தியான வசனமும் ஜெபமும்
Tue Jan 19, 2016 10:49 am
தியானத்திற்கு :
சிறுமைப்பட்டு போய் இருக்கிற, எனக்கு, எங்கே அடைக்கலம் ?
தியானவசனம் :
சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; - (சங்கீதம் 9:9 ன் முன் பகுதி
ஜெபம் :
எங்கள் அன்பின் பரம தகப்பனே,
நீரே எங்கள் அடைக்கலம், கோட்டை, துருகம், அரண், கேடயம், நம்பிக்கை, தஞ்சம். சிறுமைப்பட்ட சூழ்நிலையில், நீரே என் தஞ்சம் என்று வருகிற ஒவ்வொருவருக்கும், நீரே அடைக்கல மாக இருப்பதால் உமக்கே துதி, ஆராதனை, நன்றி பலிகள் இன்றும் ,என்றும், எப்போதும் உண்டாவதாக.
அப்பா, இந்த இடத்திலும் சத்துருக்களால், துன்மார்க்கரால் சூழப்பட்டு, வழக்கிலே நீதி, நியாயம் கிடைக்காமல், மறுக்கப் பட்டு, சிறுமைப்பட்டுப் போய் இருக்கிற போது, முழு இருதயத் தோடும், உம்மைத் துதித்து, உம்முடைய அதிசயங்களை யெல் லாம் விவரித்து, உம்மிலே மகிழ்ந்து, உமது நாமத்தை கீர்த்த னம் பண்ணும் போது, என்றென்றைக்கும் இருக்கிற, சிங்காச னத்தில் வீற்று இருந்து, பூச்சக்கரத்தை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதி செய்கிற, கர்த்தராகிய நீர், சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமாகவும், நெருக்கப்ப டுகிற காலங்களில், நீரே அவனுக்கு தஞ்சமாகவும் மாறி விடுவ தாக சங்கீதக்காரன் கூறுவதைப் பார்க்கிறோம்.
அப்பா, உமது பிள்ளைகளாகிய எங்களது வாழ்விலும், நீதி கேடு செய்கிற, நியாயம் செய்ய மறுக்கிற, அநீதி கொடுமை செய்கிற, பொல்லாத துன்மார்க்க மனிதர்களால் சூழப்படும் போது, என்ன செய்வது எனக்கு நீதியே எப்போதும் நீதி மறுக்கப்படுகிறதே! நியாயம் கிடைக்கவே கிடைக்காதா! இப்படி கொடுமை செய் கின்ற மனிதர்கள் மத்தியில், என் சார்பாக நின்று, எனக்காக யார் பேசுவார்கள்? காரியங்களை ஏறெடுப்பார்கள்?பாதுகாப்பு கொடுக்கப் போகிறார்கள்? எனக்கு ஒரு அடைக்கலமும், தஞ்ச மும் இல்லையே ! என்று சிறுமைப்பட்டு, நெருக்கப்பட்டு, மனம் ஒடிந்து சோர்ந்து போய் காணப்படுவோமேன்றால், நீர் சர்வலோ கத்தின் நீயாதிபதி. நீதியின் தெய்வம்.
சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமும், நெருக்கப்படுகிற காலங்களில் அவனுக்கு தஞ்சமாகவும் மாறி விடுகிற தெய்வமாம் உம்மை, இந்த வச னத்தை தியானிக்கின்ற சிறுமையான, நெருக்கப்படுகிற இந்த வேளையில், சங்கீதக்காரன் சொல்லுவது போல, எங்கள் முழு இருதயத்தோடும், உம்மைத் துதித்து, உம்முடைய அதிசயங் களையெல்லாம் விவரித்து, உம்மிலே மகிழ்ந்து, உமது நாமத் தை கீர்த்தனம் பண்ணவும், அதன் மூலம் நீதி செய்கிற தெய்வ மாம், உம்மால் எங்களுக்கு நீதி, நியாயம் செய்யப்பட்டு, கொடூர மனிதர்களின், துன்மார்கரின் கரங்களில் விழாதபடி, நீரே எங்க ளுக்கு அடைக்கலமாக, தஞ்சமாக மாறி விடுகிற பாக்கியத்தைப் பெற்று, சிறுமைப்பட்ட எங்களுக்கு, கர்த்தரே அடைக்கலமாக வும், நெருக்கப்படுகிற காலங்களில் அவரே எங்களுக்கு தஞ்சமாகவும் இருக்கிறார் என்று உம்மை மகிமைபடுத்த கிருபை செய்வீராக.
ஐயா, தங்கள் வாழ்க்கையில் அந்தஸ்து, பணம், புகழ், வசதி, பலம், அதிகாரம் ஆகியவற்றால் பலத்து, கொடூர குணம் கொண்ட, துன்மார்க்க வாழ்க்கை வாழுகிற, மனிதர்களால் கொடுமைபடுத்தப்பட்டு, நீதி, நியாயம் மறுக்கப்பட்டு, சிறுமைப் பட்டு, நெருக்கப்பட்டு, என் வாழ்க்கையில் இந்த சிறுமையில், நெருக்கத்தில் இருந்து விடுதலையே கிடையாதோ ! யார் என்னை விடுவிப்பார்? என்று உம்மை அறியாமல், மன வேத னையோடு வாழ்ந்து கொண்டு இருக்கும், உம்மை அறியாத ஒவ்வொரு நபரும், உம்மை காண, ரட்ச்சிக்கப்பட, நீர் அவர்க ளுக்கு அடைக்கலமாக, தஞ்சமாக மாறுகிற பாக்கியத்தைப் பெற்று, எங்கள் கர்த்தரே எங்களுக்கு அடைக்கலமும், தஞ்ச முமானவர் என்று உம்மை மகிமைபடுத்த கிருபை செய்வீராக.
இயேசுக் கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே. ஆமென்..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|