தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கடனற்ற வாழ்வு தரும் இயேசு Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கடனற்ற வாழ்வு தரும் இயேசு Empty கடனற்ற வாழ்வு தரும் இயேசு

Wed Feb 10, 2016 2:06 pm
ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றென்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள். - (ரோமர் 13:Cool.
.
          கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட நாம் ஒவ்வொருவரும் பண விஷயத்தில் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும். இது வேதம் நமக்குக் கூறும் அறிவுரையாகும். அதிலும், 'ஒன்றிலும் ஒருவருக்கும் கடன்படாதிருங்கள்' என்றும் வேதம் நமக்கு கட்டளை கொடுத்திருக்கிறது. உலகம் கூறுவது என்னவென்றால், 'இன்று வாங்கி நாளை செலுத்துங்கள்' என்று.  ஆனால் 'இன்று சேமித்து நாளை வாங்குவதே' உத்தமமானது.
.
         சமீபத்தில் ஒரு முக்கியமான இடத்தில் ஒரு கடை விற்பனைக்கு வந்தது. அதை வாங்கும்படி ஒரு குடும்பத்தினர் தீர்மானித்தனர். அதன் விலையை விசாரித்தபோது, அது 90,00,000 என்று தெரிய வந்தது. அந்த இடம் மிகவும் முக்கியமான இடத்தில் இருந்ததால் எப்படியாவது அதை வாங்க வேண்டும் என்று கணவர் ஒரு பேங்கில் போய் கடன் கேட்டார். அந்த பேங்க் ஆட்கள், உங்களிடமுள்ள சொத்து, பத்திரம் எல்லாவற்றையும் காட்டுங்கள் என்று சொல்லி, சொந்த வீடு இருந்ததால் அந்த வீட்டிற்கு வந்து அதன் அளவை அளக்க தொடங்கினார்கள்.
.
அந்த குடும்பத்தினர் கர்த்தருக்கு பயப்படுகிறவர்களாக இருந்தபடியால், அந்த மனைவி, கர்த்தரிடம் அதை குறித்து விசாரிக்க ஆரம்பித்தார்கள். 'இயேசப்பா, இந்த வீடு நீர் கொடுத்த வீடு, அதில் கண்டவர்கள் எல்லாம் வந்து அளவு எடுத்து கொண்டிருக்கிறார்களே, கணவரோ அத்தனை பணம் கொடுத்து அந்த கடையை வாங்க வேண்டும் என்று அதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார், உமக்கு சித்தமில்லை என்றால் இதை நிறுத்திப்போடும்' என்று ஜெபித்தார்கள். நம் தேவன் பேசும் ஆண்டவரல்லவா? அன்றைய தின வேத வாசிப்பில் (அவர்கள் தினமும் நீதிமொழிகள் ஒரு அதிகாரத்தை வாசிப்பது வழக்கம்) கர்த்தர் அவர்களோடு பேசினார், 'கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே' (நீதிமொழிகள் 22:26-27). இந்த வார்த்தைகளை படித்த உடன் அந்த சகோதரிக்கு தேவனுடைய சித்தம் என்னவென்று புரிந்து விட்டது. கடன் வாங்க வேண்டாம் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அறிந்து கொண்டார்கள். அந்த இடத்தை வாங்குவது கர்த்தருடைய சித்தம் அல்ல என்பதையும் புரிந்து கொண்டார்கள்.
.
            ஆனால் கணவரோ முழு மூச்சோடு அதை வாங்க வேண்டும் என்று பேங்கிற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருக்கிறார், அவரை எப்படி தடுப்பது என்று நினைத்தவர்களாக ஜெபித்தார்கள். அடுத்த நாள், கணவர், மனைவியிடம், 'இன்று கணவனும் மனைவியுமாக அழைத்து பேங்க் மேனேஜர் பேசுவார், அதன்பின் அவர்கள் கடன் தருவார்கள்' என்று கூறினார்.
.
மனைவிக்கு தேவன் இப்படி வசனம் சொல்லியிருக்கிறார் என்று சொல்ல பயம், ஏனென்றால் கணவர் மிகவும் அதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று. அவர்கள் ஜெபித்து, 'நாளை ஆண்டவரே அந்த பேங்க் மேனேஜர் பேசும்போது, நீர் தடுத்து விடும்' என்று சொல்லி ஜெபித்து விட்டு, அடுத்த நாள் போனார்கள்.
.
                 அவர்கள் பேசி கொண்டிருக்கும்போதே, வீட்டை அளந்து பார்த்த ஒருவர், 'பத்திரத்தில் இருக்கும் அளவிற்கும், எழுதி இருக்கும் அளவிற்கும் வித்தியாசம் இருக்கிறது, ஆகவே அதை சரி செய்து முடிக்காமல் கடன் வழங்க முடியாது' என்று கூறினார். அதை கேட்ட கணவருக்கு மிகவும் கோபம். 'இத்தனை நாட்கள் நான் இங்கு வந்து போய் கொண்டிருக்கிறேன், அப்போதெல்லாம் நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை, இப்போது கடன் தரும் நேரத்தில் இப்படி சொல்கிறீர்கள்' என்று. அப்போது மனைவி சொன்னார்கள், 'கர்த்தருடைய சித்தம் நாம் கடன் வாங்கி அந்த கடையை வாங்குவது அல்ல, கர்த்தர் அதை குறித்து என்னிடம் நேற்றே பேசி விட்டார்' என்று நடந்ததை கூறினார்கள். கணவரும் அதை கேட்டு, 'நேற்றே நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை' என்று கேட்டார். அதற்கு மனைவி, 'நேற்றே சொல்லியிருந்தால் நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள், இன்று தேவனே அதை நிறுத்திப் போட்டார் பாருங்கள்' என்றார்கள். இது உண்மை சம்பவம். ஆம், நம் தேவன் நாம் கடன் வாங்குவதை விரும்புகிற தேவன் அல்ல. 'கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே' என்று நம்மை கடன் வாங்காதபடி எச்சரிக்கிற தேவனாயிருக்கிறார்.
.
       மட்டுமல்ல, அவர் நமக்கு வாக்குதத்தம் செய்திருக்கிறார், 'நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்'    (உபாகமம் 28:12) என்று. இந்த வாக்குதத்தத்தை நாம் தினமும் அறிக்கையிட்டு, என்னை ஒருபோதும் கடன் வாங்காதிருக்க உதவி     செய்யும் என்று ஜெபிக்க வேண்டும்.
.
          தவிர்க்க முடியாது ஒரு அவசரத்திற்க்கு நீங்கள் யாரிடமாவது பணத்தை கடன் வாங்கிளானல், அதை எவ்வளவு சீக்கிரம் திரும்ப செலுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரமாய் செலுத்தி விடுங்கள். ஒரு குறிப்பிட்ட தேதியில்  பணத்தை திரும்ப செலுத்துவதாக வாக்கு கொடுத்துவிட்டு, அது முடியவில்லையென்றால் கடன்பட்டவரிடம உங்களை தாழ்த்தி மன்னிப்பு கேளுங்கள். பணத்தை திரும்ப செலுத்த மேலும் அவகாசம் தரும்படி வேண்டிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்யாமல், வசதியான நேதர்தில் திரும்ப செலுத்தலாம் என எண்ணுவது அநீதியான செயலாகும்.

          ஒருவேளை கடன் கொடுத்தவர் எங்கிருக்கிறாரென்று தெரியவில்லை என்றால், அந்த பணத்தை தேவப்பணிக்கென்று கொடுத்து விடுங்கள். ஏனென்றால் இந்த பூமியின் சகல நிறைவும், முடிவாய் கர்த்தருக்கே சொந்தமாகும் (எண்ணாகமம் 5:Cool. ஆம், இது போன்ற பணத்தை நாம் நம்மிடம் வைத்திருக்க கூடாது. ஏனென்றால் நியாயமாய் நமக்கு சொந்தமாயிராத பணம் நம்மிடம் இருக்குமென்றால் அதில் சாபமே தங்கியிருக்கும்.
.
         மேலும் கடந்த காலங்களில் நாம் தவறான முறையில் பெற்றுக் கொண்ட எல்லா பணத்தையும் திரும்ப செலுத்த வேண்டும். முழுவதுமாக செலுத்தி தீர பல வருடங்கள ஆனாலும் அது ஒரு பொருட்டல்ல, இவ்விதமாய் திரும்ப செலுத்துவதை சகேயு தீர்மானித்த அடுத்த கணமே அவனுடைய வீடு இயேசுவால் ஆசீர்வதிக்கப்பட்டது. நீங்கள் இவ்வித தீர்மானங்களை எடுக்கும்போதே உங்களுடைய வீடும் இவ்விமாய் ஆசீர்வதிக்கப்படும். உங்களுடைய கடன் ஏராளமாய் இருப்பதால் நீங்கள் சோர்ந்து போகத் தேவையில்லை. உங்களால் எவ்வளவு முடியுமோ அது மாதத்திற்கு பத்து ரூபாயானாலும் அதை தீரும்ப செலுத்த ஆரம்பித்து விடுங்கள். நீங்கள் எல்லவற்றையும் கொடுத்து தீர்த்து விட்டீர்களா என்பதின்படியல்ல, உங்களால் முடிந்த அளவு திரும்ப செலுத்த நினைக்கும் உங்கள் மன விருப்பத்தை கொண்டே தேவன் உங்களை ஏற்றுக் கொள்வார்.
.
           ஆம், பிரியமானவர்களே, நாம் பண விஷயத்தில் தேவனுக்கு முன்பாகவும், மனிதருக்கு முன்பாகவும் உண்மையாயிருக்க இன்றே தீர்மானிப்போம். ஒருவன் பண விஷயத்தில் உண்மையுள்ளவனாக இருந்தால் மற்ற காரியங்களை அவனை நம்பி நாம் ஒப்படைக்க முடியும். அப்படிப்பட்ட உண்மை நம்மில் இருந்தால் தேவன் நம் குடும்பத்தை நிச்சயமாக ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum