அனைத்தையும் விட்டு விட்டுச் சென்ற ஆபிரகாம் விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்படுவது ஏற்புடையது தானே. அதைக் குறித்து ஆபிரகாம் கவலைப்படாமல் கர்த்தர், வாக்குத்த பூமியை காட்டும் வரை தன் மனைவியோடும் ஆடு, மாடுகள் வேலைக்காரர்கள் என பரிவாரங் களுடனும் பயணிக்க தன்னை அர்ப்பணித்தார். ஆபிரகாம் தன் தேசத்தை மட்டுமல்லாமல் தன் உறவினரையும் விட்டு சென்றது, அவருடைய உடனடியான கீழ்ப்படிதலையும் தேவனிடம் அவருக்கிருந்த அசாதாரணமான நம்பிக்கையையும், விசுவாசத்தையும் வெளிக்காட்டியது.
“நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதி 12:2) என்று தேவன் ஆபிராமின் வாழ்வில் ஒரு பெரிய திட்டத்தையே வைத்திருந்தார். ஆபிரகாமுக்கு முன்பு வாழ்ந்த ஆபேல், ஏனோக்கு, நோவா போன்றவர்கள் விசுவாசத்தை காண்பித்திருந்தாலும், பூமியின் சகல ஜனத்தாரையும் ஆசீர்வதிப்பதற்கான உடன்படிக்கை ஆபிரகாமுடன்தான் செய்யப்பட்டது. (ஆதி 22:18). இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசமார்க்கத்தார், விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் (கலா 3:9). ஆபிரகாமின் முழு வாழ்க்கையுமே பல பரீட்சைகளும் சோதனைகளும் நிறைந்ததாய் இருந்தாலும், அவருடைய விசுவாசம் நாம் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக இருக்கிறது.
ஆபிராகாமைப் போலவே, உங்கள் வாழ்விற்கும் தேவன் ஒரு உன்னதமான ஆசிர்வாதத்தை வைத்திருக்கிறார். ஆரான் என்னும் பாவ வாழ்க்கையை விட்டு வெளியேறும் பொழுது நாம் அந்த ஆசிர்வாதத்தை அடைய முடியும். இஷ்டம்போல நமது பாவ வாழ்கையில் வாழ்ந்து விட்டு, இறுதிமூச்சுப் போகும்வேளையில், “ஆண்டவரே, உமது சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்கிறேன்” என்று கூறுவது பயனற்றது. “குடும்ப அங்கத்தினர்” என்ற மேன்மையை விட்டுகொடுத்து ஆபிராகாம் ஆரான் பட்டணத்தை விட்டு வெளியேறினார். நீங்கள் உங்கள் பாவ வாழ்க்கையை விட்டு வெளியேற ஆயத்தமாக இருகின்றீர்களா? ஆரானை விட்டு வெளியேறினால் ஆசிர்வாதம் நிச்சயம் ஆமேன். அல்லேலுயா.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|