தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள் Empty வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள்

Mon Feb 29, 2016 3:24 pm
வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள்
வீடு வாங்க லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்ட முடியாது என்பதாலும், திரும்பக்
கட்டும் மாதத்தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச்சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக்கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள்.

இந்தியாவில் 15 , 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டுக் கடனை தேர்ந்தெடுத்த காலம் வரை கட்டினால், கட்டும் வட்டி அதிகமாக இருக்கும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம்.

*கடன் தொகை ரூ. 25 லட்சம்


*திரும்பக்கட்டும் காலம் 30 ஆண்டுகள் (360 மாதங்கள்)
* வட்டி: 10%
* மாதத் தவணை ரூ. 21,939


இங்கே வாங்கும் கடனோ ரூ.25 லட்சம் தான். ஆனால், அதற்கு கட்டும் வட்டியோ ஏறக்குறைய ரூ.54 லட்சம். (பார்க்க: அட்டவணை 1)

வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள் P60a

இப்படி கடைசி வரைக்கும் கடனைக் கட்டுவதற்கு பதில் சில உத்திகளைப் பின்பற்றி வட்டியைக் கணிசமாக மிச்சப்படுத்தலாம். அவை பற்றி…
(1) மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை அதிகரித்துக் கட்டுதல்!

மாதத் தவணை ரூ.21,939 என்பதற்கு பதில் கூடுதலாக மாதம் ரூ.3,061 அதிகரித்து ரூ.25,000 ஆக கட்டி வந்தால், வீட்டுக் கடன் 360 மாதங்களுக் கு பதிலாக 216-வது மாதத்திலே  முடிந்துவிடும். இங்கே வட்டிக்காக செல் லும் தொகை ரூ.29 லட்சம்தான். அதாவது, மாதம் ரூ.3,061 அதிகரித்து கட் டுவதன்மூலம் வட்டியில் ரூ.25 லட்சம் மிச்சமாகும்.(பார்க்க: அட்டவணை 2)


வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள் P60b



(2) ஆண்டு தோறும் தவணை அதிகரித்து கட்டுதல்!

முதல் ஆண்டு மட்டும் ஆரம்பத்தில் கட்டும் வீட்டுக்கடனுக்குரிய தவணை யை கட்டி விட்டு, அதன்பிறகு ஆண்டுதோறும் ஒருகுறிப்பிட்ட தொகை யை அதிகரித்து வரும்பட்சத்தில் வட்டி கணிசமாக மிச்சமாகும். அதாவது , முதல் ஆண்டு தவிர, அடுத்துவரும் ஆண்டுகளில் தவணையை மாதம் ரூ.5,000 வீதம் அதிகரித்து கட்டிவந்தால், வீட்டுக்கடன் 360மாதங்களுக்கு பதில் 103 மாதங்களிலேயே முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை சுமார் ரூ.15 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.38.5 லட்சம் மிச்ச மாகும். (பார்க்க: அட்டவணை 3)

வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள் P60c


(3) ஆண்டுதோறும் கூடுதல் தொகை கட்டுதல்!

வீட்டுக்கடன் தவணை தொகையை அப்படியே கட்டிவரும் நிலையில் இர ண்டாம் ஆண்டு முதல் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வருவது மூலமும் வீட்டுக் கடனுக்கான வட்டியில் கணிசமாக ஒரு தொ கையை மிச்சப்படுத்த முடியும். உதாரணமாக ஒருவர், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கூடுதலாக அசலைக் கட்டிவருகிறார் என்றால், அவரது கடன் 159- வது மாதத்தில் முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை ரூ.19.21 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.34.77 லட்சம் மிச்சமாகும். (பார்க்க : அட்டவணை 4)

வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள் P61a

உங்களுக்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றி வீட்டுக் கடனை விரைந்து அடைக்க முயலுங்கள்!



வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள் P59bசா.ராஜசேகரன், 
நிதி ஆலோசகர், புதுச்சேரி. 
(விகடனில் எழுதியது)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள் Empty Re: வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள்

Mon Feb 29, 2016 3:32 pm
வீட்டுக்கடன் பெறுவோர் கவனிக்க வேண்டிய அதி முக்கிய‌ கட்டணங் கள்!
– நிதி ஆலோசகர் குறிப்பிட்டுச் சொன்ன‍து:
  
வீடு வாங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுக் கடன் மூலமாக  வாங்குகிறார்கள். தற்போது
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம்  குறைந் துள்ளது. இதனால் புதிதாகக் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை  அதிகரிக்க வாய்ப்புள்ளது. வீட்டின் மதிப்பில் 80-90 சதவிகிதம் வரைதான் கடன் கிடைக்கும். மீதமுள்ள தொகை யை கடன் வாங்குபவர் செலுத்த வேண்டும். 
 
கடன்வாங்குபவர்கள் வட்டி விகிதம் குறித்துத்தான் அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். அவர்கள் பல கட்டணங்கள் செலுத்த வேண்டும். அது  என்னென் ன கட்டணங்கள் என்பதை பார்ப்போம். 
 
1. செயல்பாட்டுக் கட்டணம்! 
 
இக்கட்டணம் கடனுக்காக விண்ணப்பிக்கும் போதே வாங்கப்படும். இக் கட்டணமும் எக்காரணத்துக்காகவும் திரும்பத் தரப் படமாட்டாது. சில வங்கிகள் இக்கட்டணத்தைக் கட ன் வழங்குவதற்குமுன் வாங்கிவிடும். கடன் தொ கையில் குறிப்பிட்ட சதவிகிதம் அல்லது ஒரு குறிப் பிட்ட தொகை செயல்பாட்டுக் கட்டணமாக வசூலி க்கப்படும். மேலும் சிலநேரங்களில் சிறப்பு சலுகை யாக சில வங்கிகள் இந்த கட்டணத்தை ரத்து செய் யும். எனவே அந்த சமயத்தில் கடன் வாங்கினால் உங்களுக்கு சில ஆயிர ங்கள் மிச்சமாக வாய்ப்புள்ளது. பெரும்பாலும் கடன்தொ கையில் 0.5 சத விகிதம் அல்லது அதிகபட்சம் 6 ஆயிரம் ரூபாயாக  இருக்கும். இது வங்கிக்கு வங்கி வித்தியாசப் படும். 
 
2. சொத்து அடமான கட்டணம்! 
 
வங்கிக் கடன் மூலமாக வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்கும் போது வீட்டி ன் பத்திரத்தை கடனுக்கு ஈடாக வங்கியின் பெய ருக்கு பத்திரப் பதிவு அலு வலகத்தில் அடமான பதிவுசெய்து கொடுக்க வேண்டும். இதற்கு அரசின் விதிமுறைகளின்படி குறிப்பிட்ட சதவிகிதம் கட்ட ணம் செலுத்த வேண்டி யிருக்கும். இது ஒவ்வொ ரு மாநிலத்துக்கும் வித்தியாசப்படும். தமிழகத்தி ல் 1% தொகை கட்டணமாக செலுத்த வேண்டியிரு க்கும். நீங்கள் செலுத்துக் கட்டணங்களில் அதிகத் தொகை கொண்ட கட்ட ணமாக இது இருக்கும். 
 
3. சட்டக் கருத்து  கட்டணம்! 
 
வங்கிகள் கடன் வழங்குவதற்கு முன் அந்தச் சொத்தில் ஏதாவது சிக்கல் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள் வதற்காக ஒரு சட்ட ஆலோசகரை நியமித்திருக்கும். இதற்குக் கட்டணம் உண்டு. இந்தக் கட்டணத்தைக் கட ன் வாங்குபவர்தான் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட திட்டங்களுக்கு வங்கிகள் பிராஜெக்ட் கடன் வழங்கி இருக்கும் அது போன்ற வீடுகளுக்கு சட்டக் கட்டணம் இருக்காது. இது கட்டணம் வங்கிக்கு வங்கி வித்தியாசப்படு ம்.  
 
4. முன்கூட்டி கட்டும் கடனுக்கு அபராதம்! 
 
குறிப்பிட்ட காலத்துக்குக் கடன் வாங்கிவிட்டு அதனை  முன் கூடியே செலுத்தினால் அபராதம் கட்ட வேண்டி வரும். மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியிரு ந்தால் அபராதம் கூடாது என ஆர்பிஐ கூறியுள்ளது. அது வே நிலையான வட்டி விகிதத்தில் 10, 15 ஆண்டுகளுக்கு கடன் வாங்கியிருந்தால் அபராதம் இருக்கிறது. இந்த மீத முள்ள கடன் தொகையில் 2 சதவிகிதம் அளவுக்கு அபராதம் இருக்கும். 
 
=> இரா.ரூபாவதி
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள் Empty Re: வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள்

Mon Feb 29, 2016 3:37 pm
நீங்கள் வீட்டுக் கடன் வாங்க வங்கியை அணுகும் போது . . .

நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பலரும் வீட்டை தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள். ஆனால், இன்றோ இருபது வயதிலேயே வீடு வாங்குவது சகஜ மாகிவிட்டது. அன்று பணத்தைச் சேர் த்து வைத்து வீடு கட்டினார்கள். இன் று வீட்டை கடனில் வாங்கி விட்டு, கடைசிக் காலம் வரை இ.எம்.ஐ-ஆக திரும்பச் செலுத்துகிறார் கள்!  
எதற்கெடுத்தாலும் ஈஸியாக கடன் கிடைப்பது நல்லதுதான். அப்படி கிடைக்கும்போது அதை நாம் பொறு ப்புடன் பயன் படுத்த வேண்டாமா?  
 
தனிநபர் ஒருவர் வாங்கும் பெரிய கடன் என்றால், அது வீட்டுக் கடன் தான். ஆகவே, வீட்டுக் கடனை வாங்குவதில் மட்டும் ஒருவர் பெரிய தவறேதும் செய்யவில்லை எனில், மற்ற கடன்களை எல் லாம் ஊதித் தள்ளி விடலாம்.
 
வீட்டுக் கடன் வாங்க ஒரு வங்கி யை நீங்கள் அணுகும் போது, அந்த வங்கியின் மேலாளர் உங்கள் கடன் விண்ணப்பப் படிவத்தை எந்தக் கோணத்தில் பார்ப்பார் என்பதை முதலில் புரிந்து கொள்வோம்.   
 
வங்கி மேலாளர் முதலில் உங்களின் மாத / ஆண்டு வருமானம், கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் உங்களின் வருமானம், வீட்டிற்கு எடுத்துவரும் சம்பளம் எவ்வளவு என்கிற விஷயங்களை அலசி ஆராய்வார். நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் எந்தத் தொழிலில் உள்ளது என்றும் பார்ப்பார்.
 
சினிமா, அரசியல் துறைகளில் இருப் பவர்களுக்கு வருமானம் நிலையாக இருக்காது என்பதால் வீட்டுக்கடன் தர யோசிப்பார்கள். சுய தொழிலில் ஈடுபட்டு, வரு மான வரித் தாக்கல் செய்யாமல் இருப்பவர்களுக்கும் கடன் கிடைப்பது கடினமே. வேறு ஏதும் லோன் வாங்கி அதற்காக இ.எம்.ஐ. கட்டி வருகிறீர் களா என்றும் பார்ப்பார்கள்.
 
கடன் வாங்குபவரைப் பற்றிய அலசல்தான் ஆரம்பத்தில் பெரிதாக இருக்கும். இதற்காக உங் களிடமிருந்து பல டாக்குமென்டுகளைக் கேட்பார்கள். இதனால் நீங்கள் பொறுமை இழந்து, கோபம்கூட அடையலாம். நான் வீட் டை அடமானமாக வாங்கித்தானே கடன் தரப்போகிறீர்கள்? பிறகு ஏன் இத்தனை விசாரிப் பு? என்றுகூட நீங்கள் கேட்பீர்கள்.
 
ஆனால், வங்கிகள் உங்கள் வீட்டை விற்று தங்கள் கடனை செட்டில் செய்துகொள்ள விரும்புவதே இல் லை. அதனால் அவர்களுக்கு நஷ் டம்தான். எனவேதான், கடன் தரும் முன்பே உங்களைப் பற்றி முழுவது மாக அலசி ஆராய்கிறார்கள். வங்கி மேனேஜர் அடுத்து பார்க்கும் முக்கிய விஷயம், உங்கள் வயதைத் தான்! 55 வயதிற்கு மேல் உள்ளவர் களுக்கு பொதுவாக கடன் தரமாட்டார்கள் – அரசு பென்ஷன் வாங் குபவராக இருந்தால் தவிர!
 
இதற்குப் பிறகு உங்களது சிபில் ஸ்கோரை நிச்சயம் பார்ப்பார்கள்! நீங்கள் கடந்த காலத்தில் வங்கிக ளிடம் கடன் வாங்கி ஒழுங்காகச் செலுத்தாமல் இருந்திருந்தால், உங்க ளின் சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும். அது போன் ற சமயத்தில் வங்கிகள் உங்களு க்கு வீட்டுக் கடன்  தராது.  
 
மாதச்சம்பளத்தில் கழிவுகள்போக மீதி எவ்வளவு உங்களுக்கு கிடைக்கிறது என்று அலசுவார்கள். உதாரணமாக, உங்கள் மாதச் சம்பளம் ரூ.45,000 என்று வைத்துக் கொள் வோம். கழிவுபோக, உங்களுக்கு கையில் கிடைக்கும் தொகை ரூ.40,000 எனில், இன் றைய வட்டி நிலவரத்தில் 30, 40 வயதிற்குள் இருக்கும் நபருக்கு, முறையே 16-18 லட்சம் வீட்டுக் கடன் கிடைக்கும் (20-30 வருடங் கள் கடன் காலம் என்று எடுத்துக் கொள்ளும் பட்சத்தில்!). அதாவது, உங்கள் வயது மற்றும் கடன் காலத்தைப் பொறுத்து உங்களது வீட்டி ற்கு எடுத்துச் செல்லும் மாதச் சம்பளத்தைப்போல் 40 – 45 மடங்கு கடன் கிடைக்கும்.
 
இன்னொரு கோணத்தில் பார்த்தால், நீங்கள் வீட்டிற்கு எடுத்து வரும் பணத்தில் அதிகபட்சமாக 40 சதவிகிதம் தொகையை இ.எம் .ஐ-ஆக கட்டுமளவிற்கு வங்கிகள் வீட்டுக் கடன் தரும். மீதி 60 சத விகித சம்பளம் உங்கள து அன்றாட வாழ்க்கைக்குத் தேவை யாக இருக்கும். எனவே, கணவன் – மனைவி என இருவரும்   சம்பாதிக்கும் போது அதிக கடன் கிடைக்க வாய்ப்புண் டு. 
 
இதுபற்றி எல்லாம் இவ்வளவு விரிவாக எடுத்துச்சொல்லக் காரணம், வங்கிகளின் பொதுவான வரை யறைக்கு உட்பட்டு நாம் கடன் வாங்கினால், நம் வாழ்க்கை யில் பெரிய சிரமங்கள் ஏற்படாது. நமது திருப்பிச் செலுத்தும் திறனை மீறி கடன் வாங்கும் போதுதான், பெரும் பாலானோர் பிரச்னையில் மாட்டிக் கொள்கிறார்கள்.
 
இளம் வயதில் கடன் வாங்கி வீடு வாங்கு வதில் தவறே இல்லை! ஆனால், வீட்டுக் கடன் வாங்கியபிறகு, நம் சம்பாத்தியத் தில் ஏதேனும் தடை ஏற்பட்டால் என்ன செய்வோம் என்பதை தீர்க்க மாக யோசித்துவிட்டு, கடன் தொகையை நிர்ணயம் செய்வது நல் லது.
 
இன்றைக்கு கைநிறைய சம்பளம் வருகிறது என்று கடன் வாங்கி விட்டு, நாளைக்கு திடீரென அந்த வேலையை இழக்க நேர்ந்தால், இ.எம்.ஐ. கட்டுவது பாதிப் படையும். இதனால் வாங்கிய வீட்டை குறை ந்த விலைக்கு விற்கவேண்டிய கட்டாயம்கூட ஏற்படலாம். இதனைத் தவிர்க்க ஒரே வழி, ஆறு மாதத்திற்கு தேவையான இ.எம்.ஐ. மற் றும் வீட்டுச் செலவுக்கான பணத்தை எப்போதும் வங்கியில் வைத் திருப்பதே.  

 வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள் Nav54b

வீட்டுக்கடன் வாங்கும்போது அதிகமான பணத்தை வட்டியாகச் செலுத்த விரும்பாதவர்கள், வழக்கமாகச் செலுத்தும் டவுன் பேம ன்ட் தொகையைவிட அதிகமாகச் செலுத்துவது நல்லது. உதாரணமா க, ரூ.30 லட்சத்திற்கு ஒரு வீட்டை நீங்கள் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
 
வங்கி விதிகளின்படி, குறைந்தது ரூ.6 லட்சம் (20%) நீங்கள் டவுன் பேமன்டாகச் செலுத்தவேண்டும். மீதி 80சதவிகிதத்தை (ரூ.24 லட்ச ம்) வங்கிக் கடனாக தரும். 20 வருட கடன் மற்றும் 10% வட்டி என்கிற பட்சத்தில், மாத இ.எம்.ஐ. ரூ.23,161-ஆக இருக்கும்.
 
உங்கள் கையில் ரூ.6 லட்சம் இரு க்கும் பட்சத்தில், உங்களுக்கு இர ண்டு சாய்ஸ் இருக்கிறது. ஒன்று, நீங்கள் உடனே வீட்டை வாங்கி விட்டு இ.எம்.ஐ-யைத் துவக்கி விட லாம்; அல்லது வீடு வாங்குவ தை சற்று ஒத்திப் போடலாம். உதார ணத்திற்கு, நீங்கள் 3 ஆண்டு காலம் ஒத்திப்போடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
 
வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள் Nav54c
 
அந்த 3 ஆண்டுகாலத்தில்,கையில் இருக்கும் 6 லட்சத்தை ஒரு ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிடுங்கள். அதேபோல், நீங்கள் லோன் எடுத்திருந்தால் மாதத்திற்கு கட்ட வேண்டிய ரூ.23,161-ஐ ஒரு ஆர்.டி-யில் அல்லது லிக்விட் ஃபண்டில் போட்டு விடு ங்கள். மூன்று வருடம் கழித்துப் பார்க்கும் போது, ஆண்டிற்கு 8.5% வட்டி கிடைக்கும் என்ற பட்சத்தில், உங்கள் கையில் 17 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்.
 
அதே 30 லட்சம் ரூபாய் வீட்டிற்கு நீங்கள் இப்போது வெறும் 13 லட்சம் கடன் வாங்கினால் போதும். இதனால் நீங்கள் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ. வெறும் ரூ.12,545-ஆக மட்டுமே இருக்கும்!
 
ஆனால், இந்த மூன்றாண்டு காலத்துக்குள் வீட்டின் மதிப்பு உயர்ந்தி ருக்குமே! என நீங்கள் கேட்கலாம்! இனிவரும் காலத்தில் வீட்டு விலை அவ்வளவு வேகமாக உயரா து. அப்படியே உயரும் என்றாலும் உங்கள் வட்டி வருமானம் ஓரளவுக்கு அதை ஈடுகட்டிவிடும். இப்படி செய் வதால், உங்கள் ரிஸ்க் வெகுவாக குறைவதுடன், உங்களுக்கு நீங் களே ஒரு வெள்ளோட்டம் பார்த்துக்கொண்டதுபோல் இருக்கும்.
 
கடன்பெறும் தகுதி உங்களுக்கு இருக் கும்பட்சத்தில், நீங்கள்  எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதை ஒரு அட்டவணை யாகத் தந்திரு க்கிறேன் (அட்டவணை எதிர்பக்கத்தில்!). அதில் கணவன், மனை வி ஆகிய இரண்டுபேரின் சம்பாத்தியத்தை ரூ.20,000; 40,000; 60,000; 1 லட்சம் மற்றும் 2 லட்சம் என ஐந்து கேட்டகிரியாகப் பிரித்துள் ளேன்.
 
அதேபோல், வீட்டுக் கடன் வாங்குபவரின் ரிஸ்க் எடுக்கும் திறனை கன்ஸர்வேட்டிவ், மாடரேட் மற்றும் அக்ரெ ஸிவ் என பிரித்துள்ளேன். வேறு எந்தக் கடனும் இல்லாதபட்சத்தில் இந்த கேட்ட கிரியில் உள்ளவர்கள் எவ்வளவு உச்ச பட்சமாக வீட்டுக் கடன் எடுக்கலாம் என்ப தைக் கொடுத்துள் ளேன்.
 
வீட்டுக் கடனின் வட்டி 10% என்றும், திரு ப்பிச் செலுத்தும் காலம் 20 வருடங்கள் என்றும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. உங்கள் வயது, ஒற்றைச்/ இரட்டைச் சம்பாத்தியம், நீங்கள் இருக்கும் துறை போன்றவற்றை வைத்து உங்களுக்கு ஏற்ற கடன் தொகையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளு ங்கள்.
 
தகுதி அறிந்து கடன் பெற்று, நிம்மதியாக வாழ வாழ்த்துக்கள்!

நன்றி – விகடன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள் Empty Re: வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள்

Mon Feb 29, 2016 3:39 pm
வீட்டுக்கடன் வாங்க வங்கியை அணுகும் முறை – தகுதிகளும்! சமர்ப்பிக்க வேண்டிய‌ ஆவணங்களும்!

இன்றைக்கு பல வங்கிகள், வீட்டுக் கடன் தர தயாராக இருந்தாலும் அதை வாங்குவதற்கு பல படிகளை தாண்டி செல்ல வேண்டி இருக்கிறது. வீட்டுக் கடன் வாங்க வங்கியை எப்படி அணுக வேண்டும்? அதற்கு என்ன தகுதிகள் வேண்டும்? வங்கிகளி டம் என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்?

அடிப்படைத் தகுதி:

‘வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிப்பவர் மாதச்சம்பளம் வாங்குபவராக இருந் தால் அவர் நிரந்தரமான பணியில் இருப்பவராக இருக்க வேண்டும். தனி நபராகவோ அல்லது கணவன், மனைவி அல்லது தந்தை, மகன், நெரு ங்கிய சொந்த பந்தம் என இருவர் இணைந்தும் வீட்டுக் கடனை வாங்கலாம்.

வீட்டுக் கடன் வாங்கும்போது கடன் வாங்கும் நபர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நிகர சம்பளத்தை
கணக்கில் எடுத்து கொள்வார்கள். கணவன், மனைவி என இருவர் சேர்ந்து கடன் வாங்க விண்ணப் பித்தால் இருவரின் நிகர சம்பளத்தை கணக்கில் கொண்டு கடன் தொகையை நிர்ணயிப்பார்கள். இதனை ”நெட் மன்த்லி இன்கம்” என்பார்கள். வங்கி ஸ்டேட்மென்ட், சம்பளச் சான்றிதழ், கடந்த 3 வருடங்கள் வருமான வரி தாக்கல் செய்த விவரங்கள் உள்ளிட்டவைகளை முதலில் வங்கி யில் கொடுக்க வேண்டும். மேலும், உங்களது வயது, சொத்து, வீடு கட்டப்போகும் அல்லது வாங்கப்போகும் இடத்தின் மதிப்பு, கடனை திரும்பச் செலுத்தும் திறன் உள்ளிட்டவற்றை வைத்து உங்களுக்கு கடன் தரலாமா என்று முடிவு செய்வார் கள்.

தேவையான ஆவணங்கள்

சொத்து ஆவணங்கள்: விற்பனை ஒப்பந்தம், லே அவுட் பிளான் அப்ரூவல், வீடு கட்ட அனுமதி வாங்கிய ஆவணம், அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் மூலம் தரப்பட்ட சொத்தின் மதிப்பீடு, கட்டிய வீட்டை வாங்குவதற்கு கடன் என்றால் வீட்டு வசதி வாரியம் / கூட்டுறவு சங்கம் / பில்டர்களிடமிருந்து பெறப்பட்ட ஒதுக்கீட்டு கடிதம்.
பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை/  பாஸ் போர்ட்/ டிரைவிங் லைசன்ஸ்/ பான் கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒரு அடையாள அட்டை. பிஸினஸ் செய்யும் நபர் எனில் அவர்கள் பிஸினஸ் செய்யும் முகவரிக்கு உரிய அடையாளச் சான்றிதழ். வங்கிக் கணக்கின் கடந்த ஆறு மாத பரிவர்த்தனை. சொத்து மற்றும் கடன் விவரம். சமீபத் திய சம்பளச் சான்றிதழ். வருமான வரி படிவம் 16 அல்லது கடந்த இரண்டு நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்த விவரம். பிஸினஸ் செய்யும் நபர்கள் எனில் 3 வருட வருமான வரி தாக்கல் செய்த விவரம்.

மார்ஜின் தொகை

நீங்கள் கட்டப்போகும் அல்லது வாங்கப் போகும் வீட்டின் மதிப்பில் 20,25 சதவிகித மார்ஜின் தொகையை நீங்களே போட வேண்டும். மீதித் தொகையே வங்கியிலிருந்து கடனாகப் பெற முடியும். வீடு கட்டுவதற் கான மனை ஒரு ஊரில் இருக்கிறது; உங்கள் வங்கிக் கணக்கு வேறு ஊரில் இருக்கிறது எனில், இந்த இரண்டில் ஏதாவது ஒரு ஊரில் வீட்டுக் கடன் பெற முடியும். அஸ்திவாரம் போட, ரூஃப் கான்கிரீட் போட, ஃபினிஷிங் செய்ய என பல்வேறு கட்டமாகத்தான் வங்கிகள் கடன் தரும். கட்டி முடிக்கப்பட்ட வீடாக இருந்தால், உரிய ஆவணங்களை ஒப்படைத்து அனைத் தும் சரியாக இருப்பின் முழுத் தொகையும் வழங் கப்படும்.

எதற்கெல்லாம் கடன்?

வீடு கட்ட அல்லது வாங்க, ஃப்ளாட் கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு. வீட்டுப் பராமரிப்பு வேலைகள் செய்வதற்கு. மேலும், வீடு கட்ட ஆரம்பித்து சில ஆண்டுகள் கழித்து மேற்கொண்டு கட்ட டாப்,அப்லோன் பெறலாம். உங்கள் சம்பள உயர்வு மற்றும் சொத்து மதிப்பு உயர்வுக்கு ஏற்ப இந்தக்கடன் தொகை இருக் கும்.

தெரிந்து கொள்ளுங்கள் என்ஆர்ஐகளுக்கான ஆர்பிஐ விதிகள்

வெளிநாடு வாழ் இந்தியர் என்பவர் இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்து வரும் இந்திய குடிமகனாவார். ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் இந்தி யாவில் விவசாயம்/பயிர் வளர்ப்பு/பண்ணை வீடுகளை தவிர்த்து எந்த அசையா சொத்தினையும் வாங்கலாம். அவர் இந்தியாவில் வசி க்கும் ஒரு நபருக்கு இந்தியாவிலுள்ள எந்த அசையா சொத்தையும் உரிமை மாற்றம் செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியா வுக்கு வெளியே எந்த இடத்திலிருந் தும் இந்தியாவுக்குள் பணம் செலுத்துவதன் மூலம் அல்லது திணிவிகி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்கு முறைகளுக்கிணங்க பராமரிக்கப்படும் ஏதேனும் வெளிநாடு வாழ் இந்தியர்  கணக்கில் இருக்கு ம் நிதிகள் மூலம் இந்தியாவில் பணம் பெற்றுக் கொண்டு இந்த கொள் முதல் செய்யப்படும்.

வெளிநாடுவாழ் இந்தியர் குடியிருப்பு வீட்டை வாங்குவதற்கு இந்தியாவிலு ள்ள வீட்டுவசதி நிதி நிறுவ னத்திடமிருந்து வீட்டுக்கடன்களை பெற முடியும். இப்படிப்பட்ட கடன் சாதாரண வங்கி சேவை வழியாக இந்தியாவுக்குள் பணம் செலுத்துதல்மூலம், இவ்வித சொத்திலிருந்து கிடைக்கும் வாடகை வருமான த்தில், ழிஸிணி/ழிஸிளி கணக்கில் கழிப்பதன் மூலம் திருப்பி செலுத்தப்பட வேண்டும். திணிவிகி சட்ட விதிகளுக்கிணங்க, வெளிநாடு வாழ் இந்தியர், இந்தியாவில் இருக்கும் குடியிருப்பு வீட்டு சொத்தின் விற்பனை வருமானத்தை, அயல் நாட்டுக்கு எடுத்து செல்ல வேண்டும்.
Sponsored content

வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள் Empty Re: வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum