தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
திப்பிலியில் தயாராகும் உணவுகள்: Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

திப்பிலியில் தயாராகும் உணவுகள்: Empty திப்பிலியில் தயாராகும் உணவுகள்:

Sun Dec 20, 2015 10:21 pm
திப்பிலி கொடி வகையை சார்ந்தது. கொடியில் காய்க்கும் காய்தான் திப்பிலி என்றழைக்கப்படுகிறது. செடியின் வேரும் மருத்துவகுணம் வாய்ந்ததாக இருக்கிறது. அவை சிறு முடிச்சுகளுடன் நீண்டு மெலிதாக காணப்படும். அதனை கண்டந்திப்பிலி என்று அழைக்கிறோம்.

 திப்பிலி, காரம் மற்றும் லேசான இனிப்பு சுவையுடையது. உடல் சூட்டை அதிகரிக்க கூடியது. வாதம் மற்றும் கப நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது.

நுரையீரல் மற்றும் தலையின் சைனஸ் பகுதிகளில் தேங்கிய சளியை அகற்ற உதவுவதால் இதற்கு ‘கோழையறுக்கி’ என்ற சிறப்பு பெயரும் உண்டு. 

திப்பிலி பசியை தூண்டும்.  இருமல்,  ஜுரம், தோல் நோய்கள், மூட்டு வலி, மூல தொந்தரவு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கங்களை நீக்க உதவுகின்றது. சிறந்த குரல் வளத்தை பெற துணைபுரியும். ரத்த சோகையை நீக்கும். மூளை தாதுகளை பலப்படுத்தும். ஆண்மை சக்தியை அதிகரிக்கச்செய்யும்.

 திப்பிலி மிளகை  விட காரமானது. உடலுக்குள் அதி வேகமாக செயல்பட்டு வளர்சிதை மாற்றங்களை மேம்படுத்தும். உடலில் அதிக நேரம் வெப்பத்தை தேக்கி, உடலுக்கு சூட்டை அளித்து, ஊக்கியாக செயல்படும். நிணநீர் நாளங் களையும் சுத்தம்செய்யும்.

சுக்கு, மிளகு, திப்பிலி சேரும் திரிகடுகு சூரணத்தில் முக்கியமான கூட்டுப் பொருளாக திப்பிலி விளங்குகிறது. திப்பிலியை எந்த மருந்தில் சேர்த்தாலும் அதன் செயல் திறன் அதிகரிக்கும். அதனால் அதனை பல்வேறு முக்கிய சித்த மருந்துகளில் சேர்க்கிறார்கள். 

குளிர் காலத்தில் உண்டாகும் ஆஸ்துமா, மூக்கடைப்பு, நீரேற்றத்தால் உண்டாகும் தலைவலி மற்றும் மூட்டு  வலிகளுக்கு திப்பிலி சிறந்த மருந்தாக திகழ்கிறது. சிறுவர்களுக்கு ஆஸ்துமாவால் உண்டாகும் மூச்சிரைப்பு, ஒவ்வாமை காரணமாக உண்டாகும் தொடர் தும்மலுக்கு 2 கிராம் திப்பிலி பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வெதுவெதுப்பான நீர் அருந்தவேண்டும். பெரியவர்கள் 2 கிராம் திப்பிலி பொடியை வெற்றிலையில்வைத்து தேன் கலந்து மென்று சாப்பிடவேண்டும். 

கல்லீரல், மண்ணீரல் வீக்கம் கொண்டவர்கள் 100 கிராம் திப்பிலியை வறுத்து பொடி செய்து, 100 கிராம் கரிசலாங்கண்ணி கீரை பொடியுடன் கலக்க வேண்டும். அத்துடன் 100 கிராம் பொடித்த நெற்பொரி, 100 கிராம் நாட்டு சர்க்கரை கலந்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்விக்கலையும் இது குணப்படுத்தும்.

திப்பிலி உஷ்ண தன்மை கொண்டதாக இருப்பதால், பெண்களுக்கு ஆரோக்கியமான சினைமுட்டை உருவாவதற்கு உதவி புரிகிறது. 2 கிராம் திப்பிலி பொடியை 1/2 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்யில் கலந்து மாதவிடாய் ஏற்பட்ட இரண்டாம் நாளிலிருந்து ஆறுநாட்கள் சாப்பிட்டால் ஆரோக்கியமான சினைமுட்டை உருவாகும். இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வெதுவெதுப்பான நீர் அருந்தவேண்டும்.

மூட்டு வலிக்கு திப்பிலி பொடி 2 கிராம் எடுத்து 100 மி.லி. பாலில் கலந்து தினமும் பருகவேண்டும். 30 நாட்கள் பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் வலி,  முதுகுவலி மற்றும் வாத நோய்களுக்கு  கண்டந்திப்பிலி 5 கிராம் அரைத்து  பாலில் கலந்து குடிக்கவேண்டும்.

திப்பிலி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. காய கற்ப மூலிகை. ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை நோய்களுக்கு சிறந்த முதலுதவி மருந்தாக இது செயல்படுகிறது. திப்பிலியில் தயாரிக்கப்படும் ‘திப்பிலி ரசாயனம்’ என்ற மருந்து ஆஸ்துமா, மூக்கடைப்பு, சைனஸ் தலைவலிக்கு சிறந்தது. 3 கிராம் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வரவேண்டும்.



திப்பிலியில் தயாராகும் உணவுகள்:

மருந்து டீ

(இது 2 பேருக்கு போதுமானது)

திப்பிலி    –4 எண்ணிக்கை

லவங்கப்பட்டை–3  சிறிய துண்டுகள்

தண்ணீர் –200 மி.லி.

செய்முறை:

பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து  திப்பிலி,  லவங்கப்பட்டையை  இட்டு மூன்று நிமிடம் சிறுதீயில் கொதிக்கவையுங்கள். பின்பு வடிகட்டி, தேவைக்கு பனங்கற்கண்டு கலந்து பருகுங்கள்.

இது பருகுவதற்கு சுவையாக இருக்கும். சளி, இருமல், தொண்டை வலி போன்றவைகளை குணப்படுத்தும். உடல் எடையை குறைக்கவும் உதவும்.

ஸ்பெஷல்  ரசம்

கண்டந்திப்பிலி–10 கிராம்    

சீரகம்–1 தேக்கரண்டி

துவரம் பருப்பு–1 தேக்கரண்டி

காய்ந்தமிளகாய்–2

புளி–சிறிய எலுமிச்சம் பழ அளவு

உப்பு–தேவைக்கு    

தாளிக்க:

நெய் –1 தேக்கரண்டி

கடுகு–1/2  தேக்கரண்டி

கறிவேப்பிலை–சிறிதளவு

செய்முறை:

வாணலியில் கண்டந்திப்பிலி, சீரகம், துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய் போன்றவைகளை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள்.

புளியை கரைத்து பாத்திரத்தில் கொட்டி கொதிக்கவிடுங்கள். நன்கு கொதிக்கும்போது அரைத்து வைத்துள்ள பொடியைகொட்டி, லேசாக எரியவிடுங்கள். பின்பு தேவையான பொருட்களை தாளித்து கொட்டுங்கள்.

கண்டந்திப்பிலி உடல் வலியை போக்கக்கூடியது. சளி, இருமலுக்கு நல்ல மருந்து. பிரசவித்த பெண்கள் இந்த ரசத்தை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட வேண்டும். உடல்வலி நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

திரிகடுக பால்

(இது 2 பேருக்கு போதுமானது)    சுக்கு பொடி–1/2 தேக்கரண்டி

மிளகுபொடி– 1/2 தேக்கரண்டி

திப்பிலி பொடி–1/2 தேக்கரண்டி

பனங்கற்கண்டு–தேவைக்கு

பால்–300 மி.லி.

தண்ணீர்    –100 மி.லி.

செய்முறை:

பாலை காய்ச்சுங்கள்.

நீரில் பொடிகளை இட்டு கொதிக் கவையுங்கள். பின்பு அதனை வடிகட்டி, பாலுடன் கலந்து சுவைக்கேற்ப  பனங்கற்கண்டும் சேருங்கள்.

இதை காலையில் காபி, டீக்கு பதில் அருந்துங்கள். நன்கு பசியெடுக்கும். உடல் வலி தீரும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இயங்க, தேவையான சக்தி கிடைக்கும். 

பால் கஞ்சி

புழுங்கல் அரிசி குருணை–100 கிராம்

பால் –500 மி.லி.

திப்பிலி பொடி   –1 தேக்கரண்டி

செய்முறை:

புழுங்கல் அரிசி குருணையில் நான்கு மடங்கு நீர் கலந்து குக்கரில் வைத்து நன்கு குழைய வேகவையுங்கள். பின்பு அதில் காய்ச்சிய பாலை கொட்டி, திப்பிலி பொடியையும் சேர்க்கவேண்டும்.

பெரியவர்கள் இதை அப்படியே பருகலாம். குழந்தைகளுக்கு சிறிது சர்க்கரை கலந்து கொடுக்கவேண்டும். கபநோய்களுக்கு சிறந்த உணவு.

 திப்பிலியில் தயாராகும் உணவுகள்: 24A3B0F7-2203-4B47-9EE9-51914C27A1BC_L_styvpf
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum