தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள் Empty இயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள்

Sat Feb 13, 2016 9:25 am
இயேசு கர்த்தரா?

இயேசு தன்னைக் கர்த்தர் என்று எப்போதாவது கூறினாரா?

இயேசுவின் வாழ்க்கையிலிருந்து அதனை நிருபிக்கமுடியுமா?

ஏன் ஆதாரமற்ற நம்பிக்கையாகவிருகக் கூடாது?

கர்த்தர் இருக்கிறார் என்பதையோ அல்லது அவர் எப்படிப்பட்டவர் என்பதையோ, அவர் தன்னைத் தான் விப்படுத்தாவிட்டால் எங்களால் அறிந்து கொள்ள முடியாது.

சரித்தித்தினை ஆராய்ந்து பார்ப்போமானால், சில சமயம் அதனைக் கண்டு கொள் முடியும்.அங்கு ஒரு விடயம் ஆதாரமாக்க் கிடைக்கின்றது, அதுதான் 2000 வருடங் களுக்கு முன்பு மாட்டுத் தொழுவத்தில் ஒரு பாலகன் பிறந்தார் என்பதாகும். இன்று இயேசுவின் பிறந்த நாளை உலகம் முழுவதும் ஒரு நல்ல நோக்கத்திற்காக கொண்டாடுகின்றது.

1.     இயேசு கர்த்தரா?அவரது வாழ்க்கையைக் கவனிப்போம்.
பாரிஷவாத்த்தால் பீடுக்கப்பட்ட மனுஷனை கூரையைப் பிரித்து கீழே இறக்கினார்கள், இயேசு அவனைப் பார்த்து”மகனே , உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்று கூறினார். உடனடியாக  மத்த்தலைவர்கள் “ ஏன் இந்த மனுஷன் இவ்வாறு கூறுகிறார் “ என்று குழம்பினார்கள். அவர் தேவ தூஷனம் சொல்லுகிறார் என்றும், கர்த்தரைத’ தவிர பாவத்தை யாரால் மன்னிக்க முடியும் என்று கூறினார்கள்.

இயேசுவின் சோதனை காலத்தில் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான் அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்ப தையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான்”5 கர்த்தருடன் இயேசுவின் தொடர்பு மிகவும் நெருக்கமாகவிருந்தது

( மாற்கு 14:61-64 அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். Mar 14:62  அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். Mar 14:63  பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? Mar 14:64  தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.

நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள்

(யோவான் 8:19; 14:7  அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.  என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

 என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்

 (யோவான்12:45; 14:9  என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.  அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான் 8

(யோவான்12:44;14:1அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.  உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்

என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் 9

( மாற்கு 9:37 இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்)

 

 

2.     இயேசு கர்த்தரா? இயேசு தன்னைக் கர்த்தர் என்று எப்போதாவது கூறினாரா?
சாதராண மக்கள் அவரைச் சந்தோசத்துடன் ஏற்றுக் கொண்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தார்.

(மத்தேயு 7:29  இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப் போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.​அவர் தன்னைப் பின்பற்றினவர்களிடம் “ என்னை யார் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்? என்ற  கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்

(மத்தேயு16:15-16  சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.   இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

இயேசு அரைக் கடிந்து கொள்ளமல் பாராட்டினார்.

இயேசு அடிக்கடி “என்பிதாவே” என்று கூறுவதைக் கேட்டு ஜனங்கள் அவருடைய வார்த்தையில் தாக்கமடைந்தார்கள்.” யூதர்கள் அவரைக் கொலை செய்ய முயற்சி செய்கின்றார்கள் என்று கூறப்பட்டோம். அவர் ஓய்வு நாளை அனுசரிக்கவில்லை என்பதற்காகவல்ல, அவர் கர்த்தரை தன்னுடைய தகப்பன் என்று கூறுவதற்காகவும், கர்த்தருக்குச் சமமாகத் தன்னைக் கூறுகின்றபடியாலுமாகும்.

(யோவான் 5:18   அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

இன்னுமோரு சந்தர்ப்பத்தில் அவர் “நானும் என்பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் “ என்று கூறினார். உடனடியாக யூதர்கள் அவர்மிது கல்லெறிய விரும்பினார்கள். அவர் அவர்களை நோக்கி நான்செய்த எந்த நற்கிரியை கல்லெறிகச் செய்கிறது என்று கேட்டார். யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.

(யோவான் 10:33 யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.

3.     இயேசு கர்த்தரா?அவரது வாழ்க்கையைக் கவனிப்போம்.
பாரிஷவாத்த்தால் பீடுக்கப்பட்ட மனுஷனை கூரையைப் பிரித்து கீழே இறக்கினார்கள், இயேசு அவனைப் பார்த்து”மகனே , உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்று கூறினார். உடனடியாக  மத்த்தலைவர்கள் “ ஏன் இந்த மனுஷன் இவ்வாறு கூறுகிறார் “ என்று குழம்பினார்கள். அவர் தேவ தூஷனம் சொல்லுகிறார் என்றும், கர்த்தரைத’ தவிர பாவத்தை யாரால் மன்னிக்க முடியும் என்று கூறினார்கள்.

இயேசுவின் சோதனை காலத்தில் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான் அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்ப தையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான்கர்த்தருடன் இயேசுவின் தொடர்பு மிகவும் நெருக்கமாகவிருந்தது.

(மாற்கு 14:61-64  அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.

நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள்

( யோவான் John 8:19; 14:7   அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

 என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் )

 (யோவான் 12:45; 14:9  என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?)

.

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான் 8

( யோவான் 12:44; 14:1  அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்)

என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்

(மாற்கு 9:37  இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார். )

என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்

(யோவான் 15:23  என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்

அவரைக் கனம் பண்ணுகிறவன் கர்த்தரைக் கனம்பண்ணுகிறான் )

(யோவான் 5:23  குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள் Empty Re: இயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள்

Sat Feb 13, 2016 9:26 am
4.   இயேசு கர்த்தரா? நல்ல சாதகமான  விளக்கங்கள்.
அவர்சொல்வது உண்மைதானா,இதுதான் கேள்விகளாகவுள்ளது?

இயேசு தான் கடவுள் என்று கூறுவதற்கான நான்கு விதமான முடிவுகள் காணப்படுகின்றன.

1.அவர் பொய் கூறுபவராக இருக்கலாம்.

2.மூளை சுகவீனமானவராக இருக்கலாம்.

3.பிழையான சத்தியமாகவிருக்கலாம்

4.உண்மையாகவிருக்கலாம்

 

 

இயேசு தான் கடவுள் என்று பொய் கூறியிருக்கலாம்.சிலவேளை தான் கடவுள் இல்லை என்பதையும் அறிந்திருக்கலாம்.தன்னை அவதானிப்பவர்களை தான்  போதிப்பதற்கு அதிகாரம் தருவதற்காக ஏமாற்றுவதாகவிருக்கலாம். அவருடைய தெய்விகத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட ,அவரை ஒரு நல்ல சன்மார்க்க போதனையாளர் என்பதை உறுதிப்படுத்தியிருக்கலாம். எப்படியோ அவருடை இரண்டு முரண்பாடான அறிக்கைகளைக் கவனிக்காமல் விட்டிருக்கலாம். அவர் ஒரு நல்ல போதகராக இல்லாதிருந்தால், அவருடைய குற்றப்படுத்தக்கூடிய குறிப்புக்ளையும், அவரது   ஆள்அடையாளத்தைவைத்தும்,அவர் ஒரு பொய்யர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இன்னுமொரு பொருத்தமான காரணமுண்டு, அதாவது அவர் தன்னைத் தானே வஞசித்திருக்கலாம். தன்னைத் தானே கடவுள் என்று சொல்பவரை நாம் மனநோயாளி என்று அழைக்கின்றோம்.

ஆனால், இயெசுவின் வாழ்வைக் கவனிக்கும்போது , ஒருமன நோயாளியிடம் காணப்படும் தளம்பல் தன்மைகளோ, அல்லது வித்தியாசமான நடத்தைகளோ அவரிடம் காணப்படவில்லை.ஆனால் பிரச்சனைகளின் மத்தியிலும் அவர் தளம்பல் இல்லாதவராய், நிதானமாக இருந்த்தை அவதானிக்க முடிகின்றது.இயெசு ஒரு பொய்யன் அல்ல, அல்லது மனநோயாளி அல்ல,.ஆனால் அவர் கொடர்ந்து உண்மையுள்ளவராக இருந்தார்.​

இயேசு கடவுளா? அதற்குரிய அத்தாட்சி என்ன?
இந்த கூற்றைப் பொறுத்தமட்டில், அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.இன்னும் பலர் தங்களைக் கடவுள் எனக்கூறினவர்கள் இருக்கின்றார்கள்.நான் கூட நான் தான் கடவுள் என்று கூறலாம்.நீங்கள் கூட உங்களைக் கடவுள் என்று கூறலாம்.ஆனால் எல்லோருக்கும் முக்கி கடமையுண்டு, அதற்குரிய சரியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். என்னுடைய விடயத்தில் சில நிமிடங்களில் நான் கடவுள் இல்லை என்பதை கூறிவிடலாம். உங்களுடையதைக்கூல சில நிமிடங்களில் பொய் என்று நிரூபித்துவிடலாம்.

நசரேயனாகிய இயேசுவுக்கு இந்தப்பிரச்சனை வந்தபோது, இது இலகுவானதாக்க் காணப்படவில்லை.அவருக்குப்பின் சிறப்பான காரணங்கள் இருப்பதைக் காணமுடி கின்றது. நீங்கள் என்னை நம்பாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் நான் செய்த கிரிகைகளின் நிமித்தமாவது என்னை நம்புங்கள். பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.

( யோவான்10:38 என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை. Joh 10:38  செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார். )

6.     இயேசுவின் வாழ்க்கையும்—அவருடைய சன்மார்க்க நடத்தையும்.
அவருடைய சன்மார்க்க வாழ்க்கை அவருடைய கூற்றுடன் இணைந்து சென்றதை அவதானிக்க முடிகின்றது.அவருடைய வாழ்கை முறை அவ்வாறு மிகவும் சிறப்பாக்க் பாணப்பட்டது, அதனால் அவர் தன்னுடைய எதிரிகளைப்பார்த்து, “ என்னிடத்தில் பாவம் உண்டென்று யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? எனச் சவால் விடுகின்றார்.13

( யோவான் 8:46   என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.)

இதற்கு யாராலும் பதில் கூறமுடியவில்லை.அமைதியானார்கள்.

இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டார் என வாசிக்கின்றோம். ஆனால் அவர் தன்னுடைய பாவத்தை அறிக்கை செய்தார் என்பதை நாம் கௌவிப்படவில்லை.அவர் ஒருபோதும் பாவமன்னிப்புக் கொரவில்லை, ஆனால் தன்னுடைய சீஷர்கள் பாவமன்னிப்புக் கோரவெண்டும் என வற்புறுத்திக் கூறியுள்ளார்.

“யோவான்,பவுல்,பேதுரு ஆகியோர் உலக பாவத்தைக்குறித்துப் போதிக்கப்பட்டார்கள்.ஆனால் அவர்கள் யாவரும் பாவமில்லாத இயேசுவைக்குறித்துப் பேசினார்கள். “அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை”

 ( 1 பேதுரு 2:22 அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; )

பிலாத்து, இயேசுவுக்கு மரணத்தீர்ப்புக் கூறும்போது ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.

மத்தேயு 27:54  நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.

 

7.     இயேசுவின் வாழ்க்கை-நோயாளிகளைக் குணப்படுத்தினார்.
. இயேசு தொர்ச்சியாக நோயாளிகள்மீதும், பிணியாளிகள்மீதும் தம்டைய வல்லமையைச் செலுத்திவந்தார். அவர் முடவனை நடக்கச் செய்தார்,ஊமையைப் பேசவைத்தார், இதனால் சிலர் அவர்மிது பொறாமை கொண்டார்கள்.

உதாரணமாக, பிறவியி லேயே குருடனாயிருந்த மனிதன் பார்வையடைந்தான்,, அவர் ஒரு பிச்சை எடுத்துவந்தவன் என்பதை யாவரும் அறிந்திருந்தார்கள்.  அவனை  இயேசு குணமாக்கிபோதிலும்,அந்த அதிகாரிகள் உனக்கு என்ன நடந்த்து என்று கேள்விகளைக் கேட்டார்கள். எனக்கு ஒன்றெயொன்றுதான் தெரியும்,நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது பார்கிறேன் என்றான். தன்னைக் குருட்டிலிருந்து பார்வையடையச் செய்தவர் கர்த்தருடைய மகன் என்பதை இவர்கள் அங்கீகரிக்காத்தைக்குறித்து , அந்தக் குருடன் , குழப்பம் டைந்தான்

( யோவான் 9:25, 32  அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான். ​

8.     இயேசுவின் வாழ்க்கை-இயற்கையைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டதாயிருந்த்து.
 

இயேசுக்கிறிஸ்த்து இயற்கையின்மீது தன்னுடைய வல்லமையைக் காண்பித்தார்.அவர் தன்னுடைய ஒரு வார்த்தையினாலே காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று. படகில் இருந்தவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 17

( மாற்கு 4:41  அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். )

ஒரு திருமணத்தின் போது, அவர் தண்ணீரை இரசமாக மாற்றினார். ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு 5000 மக்களைப் போசித்தார். கண்ணீர் விட்டு அழுத விதவையைக் கண்டவுடன் மரித்த அவளது மகனை உயிரோடு எழுப்பிக் கொடுத்தார்.

லாசரு, இயேசுவின் சிநேகிதன், மரித்து கல்லறையில்வைத்து நான்கு நாட்கள் சென்றபின்பு, இயேசு, லாசருவே வெளியே வா என்றார், அவன் அதிசயிக்கத் தக்கவிதமாக உயிரோடு கல்லறையை விட்டு வெளியே வந்தான். இதற்கு அனேகமானவர்கள் சாட்சியாய் நின்றார்கள். இதனால் அவருடைய எதிரிகளால் இதனை மறுதலிக்கமுடியாமலிருந்தது. அதனால் இயேசுவைக் கொலை செய்ய வகை தேடினார்கள்.இப்படியே இவனைப் போக விடுவோமாயிருந்தால், அவனைச் சகலரும் விசுவாசிக்க தொடங்குவார்கள் என்று கூறினார்கள்.18

(யோவான் 11:48  நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே என்றார்கள். )

 

 

9.     இயேசு தன்னைக் கர்த்தர் என்று கூறினாரா​?
இயேசுவின் தெய்வீகத்தை உறுதிப்படுத்துவதற்கு அவருடைய உயிர்த்தெழுதலே மிகப் பெரிய சாட்சியாகவுள்ளது. இயேசு தன்னுடைய வாழ்க்கையிலே தான் விஷேடவிதமாகக் கொலை செய்ப்படுவார் என்றும்,மூன்று நாட்களுக்குப்பின் தான் உயிர்த்தெழுவார் என்றும், ஐந்து தடவைகள் முற்கூட்டியே கூறியுள்ளார்.

உண்மையில் இது அவருக்கு மிகப்பெரிய சோதனையாகவே இருந்தது. இது நடக்குமோ, இல்லையோ என்பது புதிராகவே இருந்தது. இது அவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்தும், அல்லது அழித்துவிடும். இது உனக்கும் எனக்கும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும், நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்று இயேசு கூறியுள்ளார்.

(யோவான்14:6  அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். )

இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

 (யோவான் 8:12   மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

“என்னை விசுவாசிப்பவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பேன் என்றார்.

(யோவான் 10:28  நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை. )

அவர் தன்னுடைய சொந்த வார்த்தையாலே இந்த உண்மையைக்கூறுகின்றார். “மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம் பண்ணிச் சொல்லியிருந்தார்.

(மாற்கு 9:31 ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.)

10.  இதன் அர்த்தம் என்ன?

 

இயேசு உயிர்த்தெழுந்தால் , நிச்சயமாக கர்த்தர் என்றொருவர் இருக்கின்றார் எப்பது எங்களுக்குப் புரியும், கர்த்தர் என்ன மாதிரியானவர் என்பதும் தெரியும்,  அவரை எப்படி சொந்தமாக தனிப்பட்ட முறையில் அறிய முடியும் என்பதும் தெரியும். உலகத்தில் அவர் ஜீவிக்கின்றார் என்பதை உலகம் உணர்ந்து கொள்ளும். மறுபக்கத்தில் பார்ப்போமாகில், கிறிஸ்த்து மரணத்திலிருந்து உயித்தெழுந்திரா விட்டால்,கிறிஸ்தவத்தில் எந்த உண்மையும் இல்லாது போயிருக்கும். இரத்தசாட்சி களாய் மரித்தவர்கள் சிங்கக் குகைகளுக்குள் போடப்படும்போது  ஆனந்தமாகச் சென்றார்கள், அதேபோல் மிஷனறிமார்களும் தங்கள் உயிர்களைக் கொடுக்கும் போதும் சந்தோஷத்துடன்  இந்த நற்செய்திகளை  மற்றவர்களுக்கு கூறினார்கள் கிறிஸ்த்து உயிரத்தெழவில்லை என்றால் இவை எல்லாம் வீணானவைகளா கியிருக்கும். பரிசுத்த பவுல்  இவ்வாறு கூறுகின்றார், கிறிஸ்து எழுந்திருக்கவில்லை யென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.

​ (1 கொரி 15:14 ,  கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. )
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள் Empty Re: இயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள்

Sat Feb 13, 2016 9:26 am
11.  இயேசு தான் கர்த்தர் என்பதை நிரூபித்தாரா?

இயேசு உயிர்த்தெழுந்த்தற்கான சாட்சிகளைப் பார்ப்போம்.

அவரால் மேற்கொள்ளப்பட்ட சகல அற்புதங்களையும் கவனிப்போம், அவர் சிலுவையைத் தவிர்த்திருக்கலாம், ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. பிடிபடுவதற்கு முன்பாக , இயேசு கூறினார்,  என் உயிரை ஒருவரும் என்னிடத்திலிருந்து பறித்துக் கொள்ள முடியாது, என் சுய விருப்பத்தி ன்படியே நான் உயிரைக் கொடுக்கிள்றேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதைத் திரும்ப்ப் பெற்றுக் கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு, என்பிதாவின் கட்டளைப்படியெ நான் இவ்வாறு செய்கிறென்” என்றார். (யோவான்10:18  ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். )

இயேசுகைது செய்யப்படும் போது, அதனைப் பேதுரு தடுப்பதற்கு முனைந்தார்.  ஆனால் இயேசு பேதுருவைப்பார்த்து இவ்வாறு கூறினார், உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.   நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? 25  என்றார்.

 (மத்.26:52,53   அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.   நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?)

12.  இயேசு வானத்திலும், பூமியிலும் இந்த அதிகாரங்களை வைத்திருந்தார், இயேசு மனப்பூர்வமாய்  மரணத்தை ஏற்றுக் கொண்டார்.

இயேசு சிலுவையில் அறையப்படுதலும், அவரது நல்லடக்கமும்.

. இயேசு பலபேர் பார்துக் கொண்டிருக்கத் தக்கதாக சிலுவையில் அறையப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். பல வ்வருடங்களுக்கு முன்பாக றோமர்கள், குற்வாளிகளைச் சிலுலையில் அநைந்து கொடுமைப்படுத்திக் கொலை செய்வது வழக்கமாகவிருந்த்து. தான் தான் கடவுள் என்று தேவகுற்றம் செய்தபடியால் அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டார். இயோசுவோ, இது நம்முடைய பாவங்களுக்காக அவர் செலுத்தும் கிரயம் என்று கூறினார்.

.இரும்புத் துண்டுகள் பொருத்தப்பட்ட பல வகையான கயிறுகளால் திரிக்கப்பட்ட சவுக்கினால் பல முறை அடிக்கப்பட்டார். முள்ளுகளால் சூட்டப்பட்ட முடியினால் தலையில்  சூட்டப்பட்டார். அவர்கள் அரைச் சிலுவையைச் சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தினார்கள். அவரை மரத்தினால் செய்யப்பட்ட சிலுவையில் அறைந்தார்கள். அவர் இறந்து விட்டாரா என்று சோதிப்பதற்காக ஈட்டியினால் அவருடைய விலாப்பகுதில் குத்தினார்கள்.

அவரது உடல் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு, துணியினால் சுற்றப்பட்டது. அவரது உடல் கல்லறையில் வைக்கப்பட்டது. கல்லறை பெரிய கல்லினால் மூடிவைக்கப்பட்டது.

மூன்னு நாட்களுக்குப்பின்பு இயேசு உயிர்த்தெழுவார்  என்று கூறியது  யாவரும் அறிந்திருந்தார்கள். அதனால் அவர்கள் றோமப் போர்ச் சேவகர்களைக் கல்லறைக்குக் காவல்வைத்தார்கள். அவர்கள் கல்லறைக்கு முத்தி ரயிட்டு ,அரச சொத்து என அடையாளப் படுத்தினார்கள்.

13.  மூன்று நாளைக்குப் பின்பு கல்லறை வெறுமையாயிற்று.

முத்தி ரயிடப்பட்ட கல்லறை மூடி மூன்று நாட்களுக்குப்பின்பு புரட்டப்பட்டு, கல்லறை காலியாகவிருந்த்து. உடல் அங்கு காணப்படவில்லை.

.இயேசுவை எதிர்த்தவர்கள் , விசுவாசித்தவர்கள், இயேசு கல்லறையில் இல்லை என்பதையும், உடல் அங்கு இல்லை என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள்.

. இயெசுவை கல்லறையிலிருந்து அவருடைய சீஷர்கள்,போர்ச் சேவகர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது,  வெளியே எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்றும் ஒரு கதை பரவியது. முழுப் போர்ச் சேவர்களும் உயர்தர பயிற்சி பெற்றவர்கள். காவலில் இருக்கும் பொது நித்திரை கொள்வது மரணதண்டனைக்குரிய குற்றமாகும்.இயேசு உயிரோடு இருக்கிறார் என்று கூறிய போர்வீர்ர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். இயேசு உயிரோடு இருக்கின்றார் என்று கூற ஜனங்கள் பயந்தார்கள், அப்படிக்கூறுபவர்கள் தணடனைக்கு உட்படுத்தப் பட்டார்கள்.​இயேசுவை ஜனங்கள் பின்பற்றக் கூடாது என்பதற்காகவே  ​யேசு கொலைசெய்யப்பட்டார்.

14.  கல்லறை வெறுமையாகியது மட்டுமல்ல

இயெசு உயிர்தெழுந்தார், அவர் உயிரோடு இருக்கிறார்,அவர் கர்த்தர் என்பது, கல்லறை வெறுமையாகிவிட்டதாமட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களை நம்பவைத்து என்னவென்றால் அவர் பல முறை  தன்னுடைய சரீரத்தில் காட்சி கொடுத்துள்ளால்,அவர்களுடன் உணவு உண்டுள்ளார்,அவர்களுடன் பலமுறைபேசியுள்ளார் என்பவைகளாகும்.லூக்கா இவ்வாறு கூறுகின்றார்.

( Acts அப்போ1:3   அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். )

15.  இயேசு கர்த்தரா?

அடக்கம் செய்யப்பட்ட பிற்பாடு, இயேசு பலமுறை காட்சி கொடுத்துள்ளார் என்று  நான்கு சுவிஜேசம் எழுதியவர்களும் கூறியுள்ளார்கள். ஒஅங்கு இருக்கவில்லை, , ஒரு முறை இயேசு தன்னுடைய சீஷர்களோடு கலந்து பேசியுள்ளார், அப்போது தோமா, மற்றவர்கள் இயேசு வந்தார் என்னு சொன்ன போது அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து. அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.

ஒரு கிழமைக்குப் பிற்பாடு, மீண்டும் இயேசு சீஷர்களிடத்தில் வந்தபோது, உன் விரலை நீட்டி என் ஆணிபடிந்த இடத்தில் போடு என்றார்.

{ யோவான். 20:24-29   இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.   மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார். தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.   அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். }

இவ்வாறான தன்பத்திற்கூடாக ஏன் இயேசு சென்றார். நாம் அவரைக் கர்த்தர் என்று அறிந்து விசுவாசிக்கும் வண்ணமாகவே இப்படியாயிற்று.

 {யோவான் 10:10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். }

{  யோவான்3:16   தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். }

{ வெளி 3:20    இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். }

இயேசுவே என்னை நிரப்பும் என்று இயேசுவை வேண்டிக் கொள்ளுங்கள், அப் பொழுது அவர் உங்களிடம் வந்து உங்களோடு வாழுவார்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள் Empty Re: இயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள்

Sat Feb 13, 2016 9:26 am
இயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள்

             இயேசு கூறிய வார்த்தைகள்

1.

 John 3:16

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

2

Mat

16:16  -17

 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.  இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

3

Revelation 3:20

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

4.

.

John 10:10

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

5

 John 10:18

ஒருவனும் அதை(என் ஜீவனை)

என்னிடத்தி லிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.

6

 John 10:28

  நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை.

7

John 8:12

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

8

 John 8:46

  என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை

9

John 10:37–38

 என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.

10

John 5:23

குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்.

11

John 15:23

John 15:23   என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.

12

. Mark 9:37

இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.

Jesus Says

13

Joh 12:44

Joh 14:1

அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.   உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

Jesus Says

14

Joh 12:45; 14:9

என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.   அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?

15

 John 14:6

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

16

. Mark 9:31

 ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.

17

Matthew 26:52,53

அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.   நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?

                   சீஷர்கள் கூறிய வார்த்தைகள்

18

17. Mark 4:41

அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

19

16. John 9:25, 32

 

John 9:25, 32  அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.

20

14. 1 Peter

2:22

அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை

21

St. Paul says

(23) 1 Corinthians

15:14 , 1Co 15:14  கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.

                            ஜனங்கள் கூறிய வார்த்தைகள்

22

1.

Mat 7:28-29

 இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப் போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், ஜனங்கள் அவருடைய  போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

23

15) Matthew 27:54

(15) Matthew 27:54 Mat 27:54  நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.

                        யூதர்கள் குற்றம் பிடித்தல்

24

3.

John 5:18

அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

25

4. John 10:33

யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.

26

5. Mark 14:61-64

அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.  அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.   பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன?   தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம் பண்ணினார்கள்.

27

6. John 8:19; 14:7

அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக:  என்னையும்  அறியீர்கள்,  என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.  என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்  என்றார்.

28

18. John 11:48

நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே என்றார்கள்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள் Empty Re: இயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள்

Sat Feb 13, 2016 9:27 am
உயிர்த்தெழுந்த பின்பு இயேசு பேசியவை

29

26. Acts 1:3

அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.

30

27. John 20:24-29

இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.  மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.   மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.  தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.  அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

நன்றி

திராணி
Sponsored content

இயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள் Empty Re: இயேசு கர்த்தர் என்பதற்கான சான்றுகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum