தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கர்த்தர் தந்த ஞானம் – நீதிமொழிகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் தந்த ஞானம் – நீதிமொழிகள் Empty கர்த்தர் தந்த ஞானம் – நீதிமொழிகள்

Sat Feb 13, 2016 9:15 am
☀ “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.” (நீதிமொழிகள் 9:10). ☀ எபிரேய வேதாகமங்களில் இப்புத்தகத்தின் ஆரம்ப வார்த்தையைக் கொண்டு முதலில் மிஷ்லே (mishleh) என இப்புத்தகம் அழைக்கப்பட்டது, இதன் அர்த்தம் “நீதிமொழிகள்” என்பதாகும். 

☀ மிஷ்லே என்பது மாஷால் (mashal) என்ற எபிரேய பெயர்ச்சொல்லின் பன்மை. “போல” அல்லது “ஒப்பான” என அர்த்தம் தரும் ஒரு மூல வார்த்தையிலிருந்து இந்தப் பெயர்ச்சொல் வந்ததாக பொதுவாய் கருதப்படுகிறது. இந்தப் பதங்கள் இப்புத்தகத்தின் பொருளடக்கத்தை நன்றாக விவரிக்கின்றன. ☀ ஏனெனில் நீதிமொழிகள் கருத்துச் செறிவுமிக்க பழமொழிகளாகும்; அவை பெரும்பாலும் உவமைகளை அல்லது ஒப்புமைகளை பயன்படுத்துகின்றன; அவை செவி கொடுத்துக் கேட்போரை சிந்திக்கவைப்பதற்கு வடிவமைக்கப்பட்டவை. ‎‏

☀ கிரேக்க மொழிபெயர்ப்பில் παροιμίαι (paroimiai) என்றும், இலத்தீன் மொழிபெயர்ப்பில் "proverbia" என்றும் இந்நூல் பெயர் பெறுகிறது. ☀ பழைய தமிழ் மொழிபெயர்ப்பு "பழமொழி ஆகமம்" என்றிருந்தது. 

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 20-வது புத்தகமாக வருகிறது. ☀ நீதிமொழிகளை சாலொமோன் எழுதினார் என்று இந்தப் பதிவு சொல்வதில்லை. ஆனால், நீதிமொழிகளை ‘சொன்னார்’ என்றும், ‘பல நீதிமொழிகளை வரிசைப்படுத்தி அமைப்பதற்கு துருவி ஆராய்ந்தார்’ என்றும் அது சொல்கிறது. 

☀ பிற் காலத்தில் பயன்படுத்துவதற்காக நீதிமொழிகளைப் பாதுகாத்து வைப்பதில் அவருக்கு அக்கறை இருந்ததை இது காட்டுகிறது. ☀ சாலொமோன் ‘மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னார்.’ (1 இரா.4:32) அவர் சொன்ன நீதிமொழிகளில் சில, வேதாகமத்தில் நீதிமொழிகள் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டன. 

☀ நீதிமொழிகள் புத்தகத்தை ஐந்து பகுதிகளாய் பிரிக்கலாம். அவை: (1) அதிகாரங்கள் 1-9, ‘தாவீதின் குமாரனாகிய சாலொமோனின் நீதிமொழிகள்’ என்ற வார்த்தைகளோடு தொடங்குகின்றன; (2) அதிகாரங்கள் 10-24, “சாலொமோனின் நீதிமொழிகள்” என விவரிக்கப்படுகின்றன; (3) அதிகாரங்கள் 25-29, இவ்வாறு தொடங்குகின்றன: “இவையும் சாலொமோனின் நீதிமொழிகளே: இவற்றை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் தொகுத்து எழுதினார்கள்” (4) அதிகாரம் 30, “யாக்கேயின் குமாரனாகிய ஆகூரின் வார்த்தைகள்” என அறிமுகப்படுத்தப்படுகிறது; (5) அதிகாரம் 31, ‘ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது’ என ஆரம்பிக்கிறது. ☀ எனவே, சாலொமோனே நீதிமொழிகளின் பெரும்பாகத்தை சொன்னவர். ஆகூரும் லேமுவேலும் யார் என்பது திட்டவட்டமாக அறியப்படவில்லை. 

☀ லேமுவேல் என்பது சாலொமோனுக்கு மற்றொரு பெயராக இருந்திருக்கலாம் என விளக்கவுரையாளர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். ☀ எபிரேய வாக்கியத்தின் சில பதிப்புகளில் சேத் (Chehth), ஸாயின் (Zayin), கோஃப் (Qohph [‎‏ חזק‎] ) என்ற ட்ரைகிராமட்டன் அல்லது மூன்று எழுத்துக்கள் உள்ளன. இது, வேதபாரகர்களால் செய்யப்பட்ட நகல் எடுக்கும் வேலை நிறைவுற்றது என்பதை காட்டுவதற்கு எசேக்கியா ராஜா போட்ட கையொப்பம் என கருதப்படுகிறது. 

☀ மொத்தம் 31 அதிகாரங்களும், 915 வசனங்களையும் கொண்டுள்ளது. ☀ 8-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும் 9-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது. ☀ நீதிமொழிகள் சுருக்கமாக இருப்பதால், அவற்றை எளிதில் புரிந்து கொள்ளவும் முடிகிறது; ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கிறது; அதோடு, இவற்றை கற்பிப்பதும் கற்றுக்கொள்வதும் நினைவில் வைப்பதும் மிக எளிது. இதன் கருத்து ஆழமாக பதிந்து விடுகிறது.

 ☀ விஞ்ஞானப்பூர்வ விஷயங்களில் அது ரசாயனம், மருத்துவம், அல்லது உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட நீதிமொழியாக இருந்தாலும் திருத்தமாக இருப்பது இப்புத்தகம் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டது என்பதை நிரூபிக்கிறது. ☀ நீதிமொழிகள் 25:20 அமிலம் - காரப்பொருள் ஆகியவற்றின் விளைவுகளை குறிப்பிடுகிறது. ☀ சிந்திக்கும் திறமையை மதுபானம் மந்தமாக்குகிறது என்ற நவீன அறிவியல் கண்டுபிடிப்போடு நீதிமொழிகள் 31:4,5 ஒத்திருக்கிறது. 

☀ தேன் உடல் நலத்துக்கு ஏற்றது என்பதை பல மருத்துவர்களும் உணவியல் நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர். இது, “என் மகனே, தேனைச்சாப்பிடு, அது நல்லது” என்ற நீதிமொழியை நினைவுக்குக் கொண்டுவருகிறது. (நீதி.24:13) ☀ மனதுக்கும் உடலுக்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றிய நவீன கருத்துக்கள் (psychosomatics) நீதிமொழிகள் புத்தகத்துக்குப் புதியவை அல்ல. “மனமகிழ்ச்சியே நல்ல மருந்தாம்.” (நீதி.17:22) 

☀ “நீதிமொழிகளின் புத்தகம் இன்று காலை வந்த செய்தித்தாளைப் பார்க்கிலும் நவீன காலத்திற்கு அதிக பொருத்தமாக இருக்கிறது” என்று வில்லியம் லியான் ஃபெல்ப்ஸ் என்ற அமெரிக்க கல்வியாளர் ஒரு சமயம் கூறினார். ☀ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட போதிலும், இப்பொழுது தான் எழுதப்பட்டதைப் போல காலத்துக்கு ஏற்றதாக இருக்கிறது.” (ஸ்மித்தின் பைபிள் அகராதி [ஆங்கிலம்], 1890). 

☀ புதிய ஏற்பாட்டில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள சில நீதிமொழிகள்; * நீதி.1:16 ; ரோமர் 3:10, ரோமர் 3:15. * நீதி.3:7 ; ரோமர் 12:16. * நீதி.3:11-12 ; எபிரேயர் 12:5-6, வெளி.3:19. * நீதி.27:1 ; யாக்.4:13. * நீதி.26:11 ; 2 பேதுரு 2:22. * நீதி.25:21-22 ; ரோமர் 12:20. * நீதி.22:8 ; 2 கொரி.9:6, கலா.6:7, கலா.6:9. * நீதி.20:20 ; மத்தேயு 15:4. * நீதி.20:9 ; 1 யோவான் 1:8. * நீதி.17:27 ; யாக்.1:19. * நீதி.17:13 ; ரோமர் 12:17, 1 தெசலோ.5:15, 1 பேதுரு 3:9. * நீதி.11:31 ; 1 பேதுரு 4:17-18. * நீதி.10:12 ; 1 பேதுரு 4:8. * நீதி.3:34 ; யாக்.4:6.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum